மூன்று மாநிலங்களில் முழு வெற்றி பெற்ற பாஜக! பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு!!

0
57
#image_title

மூன்று மாநிலங்களில் முழு வெற்றி பெற்ற பாஜக! பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு!!

நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக கட்சி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் பாஜக பார்லிமென்ட் கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ராஜஸ்தான், மிசோரம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதில் மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் இரண்டு மாநிலங்களில் பாஜக கட்சி காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அதாவது லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மூன்று மாநிலங்களில் கிடைத்த வெற்றி பாஜக கட்சிக்கு இது ஒரு ஊக்குவிப்பு அளித்துள்ளது. இந்நிலையில் இன்று(டிசம்பர்7) டெல்லியில் பாஜக கட்சியின் பார்லிமென்ட் கூட்டம் நடைபெற்றது.

இந்த பார்லிமென்ட் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களை உறுப்பினர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் 3 மாநிலங்களில் பாஜக கட்சி ஆட்சியை பிடித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

மேலும் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி பட்டா அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உறுப்பினர்கள் அளித்த பாராட்டுக்களை முழுமனதாக ஏற்றுக் கொண்டு அனைவரையும் வணங்கினார்.