Home Blog Page 109

அரசியலில் சென்டிமென்டை உருவாக்கும் விஜய்.. எம்.ஜி.ஆர்-யை முன்னிலைப்படுத்தி அரசியலா?

0

TVK: த.வெ.க தலைவர் விஜய் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வெற்றி பெறுவதற்கான பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். அவரின் முதல் பிரச்சாரம் திருச்சி மரக்கடை பகுதியில் இன்று தொடங்கியுள்ளது. அவர் ஏன் முதலில் இந்த பகுதியை தேர்தெடுத்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திருச்சி மரக்கடை பகுதி என்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. இங்கு பல கட்சிகளின் முன்னணி தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் மரக்கடை பகுதியில் பல்வேறு தேர்தல் பிரச்சாரங்களை நடத்தியது வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது.

எம்.ஜி.ஆர்.- அவர்களுக்கு மரக்கடை பகுதியில் ஒரு சிலை உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஜெயலலிதா தலைமையிலான அதிமுக-வும், எம்.ஜி.ஆர்-யின் நினைவுகளை முன்னிலைப்படுத்தும் வகையில் மரக்கடை பகுதியில் பெரிய கூட்டங்களை நடத்தி வந்தனர். அதே நேரத்தில் மு.கருணாநிதி தலைமையிலான திமுக-வும் தனது பிரச்சாரங்களை இப்பகுதியில் நடத்தியது.

மரக்கடை பகுதி அதிமுக–திமுக விற்கு முக்கிய தேர்தல் களமாக மாறியது. இவர்களை தொடர்ந்து மு.க. ஸ்டாலின், ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோரும் தங்களின் பிரச்சாரங்களை இங்கு மேற்கொண்டுள்ளனர். தற்போது 2025-இல் நடிகர் விஜய் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை மரக்கடை பகுதியில் தொடங்கியிருப்பது, பேசு பொருளாகவும் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

இவர் தேர்ந்தெடுத்த இந்த பகுதி எம்.ஜி.ஆர்-யின் அரசியலை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், இது மக்களிடையே ஒரு அரசியல் சென்டிமென்டை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர்-யின் பெயரும் புகழும் இன்றும் பேசப்பட்டு வரும் நிலையில், விஜய் அந்த செண்டிமென்டை தனது அரசியல் தொடக்கத்துடன் இணைக்க முயல்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் தமிழக அரசியலில் தனது அடையாளத்தை உருவாக்குவதாகவும் இது உள்ளது. மேலும் முன்னணி தலைவர்களின் வரிசையில் இடம்பெறுவதற்கான முதல் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

திமுக – விசிக கூட்டணியில் பிளவு ? தொண்டர்களின் கேள்வி: வெறும் இரண்டு சீட்டு தானா !!

0

DMK VSK: காலை முதலே திருமாவளவன் கூறிய செய்தி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெறும் இரண்டு சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியபோது, “நான் இரண்டு சீட்டுக்காக திமுக-வின் பின்னால் ஓடுவதாக என்னை விமர்சிக்கிறார்கள், ஆனால் அந்த இரண்டு சீட்டை கூட சிலரால் வாங்க முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

திமுக-வுடனான கூட்டணியில் நீண்ட காலமாக இணைந்து பயணம் செய்துவரும் திருமாவளவனின் கட்சிக்கு மிகக் குறைவான சீட்டுகள் வழங்கப்பட்டிருப்பது, அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுக, தன்னுடைய கட்சியின் வலிமையை முன்னிறுத்தி கூட்டணிக் கட்சிகளுக்கு குறைந்த இடங்களை ஒதுக்கி வருகிறது. இதுவே “முதன்மை கட்சி – துணைக் கட்சி” என்பதை தெளிவாக காட்டுகிறது என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெறும் துணைக் கட்சி அல்ல. குறிப்பாக, தென் மாவட்டங்களில் திமுக-வுக்கு அதிக வாக்கை பெற்று தரும் அளவுக்கு உயர்ந்துள்ளது. திருமாவளவன் திமுக-வின் பின்னால் நிழல் போல நடக்கிறார் என்று மக்கள் மத்தியில் நிலவும் விமர்சனத்தை முறியடிக்க விரும்புவதால் தான் திறந்தவெளியில் இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளார்.

“வெறும் இரண்டு சீட்டுக்காக விமர்சிக்கப்படுகிறேன்” என்ற அவரது குற்றச்சாட்டு, திமுக-வி.சி.க கூட்டணியில் பிளவை ஏற்படுத்துமா என எதிர்பார்க்கப்படுகிறது. திருமாவளவனின் இந்த கருத்து அவர் கூட்டணியில் தொடர்ந்தாலும், தனது கட்சியை முன்னிலைப் படுத்துவதற்கான திட்டங்களை மேற்கொள்வார் என்பதும் தெளிவாகிறது. இல்லையெனில், அவர் வெளியேறுவாரா என்ற சந்தேகமும் எழுகிறது.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் திமுகவிடம் திருமாவளவன் அதிக சீட்டுகள் கேட்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த கோரிக்கைக்கு திமுக எப்படி பதிலளிக்கிறது என்பதை பொறுத்தே கூட்டணி தீர்மானிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இது 2026 தேர்தலை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.

அன்புமணியா? ராமதாஸா? தொடர்கிறது பா.ம.க விரிசல்!!

0

PMK: சமீப காலமாகவே பாமக-வில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடும், தலைமை போட்டியும் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து கட்சியின் தலைமை நான் தான் என்பதை நிலை நிறுத்தும் வகையிலும், உலகுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், ராமதாஸ் அன்புமணியை கட்சியின் அனைத்து பதவிகளில் இருத்தும் நீக்கினார்.

இந்த பதவி நீக்க அறிவிப்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கட்சி இரண்டாக பிளவுப்பட்டு இருக்கிறது. இதில், முன்னாள் எம்.பி. பாலு, “அனைத்து அதிகாரமும் அன்புமணியிடம் தான் உள்ளது என்றும், அவர் விரும்பினால் எவரையும் உயர்த்தவும் முடியும், தாழ்த்தவும் முடியும்” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம், அன்புமணியின் கையில் தான் பா.ம.க.வின் எதிர்காலம் நிலைத்திருக்கும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு மாற்று கருத்தாக, கட்சியின் பொதுச்செயலாளர் முரளி சங்கர், “ராமதாஸ் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. அன்புமணிக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் , அதற்கான அதிகாரம் ராமதாஸிடம் மட்டுமே உள்ளது” எனக் கூறியுள்ளார்.

இதன் மூலம், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தான் கட்சியின் தலைமையில் நீடித்திருப்பார் என்பது தெளிவாகிறது. இந்த கருத்து வேறுபாடுகள் பாமக-வின் விரிசலுக்கு மேலும் தீனிபோடும் விதமாக அமைந்திருப்பதாகவும் கருதப்படுகிறது.

பெண்ணாக மாற அந்தரங்க உறுப்பை அறுத்துக் கொண்ட 17 வயது சிறுவன்!!

0

பிரயாகிராஜில் உள்ள ஒரு 17 வயது மாணவர் UPSC தேர்வுக்குத் தயாராகும் போது , தன்னை பெண்ணாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து தனது அந்தரங்க உறுப்பைக் வெட்டியுள்ளார்.

அவர் “எவ்வாறு ஒரு பெண்ணாக உடல் மாற்றம் செய்யலாம்” என்று கூகுள் மற்றும் யூடியூப் மூலம் தேடியுள்ளார்.முதலில், அவர் அனஸ்தீஷியா எப்படி கொடுப்பது என்பது  மேற்கொண்டு  “அந்தரங்க  உறுப்பைக் வெட்டுதல்” போன்ற வீடியோக்களை பார்த்துள்ளார்.

ஆபரேஷன் செய்வதற்கு முன், தானே அன்த்தீஷியா கொடுத்துள்ளார். மேற்கொண்டு சிகிச்சை செய்து கொள்ளவே வலி தாங்க முடியவில்லை.இப்போது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார்.

பா.ஜ.க அரசை குறி வைத்த ஆ.ராசா- பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவதாக விமர்சனம்

0

BJP: அதிமுக, பாஜக-வின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக கழகத் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதிமுக-வினர் இன்று எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை தீர்மானிப்பது அவர்களது தலைமை அல்ல; பாஜக-வினர் தான், குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வார்த்தையை அதிமுக-வின் அரசியல் நகர்வை தீர்மானிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டு இருக்கிறார்.

அதிமுக எப்போது கூட்டணி முடிவு எடுக்க வேண்டும், எப்போது பிரச்சாரம் செய்ய வேண்டும், எந்த கோஷங்களை எழுப்ப வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிப்பது கட்சித் தலைவர் அல்ல, அமித்ஷா தான் என்று தன்னுடைய கடுமையான வாதத்தை முன்வைத்துள்ளார். கட்சியின் தலைவருக்கு சுயமாக முடிவெடுக்க முடியாத சூழ்நிலை உருவானது அந்த கட்சிக்கும், தமிழக அரசியலுக்கு ஆபத்தானதாகும் என்று தெரிவித்தார்.

அதிமுக-வின் முடிவெடுக்கும் சுதந்திரம் அனைத்தும் இன்று பாஜக-வின் கையில் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார். அதிமுக-வின் தற்போதைய நிலையைப் பார்த்தால் கட்சியின் தொண்டர்கள் அதிருப்தியடைந்து வேறு வழிக்கு மாறிவிடுவார்கள் என்றும் வலியுறுத்தினார்.

இப்படியே தொடர்ந்தால் அதிமுக-வுக்கு எதிர்காலமே இல்லாமல் போகும், தங்களின் சுயமரியாதையை இழக்கும் நிலை வந்துவிடும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கடுமையான விமர்சனத்தால் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் தீவிரமாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அடுத்தக்கட்ட பணியில் ஈடுபட போகும் அண்ணாமலை.. அரசியலா? பால் பண்ணையா?

0

BJP : பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பால் பண்ணை தொடங்க போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இவர் தனது அறிக்கையில் பாஜக என்று குறிப்பிடாமல் “Ex IPS” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு இவர் அரசியலில் இருந்து முழுமையாக வெளியேற போகிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இதற்கு முன் பாஜக-வில் இருந்து வெளியேறிய கே.நாராயணராவ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார், அதே போல் பாஜக-வின் தேசிய தலைவராக இருந்த ஜன கிருஷ்ணமூர்த்தி தற்போது சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர்கள் வரிசையில் அண்ணாமலையும் இடம் பெற போவதை போல அவரின் அறிவிப்பு உள்ளது.

அரசியலுக்கு வருவதற்கு முன்னரே தன்னுடைய சொந்த முயற்சியில் பால் பண்ணையை ஆரம்பித்தார். அதேபோல், சில முதலீட்டு நிறுவனங்களிலும் பங்குகளை வைத்துள்ளார். இதன் மூலம் வரும் வருமானம் தான் தன்னுடைய குடும்ப செலவுகளுக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் உதவியாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

நான் அரசியலில் இருக்கிறேன் என்பதற்காகவே யாரிடமும் பணம் கேட்பதில்லை, என்னுடைய உழைப்பின் மூலம் தான் வாழ்க்கையை நடத்துகிறேன் என்று கூறியுள்ளார். இயற்கை விவசாயத்தின் மீது நான் கொண்ட ஆர்வத்தினால் எங்கள் “we the leaders” என்ற அறக்கட்டளையின் மூலம் இயற்கை விவசாயம் தொடர்பாக பல ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் நமது இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனத்தையும் தொடங்குவேன் அதற்கு அடித்தளமாக இது அமையும் என்றும் கூறியுள்ளார். “அரசியலை வியாபாரம் ஆக்கவில்லை” என்ற கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஒரே வாரத்தில் புயலை கிளப்பிய தமிழக அரசியல்.. தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முக்கிய தலைவர்கள்!

0

தமிழக அரசியலில் கடந்த ஒரு வாரமாக பதவி நீக்க அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒரே வாரத்தில் முதன்மை கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக அதிமுக-வில் எம்.ஜி.ஆர் காலம் முதல் இன்று வரை அனைவராலும் அறியப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

கட்சியின் உள்விவகாரங்களை பொது வெளியில் பேசியதாலும், தலைமைக்கு எதிராக பேசியதாலும் பதவியில் இருந்து நீக்கினோம் என்று இ.பி.எஸ் கூறினார். அவரது பதவி பறிப்பு அ.தி.மு.க-வில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

இவ்வாறு தொடர்ந்து இரண்டு பதவி நீக்கு அறிவிப்புகளும் வெளியான நிலையில், அதன் சூடு கூட தணியாத நேரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை நீக்கி உள்ளார். பாமக-வில் அன்புமணிக்கும் அவருடைய தந்தை ராமதாசுக்கும் இடையே தலைமை போட்டி நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலை அரசியலில் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அன்புமணி தனிக்கட்சியாக செயல்படுவதாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட 16 ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டுகளுக்கு கெடு விதித்திருந்தும், அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்காததுமே காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் பாமக-வில் பெரிய பிளவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் மூவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? தனது கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்குவார்களா? இல்லை தனித்து செயல்படுவார்களா, அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி அமைப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒரே வாரத்தில் பல கட்சிகளில் பதவி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதால் இது சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக வை கட்டுக்குள் கொண்டு வர பாஜக-வின் ரகசிய சதி திட்டம்!! தீவீரமடையும் கூட்டணி பிளவு!!

0

ADMK BJP: அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி வைத்தாலும் கட்சிக்குள்ளேயே பனிப்போர் நடைபெற்ற வருகிறது. பாஜக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் அதிமுக வரவேண்டும் என நினைக்கிறது. ஆனால் இது நடக்காத காரியம். ஆரம்பத்தில் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவருக்கு எதிரான டிடிவி தினகரன் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை ஒதுக்கியே வைத்தது. ஆனால் கட்சிக்குள் மற்றொரு மூத்த தலைவரை வைத்து மறைமுகமாக காய் நகர்த்தி வருகிறது.

அந்த வகையில் செங்கோட்டையன் ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் எனக் கூறியதோடு எடப்பாடிக்கு பத்து நாள் கெடு வைத்தார். அந்த பத்து நாளுக்கு சரி பதிலடி கொடுக்கும் விதமாக அவரை அடிப்படை பதவியிலிருந்தே எடப்பாடி நீக்கம் செய்தார். பதவி நீக்கிய ஓரிரு தினங்களிலேயே செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய மந்திரி, நிதியமைச்சர் என அனைவரையும் சந்தித்து ஆலோசனையும் பெற்று வந்துள்ளார்.

அதிமுக கட்சியிலிருந்து நீக்கிய வரை பாஜக சந்திப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவிலிருக்க அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற ஆதரவு பாஜக மத்தியில் உள்ளது. ஆனால் எடப்பாடி இந்த அரவணைப்புக்கு ஒருபோதும் ஒத்து வரவில்லை. இதனால், முக்குலத்தோரின் வாக்கு எனத் தொடங்கி செங்கோட்டையனின் கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பெரும்பான்மையான இடங்களிலும் வாக்கு வாங்கி சிதறக்கூடும். இதனால் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் கருத்து.

ஆரம்ப கட்டத்தில் எடப்பாடியின் போக்கில் விட்டு விட்டு பின்பு நமக்கு ஏற்றார் போல் கட்சியை வடிவமைத்துக் கொள்ளலாம் என நினைத்துள்ளனர். ஆனால் அது சாத்தியமற்றது. அதிமுகவின் நிலையற்ற தன்மையை பயன்படுத்தி பாஜக முன் வந்து விடலாம் என்று நினைக்கிறது. இதனால் தான் ஆரம்பத்தில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தது போல் இருந்துவிட்டு தற்பொழுது கூட்டணிக்குள்ளேயே எதிரான வேலைகளை பாஜக செய்து வருகிறது.

அரசியலில் புதிய திருப்பம்: தி.மு.க-விற்கு ஷிப்டாகும் அண்ணாமலை.. அபாய நிலையில் பாஜக!!

0

BJP DMK: தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. அண்ணாமலை திடீரென தி.மு.க-வுக்கு நெருக்கம் காட்டும் வகையில் நடந்து கொள்வதாகவும், இது அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த போது தொடர்ந்து தி.மு.க அரசை விமர்சித்து வந்தார், ஆனால் தற்போது தி.மு.க-விற்கு சாதகமாக அவரது கருத்துகள் உள்ளன என்று கூறப்படுகிறது. அதிமுக-வுடன் கூட்டணி வைத்துக் கொள்வதா இல்லையா என்ற விவகாரத்தில் அண்ணாமலை மற்றும் அமித்ஷா இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக சொல்லப்படுகிறது.

கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் கூட்டணிக்குள் நிலவும் பிளவுகள் மற்றும் அண்ணாமலையின் அரசியல் கனவுகள் ஆகியவை அவர் பா.ஜ.க-விலிருந்து விலகும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக பேசப்படுகிறது. ஏற்கனவே அ.தி.மு.க, பா.ம.க கட்சியில் ஏற்பட்ட பிளவுகளை சமாளிக்க முடியாத நிலைமையில் இருக்கும் பா.ஜ.க அரசு, அண்ணாமலையின் முடிவால் மேலும் சிக்கலில் சிக்க வாய்ப்பு உள்ளது.

அண்ணாமலையின் தி.மு.க-விற்கு சாதகமான கருத்துகள் தமிழக அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பா.ஜ.க-வின் முன்னாள் மாநில தலைவர் திடீரென திசை மாறுவது எதிர்கால அரசியலுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எடப்பாடிக்கு ஷாக்.. விஜய்யுடன் இணையும் அதிமுக கூட்டணி கட்சி!!

0

TVK: தமிழக அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியிலிருந்து அடுத்ததாக யார் வெளியேறப் போகிறார்கள் என்பது தற்போது பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

ஏற்கனவே டி.டி.வி தினகரன் த.வெ.க உடன் சேர அதிக வாய்ப்புள்ள நிலையில், பாரதம் கட்சியின் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி சமீபத்தில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருப்பதும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கூறியிருப்பதும் புதிய அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

இவரின் இந்த கருத்து இவர் அ.தி.மு.க கூட்டணியில் நீடிப்பாரா? இல்லையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் சிறிய கட்சிகள் தங்களது அடையாளத்தை நிலைநிறுத்தும் முயற்சியில், அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி த.வெ.க-வுக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பூவை. ஜெகன் மூர்த்தியின் இந்தக் கருத்து, அ.தி.மு.க கூட்டணியில் நடக்கவுள்ள பிரிவுகளின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் அ.தி.மு.க கூட்டணியில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பூவை. ஜெகன் மூர்த்தியின் இந்த கருத்தும், அந்த மாற்றத்துக்கு அடித்தளமாக அமைகிறது.