Home Blog Page 110

தவெகவுடன் இணையும் புதிய கட்சி! கூட்டணி பேச்சுவார்த்தை தொடக்கம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு 

0

தமிழக அரசியல் களத்தில், கூட்டணிகள் எப்போது உருவாகின்றன, எப்போது கலைகின்றன என்பதில் எப்போழுதும் ஆர்வம் குறையாது. குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அ.ம.மு.க மற்றும் த.வெ.க இணைந்து செயல்படப்போகிறதா இல்லையா என்ற கேள்வி கடந்த சில வாரங்களாகவே எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இதுகுறித்து விளக்கத்தை அளித்துள்ளார். விஜய்யுடன் கூட்டணி அமைக்க போகிறிர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இன்னும் அதை பற்றி யோசனை செய்யவில்லை. அ.ம.மு.க இன்று வரை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறோம். உறுதியாக வெற்றி பெரும் கட்சியிலேயே கூட்டணி வைத்துக் கொள்வோம் என்று கூறினார்.

த.வெ.க உடனான கூட்டணி பேச்சுகள் நடந்தன என்பது உண்மை. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த முடியும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். அரசியல் கூட்டணிகள் என்பது மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும். வெறும் பதவி, அதிகாரம் என்ற நோக்கில் செயல்பட கூடாது. எங்கள் கட்சி எப்போதும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும்.

A.M.M.K. - T.V.K alliance .. TTV has revealed the truth!
A.M.M.K. – T.V.K alliance .. TTV has revealed the truth!

எந்த கூட்டணியில் நாங்கள் இணைந்தாலும், அது மக்களின் நலனையும், எதிர்கால வளர்ச்சியையும் முன்னிலைப்படுத்துவதாக அமையும் என்றும், மக்கள் விருப்பமே இறுதியில் தீர்மானிக்கும் சக்தி என்றும் தினகரன் வலியுறுத்தினார். இவரின் இந்த விளக்கம் அ.ம.மு.க –த.வெ.க கூட்டணி குறித்து நிலவும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

மேலும், வரவிருக்கும் 2026 தேர்தலை முன்னிட்டு அ.ம.மு.க பல்வேறு கட்சிகளுடன் ஆலோசனைகள் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க ஆகியவை தங்களின் கூட்டணித் திட்டங்களை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், டி.டி.வி. தினகரனின் இந்த விளக்கம் அரசியலில் மேலும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதேசமயம், தேர்தலுக்கு முன்பு இன்னும் பல்வேறு கட்சிகளிடையே கூட்டணி மாற்றங்கள் நிகழ அதிகளவு வாய்ப்பு உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி இருந்தால் தான் எங்களுக்கு ஈசி – உதயநிதியி ஓபன் டாக்!!

0

அ.தி.மு.க-வில் சமீபத்திய அரசியல் மாற்றங்கள் மற்றும் பிரிவுகளை தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்துகளை சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளார். அவர், “அ.தி.மு.க-வின் நிரந்தர பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தான் தொடர வேண்டும்; அது தான் எங்களுக்கு ஈசி” என்று கூறி நகைச்சுவை கலந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

உதயநிதியின் இந்த கருத்து, தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் சிரிப்பையும், கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதன் பொருள், அ.தி.மு.க-வின் தலைமையில் சிக்கல் நீடித்தால், அது தி.மு.க-வின் அரசியல் முன்னேற்றத்தில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது என்பதே ஆகும்.

இ.பி.எஸ் ஆட்சியின் கீழ் அ.தி.மு.க பல அணிகளாக பிளவுபட்டு பல தேர்தல்களில் எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்துள்ளன என்பதையும், இதனால் தி.மு.க-வுக்கு அரசியலில் வெற்றி பெறுவது எளிதில் கிடைக்கும் என்பதையும் அவர் நகைச்சுவையாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க வலுவிழந்து விட்டதை மக்கள் மத்தியில் திணிக்கும் முயற்சியில் தி.மு.க ஈடுபட்டு வருகிறது. அந்த முயற்சியின் ஓர் அங்கமாக உதயநிதியின் இந்த கருத்தை பார்க்க முடிகிறது. இந்த சொற்கள், ஒரு பக்கம் உதயநிதியின் அரசியல் கூர்மையை வெளிப்படுத்துகின்றன. மற்றொரு பக்கம், அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை மற்றும் பலவீனங்களை சுட்டிக்காட்டுகிறது.

இது அ.தி.மு.க-வின் ஆதரவாளர்களை சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. உதயநிதியின் இந்த கருத்து ஆழமான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம், தி.மு.க தனது நம்பிக்கையை வலுப்படுத்தி வருகிறது.

இ.பி.எஸ் தலைமையின் தோல்விகள் குறித்து டி.டி.வி. தினகரன் ஆவேசம் ! மாற்று வழியில் செல்லும் மக்கள்!!

0

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மற்றும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை குறித்தும், இ.பி.எஸ் தலைமையிலான தேர்தல் தோல்விகள் குறித்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் அ.தி.மு.க எப்போதும் வெற்றிப் பாதையில் நடந்தது.

சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்திலும் மக்கள் நம்பிக்கையோடு அ.தி.மு.க-க்கு வாக்களித்தனர். ஆனால் இ.பி.எஸ் கையில் அ.தி.மு.க சென்றதிலிருந்தே, தேர்தலில் தோல்விகள் தொடர்கின்றன. இடைத்தேர்தல், உள்ளாட்சி, நாடாளுமன்றம் எதிலும் வெற்றியை பார்க்க முடியவில்லை.

இதுவே அவரது தலைமையின் திறமையைக் காட்டுகிறது” என தினகரன் ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் அ.தி.மு.க மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது என்றும் கூறியுள்ளார். இ.பி.எஸ் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு பதிலாக, அதிகாரப் போட்டியில் மூழ்கியுள்ளார் எனவும், இ.பி.எஸ்-யின் தவறான முடிவுகள், தலைமை வெறியே இதற்கு காரணம் என்று அவர் சாடியுள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் அ.தி.மு.க-வின் நிலைமை இன்னும் மோசமடையும் என்றும், இ.பி.எஸ் தன்னை திருத்தி கொள்ளவில்லையெனில் மக்கள் மாற்று வழியை தேடுவார்கள், இந்நிலை நீடித்தால் அ.தி.மு.க-வின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்” என்று தினகரன் எச்சரித்தார். அ.தி.மு.க-வில் தலைமைப் பிரச்சனை மீண்டும் தீவிரமடையும் நிலையில், தினகரனின் இந்த கருத்துகள் அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக தான் தான் இந்த இடத்தை பிடிக்கும்.. அதிமுக க்கு வாய்ப்பே இல்லை!! அடித்துக் கூறும் அண்ணாமலை!!

0

முன்னாள் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க மற்றும் த.வெ.க கட்சிகளின் வளர்ச்சியை விமர்சித்துள்ளார். 2026 தேர்தலில் தி.மு.க-விற்கும், த.வெ.க-விற்கும் தான் போட்டி என்று விஜய் கூறியதை உறுதிப்படுத்தும் விதமாக “தி.மு.க அதிக வாக்குகள் கொண்ட வலிமையான கட்சியாக உருவெடுத்துள்ளதாகவும், “த.வெ.க இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதால் தான் அ.தி.மு.க உடன் கூட்டணியை அமைத்தோம், ஆனால் அ.தி.மு.க-வே தற்போது வலிமை இழந்து வருவதாகவும், அது மூன்று அல்லது நான்காவது இடத்திற்கு செல்லப்போகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அவரது இந்த பேச்சு, தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் இவர் தி.மு.க-விற்கும், த.வெ.க-விற்கும் ஆதரவு அளித்து பேசி இருப்பது ஏதாவது ஒரு கூட்டணியில் அவர் இணைய போவதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. இது பா.ஜ.க தலைமைக்கு எதிரான அண்ணாமலையின் புதிய முயற்சியாகவும் கருதப்படுகிறது.

மேலும், நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க, திடீரென திருச்சியில் இருந்து தனது பிரச்சார இடத்தை மாற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனைத்து அரசியல் மாற்றங்களும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான சூழலை மேலும் சிக்கலாக்கி உள்ளன. அண்ணாமலையின் புதிய முயற்சிகள், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணியின் நிலை, த.வெ.க வளர்ச்சி ஆகியவை, எதிர்வரும் தேர்தலின் முடிவுகளை பாதிக்கக்கூடும் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது.

பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி.. இழப்பு எங்களுக்கு இல்லை அவருக்கு தான்!! ராமதாஸ் ஆவேசம்!!

0

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அண்மையில் கட்சியின் சின்னத்தை எனது அனுமதி இல்லாமல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த கூடாது என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு ராமதாஸிற்கு சாதகமாக முடிந்தது. அது மட்டுமல்லாமல் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு 16 குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

இந்த குற்றச்சாட்டுக்கு அன்புமணி விளக்கம் தர வேண்டுமென கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அன்புமணி தரப்பிலிருந்து எந்த பதிலும் வராததால் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கியதாக ராமதாஸ் கூறியுள்ளார். சிறிது நாட்களாகவே பா.ம.க கட்சியில், அன்புமணிக்கும் ராமதாஸிற்கும் தலைமை போட்டி நிலவி வருகிறது.

கட்சியில் உள்ள இளைஞர்கள், அன்புமணி பக்கமும், மூத்த தலைவர்கள் ராமதாஸ் பக்கமும் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில் கட்சி இரண்டாக பிளவுப்பட்டிருப்பது நல்லதல்ல; என்று பா.ம.க கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ராமதாஸின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அன்புமணி தனி அணியாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அன்புமணியை பொறுப்பிலிருந்து நீக்கியதன் மூலம் எங்கள் கட்சிக்கு எந்தவித பின்னடைவும் கிடையாது மாறாக அது அவருக்கே பெரும் பின்னடைவு என்றும் கூறியுள்ளார் ராமதாஸ். இதன் மூலம் அன்புமணியை நீக்கியதால் கட்சியில் பிளவு ஏற்படாது, ஒருமைப்பாடு தான் அதிகரிக்கும் என்பதில் ராமதாஸ் உறுதியாக இருப்பது வெளிப்படுகிறது.

மகனை கட்சியை விட்டு துரத்திய ராமதாஸ்.. மகளுக்கு போகும் முக்கிய போஸ்டிங்!!

0

PMK: தமிழக அரசியல் களமானது நிலைப்பாடற்ற தன்மையில் உள்ளது. திமுக கூட்டணி கட்சிகளோடு சமரசமாக இருக்கிறது என்று கூறினாலும் உட்கட்சிக்குள் மோதல் போக்கு ஓய்ந்தபாடில்லை. எதிர்கட்சியான அதிமுக வும் நான்கு திசை நோக்கி பிரிந்து காணப்படுகிறது. இதில் பாமக மட்டும் விதி விலக்கல்ல, அப்பா மகனுக்கிடையே மோதல் போக்கானது தீவீரமடைந்துள்ளது. இந்த பிரச்சனையானது தனது சகோதரி மகனுக்கு பதவி கொடுத்ததிலிருந்து தான் வெளிப்பட ஆரம்பித்தது.

அதன் முடிவானது இன்று அன்புமணியை கட்சியை விட்டே நீக்கம் செய்துள்ளனர். இதற்கு முன்பு இருவரும் தனித்தனியே பொதுக்குழு கூட்டத்தை நடத்தினர், அதில் ராமதாஸ் நடத்திய பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிராக 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதுரீதியாக பதிலளிக்கும் படி கூறியிருந்தனர். ஆனால் அதனை அன்புமணி சிறிதும் கூட கண்டுக்கொள்ளவில்லை. இதனால் அவரை கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதிவிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கொண்டு அவரை புதுக்கட்சி தொடங்கி கொள்ளும் படியும் பரிந்துரை செய்துள்ளார். செயல் தலைவர் மட்டுமின்றி அடிப்படை பதவியில் கூட அன்புமணி இனி இருக்க கூடாது என்று முடிவெடுத்துள்ள ராமதாஸ், கட்டாயம் தனது மகளுக்கோ அல்லது மகள் வழி பேரனுக்கோ முக்கிய பொறுப்பை இச்சமயம் ஒதுக்கலாமாம்.

இதுரீதியான அறிவிப்புக்கள் இனி வரும் நாட்களில் வெளியிடப்படலாம். அதேசமயம் ராமதாஸின் இந்த அறிவிப்புக்கு அன்புமணி எந்த ஒரு பதிலையும் அளிக்காமல் உள்ளார். மாற்று கட்சி ஆரம்பிப்பாரா அல்லது பாமக கட்சி வேண்டி எதிர்த்து நிர்ப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அ.தி.மு.க.-வில் ஐந்து அணிகள் இல்லை; ஒரே அணியாக இருக்கிறோம் – இ.பி.எஸ். உறுதி!!

0

அனைத்து கட்சிகளும் 2026 தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் பட்சத்தில் அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. இ.பி.எஸ்-யின் ஆதரவாளர்கள் கட்சிக்கு இ.பி.எஸ் மட்டும் போதும் என்று கூறி வருவதும், பிரிந்து சென்றவர்களின் ஆதரவாளர்கள் கட்சி ஒருங்கிணைய வேண்டும் என்று கூறி வருவதும் பரவலாக அறியப்பட்டு வருகிறது.

இந்த நிலைமை, அ.தி.மு.க.- வின் எதிர்கால அரசியல் நிலையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க பல அணிகளாக பிரிந்து செயல்படுவதாக பலரும் விமர்சித்து வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அ.தி.மு.க ஐந்து அணிகளாக பிரிந்திருக்கிறது என்று விமர்சித்திருந்தார்.

இவ்வாறான விமர்சனங்கள் அனைத்திற்க்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இதனை மறுத்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “அ.தி.மு.க.-வில் ஐந்து அணிகள் இல்லை; நாங்கள் ஒரே அணியாக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார். மேலும் அவர், “எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால், கட்சியின் நலனை மனதில் வைத்து அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்” சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வே வெற்றி பெரும் என்றும் கூறியுள்ளார்.

அ.தி.மு.க தற்பொழுது எதிர்க்கட்சியாக கூட உருமாற முடியாத நிலையில் இருப்பதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவரின் இந்த கருத்தும், இதனையே சுட்டிகாட்டுவதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு கட்சி ஒருங்கிணைந்தால் பிறிந்து சென்றவர்களின், ஆதரவாளர்களின் வாக்கின் மூலமும், அவர்களின் முகமாக அறியப்பட்டு வரும் தொகுதிகளின் மூலமும் கட்சி வலுப்பெற வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

முதலில் அ.தி.மு.க-வை மீட்டெடுங்கள்… திமுக அரசுக்கு எதிராக பேசும் தகுதி இல்லை – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!!!

0

அ.தி.மு.க வின் நிலை குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க-வின் தற்போதைய அரசியல் நிலை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “அ.தி.மு.க தலைமைக்கான பிரச்சனையால் சிதைந்து கிடக்கிறது. மக்களை காப்பாற்றும் நிலையில் அ.தி.மு.க இல்லை. முதலில் அ.தி.மு.க-வை மீட்டெடுங்கள் பிறகு தேர்தலை பற்றி பேசுங்கள்” என்றும், அ.தி.மு.க தற்போது 5 அணியாக பிரிந்திருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

மேலும் அவர், “ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஒற்றுமை இல்லை. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., சசிகலா, தினகரன் என பலர் பிரிந்து கிடப்பதால், அந்தக் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. எனவே தி.மு.க அரசுக்கு எதிராக பேசும் தகுதியே அவர்களுக்கு இல்லை” என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர். “இன்று தமிழக மக்கள் நம்பிக்கையுடன் தி.மு.க அரசின் பக்கம் நிற்கின்றனர். நாங்கள் ஆட்சியில் செயல்பாடுகளை நிரூபித்து வருகின்றோம். ஆனால் அ.தி.மு.க-வுக்கு செய்ய ஒன்றும் இல்லை, அவர்கள் செய்யும் ஒரே வேலை அவர்களுக்குள் சண்டையிடுவதே ஆகும் என்றும் விமர்சித்திருந்தார்.

உதயநிதியின் இந்தக் கருத்து அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உட்கட்சிப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் அ.தி.மு.க. இப்போது அரசியல் எதிரிகளின் விமர்சனத்துக்கும் வழி விட்டதாக அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். வரவிருக்கும் 2026 தேர்தலை முன்னிட்டு, உதயநிதியின் இந்த கூற்று அ.தி.மு.க விற்கு புதிய அழுத்தத்தை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது.

அரசியலில் புதிய திருப்பம்.. மீண்டும் அ.தி.மு.க உடன் தே.மு.தி.க!?

0

2026 தேர்தலை முன்னிட்டு கட்சிகளிடையே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் யார் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் மேலோங்கி உள்ளது. மாநாட்டிற்கு பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட போவதாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

முன்னர் அ.தி.மு.க , தே.மு.தி.க-விற்கும், மக்களவை தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் சீட் தராதது தொடர்பாக சச்சரவு நிலவி வந்தது. இதனால் அ.தி.மு.க விடம் இருந்து பிரேமலதா விஜயகாந்த் சற்று விலகியே இருந்தார். இந்நிலையில் தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த், ஈ.பி.ஸ் என்னை முதுகில் குத்திவிட்டார் என்று கூறினார்.

இதனை மறுத்த பிரேமலதா விஜயகாந்த் நான் அவ்வாறு கூறவே இல்லை, ஊடகங்களின் விளம்பரங்களுக்காக நான் சொல்லாததையெல்லாம் சொன்னதாக சொல்லாதீர்கள், இது கண்டனத்துக்குரியது என்று கூறி இருந்தார். இவர் இவ்வாறு கூறியது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இவரின் பேச்சு அ.தி.மு.க உடன் கூட்டணி வைக்க ஏதுவாக உள்ளதாக கூறப்படுகிறது.

வரப்போகும் தேர்தலில் தே.மு.தி.க-விற்கு கூடுதல் சீட் ஒதுக்கினால் தே.மு.தி.க-அ.தி.மு.க உடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாம். இது ரீதியாக ரகசிய பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரேமலதா விஜயகாந்தின் கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்வாரா இல்லையா? இந்த இரண்டு பெரிய கட்சிகளும் கூட்டணி அமைக்குமா அமைக்காதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது கூட்டணி கட்சியாக உருவெடுத்தால் அது 2026-சட்டமன்ற தேர்தலில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2026 தேர்தலுக்கான சுற்றுப்பயணம் – கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் தி.மு.க!!

0

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக கட்சிகள் அனைத்தும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. அதேபோல் தி.மு.க-வின் தேர்தல் நடவடிக்கைகளும் வேகமெடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணத்தைத் மேற்கொள்ள உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு மக்களுக்காக நிறைவேற்றிய திட்டங்களை வலியுறுத்தியும், அதே சமயம் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்ககாவும் இந்தப் பயணம் அமைகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளையும் 8 மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் தனிப்பட்ட முறையில் ஆய்வு நடத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தொகுதி வாரியாக உள்ள கட்சி நிர்வாகிகள், அடிப்படை கிளை உறுப்பினர்கள், சமூக அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் மகளிரணி ஆகியோருடன் நேரடி தொடர்பு கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் கூறியதாவது, “2026-தேர்தலில் தி.மு.க-வை மீண்டும் வெற்றி பெறச் செய்ய, ஒவ்வொரு தி.மு.க உறுப்பினரும் பங்கு கொள்ள வேண்டும்.

மக்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் முன்னேறுவோம்”.உறுப்பினர் சேர்க்கையை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் தி.மு.க-வின் சாதனைகளை கொண்டு சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்”என தெரிவித்துள்ளார். உதயநிதியின் இந்த சுற்றுப் பயணம் தி.மு.க-வின் அடித்தளத்தை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தி.மு.க-வின் மிகப்பெரிய அரசியல் ஆயுதமாகவும் இது திகழும், என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.