Home Blog Page 132

தவெக வில் திரிஷாவுக்கு பெரிய பதவி.. நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட ஆர்டர்!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகத்தில் திரிஷாவுக்கு முக்கிய பதவி கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தங்களது எதிரி யார் என்பதை விஜய் மீண்டும் உறுதியாக கூறினார். இதனையடுத்து ஆலோசனை கூட்டம் முடிந்ததும் தனியாக ரகசிய மீட்டிங் நடைபெற்றதாம்.

அதில் முக்கிய அங்கமாக கட்சியில் திரிஷா இருப்பதாகவும் அவருக்கு விஜய்க்கு அருகிலேயே முக்கிய பதவியும் கொடுக்கப்படுவது குறித்து நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம். முன்னதாக வெளியான லியோ படத்திலேயே இருவரும் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்ததுடன் இவர்கள் குறித்து கிசுகிசுவும் வெளியானது. அச்சமயத்தில் விஜய் வீட்டில் விவாகரத்து வரை பிரச்சனை சென்றதாகவும் கூறப்பட்டது.

தற்போது நடத்தப்பட்ட ரகசிய மீட்டிங்கில் பெரும்வாரியான நிர்வாகிகளுக்கு இதில் ஒப்புதல் இல்லாததால் இது குறித்த ஆலோசனையை தள்ளி வைத்துள்ளாராம். அதிலும் ஒப்புதல் அளித்த போஸ்டிங்கிலிருக்கும் நிர்வாகிகள் மற்றவர்களிடம் இது குறித்து பேசி சமாதானம் வாங்கும் படி விஜய் ஆர்டர் போட்டுள்ளாராம். இது ரீதியாக வரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் ஜனானயகன் படத்தில் கூட திரிஷா இருபதாகவும் அதில் கூட நெருக்கமாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்யை வைத்து திரிஷா அரசியல் என்ட்ரி கொடுப்பார் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. ஆனால் இதில் நிர்வாகிகளுக்கு துளி கூட விருப்பமில்லையாம்.

அன்புமணி அதிரடி நீக்கம்.. ராமதாஸ் எடுத்த தடாலடி நடவடிக்கை!! ஆடிப்போன பாமக!!

0

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையே மோதல் போக்கானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கட்சியை உருவாக்கி தற்போது நிலை நிறுத்தி இருப்பது ராமதாஸான தனது அப்பா தான் என்பதை கூட மறந்து தலைமை பதவிக்கு அன்புமணி போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார். அதிலும் அவருடன் பல்லாண்டு காலம் துணை நின்ற நிர்வாகிகள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கவும் செய்கிறார். இதனையெல்லாம் பொறுக்க முடியாமல் தான் தற்போது அன்புமணியை தலைமை நிர்வாக குழுவிலிருந்து ராமதாஸ் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

முன்பிருந்த நிர்வாக குழுவை கலைத்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜிகே மணி அருள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் ராமதாஸ் கட்சியின் முழு பவரையும் தன் வசப்படுத்த உள்ளது தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து கட்சி சார்ந்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இது ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை அன்புமணி உடையது என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ராமதாஸ் கட்சி அதிகாரத்தை முழுமையாக தன் வசம் கொண்டு வந்து முக்கிய பொறுப்புகளில் மகள் வழி பேரனான முகுந்தனை நிலை நிறுத்துவதாக கூறுகின்றனர். இது குறித்து தான் நேற்று தைலாபுரத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது கட்சித் தலைமை நிர்வாக குழுவிலிருந்து அன்புமணியை நீக்கியுள்ளது அரசியல் களத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமித்ஷா-வால் முறியும் அதிமுக கூட்டணி.. தளபதியி பக்கம் தாவும் எடப்பாடி!!

0

ADMK TVK: அதிமுக பாஜக கூட்டணி வைத்தாலும் சமீப நாட்களாக இரு கட்சியினடையே உரசல் போக்கு இருந்து வருகிறது. இவர்கள் கூட்டணி அமைத்தும் சரியான பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை என்ற குழப்பம் எழுந்துள்ளது. ஏனென்றால் அதிமுக தங்கள் தலைமையில்தான் ஆட்சி அமையும் என கூறி வருகின்றனர். இதுவே பாஜக கூட்டணி ஆட்சி முறை எனக் கூறுகிறது.

சமீபத்தில் சென்னைக்கு வருகை புரிந்த அமித்ஷாவும் அதேதான் கூறியிருந்தார். இதனால் இரு கட்சிகளுக்கிடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. இந்த காரணத்தினால் அதிமுக தலைமை பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமா என்ற ரகசிய ஆலோசனையை செய்து வருகின்றனர். முன்னதாக பாஜகவே வேண்டாம் என எடப்பாடி திட்டவட்டமாக இருந்த நிலையில், பல விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இந்த கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது.

அப்படி இருக்கையில் கூட்டணி ஆட்சி என்பது எடப்பாடிக்கு அறவே பிடிக்கவில்லை. இதனால் கொள்கை மற்றும் மதவாத எதிரியாக திமுக பாஜகவை எதிர்க்கும் தமிழக வெற்றிக் கழகத்துடன் மீண்டும் கை கோர்க்க எடப்பாடி யோசனை செய்து வருகிறாராம். முன்னதாகவே விஜய்யுடன் தான் கூட்டணி அமைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் வைத்த டிமாண்டானது எடப்பாடிக்கு ஒத்துவரவில்லை.

தற்போது பாஜக கொடுக்கும் இடைஞ்சலை தவிர்க்க மீண்டும் விஜய்யுடன் பேசி பார்க்கலாம் என்று எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் கட்டாயம் இரட்டை முதல்வர் தமிழகத்தை ஆள வாய்ப்புகள் அமையும்.

திமுகவுடன் தான் கூட்டணி.. விஜய் பிராபகரன் கொடுத்த க்ளு!! ADMK வை கழட்டி விடும் தேமுதிக!!

0

DMDK ADMK: அதிமுக எம்பி தேர்தலில் தேமுதிகவிற்கு சீட் வழங்க வில்லை. ஆனால் அதிமுக தேமுதிக விற்கு சீட் வழங்குவோம் என்று ஒப்புதல் அளித்ததாக பிரேமலதா கூறியிருந்தார். அதிமுக அதற்கு முழு மறுப்பு தெரிவித்தது. விஜயகாந்த் போல தனது மகனையும் எம்பி சீட் வாங்கி பதவியில் உட்கார வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பிரேமலதா தீவிரமாக இருந்தார். ஆனால் அவரது அரசியல் கணக்கெல்லாம் அதிமுகவால் தகிடுபொடி ஆகிவிட்டது.

இதனால் ஜனவரி மாதம் நடக்கும் மாநாட்டை அடுத்து தங்களது கூட்டணி குறித்து அறிவிப்போம் என தேமுதிக கூறிவிட்டனர். இவர்களை கைநழுவ விட்டு விடக்கூடாது என்பதற்காக அதிமுகவும் அடுத்த ஆண்டு கட்டாயம் எம்பி தேர்தலில் சீட் வழங்குவதாகவும் கூறிவிட்டது. அவ்வபோது பிரேமலதா மற்றும் அவரது மகன்களிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்கையில் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் பிரபாகரனிடம் கேட்டபோது, எங்களுக்கு திமுக அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. திராவிட கொள்கை மற்றும் சிந்தனை இருக்கும் கட்சியில் கட்டாயம் கூட்டணி வைப்போம் என தெரிவித்துவிட்டார். இவர் கூறுவதை வைத்து பார்க்கையில் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இதனால் அதிமுகவிற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும்.

முன்னதாக பாமக அதிமுக வை விட்டு விலகியது போல தற்போது தேமுதிக வும் கட்சியை விட்டு நீங்க தயாராகி விட்டது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

அமித்ஷா வே சொல்லியாச்சு.. அமைச்சரவை தான்!! கன்பார்ம் செய்த டிடிவி!! நெருக்கடியில் அதிமுக!!

0

AMMK: அதிமுக மற்றும் பாஜக இரு கட்சிகளும் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்ப்பதற்காக ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் ஒன்றிணைந்ததிலிருந்து கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறும் என பாஜக கூறுகிறது. சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா கூட இதையேதான் தெரிவித்தார். அச்சமயம் அதிமுகவில் அனைவரது கவனமும் எடப்பாடி நோக்கி இருந்தது. எங்களுக்கே தெரியாமல் ஏதாவது மறைமுக உறுதி கொடுத்து விட்டீர்களா?? ஏன் பாஜக கூட்டணி ஆட்சி என கூறி வருகின்றனர் என கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.

எடப்பாடியும், அவர்கள் கூறுவதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கூட்டணி முறையில் ஆட்சி கிடையாது அதிமுக தலைமையில் தான் ஆட்சி என விளக்கம் அளித்து வருகிறார். இப்படி இருக்கையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், அமைச்சரவையில் கூட்டணி உண்டாகும் என தெரிவித்துள்ளார். அதன்படி முதல்வர் வேட்பாளர் யார் என்று ஆலோசனை செய்து தான் கூறுவார்கள். இது குறித்து நான் ஏதும் சொல்லத் தேவையில்லை. அமித்ஷாவே சொல்லிவிட்டார்.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறியது அதிமுக கட்சிக்குள் பூதாகரமாக வெடித்துள்ளது. அமைச்சரவையில் கூட்டணி எனக் கூறினால், அதிமுகவுடன் கைகோர்க்க நேரிடும். இதனால் எடப்பாடி கொந்தளிப்பில் உள்ளார். இப்படியே கூட்டணி முறையில் ஆட்சி என பாஜக கூறி வந்தால் கட்டாயம் அதிமுக வெளியேறிவிடும் என அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். அதுமட்டுமின்றி டிடிவி தினகரன் பேசுகையில், எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத நிலையில் கூட்டணி ஆட்சி தான் சரிவரும் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறுவது இவர்களுக்கு அடுத்து மோடி தான் சரியானவர் வேறு யாரும் கிடையாது என்பதை உணர்த்தும் படி உள்ளது.

பெரிய பிரச்சனையில் விஜய்.. மீண்டும் கட்சி கொடிக்கு வந்த சிக்கல்!!

0

TVK: தமிழக மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக ஆம்ஸ்ட்ராங் இருந்தார். கடந்த ஆண்டு இதே நாளில் அவரது இல்லத்திற்கு பக்கத்திலேயே படு கொலை செய்யப்பட்டார். மேற்கொண்டு இது ரீதியாக தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. தற்போது வரை இந்த வழக்கானது நடைபெற்ற வரும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் அவரது மனைவிக்கு மாநில பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது.

பின்பு கட்சிக்குள்ளேயே சில மனக்கசப்புகள் ஏற்பட அவர் விலகிக் கொண்டார். இன்று அவர் நினைவு தினத்தையொட்டி புதிய கட்சி ஒன்று தொடங்கி உள்ளார். இதில் புதிய சிக்கல் என்னவென்றால் இவர் தொடங்கிய கட்சியின் சின்னமும் யானை தான். தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தில் இரு யானைகள் இருந்தபோதே பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையம் வரை சென்றது. ஆனால் கட்சிக்கொடி மற்றும் அதில் உள்ள சின்னங்கள் எதற்கும் தேர்தல் ஆணையம் பொறுப்பாகாது.

அதற்கு அங்கீகாரமும் வழங்குவதில்லை என தெரிவித்து விட்டனர். தேர்தல் நேரத்தில் சமயத்தில் ஒரு கட்சியின் வாக்கு சின்னத்தை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்ற விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் கொடுத்து விட்டது. அத்தோடு விடாமல் மேற்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி, உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதனை விசாரணை செய்த நீதிமன்றமும், உங்களது கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது.

வாக்காளர்களை குழப்பம் வகையில் ஏதும் இல்லை என்று நீதிபதி கூறிவிட்டார். இருப்பினும் தங்கள் தரப்பில் மேற்கொண்டு ஆவணங்கள் சமர்ப்பிக்க பகுஜன் சமாஜ் கட்சியானது மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு பதிலளிக்குமாறு தமிழக வெற்றிக் கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கே நிலுவையில் இருக்கும் பட்சத்தில் தற்போது ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி புதிய கட்சி தொடங்கிய சின்னத்திலும் யானை உள்ளது.

தமிழகத்தில் தற்போது மூன்றாவது கட்சியாக யானை சின்னத்திலேயே களம் இறங்கி இருப்பது சற்று மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர்.

விஜய்-க்கு ஆப்பு அடித்த பிகே.. எல்லாத்துக் ஆதவ் தான் காரணமா!! கொந்தளப்பில் தவெக தளபதி!!

0

TVK: தாவெக வின் அரசியல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் தற்போது விலகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் கட்சிக்கு சென்ஸ் அனலிடிக்ஸ் என்ற நிறுவனத்தின் வழியாக பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக இருந்து வந்தார். இவருக்கு முன்னதாகவே ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன் உள்ளிட்ட தங்கள் தரப்பு ஆலோசனையை கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் கட்சிக்குள் ஆதவ் அர்ஜுனாவின் தலையீடு தான் அதிகமாக இருந்துள்ளது.

அவர் கை காட்டும் நிர்வாகிகளை பணியமர்த்துவது, அவர் சொல்லுக்கு உடனடி நடவடிக்கை என தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இதனால் பிரஷாந்த் கிஷோர் பேச்சு எடுபடவில்லை. இதை ஓரளவுக்கு மேல் பிரசாந்த் கிஷோரால் பொறுக்க முடியாமல் தேர்தல் ஆலோசகரிலிருந்து விலகிக் கொண்டார். இதற்கு முக்கிய காரணமாக அவர் கூறுவது தற்போது பீகாரில் தேர்தல் நடைபெறப்போவது தான். அதில் தனது முழு கவனத்தையும் செலுத்த உள்ளார்.

அங்கு அரசியல் ஆலோசகராக செயல்படுவதால் தற்போது தவெக கட்சியில் பங்காற்ற முடியவில்லை. இவர் இல்லாத இந்த இடத்தில் வேறு யார் நிரப்புவார்?? மேலும் கட்சியின் வளர்ச்சி சார்ந்த பணிகள் எப்படி இருக்கும்?? மீண்டும் பிரசாந்த் கிஷோர் வர வாய்ப்புள்ளதா என்றெல்லாம் பல கேள்விகளை நிர்வாகிகள் முன்வைத்து வருகின்றனர். ஆனால் விஜய் இது ரீதியாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறார்.

பீகாரில் பிகே களம் காண இருப்பதால் தேர்தல் முடிந்து டிசம்பர் மாதம் கழித்து மீண்டும் தவெக வில் அரசியல் ஆலோசகராக செயல்படுவதாக தகவல்கள் வெளியிகியுள்ளது. அச்சமயத்தில் ஆதவ் அர்ஜுனாவின் நிலைப்பாடு இருக்க கூடாது என்ற கண்டிஷனும் போட வாய்ப்புள்ளதாம்.

சற்று முன்: பாமக வில் கட்டாயம் பிளவு ஏற்படும்.. அடித்து சொல்லும் ஜி கே மணி!!

0

PMK: பாமகவின் உட்கட்சின் மோதலானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இதனை சரி கட்டும் முயற்சியில் மூத்த தலைகள் களமிறங்கினாலும் அதனை செவி கொடுத்து கேட்கும் நிலையில் இருவரும் இல்லை. இதனின் உச்சகட்டமாக சமீபத்தில் துணை பொதுச் செயலாளர் பதவியானது பாமக எம்எல்ஏ அருளுக்கு ஒதுக்கப்பட்டது.

ஆனால் அன்புமணி அதனை எதிர்த்து அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். அன்புமணி நீக்கியது செல்லாது என ராமதாஸ் கோரி, அருள் கொறடா பதவியில் இருப்பதால் ஜிகே மணி மூலம் ஆளுநருக்கு கடிதம் அளித்துதான் நீக்க முடியும் என்ற விளக்கத்தையும் கூறியிருந்தார். இவ்வாறு நீக்குவதும் பொறுப்பு கொடுப்பதும் தொடர்ந்து செய்து வருவதால், யார்தான் தலைவர் என்பதே தெரியவில்லை. இந்நிலையில் இன்று தைலாபுரத்தில் ராமதாஸ் மாநில நிர்வாகிகளுடன் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார்.

இதில் கலந்துகொண்ட ஜிகே மணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவருக்கும் ஆடர் போடும் நோக்கில் அறிவுரை கூறியுள்ளார். கட்சியின் பிரச்சனைக்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் உட்கார்ந்து பேச வேண்டும். அப்போதுதான் தீர்வு கிடைக்கும். இருவரும் தங்களுக்குள் மாறி மாறி நிர்வாகிகளை நீக்கி அமர்த்துவது இந்த பிரச்சனைக்கு ஒருபோதும் தீர்வு கொண்டு வர முடியாது. அதேபோல இரு தலைவர்களும் ஒன்று சேர வேண்டும்.

இல்லையென்றால் அதல பாதாளத்திற்கு கட்சி சென்று விடும். இவர்களின் நடைமுறையை கண்டு தொண்டர்கள் நிர்வாகிகள் என அனைவரும் பெரும் வேதனையில் உள்ளனர். இதனால் கட்சி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும், பேசி சமாதானமாகும் பட்சத்தில் பழைய வேகத்துடன் கட்சி வளர்ச்சி அடையும். அதேபோல கொறடா பதவி ரீதியாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆனால் இது சம்பந்தமாக எந்த ஒரு பிரச்சனையும் பெரிதாகாது. பாட்டாளி மக்கள் கட்சி உருவாகுவதற்கு காரணமாக இருந்தவர் ராமதாஸ் தான். அவர் இல்லாவிட்டால் இந்த கட்சி கிடையாது. இந்த காலகட்டத்தில் கட்சி வளர்ந்து நிற்பதற்கு அவர்தான் முக்கிய காரணம். அவர் காட்டும் வழியில் அனைவரும் நடக்க வேண்டும். மற்றொரு பக்கம் ராமதாஸையும் விட்டுக் கொடுக்காமல் அவர்தான் பாமகவின் முதல்வர் வேட்பாளர், மத்திய அமைச்சராக இருந்தபோது பல நலத்திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் பாமக அடுத்த கட்டத்திற்கு சென்றது.

அப்படி பார்க்கையில் இரு சக்திகளும் கட்டாயம் ஒன்றிணைய வேண்டும். இது நடைபெறவில்லை என்றால் கட்சிக்கு பெரும் இழப்பு உண்டாகும். இந்த பிளவுக்கு மாற்றுக் கட்சியினர் யாரும் காரணமாக இருக்க மாட்டார்கள், மாறாக உட்கட்சி மோதல் தான் உண்டாகும் என தெரிவித்தார்.

இந்த முன்னணி நடிகரை மனதில் வைத்து தான் லெவன் படத்தின் கதையை எழுதினேன்! இயக்குனர் ஓபன் டாக்!

0

Cinema Talkies: தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் தற்போது மாறிவிட்டது. முன்னாடி எல்லாம் முன்னணி நடிகர்களின் படம் தான் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். இப்போ நிலைமை அப்படி இல்ல. நிலைமை தலைகீழா மாறிடுச்சு. நல்ல கதையம்சம் கொண்ட படத்தை பார்க்க மக்கள் விரும்புகின்றனர். குறிப்பாக திரில்லர் ஜோன், சைக்கோ கதையம்சம் கொண்ட படங்களை மக்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்.

அந்த வகையில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான லெவன் படம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அறிமுக இயக்குனர் லோகேஷ் அஜிஷ் இயக்கத்தில் நடிகர் நவீன் சந்திரா நடிப்பில் லெவன் படம் வெளியானது. முற்றிலும் மாறுபட்ட சைக்கோ திரில்லர் கதையமைப்பில் படம் வெளியானதால் ரசிகர்களை இந்த படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாடினர். ஒரு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பொதுவாக சைக்கோ கில்லர் தண்டிக்கப்பட வேண்டும் என்றுதான் மக்கள் நினைப்பார்கள்.

ஆனால் இந்த படத்தில் இந்த சைக்கோ சாகக்கூடாது, மீதி இருக்கும் அந்த ஒருவனையும் இவன் தண்டிக்க வேண்டும் என படம் பார்த்த ஒவ்வொருவரும் யோசிக்க வைத்தது இந்த படம். அண்மையில் படத்தின் இயக்குனர் லெவன் படத்தைப் பற்றி மனம் திறந்துள்ளார். உண்மையில் இந்த படத்தின் கதையை இவர் எழுதிய போது சிம்புவை ஹீரோவாக வைத்து நடிக்க வைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து தான் படத்தை எழுதி இருக்கிறார். பின்னர் பல வகைகளில் பலரை தொடர்பு கொண்டு சிம்புவை சந்தித்து இந்த கதையை சொல்லிவிட வேண்டும் என்று இவர் யோசித்த போதும் இவரால் சிம்புவை நெருங்க முடியவில்லை.

கடைசியில் தான் நவீன் சந்திராவிடம் கதையை சொல்லி ஓகே செய்து லெவன் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் அஜிஷ். இந்த லெவல் படத்தில் நவீன் சந்திராவுக்கு பதில் சிம்பு நடித்திருந்தால் படம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள் நண்பர்களே.

தைலாபுரத்தில் திடீர் மீட்டிங்.. முக்கிய அறிவிப்பை வெயிடப்போகும் ராமதாஸ்!! அதோகதியாகும் அன்புமணி!!

0

PMK: பாமக கட்சிக்குள் அதிகாரத்தன்மை போட்டியானது நடைபெற்று வருகிறது. தலைமை பதவியானது அப்பாவுக்கா அல்லது மகனுக்கா என்பது தற்போது வரை தெரியவில்லை. ஒருவர் மாற்றி ஒருவர் தங்களுக்கு ஆதரவாக நிற்கும் நிர்வாகிகளை நீக்குவதும் மாற்றுவதையும் வேலையாக வைத்து வருகின்றனர். இதனால் கட்சியின் மதிப்பானது பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதன் விளைவாக வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைக்கும் கட்சிகள் இவர்கள் வைக்கும் டிமான்டை கூட ஏற்காது.

இந்த சூழலில் தான் இன்று தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாநில நிர்வாகி குழு கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளனர். இந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சி சார்ந்த முக்கிய முடிவு எடுக்கப்படும் தெரிவித்துள்ளனர். அதாவது கட்சியை இரண்டாக பிரிக்க அதிக வாய்ப்புள்ளதாம். பாமக பெயருடன் கட்சியானது ராமதாஸ் கைக்கு செல்லவும், இவருக்கு அடுத்து மகள் வழி பேரனுக்கு பொறுப்புகளை வழங்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை வைத்து பார்க்கையில் அன்புமணி புதிய கட்சியை தொடங்க வேண்டும். மேற்கொண்டு ராமதாஸ் நியமனம் செய்யும் நிர்வாகிகளை அன்புமணி நீக்கும் செயலை ஒடுக்கவும் முக்கிய முடிவு எடுக்கப்படுவதாக கூறுகின்றனர். சமீபத்தில் பாமக எம் எல் ஏ அருளுக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்ட நிலையில் அவரை அன்புமணி நீக்கியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அருள் கொரடாவில் இருப்பதால் அவரை நீக்க முடியாது என்ற அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.