Home Blog Page 131

ஆளும் கட்சியின் அழுத்தத்தால் ரிதன்யா வழக்கில் தாமதம்! பெற்றோர் கொந்தளிப்பு!

திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு காரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது சாவிற்கு தனது கணவர் கவின் குமார், மாமனார் மாமியார் தான் காரணம் என்று தன்னுடைய தந்தைக்கு வாட்சப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிட்டு விட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கல்யாண நேரத்தில் 500 பவுன் தங்கம் போடுவதாக சொல்லிவிட்டு 300 பவுன் தான் பெண் வீட்டார் போட்டுள்ளதால் அனுதினமும் கவின்குமாரின் குடும்பம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ரிதன்யாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். பின்னர் காவல்துறையினர் கவின்குமாரின் குடும்பத்தினரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரிதன்யாவின் உடலை அடக்கம் செய்யும் வரை தான் காவல்துறையினர் இந்த வழக்கில் ரொம்ப தீவிரமாக கவின்குமாரின் குடும்பத்தை கைது செய்து விசாரணை நடத்தியதாகவும், ரிதன்யாவை அடக்கம் செய்தபிறகு வழக்கை விசாரிக்காமல் தாமதம் செய்து வருவதாகவும் ரிதன்யாவின் தந்தை பரபரப்பு புகார் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கவின்குமாரின் நெருங்கிய உறவினர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும், திமுக கட்சியில் இருந்து தொடர்ந்து அழுத்தங்கள் வருவதால் எங்களால் இந்த வழக்கை முறையாக விசாரிக்க முடியவில்லை என்று காவல்துறையினர் சொல்வதாக ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை பேட்டி கொடுத்துள்ளார். எல்லா பிரச்னைகளிலும் இப்படி ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் மூக்கை நுழைத்து குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவது அண்மையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு: 5 லட்சத்திற்கும் அதிகமாக திரண்ட பக்தர்கள்! தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரிக்க வாய்ப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கமாக செயல்படும் இந்துமுன்னனி மதுரையில் நடத்திய முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 5 லட்சம்க்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்துகொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது சமீப காலங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய ஆன்மிகக் கூட்டங்களிலொன்றாகும். மேலும், சட்டமன்றத் தேர்தல்கள் இன்னும் ஒரு ஆண்டுக்குள் நடக்க இருப்பதால், இந்த நிகழ்வின் பரபரப்பும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

பாஜக தலைவர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இதன் மூலம், பாஜக ஆன்மிக மற்றும் பாரம்பரியத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் தெளிவாகியுள்ளது.

நைனார் நாகேந்திரன் நிகழ்வில் ஒரு பக்தி பாடல் ஆல்பத்தையும் வெளியிட்டார். அப்போது, இந்த மாநாடு முருக பக்தர்களை ஒன்றிணைப்பதும், மத ஒற்றுமையை வலுப்படுத்துவதும் தான் நோக்கம் என்றார். அண்ணாமலை, உரையாற்றியபோது, சனாதன தர்மம் மற்றும் தமிழர் பாரம்பரியம் மீது நம்பிக்கை வைத்திருப்பதை வலியுறுத்தினார். இந்துக்களின் பாரம்பரியத்தைக் கேலி செய்யும் கருத்துக்களுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

திராவிட அரசியலுக்கெதிரான பாரம்பரிய பின்னணி

மாநாட்டின் ஒரு காணொளி தொகுப்பில், தமிழகத்தின் பாரம்பரிய ஆன்மிக மற்றும் பண்பாட்டு அடையாளம் வலியுறுத்தப்பட்டது. இது சனாதன தர்மம் தமிழருக்கே சொந்தம் என்று கூறும் முயற்சியாகவும், atheism (நாத்திகம்) க்கு எதிராகவும் பார்க்கப்படுகிறது.

மேலும், சமீபத்தில் திருப்பரங்குன்றம் மலைக்குப் பெயர் மாற்றம் எனக்கூறப்படும் விவகாரம், மற்றும் அதன் மீதான எதிர்ப்பும், இந்த மாநாட்டின் பின்னணியிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

முருகன் – தமிழரின் கடவுளும் இந்திய பாரம்பரியத்தின் ஒரு அங்கமும்

முருகன், தமிழர்களின் உளமும் ஆன்மாவுமாகவே வணங்கப்படும் கடவுள். மாநாட்டில் முருகனின் ஆறுபடை வீடுகள் பிரதிகளை நிறுவியும், பக்தி பாடல்களாலும், மதுரையை ஒரு பக்தி நகரமாக மாற்றினர். திருநெல்வேலி, திண்டுக்கல், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

மக்கள் உணர்வும் தர்ம ஆதரவும்

முருகா முருகா என முழக்கம் எழுப்பிய மக்கள், குடும்பப்பாங்காக கூட்டமாக வந்து, வழிபாடு செய்தனர். இது ஒரு ஆன்மிக நிகழ்வை மட்டுமல்ல, ஒற்றுமைக்கும், நம்பிக்கைக்கும் அடையாளமாகவும் இருந்தது. பாஜக இதன் மூலம் பாரம்பரிய வாக்காளர்களுடன் தங்களை இணைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் பலனளிக்கவில்லை

திமுக, மார்க்சிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள், இந்த மாநாடு தேர்தல் நலனுக்காக மதத்தை பயன்படுத்தும் முயற்சி என விமர்சித்தன. ஆனால் பாஜகவினர், இது முழுமையாக அரசு அனுமதியுடன் ஆன்மிக நோக்கில் நடந்தது என விளக்கம் அளித்தனர்.

அ.தி.மு.க-வின் ஆர்.பி. உதயகுமார் கூட பங்கேற்றிருந்தார். அவர் தனிப்பட்ட அழைப்பின்படி தான் வந்ததாகவும், இதற்குப் பின்னால் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தாக்கம்

இந்த மாநாடு தெற்கு தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சனாதன தர்மம், தமிழ் மத பண்பாடு ஆகியவற்றில் மக்கள் மீண்டும் ஈடுபடத் தொடங்கியிருப்பது அரசியல் நோக்கில் முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், மதுரை முருக பக்தர்கள் மாநாடு, ஆன்மிக நிகழ்வாக தொடங்கி, தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய திருப்புமுனையாக மாறி இருக்கிறது. இதன் மூலமாக பாஜக, மத அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான கட்சியாக தங்களை நிலைநிறுத்த முயல்கிறது என்பது தெளிவாகிறது.

வாரிசு படம் தோல்வியா? படத்தயாரிப்பாளர் என்ன சொல்லி இருக்கார் பாருங்க! விஜய் பற்றி மனம் திறந்த தயாரிப்பாளர்!

0

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் வளம் வருபவர் நடிகர் விஜய். தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவான படம் வாரிசு.

2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது வாரிசு படம் வெளியானது. இந்த படம் வெளியான நேரத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக 300 கோடிக்கு மேல் வசூலித்தது. ஆனால் திரைத்துறையை சேர்ந்தவர்கள் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது என்றும், தயாரிப்பாளர் விஜய்யின் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாகவும் பேசினர்.

இந்நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் பற்றியும், வாரிசு படம் பற்றியும் மனம் திறந்துள்ளார். விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு நேரம் தவறாமல் வந்துவிடுவார். மொத்தம் 6 மாதம் கால் சீட் கொடுத்தால் குறித்த நேரத்தில் படத்தில் நடித்து கொடுத்து விடுவார்.

ஒரு மாதத்திற்கு 20 நாட்கள் முழுமையாக நடித்துக் கொடுப்பார். இதை விட மிகப்பெரிய சந்தோசத்தை தயாரிப்பாளருக்கு யாரால் கொடுக்க முடியும். விஜய் மாதிரியே எல்லா நடிகர்களும் இருந்துவிட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது. வாரிசு படம் வெற்றிப்படமே, வாரிசு படத்தால் எங்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது என்று தயாரிப்பாளர் தில் ராஜு பேட்டி கொடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர் கான்! என்ன மனுஷன்யா அமீர்!

0

அமீர் கான் நடிப்பில் R.S. பிரசன்னா இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் சித்தாரே ஜமீன் பர். ஏற்கனவே அமீர் கான் நடிப்பில் உருவான தாரே ஜமீன் பர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படமும் வித்யாசமான ஜானரில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்று திரையரங்குகளில் ஓடிவருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை தானே தயாரித்து நடிக்கவும் செய்துள்ளார் அமீர் கான். முதலில் இந்த படத்தின் கதையை கேட்டவுடன் தமிழ் மற்றும் ஹிந்தியில் சிவகார்த்திகேயன் மற்றும் பர்ஹான் அக்தரை ஹீரோவாக வைத்து படம் எடுக்கலாம் என்று அவர்களிடம் பேசியுள்ளார்.

படத்தின் கதை இருவருக்கும் பிடித்துப்போனதால் சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடிக்க இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஒரு கட்டத்தில் படத்தின் கதை அமீர் கானுக்கு ரொம்பவே பிடித்துப்போகவே, நானே இந்த படத்தில் நடிக்கவா என்று இயக்குனர் பிரசன்னாவிடம் கேட்டிருக்கிறார். பிரசன்னாவும் ஓகே சொல்லியிருக்கிறார்.

பின்னர் சிவகார்த்திகேயன் மற்றும் பர்கான் அக்தரிடம் நானே இந்த படத்தில் நடிக்கிறேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று அமீர் கான் சொல்லி இருக்கிறார். இந்த முடிவு அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தாலும் என்னுடைய நிலைமையை அவர்கள் இருவரும் புரிந்து கொண்டனர் என்று அமீர் கான் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அமீர் கான் அந்த கதாப்பாத்திரமாகவே மாறி படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

பிரதீப் ரங்கநாதனுக்கு வந்த வாழ்வு! படம் வெளியாவதற்கு முன்னரே கோடிகளை அள்ளிய படம்!

0

தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்திலேயே ஆட்டோ டிரைவராக சிறு தோற்றத்தில் நடித்திருந்தார் பிரதீப். பின்னர் லவ் டுடே படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அந்த படத்தையும் இயக்கினார்.

AGS நிறுவனம் மிகக்குறுகிய பட்ஜெட்டில் லவ் டுடே படத்தை தயாரித்தது. படம் இன்றைய 2K கிட்ஸ் காதல் வாழ்க்கையை பிரதிபலிப்பதை போல இருந்ததால் மாபெரும் வெற்றி பெற்றது. வெறும் 5 கோடிக்கு தயாரிக்கப்பட்ட இந்த படம் 90 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பின்னர் AGS நிறுவனம் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்தார். இந்த படம் வெறும் 37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 130 கோடி வரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது பிரதீப் ரங்கநாதன் DUDE படத்தில் நடித்து வருகிறார்.

மைத்திரி பிலிம்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்து வருகிறது. பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் இப்போது உச்சத்தில் இருப்பதால் இந்த படத்தை OTT நிறுவனமான Netflix 25 கோடிக்கு வாங்கியுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும் உற்சாகத்தில் உள்ளனர்.

அதிமுக முக்கிய புள்ளி கொடுத்த பேட்டி.. டென்ஷனான பாஜக!! முதல்வர் வேட்பாளரில் வரும் மாற்றம்??

0

ADMK BJP: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதில் கட்சிக்குள்ளேயே பல குழப்பங்கள் எழுந்துள்ளது. பாஜக, 2026 தேர்தலில் வெற்றி பெற்றால் இலை மேல் தாமரை மலரும் கட்டாயம் கூட்டணி ஆட்சிதான் எனக் கூறி வருகிறது. ஆனால் எடப்பாடி இதற்கு முழு மறுப்பு தெரிவித்து வருகிறார். அதுமட்டுமின்றி முதல்வர்  வேட்பாளரையும் அறிவித்துவிட்டார். இப்படி இருக்கும் சூழலில் தற்போது அதிமுகவின் அமைப்பு செயலாளர் அன்வர் ராஜா அளித்துள்ள பேட்டி சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி யளித்துள்ளார். அதில் கட்டாயம் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது, அதேபோல கூட்டணி குறித்த கேள்விக்கும், கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு என விளக்கம் அளித்தார். வேலுமணி உள்ளிட்டவர்களை வைத்து முதல்வர் வேட்பாளர் நிறுத்தலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாக கேள்விகளை எழுப்பினர்?? இப்படி ஒரு எண்ணம் பாஜகவிடம் இருந்தால் தவிடுபொடி ஆகும் என்று எச்சரித்து பேசினார்.

இவ்வாறு அன்வர் ராஜா பேட்டையளித்தது பாஜக மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி நிற்கும் நிலையில் அதனை உடனடியாக மாற்ற வேண்டும் என்று பாஜக மத்தியிலிருந்து ஆர்டர் வந்துள்ளதாம். இது ரீதியாக இன்று எடப்பாடி-யிடம் டெல்லி தலைமையே பேச உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அப்படி பாஜக விதிக்கும் கண்டிஷன்களுக்கு எடப்பாடி ஒத்து வரவில்லை என்றால் கட்டாயம் கூட்டணி உடையும் என கூறுகின்றனர்.

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்.. வீடு தேடி வரும் ரூ 1000!! கட்டாயம் இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

0

DMK: திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் பெண்களுக்கு மாதம் ரூ 1000 தருவதாக தெரிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தான் இந்த உரிமை தொகை வழங்கப்பட்டது. அதிலும் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இந்த தொகையை கொடுத்து வந்தனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியதால் விதிமுறைகளுக்கு சில தளர்வுகளை ஏற்படுத்தியது. அதவாது கார்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு இந்த தொகை கிடைக்காமல் இருந்தது.

நாளடைவில் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் முதல் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவி வரை அனைவருக்கும் இந்த தொகையை கொடுக்க உத்தரவிட்டனர். தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு நிபந்தனைகளை தவிர்த்து உள்ளது. அதாவது அரசு துறைகளில் ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதிலும் சிறப்பு காலம் வரை ஊதியம் பெறுபவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும். அரசின் மூலம் மானியம் பெற்று நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் உரிமை தொகை கிடைக்கும்.

மேலும் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட உதவித்தொகை பெரும் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கும் இந்த உதவி தொகை கிடைக்கும் என கூறியுள்ளனர். அதிலும் இம்முறை வீடு தோறும் சென்று மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு அவர்கள் கைகளிலேயே விண்ணப்பம் வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் பெண்கள் முகாம் தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது.

விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து அதனை சமர்பித்தால் அடுத்த ஓரிரு மாதங்களில் அவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என கூறியுள்ளனர்.

கட்சியில் முக்கியத்துவம் இல்லை! புலம்பிய நயினார் – அண்ணாமலை காரணம்?

தமிழகத்தின் பாஜக மாநில தலைவராக தற்போது நயினார் நாகேந்திரன் பதவியில் உள்ளார். ஆனால் அதிமுகவின் கூட்டணிக்காக அண்ணாமலையை நீக்கிவிட்டு இவரை அமர்த்தியுள்ளனர். இதனால் பெரும்பான்மையான நிர்வாகிகளுக்கு இதில் திருப்தி இல்லை. நயினாருக்கு போஸ்டிங் கொடுக்கும்போதே பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. அதனை நாம் சமூக வலைத்தளம் வரை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் நயினாருக்கு கட்சிக்குள் மரியாதை கிடைப்பது சற்று சிரமம் தான். இது ரீதியான பேச்சுக்கள் கட்சிக்குள்ளேயே இருந்த நிலையில் தற்போது இதை அவரே வெளிப்படுத்தி உள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக கலையரங்கத்தில் பூத் வலிமைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் நயினார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பாஜக மாநில தலைவர், கட்டாயம் 2026 ஆம் ஆண்டு நாம் வெற்றி பெறுவது உறுதி. அதேபோல யாரும் எதிர்பாராத வண்ணம் முருகர் பக்தர் மாநாடு இருந்தது. தமிழகத்தில் தினம் தோறும் பாலியல் ரீதியான வழக்குகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் லாக்கப் மரணமும் அதிகரித்துள்ளது என்று பேசினார்.

இதனை பேசிவிட்டு தனது உட்கட்சி சார்ந்த புலம்பலையும் கொட்டி தீர்த்துள்ளார். கட்சி நிர்வாகிகளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டால் மரியாதை கொடுத்து வணக்கம் கூட சொல்வதில்லை. அதிலும் வடசேரி பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி ஒருவர் என்னை தெரியவில்லை எனக் கூறிவிட்டார். அதேபோல கடலூரைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்ட போதும் அவரது அப்பா என்று என்னை நினைத்துக் கொண்டாரா என்னவோ தெரியவில்லை, ஒழுங்கா இருந்துக்கோ என கூறிவிட்டு செல்போனை வைத்து விட்டார்.

இந்நிலையில் நான் யாரையாவது தொடர்பு கொண்டு பேசினாலும் முதலில் வணக்கம் சொல்லிவிட்டு பேசுங்கள் என அறிவுரை கூறினார். இவரை கட்சியில் நிர்வாகிகள் மதிக்காததற்கு அண்ணாமலை தான் மிகப்பெரிய காரணம் என்று இதன் மூலமே தெரிகிறது.

பாஜக கூட்டணியை உதறி தள்ளும் அதிமுக.. மீண்டும் தலைவராகப்போகும் அண்ணாமலை!!

0

ADMK BJP: திமுகவை எதிர்கொள்ளவும் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இவர்கள் முந்தைய கூட்டணி பிரிவதற்கு அண்ணாமலை தான் முக்கிய காரணம். மறைந்த ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதால் அதிமுக அந்த முடிவை எடுக்க நேரிட்டது. இதனாலையே மீண்டும் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் அண்ணாமலை இருக்கக் கூடாது என்ற நிபந்தனையை அதிமுக வைத்தது.

அதேசமயம் அண்ணாமலையும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நான் பதவியை  விட்டு விலகிக் கொள்கிறேன் என கூறியிருந்தார். அதுமட்டுமின்றி இந்த மறு கூட்டணியில் பல வரையறைகள் போட்டப்பட்டு தான் கூட்டணி அமைக்கப்பட்டது. அதிலும் ஓபிஎஸ் டிடிவி தினகரன் உளிட்டோருடன் கூட்டணி வைத்துக் கொள் என்று எனக்கு ஆர்டர் போடக்கூடாது என்பதை எடப்பாடி தெள்ளம் தெளிவாக கூறிவிட்டார். அதேபோல பாஜகவும், நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக்        கொள்வோம் அதில் தலையிடக் கூடாது என்று பேசிவிட்டது.

இவ்வளவு தெளிவான விதிமுறைகள் போட்டு கூட்டணி வைத்தும் மறைமுக பனிப்போர் இருந்து தான் வந்தது. அதாவது பாஜக, கூட்டணி ஆட்சி தான் என கூறிவந்தது. ஆனால் இதனை எடப்பாடி முழுமையாக மறுத்து வருகிறார். தற்போது அதிமுக கட்சியின் அமைப்பு செயலாளர் அன்வர் ராஜ் கூட்டணி முறையில் ஆட்சி கிடையாது பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதிமுக அதனை தவிடு பொடியாக்கும் எனக் கூறிவிட்டார்.

இதனால் மேலிடம் அதிமுகவுடன் வைத்த கூட்டணியை நிறுத்திக் கொள்ளலாம் என்ற முடிவை எடுத்துள்ளது. இதனால் அண்ணாமலை மீண்டும் பாஜக மாநிலத் தலைவராக வர அதிக வாய்ப்புள்ளதாம். அதுமட்டுமின்றி பாஜகவின் பூத் கமிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயினாரும் இது குறித்த வேதனையை தான் வெளிப்படுத்தினார். அதாவது என்னை கட்சியில் யாரும் மதிப்பதில்லை என மேடையிலேயே புலம்பி தீர்த்தார். இவை இரண்டையும் ஒன்றுபடுத்தி பார்க்கையில் அண்ணாமலை தமிழக பாஜக மாநில தலைவராக மீண்டும் பதவி ஏற்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

கணவர் விந்தணுவில் விஷம் என்னுடன் உடலுறவு வைத்துக் கொள்!! பெண்ணிடம் அவதூறாக நடந்த போதகர்!!

0

கன்னியாகுமரி காவல்துறையினர், திருமணமான ஒரு இளம் பெண்ணை தனது நோயைக் குணப்படுத்துவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படும் பெந்தேகோஸ்தே தேவாலயப் போதகரை கைது செய்துள்ளனர்.

“உங்கள் உடல்நலப் பிரச்சினைகள் உங்கள் கணவருடனான உறவிலிருந்து உருவாகின்றன. என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியுடன் நீங்கள் தூங்கினால் நீங்கள் குணமடைவீர்கள்” என்று பாதிரியார் அவளிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம், தக்கலை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணைப் பற்றியது. சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். குணமடையும் நம்பிக்கையில், அவர் மெக்கமண்டபம் பகுதியில் உள்ள முழு நற்செய்தி பெந்தேகோஸ்தே தேவாலயத்திற்குச் சென்றார். அங்கு, தனிப்பட்ட பிரார்த்தனை மூலம் தன்னைக் குணப்படுத்த முடியும் என்று பாதிரியார் ரெஜிமோன் கூறினார். அமர்வின் போது, அவர் அவளைத் தழுவித் தாக்க முயன்றார். அந்தப் பெண் தப்பித்து உடனடியாக தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ஜூன் 26, 2025 அன்று பாதிரியார் ரெஜிமோனைக் கைது செய்து, நீதிமன்றக் காவலில் வைத்தனர்.

 

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் கூற்றுப்படி, அந்தப் பெண் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது, ஆனால் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் பிற தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக தனது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். ஆன்மீக குணமடையும் நம்பிக்கையில் உறவினர்கள் அவளை பாண்டிவிலை, மெக்கமண்டபத்தில் உள்ள பாதிரியார் ரெஜிமோனின் தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். வருகையின் போது, தனது வருமானத்தில் 10% தசமபாகத்தை தேவாலயத்திற்கு வழங்கினால், அவரது உடல் நோய்கள் குணமாகும் என்று ரெஜிமோன் அவரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.