வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 19, 2025
Home Blog Page 14

ADMK வுக்கு கொடுத்த கிரீன் சிக்னல்.. அன்புமணியை ஓரங்கட்டிய பாமக!! டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்!!

0

PMK ADMK:பாமகவில் ராமதாஸ் உடைய பொதுக்குழு கூட்டமானது வெற்றிகரமாக இரு தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இந்த பொதுக்குழுவின் பின்னணியில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்து வெளிப்படையாகவே கூறியுள்ளனர். அதாவது பெரும்பாலும் இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரை வெளியேற்றாமல் அவருடைய பவரை மட்டும் பறித்துள்ளனர். சொல்லப்போனால் கட்சிக்குள் டம்மியாக்கி வைத்துள்ளனர்.

முதலில் பொதுக்குழு கூட்டம் தொடங்கப்பட்ட போது அன்புமணிக்கு என்று ஒரு இடம் ஒதுக்கப்படும் என நினைத்திருந்தனர். ஆனால் அந்த இடத்திற்கு காந்திமதி அமர்ந்தபட்டது அனைவருக்கும் வியப்பை உண்டாக்கியது. அந்த வகையில் அன்புமணியை நீக்கிவிட்டு அதற்கு நேர் எதிராக தனது மகள் காந்திமதியை இறக்குவது அப்பட்டமாக காட்டிவிட்டார். அதேபோல காந்திமதியின் மகன் முகுந்தனும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு ஒரு மூலையில் இருந்தார். அவரை அமர சொல்லியும் அமரவில்லை.

அதுமட்டுமின்றி இதில் அன்புமணிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடவடிக்கை எடுக்கும்படி தீர்மானமும் வரையறுத்துள்ளனர். இதனையெல்லாம் நீக்குவது வெகு தொலைவில் இல்லை. மேலும் முகுந்தனுக்கு அடுத்த பெரிய வாய்ப்பு காத்துள்ளதாக கூறுகின்றனர். அச்சமயத்தில் கூட்டத்திலிருந்த அனைவரும் அதிமுகவுடன் கூட்டணி என்று கூச்சலிட்டுள்ளனர். தற்போது பாமகவின் தலைவராக ராமதாஸ் உள்ள நிலையில் கூட்டணி குறித்து உங்களுக்கு சாதகமாக முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு தான் நீங்கள் விரும்பிய கூட்டணி அமையும் என்ற ஹின்டையும் கொடுத்துள்ளார். அதன் மூலம் வரும் நாட்களில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மோடியுடன் ரகசிய டீல்.. ரீ என்ட்ரி கொடுக்கும் ரஜினி!! விஜய்க்கு வரும் நேரடி சவால்!!

0

BJP TVK: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்ப கட்டத்திலிருந்து பாஜகவிற்கு மிகப்பெரிய ஆதரவளித்து வருகிறார். ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மாற்றி அமைத்ததில் இருந்து தற்போது வரை மிகவும் நல்ல தலைவர் மோடி தான் என கூறுகிறார். அப்படி இருக்கையில் தற்போது ரஜினியை சினிமா பயணம் 50 ஆண்டுகளை கடந்துவிட்டது.

அந்த வகையில் 171 வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி வெளியாகி வெற்றி நடை போடுகிறது. ரஜினி 50 ஆண்டுகளைக் கடந்ததால் சினிமா வட்டாரங்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மோடி தனது எக்ஸ்ட்ராத்தில் இது ரீதியாக அவருக்கு வாழ்த்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலளித்து ரஜினியும், உங்களிடமிருந்து வாழ்த்து பெற்றது மிகவும் சந்தோஷம்.

மேலும் நீங்கள் தான் ஆகச்சிறந்த நல்ல தலைவர் என்றும் பாராட்டினார். இவ்வாறு இருக்கவே சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் அரசுக்குள் வருவதாகவும் கூறினார். பின்பு அரசியல் பயணம் சரி வராது எனக் கூறி பின் வாங்கினார். அப்படி இவர் மீண்டும் அரசியலுக்குள் நுழைந்தால் கட்டாயம் பிஜேபி வசம் தான் இருப்பார் என்பதில் எந்த ஒரு மாறுதலும் இல்லை. அந்த வகையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் ரஜினி நேரடியாக சந்தித்து வாழ்த்து கூறி வந்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் எட்டு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் ரஜினிகாந்த் ஆதரவு பாஜகவுக்கு தான் என்பதை வெளிகாட்டும் விதமாக இவையனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம். மேலும் தேர்தல் சமயத்தில் நட்சத்திர பேச்சாளராக கூட களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாம். ஏனென்றால் விஜய்க்கு எதிரான மிகப்பெரிய ஜாம்பவானை இறக்க வேண்டுமென்றால் இவர்தான் சரியான ஆள் என்று மோடி தீர்மானித்துள்ளாராம்.

வரும் நாட்களில் விஜய்க்கு எதிராக ரஜினி இருப்பார் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

கிளைமாக்ஸை எட்டிய பாமக தலைமை.. பூஜ்ஜியமாகும் அன்புமணி பவர்!! பொதுக்குழுவில் அதிரடி!!

0

PMK: பாமக கட்சிக்குள் அதிகாரம் மோதல் போக்கானது தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று நடந்து முடிந்த ராமதாஸின் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புக்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்புகளால் அன்புமணி பதவியிலிருந்தும் எந்த பலனும் இல்லை. நேற்று நடைபெற்ற பொதுக்குழு மேடையில் ராமதாஸின் வலது பக்கத்தில் அவரது மகளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் அந்த இடத்திற்கு அன்புமணி தான் வருவார்.

ஆனால் அவர் எப்படி தனது மகள்களை வைத்து கட்சியை செயல்படுத்துகிறாரோ அதேபோல ராமதாஸ் தனது மகளை வைத்து காய் நகர்த்துகிறார். அதுமட்டுமின்றி அன்புமணி நியமித்த நிர்வாகிகள் அவரது அறிவிப்பு என எதுவும் செல்லாது என இந்த பொதுக்குழு மூலம் வெளிப்படையாக சொல்லாமல் தெரிவித்துள்ளனர். அதேபோல வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து முடிவுகளையும் ராமதாஸ் தான் எடுப்பார் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

மேலும் கட்சி நிறுவனர் தலைவர் என ராமதாஸ் அவர்களே தொடர்வதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் தலைவருக்கு எதிராக அன்புமணி பேசிய பொய்கள் அனைத்தையும் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கௌரவத் தலைவர் ஜி கே மணி கேட்டுக்கொண்டார். இவ்வாறு பல தீர்மானங்களை வைத்து பார்க்கையில் நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தின் மூலம் அன்புமணிக்கு இனி கட்சிக்குள் எந்த ஒரு பவரும் இல்லை என்பது தெள்ளந் தெளிவாகத் தெரிகிறது.

ADMK Vs BJP: பாஜக கூட்டணிக்கு போடும் எண்டு.. விஜய்யுடன் பெரிய திருப்பத்தில் EPS!! ரிவீலான சீக்ரெட்!!

0

ADMK TVK: அதிமுக பாஜக கூட்டணியானது பல நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை. தமிழகத்தில் மிகவும் ஆதரவற்ற நிலையில் இருப்பது பாஜக தான், அவர்களுடன் கூட்டணி அமைத்தால் எப்படி வெற்றி பெற முடியும் என்ற கேள்வியை முன்வைக்கின்றனர். தமிழகத்திற்கு எந்த ஒரு நிதியையும் ஒதுக்குவதில்லை என்று குற்றச்சாட்டு அவர்கள் மீது இருக்கும் பட்சத்தில் எப்படி மக்கள் முன்னிலையில் பிரச்சாரம் செய்ய முடியும்?? இப்படி இருக்கையில் இது அனைத்தும் ஒத்து போகாமல் தான் பலரும் திமுக கட்சிக்குள் நுழைந்து வருகின்றனர்.

அதேபோல அதிமுக பாஜக இரண்டாவது முறையாக கூட்டணி வைக்கும் போது பல்வேறு கோட்பாடுகளை வரையறுத்துள்ளது. ஆனால் அதனையெல்லாம் மறந்து பாஜக ஆளுமை செய்ய வேண்டும் என நினைக்கிறது. இது எடப்பாடிக்கு அறவே பிடிக்கவில்லை. பாஜக கூட்டணிக்கு முன்பாகவே விஜய்யுடன் இணையதான் முக்கிய பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் தொகுதி பங்கீடு ஆளும் தலைமை என எதுவும் எடப்பாடிக்கு ஒத்து வராததால் அதை அப்படியே கைவிட்டார்.

ஆனால் தற்போது பாஜகவிற்கு விஜய்யே மேல் என நினைக்கிறாராம். இதனால் அவர்களது கூட்டணியை கை கழுவி விட்டு விஜய்யுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுகவின் முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் பேட்டியளித்தது அதிமுக பாஜக இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்டாயம் விஜய்யுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தான் அரசியல் வட்டாரங்களும் பேசுகின்றனர். கடந்த சில மாதங்களாக பாஜகவின் அதிகார ஓங்கல் என்பது சற்று அதிகமாவே உள்ளதையும் பார்க்க முடிகிறது. இதனால் சட்டமன்ற தேர்தலுக்கு முன் கோடணி முடிவில் மாற்றம் வரலாம்.

பாஜகவில் இணையும் 2 வெயிட் லீடர்ஸ் இவர்கள் தான்.. வெளியே கசிந்த ரகசியம்!! DMK வுக்கு பெரும் சவால்!!

0

DMK BJP: அதிமுக பாஜக கூட்டணி அமைத்ததிலிருந்து பல முக்கிய தலைவர்கள் திமுக பக்கம் சாய்ந்து வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பாஜக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் புதுவித புயலை கிளப்பியுள்ளார். அதாவது வரும் நாட்களில் திமுகவிலிருக்கும் முக்கிய தலைகள் பாஜகவில் இணைய போவதாக தெரிவித்துள்ளார். இவர் அவ்வாறு கூறியதும் அரசியல் வட்டாரத்தில் யார் அந்த முக்கிய தலை என தற்போது கேள்வி எழுந்துள்ளது.

தற்சமயம் திமுகவில் எந்த பதவியும் இல்லாமல் தனது பேச்சுக்காக தண்டிக்கப்பட்டு டம்மியாக ஒருவர் உள்ளார். அவரேனும் பாஜகவில் இணைவாரா என வியூகிக்க ஆரம்பித்துள்ளனர். அதேபோல மற்றொருவர், கட்சிக்குள் என்னை டம்மி அமைச்சராக வைத்திருந்தாலும் உனது மகனைப் போல் எனது மகனுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் என்றும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்ததற்கு கட்சிக்குள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான்.

இப்படி இருவரும் திமுக மீது அதிருப்த்தியில் உள்ள நிலையில் அவர்களை  கட்சியிலிருந்து தூக்கி விடலாம் என்ற பிளானில் பாஜக இறங்கியுள்ளதா கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவரும் திமுகவில் முக்கிய அங்கம் என்பதால் இவர்களை திமுகவிலிருந்து தூக்கும் போது கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும். மேலும் பாஜவில் முக்கிய தலைகள் இணைய ஸ்டாலின் விட மாட்டார் என்றும் பேச்சு அடிப்பட்டு வருகிறது.

எடப்பாடியை வெளியேற்ற சதி திட்டம்.. ஓங்கி நிற்கும் பாஜக கை!! ஆட்டத்தை ஆரம்பித்த டிடிவி சசிகலா!!

0

ADMK BJP: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதால் மீண்டும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் இந்த கூட்டணி நீண்ட நாள் நீட்டிக்குமா என்பதில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மீது தேவையற்று பாஜக அண்ணாமலை குற்றம் சுமத்தி பேசியதால் இந்த கூட்டணி முறிவு பெற்றது. ஆனால் தற்சமயம் மீண்டும் கூட்டணி அமைத்து புதிய கோட்பாடுகளை வரையறுத்துள்ளனர்.

அதிலும் சில குழப்பங்கள் தான், பாஜக கூட்டணி ஆட்சி என்று ஒரு பக்கம் கூறவே எடப்பாடி அதனை முழுமையாக மறுத்து வருகிறார். அதேபோல பாஜகவுடன் இணை இருக்கும் டிடிவி தினகரன் குறித்து எடப்பாடி விரைவில் பேசுவார் என்று அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி இவை அனைத்திற்கும் மௌனம் காத்து வருகிறார். ஒரு கட்டத்தில் மீண்டும் ஓபிஎஸ் சசிகலா டிடிவி உள்ளிட்டோர் அதிமுகவுடன் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது.

அப்படி தகவல்கள் வெளியான சமயத்தில் கட்சிக்குள்ளேயும் எந்த ஒரு மோதல் போக்கும் காணப்படவில்லை. தற்போது பாஜக தங்கள் கீழ் கூட்டணி ஆட்சி என கூறவே அதிமுகவிலிருந்து விலகிய அனைவரும் இணைய துடிக்கின்றனர். அதிலும் சசிகலா சுதந்திர தின விழாவிற்கு பொதுச் செயலாளராக இருந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மறுபுறம் ஓபிஎஸ் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் மாற்று கட்சிக்கு சென்று விட்டனர்.

இவையனைத்தும் எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளது. இதனால் முதல்வர் வேட்பாளர் பதவி கேள்விக்குறிதான்?? எடப்பாடிக்கு செல்லுமா என்பதில் பெருத்த சந்தேகம் இருக்கிறது. இதில் பாஜகவிற்கு ஒத்துப்போகக்கூடிய வேறு யாரேனும் தலைவர் பதவிக்கு வரலாம். அதிலும் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் இதில் இணைவார்கள் என கூறப்படுகிறது. அந்த வகையில் பாஜக உடன் கூட்டணி வைத்தும் எடப்பாடிக்கு பாதகம்தான்.

பாமக வில் பரபரப்பு.. ராமதாஸ் இல்லத்தில் அன்புமணி!! பொதுக்குழு கூட்டத்துக்கு முன் அதிரடி திருப்பம்!!

0

PMK: பாமக கட்சிக்குள் அதிகார மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில் தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் சென்றுள்ளார். இது அரசியலில் அடுத்த கட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தனது மகனைக் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை ராமதாஸ் அடுக்கிக் கொண்டே போனார். அதுமட்டுமின்றி அவரது வீட்டிலுள்ள கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும் மேலும் அவரது இருக்கை அடியிலேயே ஒட்டு கேட்கும் கருவி சிம்முடன் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது ரீதியாக சைபர் கிரைமிடம் புகார் அளித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. பாமக பொதுக்குழு கூட்டத்திலாவது ஒன்று செய்வார்கள் என பலரும் எண்ணியிருந்தனர். ஆனால் இருவரும் தனித்தனி பொதுக்குழு கூட்டத் தேதியை அறிவித்து நீதிமன்றம் வரை சென்று விட்டது. அதில் அன்புமணிக்கு தான் பொதுக்குழு கூட்டம் நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது தன்னுடைய வெற்றி என பறைசாற்றி வந்தார்.

இதன் நடுவே ராமதாஸின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் ராமதாஸ் இல்லத்திற்கு அன்புமணி சென்றுள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற இருக்கும் வேளையில் ஏதேனும் கட்சி இணக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்குமா என்ற கேள்வியை பலர் முன்வைத்து வருகின்றனர். ஆனால் அவர் தாயாரின் பிரனதனால் என்பதால் அவரை காண்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது.

அதேபோல ராமதாஸ் வெறும் வழிகாட்டி தான் செயல் தலைவராக அன்புமணி தான் இருந்தார் என கூறி வருவதை ஒருவரும் ஏற்கவில்லை. இவர்களின் உட்கட்சி மோதல் தீர்வு கண்டால் மட்டுமே வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கான அங்கீகாரத்தை பெற முடியும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. தற்போது தைலாபுரம் சென்றிருக்கும் அன்புமணி முடிவை கொண்டு வருவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

“அதிமுக வில் சைலண்ட் வார்” எடப்பாடி தந்த அவமதிப்பு!! திமுக பக்கம் பெரிய தலைகள்!!

0

ADMK DMK: அதிமுக வில் உட் கட்சிக்குள்ளேயே நிர்வாகிகளுடன் மனக்கசப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. அதிமுக பாஜக கூட்டணியை தற்போது வரை கட்சிக்குள் பலரும் விரும்பவில்லை. இதனால் கட்சி தலைமைக்கும் நிர்வாகிகளுக்கும் ஒரு உரசல் போக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல தலைமை பதவியிலிருக்கும் எடப்பாடியும் கட்சிக்குள் யாருக்கும் மரியாதை தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை பொதுவெளியில் நிரூபிக்கும் விதமாக, பொது நிகழ்ச்சி ஒன்றில் தம்பிதுரை பேச முற்பட்டபோதும் அவரை தடுத்து நிறுத்தினார்.

அதேபோல செல்லூர் ராஜு எடப்பாடி காரில் ஏற முயன்ற போதும் மறுத்துவிட்டார். இவ்வாறு பொது வெளியில் சக நிர்வாகிகளுடன் எடபாடி பரஸ்பர உறவினை அவமதிப்பது போல் உள்ளது. முன்னதாகவே பாஜக அதிமுக கூட்டணி, தலைமையில் அதிகாரப் போக்கு என எண்ணற்ற காரணங்களால் மூத்த நிர்வாகியான அன்வர் ராஜா, மைத்ரேயன் உள்ளிட்டோர் திமுகவிற்கு சென்றனர். அந்த வகையில் தொடர்ந்து இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி நடந்து கொள்வது அடுத்தடுத்து முக்கிய புள்ளிகளையும் கட்சியை விட்டு வெளியேறச் செய்யும்.

அதிலும் தற்போது எடப்பாடியால் பாதிக்கப்பட்ட நிர்வாகிகளை திமுக குறிவைத்து தூக்கி வருகிறதாம். அந்தவரிசையில் அடுத்து தம்பிதுரை மற்றும் செல்லூர் ராஜூ இருக்கலாம். மேலும் எடப்பாடியின் இந்த போக்கால் அவருக்கு பக்க பலமாக இருந்தவர்கள் கட்டாயம் மாற்றுக் கட்சியை தேடி செல்வதாக அதிமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்தியும் கூறியுள்ளார்.

இந்தியாவை நோக்கி வரும் 10 ஏவுகணைகள்.. பாகிஸ்தான் கொடுக்கும் மிரட்டல்!! அடிக்கபோகும் போர் மணி!!

0

IND vs PAK: பாகிஸ்தானின் பகல்ஹாம் தாக்குதலால் இந்தியாவை சீர்குலைந்து விட்டது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என எண்ணி ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தினர். மேற்கொண்டு பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீர் திட்டத்தையும் தடுத்து வைத்துள்ளனர். இங்கிருந்து ஒரு சொட்டு நீர் கூட பங்கு செல்லக்கூடாது என்ற விதி போடப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் பொறுக்க முடியாத பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் தொடர் தாக்குதலை இந்தியாவிற்கு எதிராக நடத்தினார். அவை அனைத்தும் சற்று கூட பிரதிபலிக்கவில்லை. மேற்கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட பல நாட்டினரும் இந்தியாவிற்கு துணை நின்றனர். இதனால் அரண்டு போன பாகிஸ்தான் போரை கைவிட்டது. தற்போது சிந்து நதிநீர் குறித்து வெட்டி வசனம் பேசி வருகின்றனர்.

அதாவது சிந்து நதி நீர் எங்களுக்கு கொடுக்காவிட்டாலும் மேற்கொண்டு அணை கட்டினாலும் கட்டாயம் தீவிர பதிலடி கொடுக்கப்படும் என்று மிரட்டி வருகின்றனர். ஏனென்றால் பாகிஸ்தானில் 22 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த சிந்து நதி நீரை நம்பியுள்ளனர். மேற்கொண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீறும் சிந்து நதிக்கு எதிராக அணை கட்டினால் கட்டாயம் 10 ஏவுகளை ஏவி அதனை தகற்றுவோம் என கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இது என்ன இந்தியாவின் சொத்தா என்றும் கேட்டுள்ளார். ஆனால் இவற்றையெல்லாம் இந்தியா சிறிதும் கூட கண்டுகொள்ளவில்லை. இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதை கைவிட்டால் மட்டுமே சிந்து நதி நீர் கிடைக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

அதிரப்போகும் அரசியல் மேடை.. விஜய் கூட்டணியில் ஐக்கியமாகும் தேமுதிக காங்கிரஸ்!! கலக்கத்தில் திமுக அதிமுக!!

0

TVK DMDK: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாநகரில் நடைபெற உள்ளது. இந்த இரண்டாவது மாநாட்டில் பல்வேறு மாற்று கட்சி சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் முதலாவதாக காங்கிரஸின் ராகுல் காந்தி உள்ளார். இவர்களின் நட்புறவானது 15 வருடத்தை கடந்து தற்போது வரை நீட்டித்திருக்கிறது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக கூற வேண்டுமென்றால், வாக்காளர் பட்டியலில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்த்து ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டார்.

அதனை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்தனர். இவ்வாறு அவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி விஜய்யின் ஆதரவு எப்பொழுதும் ராகுல் காந்திக்கு இருந்து வருகிறது. அதனால் அவருக்கு மாநாட்டிற்கான அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கட்டாயம் அவர் கலந்து கொள்வதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல தேமுதிக-விர்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். எம் பி சீட் அதிமுக தராததால் கூட்டணி குறித்து வாய் திறக்காமல் இருக்கும் பிரேமலதா ஆட்சியில் பங்கு கொடுத்தால் சரி என்று நினைக்கிறாராம்.

அப்படி பார்க்கும்போது விஜய் தான் நமது கூட்டணிக்கு செட்டாகுவார் என  கட்சிக்குள் பேச்சு அடிபட்டு வருகிறது. அதேபோல விஜய் பிரபாகரனும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோமா?? என்ற கேள்வி முனையிலேயே பேட்டி அளித்திருந்தார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் விஜயகாந்த் இறப்பிற்கு பிறகு உறுதியான அரசியலை மக்களுக்கு கொண்டு சேர்க்க நினைக்கிறார்கள்.

அதற்கு விஜய் தான் சரிப்பட்டு வருவார் என்றும் கட்டாயம் மதுரையில் நடக்கப் போகும் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்சமயம் விஜய்க்கு மறைமுக ஆதரவாக காங்கிரஸ் தேமுதிக இருக்கும் எனக் கூறுகின்றனர். ஏனென்றால் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த போதும் இப்படி தான் டெல்லியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வருகை புரிந்திருந்தார். அதேபோல இவர்களது வருகையும் இருக்கும் என பனையூர் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.