செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 28, 2025
Home Blog Page 14

8 எம்.எல்.ஏக்கள் இருந்தால் கூட்டணி உறுதி.. இல்லையென்றால் எதிர்க்கட்சி கூட்டணி தான்.. தேமுதிக அதிரடி முடிவு!!

0

DMDK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய்யும் திமுகவிற்கு மாற்று எனக் கூறி தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது பெரிய கேள்வியாக இருக்கும் நிலையில், இவரின் கூட்டணி பொறுத்து தான் மூன்றாம் நிலை கட்சியாக அறியப்பட்டு வரும் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளின் கூட்டணியும் உறுதி செய்யப்படும் என்பது தெளிவாக தெரிகிறது.

இந்நிலையில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், விஜய் அதிமுகவில் இணைந்தால் நாங்களும் இணைவோம் என்று கூறியதாக தகவல் வெளியானது. அது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அதிமுக கூட்டணி பலமடைவதை உணர்ந்த திமுக தலைமை, தேமுதிகவும் அதிமுக கூட்டணிக்கு சென்று விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது. அதனால் பிரேமலதாவுடன் திமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது பிரேமலதா, திமுகவில் இணைய வேண்டுமானால் 6 அல்லது 8 எம்எல்ஏக்கள் வேண்டும் என்றும், அதிக தொகுதிகளையும் கேட்டதாக தகவல் வந்துள்ளது. இல்லையென்றால் அதிமுக கூட்டணி அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே திமுக கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளையும் ஆட்சிப் பங்கையும் கேட்டு வலியுறுத்தி வரும் நிலையில் திமுக தலைமை என்ன செய்யும் என்பது தற்போது கேள்வி குறியாக உள்ளது.

ஆனால் தேமுதிகவையும் விட்டு வைக்க ஸ்டாலினுக்கு மனமில்லை. அதிமுக, தவெக, பாஜக கூட்டணியின் பலத்தை உடைக்க வேண்டுமானால் தேமுதிக கூட்டணி திமுகவுக்கு தேவை. ஆனால் திமுகவின் கூட்டணி கட்சிகளோ தேமுதிகவிற்கு 8 எம்எல்ஏக்கள் ஒதுக்கப்படுவதில் தங்களுக்கு விருப்பம் இல்லையென்று கூறி வருகின்றனர்.

யாரும் எதிர்பார்த்திராத கூட்டணி அமையும்.. அந்த கூட்டணி தான் வெற்றி பெரும்.. டிடிவி தினகரன் சூசகம்!!

0

AMMK DMK: ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிமுகவின் முகமாகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கை குரியவராகவும் திகழ்ந்தவர் டிடிவி தினகரன். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு, இபிஎஸ் முதல்வரானார். அப்போது இபிஎஸ்யால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதனால் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

பிறகு பாஜக உடன் கூட்டணி அமைத்த இவர் அண்மையில், நயினார் நாகேந்திரன் இபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கூட்டணியிலிருந்து விலகினார். இதனால் இவர் தவெக உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரூர் சம்பவத்திற்கு பின் தவெக, அதிமுக உடனான கூட்டணியில் சேர்வதற்கான சுழல் உருவாகியிருக்கிறது. இது டிடிவி தினகரனுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்த கூடும்.

இந்நிலையில், தருமபுரி மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அரூரில் நடைபெற்றது. அப்போது பேசிய டிடிவி தினகரன், யாரும் எதிர்பார்த்திராத கூட்டணி அமையும் என்றும் சூசகமாக கூறியுள்ளார். அவர் கூறிய கூட்டணி, திமுக உடனானதாக தான் இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். ஏனென்றால், அதிமுகவிற்கு பின் பெரிய கட்சியாக அறியப்படுவது திமுக தான்.

இதனை பின்னுக்கு தள்ள தற்போது தவெக வந்து விட்டதால் தவெகவை வைத்து இபிஎஸ்யை வீழ்த்தி விடலாம் என்று டிடிவி தினகரன் நினைத்தார். ஆனால் விஜய் அதிமுக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இதனால் இபிஎஸ் வீழ்த்த திமுக என்னும் ஆயுதத்தால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்த தினகரன் அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

பாஜகவிற்கு துரோகம் செய்யும் பழனிசாமி.. இபிஎஸ் இருக்கும் வரை விஜய் அதிமுகவிற்கு வர மாட்டார்.. உண்மையை உடைத்த புகழேந்தி!!

0

ADMK: கரூர் சம்பவத்தை வைத்து அதிமுகவும், பாஜகவும் தவெகவை தம் பக்கம் இழுத்து விடலாம் என்று திட்டம் தீட்டி வருகிறது. ஆனால் விஜய் திமுக தனது அரசியல் எதிரி என்றும், பாஜக தனது கொள்கை எதிரி என்றும் கூறி வருகிறார். தனது பிரச்சாரம் அனைத்திலும், பாஜகவை கடுமையாக தாக்கி வரும் விஜய்யை காப்பாற்ற பாஜக தனி நபர் குழு அமைத்து விசாரணை செய்து வருவது வேடிக்கையாக உள்ளது.

ஆனாலும் விஜய் பாஜக உடன் கூட்டணி அமைக்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளார் என்று நம்பத்தகுந்த தவெக தலைவர்கள் கூறுகின்றனர். மேலும் தவெக-அதிமுக உடன் கூட்டணி அமைக்க வேண்டுமானால் கூட்டணிக்கான தலைமையை நாங்கள் தான் ஏற்போம் என்றும், முதல்வர் வேட்பாளராக நான் தான் நிற்பேன் என்றும் கூறியதாக தகவல் வெளியானது.

அதுமட்டுமல்லாமல், பாஜக உடனான கூட்டணியை முறித்தால் மட்டுமே அதிமுக உடன் கூட்டணி வைப்போம் என்று விஜய் கூறியதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று, இபிஎஸ், பாஜக உடனான கூட்டணியிலிருந்து விலகுவார் என்று பலரும் கூறி வந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தியும் அதே கருத்தை கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தொண்டர்களிடம் தவெக கொடியை பிடிக்க செய்து, அதிமுகவிற்கு மிகப்பெரிய அவமானத்தை இழைத்து விட்டார் இபிஎஸ். விஜய் பாஜகவை எதிரி என்று கூறி வரும் நிலையில், பாஜகவை கூட்டணியில் வைத்து கொண்டு தவெக கொடியை பார்த்து, அதோ பாருங்க கொடி பறக்குது என்று கூறுவது கூட்டணி கட்சிகளுக்கு செய்யும் துரோகம் என்றும் அவர் கூறினார். மேலும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருக்கும் வரை விஜய் கூட்டணிக்கு வர மாட்டார் என்றும் கூறினார்.

விஜய் வந்தால் நாங்களும் ரெடி.. பிரேமலதாவின் அதிரடி முடிவு.. ஆட்டம் காணும் தேர்தல் களம்!!

0

ADMK DMDK: தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது திராவிட கட்சிகளாக அறியப்பட்ட வரும், அதிமுகவும், திமுகவும் தான். அதற்கு பின்னர் தான் பாமக, தேமுதிக, நாதக கட்சிகள் போன்றவை. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தல் அப்படி இல்லை அதிமுக, திமுகவை பின்னுக்கு தள்ளி தவெக முதல் இடத்தில் உள்ளது. நாள்தோறும் அனைத்து ஊடகங்களிளும் தவெகவின் செய்தி வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

திமுகவை தனது அரசியல் எதிரி என்று விஜய் கூறியதால், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது தெளிவாகிறது. அதனால் மிக பெரிய கட்சியாக திகழும் அதிமுக உடன் அவர் கூட்டணி அமைப்பார் என்று கூறப்பட்டது. தவெக-அதிமுக கூட்டணி அமைந்தால் அது மிகப்பெரிய சக்தியாக உருமாறும் என்பதை அறிந்த திமுக, பாமக-தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க திட்டம் தீட்டி வருகிறது. ஆனால் இவர்கள் திமுக கூட்டணியில் சேர்வது கூட விஜய்யின் முடிவை பொறுத்து தான் இருக்கிறது.

ஏனென்றால் விஜய்யின் அரசியல் நகர்வை பொறுத்து தான் அனைத்து கட்சிகளின் கூட்டணிகளும் முடிவாகும். விஜய் எந்த கட்சியில் இணைகிறாரோ, அந்த கட்சியுடன் தான் கூட்டணி வைக்கப்படும் என்பதில் தேமுதிகவும், பாமகவும் உறுதியாக உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் கூட தற்போது திமுக உடன் இணக்கம் காட்டி வருவதால் திமுகவில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது.

ஆனால் பிரேமலதா, கரூர் விவகாரத்தில் திமுகவிற்கு எதிராகவே பேசி வருகிறார். இதன் பின்புலத்தில், விஜய்-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டால் தேமுதிக, அதிமுக உடன் கூட்டணி அமைப்பது உறுதி என்று, தேமுதிக வட்டாரங்கள் கூறி வருகின்றன. இதன் காரணமாக தான் அண்மை காலமாக அவரது பிரச்சாரத்தில் அதிமுகவை விமர்சிக்காமல் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டிய ராமதாஸ்.. குஷியில் இபிஎஸ்.. அப்புறம் என்ன ஆட்சியை அமைத்து விட வேண்டியது தான்!!

0

PMK ADMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் தலைமை போட்டி நீடித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, நிறுவனர் ராமதாசை காண பல்வேறு கட்சி தலைவர்களும் வந்து சென்றனர்.

அப்போது அவரை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், ராமதாசை சந்திப்பதற்கு முன்பு நல்ல செய்தி கிடைத்து விட்டது என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ராமதாஸ் சமீப காலமாக திமுகவிற்கு சாதகமாக பேசி வந்தார். அதனால் அவர் திமுகவில் இணைவதற்கான சாத்திய கூறுகளை தான் கமல்ஹாசன் கூறியுள்ளார் என்று அனைவரும் நினைத்திருந்தனர்.

இதற்கு பிறகு இபிஎஸ் ராமதாசை சந்தித்து அரைமணி நேரம் உரையாடினார். இது கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையாக தான் இருக்கும் என்று நினைத்த சமயத்தில், மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இபிஎஸ் கூறினார். ஆனால் தற்போது புதிய திருப்பமாக, சேலம் அருகே சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது எதிர்க்கட்சிகளால் பொறுக்க முடியவில்லை என்று கூறிய அவர், ராமதாஸ் உடனான சந்திப்பு குறித்து கேட்ட போது, அதை பற்றி முழுமையாக சொல்ல முடியாது என்று கூறி முடித்தார். இதனால் ராமதாஸ் அதிமுக உடனான கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து விட்டார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

ஆனால் பாமக சில நிபந்தனைகளை முன் வைத்துள்ளதால், இபிஎஸ் இதனை வெளிப்படையாக உறுதி செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. திமுக, பாமகவை தங்களுடன் சேர்த்து கூட்டணி கட்டமைப்பை உறுதிபடுத்தி விடலாம் என்று யோசித்த சமயத்தில் பாமக- அதிமுக கூட்டணி அமைத்தது திமுக தலைமைக்கு பேரிடியாக உள்ளது.

ஆட்சிக் கட்டிலில் தவெக.. எதிர்க்கட்சியாகும் திமுக.. அதிமுக தலைமை எடுத்த திடீர் முடிவு!!

0

ADMK TVK: சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே, அரசியல் கட்சிகளனைத்தும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களையும், கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளையும் தொடங்கிவிட்டன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பணியும் தீவிரமாகியுள்ளது. அவர் கட்சி ஆரம்பித்தது முதலே கூட்டணி அமைக்க தயார் என்றும், ஆனால் அந்த கூட்டணி தவெகவின் தலைமையில் தான் இயங்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்து விட்டது கரூர் சம்பவம். இந்த விவகாரத்தில் விஜய்யிக்கு ஆதரவாகவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வந்தார். இபிஎஸ் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்தே அதிமுக தேர்தலில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று இபிஎஸ் தனது அடியை கவனமாக எடுத்து வைத்து வருகிறார்.

ஆனால் இதனை அதிமுக வட்டாரங்கள் தவறான முடிவு என்று விமர்சித்து வருகின்றன. கரூர் சம்பவத்திற்கு முன்பே விஜய்யுடன் அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது. அப்போது விஜய் முதல்வர் வேட்பாளராக நான் தான் நிற்பேன் என்றும், கூட்டணி எங்களின் தலைமையில் தான் அமையும் என்றும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இதற்கு இபிஎஸ் மறுப்பு தெரிவித்து விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் நிலை தடுமாறி இருப்பதால், இதனை சரியான சமயம் என்றுணர்ந்த இபிஎஸ் மீண்டும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் அப்போதும் விஜய் இறங்கி வருவதாக தெரியவில்லை. இதனால், இன்னும் எத்தனை காலத்திற்கு எதிர்க்கட்சியாகவே இருப்பதென்று யோசித்த இபிஎஸ், விஜய்யின் நிபந்தனைக்கு கிரீன் சிக்னல் காட்டியதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

விஜய் வருகையால் பிரியும் தமிழக காங்கிரஸ்.. தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தும் தவெக!!

0

TVK CONGRESS: தவெக சார்பாக கரூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் 41பேர் உயிரிழந்துள்ளனர். இது விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும், அவரை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை. விஜய்க்கு கிடைத்திருக்கும் ஆதரவை நாம் பக்கம் நிலை நாட்ட வேண்டுமென்ற நோக்கில் பாஜக – அதிமுக தீவிரமாக முயற்சித்து வருகிறது.

அதனால் கரூர் சம்பவத்தை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் குழுவை அமைத்திருந்தாலும், இந்த விபத்துக்கு காரணம் திமுக தான் விஜய் அல்ல என்பதை நிரூபித்து விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டுமென பாஜக 8பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழு சம்பவ இடத்திற்கு சென்று சாட்சியங்களை சேகரித்து வருகிறது. அதன் மூலம் திமுகவிற்கு எதிராக அறிக்கையை தயார்படுத்தி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் விஜய்க்கு கொள்கை எதிரி என்று கூறிய பாஜக உடன் கூட்டணி அமைக்க விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸும் விஜய்யை கூட்டணிக்குள் சேர்த்துவிட வேண்டுமென்று தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்று சொல்லப்படுகிறது. விஜய் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இணைய வேண்டுமானால், திமுக கூட்டணியை பிரிய வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.

ஆனால் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். ஒரு புறம் ஆளுங்கட்சியான திமுகவை விட்டு தேர்தல் சமயத்தில் விலகுவது சரியான முடிவு இல்லை என்றும், மறுபுறம் விஜய்க்கு இருக்கும் ஆதரவை கருத்தில் கொண்டு கூட்டணி அமைக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது. இதனால் காங்கிரசில் இருக்கும் திமுக ஆதரவாளர்களை நீக்கி விட்டு விஜய் உடன் கூட்டணி வைக்க முடிவு செய்து உள்ளதாம் காங்கிரஸ்.

விஜய்யை யோசிக்க வைத்த டிடிவி தினகரன்.. பழைய நிலைக்கு செல்லும் விஜய்!! உங்களுக்காகவா அவரு கட்சி ஆரம்பிச்சாரு!!

0

AMMK TVK ADMK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கரூர் விபத்திலிருந்தே சற்று பின்னோக்கி காணப்படுகிறது. விபத்து ஏற்பட்டு மூன்று நாட்களுக்கு பிறகு விஜய் காணொளி மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதோடு முதல்வரை பற்றி அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜய் கூட்டணி குறித்த நடவடிக்கையை சற்று ஒதுக்கி வைத்து விட்டு கரூர் சம்பவத்திலிருந்து தப்பிப்பதற்கான நடவடிக்கையில் முழுமையாக இறங்கியுள்ளார்.

அண்மையில் அதிமுகவின் பிரச்சாரத்தில், தவெக கொடி பறந்ததை பார்த்த இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சி என்று கூறியிருந்தார். இது அதிமுக-தவெக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது என்பதை நிரூபித்தது. இந்த சூழலில் இது குறித்து செய்தியாளர்கள் டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பிய போது, மதுரையில் நடைபெற்ற மாநாட்டில், எங்களது தலைமையில் தான் கூட்டணி என்று விஜய் தெளிவுபட கூறியிருந்தார்.

அப்படி என்றால் பிள்ளையார் சுழி போட்டாச்சி என்பதை நாங்கள் எவ்வாறு புரிந்து கொள்வது. தவெக தலைமையின் கீழ் மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்டு வரும் அதிமுக கூட்டணி அமைக்க போகிறதா? என்று கேட்டார். மேலும் இபிஎஸ்யை முதல்வர் ஆக்குவதற்காக ஒன்றும் விஜய் கட்சி தொடங்கவில்லை என்றும் குறிப்பிட்டிருநத்தார். ஏற்கவே அதிமுக உடன் தவெக கூட்டணி அமைப்பதற்கு விஜய் யோசித்து வந்தார்.

முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட அவர் எப்படி அதிமுக கூட்டணியில் இயங்குவார் என்றும் தவெக வட்டாரங்கள் கூறி வந்தன. இந்த இக்கட்டான சூழலில், அதிமுக கூட்டணிக்கு அரைமனதாக சம்மதம் தெரிவித்த விஜய் மீண்டும், தவெக தலைமையில் தான் கூட்டணி , நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று பழைய படி பேச தொடங்கி விடுவாரோ என்ற அச்சம், இபிஎஸ்-யிடம் எழுந்துள்ளது.

விஜய்யுடன் இணையும் காங்கிரசின் முக்கிய புள்ளி.. ஷாக்கை ஏற்படுத்திய எம்.பி.யின் பேட்டி!!

0

DMK CONGRESS: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர்பார்த்திராத அளவுக்கு வளர்ச்சியை எட்டியுள்ளது என்று நினைத்த சமயத்தில், தான் கரூர் சம்பவம் தவெகவை அடியோடு சிதைக்கும் அளவு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இந்நிலையில் விஜய் கூட்டணி அமைக்க தயார் என்று கூறியதிலிருந்தே அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனை தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி அமைக்க பல்வேறு சிறிய கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஆனால் விஜய் ஜனவரியில் தான் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படும் என்பதில் தெளிவாக உள்ளார். இந்த நிலையில் திமுகவில் உட்கட்சி பூசல் நீடித்த வண்ணம் உள்ளது. திமுகவில் கூட்டணி கட்சிகள் அனைத்தும், அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் கேட்டு தலைமையை வலியுறுத்தி வருகின்றன. கே.எஸ். அழகிரியை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் இதனை கேட்டுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ், கூட்டணி கட்சிகளுக்கு போதுமான அளவு தியாகத்தை செய்து விட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென நினைக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார். எந்த அளவுக்கு தாக்கம் என்பது தெரியவில்லை. விஜய்யின் ரசிகர் மன்றம் அரசியல் கட்சியாக மாறியுள்ளதா என்பது தேர்தலில் தான் தெரியும் என்று கூறியிருந்தார்.

இவரின் விஜய் குறித்த பேச்சு, விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது போலவே உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். திமுக, தவெகவை விமர்சித்து வருகையில், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது திமுகவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசின் கோரிக்கைக்கு திமுக ஒப்பு கொள்ளவில்லை என்றால் தவெக உடன் கூட்டணி அமைக்கப்படும் என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளார் என்றும் பேசப்படுகிறது.

தவெக மேலுள்ள பயத்தை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டிய உதயநிதி.. மறைமுக விமர்சனத்தால் மாட்டிக் கொண்ட திமுக!!

0

DMK: சட்டமன்றத் தேர்தலையொட்டி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என கட்சிகளனைத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பரப்புரையையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேசிய துணை முதல்வர் உதயநிதி வழக்கம் போல அதிமுக வஞ்சித்தார்.

அப்போது அதிமுகவை மிரட்டி அவர்களின் தோள் மீது ஏறி பாஜக சவாரி செய்து கொண்டிருக்கிறது. பாஜகவிற்கு பழைய அடிமைகள் போதாது என்று புதிய அடிமைகளையும் வலை வீசி தேடி வருகிறது. இந்தக் கொள்கையற்ற கூட்டத்தை சீர் செய்ய வேண்டியது திமுகவின் கடமை என்றும் கூறியிருந்தார். இவர் புது அடிமைகள் என்று கூறியது விஜய்யின் தவெகவை தான் என்று அப்பட்டமாக தெரிகிறது.

இவரின் இந்த கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன் முதல்வர் ஸ்டாலினும் இதே போன்று விஜய்யை புதிய எதிரிகள் என்று கூறி மறைமுகமாக விமர்சித்திருந்தார். விஜய் முதல்வரை நேரடியாக விமர்சித்திருக்கும் போது, ஸ்டாலின் மட்டும் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்ற கேள்வியும் எழுந்தது. அப்போதே திமுக அரசையும், ஸ்டாலினையும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.

விஜய்யை பற்றி நேரடியாக விமர்சிப்பதற்கு ஆளுங்கட்சிக்கு தைரியம் இல்லாததால் தான் மறைமுக தாக்குதல் நடத்துகிறது என்று பலரும் கூறி வந்தனர். தற்போது உதயநிதியும் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளதால், திமுகவிற்கு விஜய் மேல் உள்ள பயம் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், தவெக தொண்டர்கள் கூறி வருகின்றனர்.