Home Blog Page 142

மாதாம் ரூ 1000 கிடைக்கவில்லையா.. இதோ முதல்வர் சொன்ன முக்கிய அறிவிப்பு!! இதை கட்டாயம் நோட் பண்ணிக்கோங்க!!

0

DMK: திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து தான் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறிய மகளிர் உரிமைத் தொகையை அறிமுகப்படுத்தியது. இது கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் தற்போது வரை பயனடைந்து வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் இந்த உரிமை தொகை கிடைக்க பல்வேறு வரைமுறைகளை அமல்படுத்தியது. இதனால் பலரும் அதிருப்தி அடைந்த நிலையில் நாளடைவில் சில வரைமுறைகளுக்கு தளர்வு கொடுத்தது.

அதாவது கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்காது என கூறியிருந்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிக்கும் கிடைக்கும் என தெரிவித்தனர். மேலும் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களுக்கும் இந்த உரிமை தொகை கிடைக்கும். அதிலும் புதிதாக ரேஷன் அட்டை வாங்கியவர்களுக்கு இந்த உரிமை தொகை கிடைப்பதில் சிக்கல் இருந்தது.

இதனை விரிவாக்கம் செய்யும் வகையில் இனி வருடம் தோறும் உரிமைத்தொகை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். அதிலும் இது ரீதியாக முகாம் அமைத்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் கூறியிருந்தனர். அதன்படி ஜூலை மாதம் இதற்கான முகாம்கள் தமிழகமெங்கும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக செப்டம்பர் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் விடுபட்ட மகளிர் அனைவருக்கும் ரூ 1,000 உரிமை தொகை கட்டாயம் கிடைத்து விடும் என திருப்பூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கிருஷ்ணா செல்போனில் சிக்கிய கோட் Word.. அடுத்தடுத்து மாட்டப்போகும் திரை பிரபலங்கள்!! 

0

Cinema: பாரில் நடைபெற்ற மோதல் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட அதிமுக-வின் ஐடி விங் பிரசாந்த்தை விசாரணை செய்கையில் போதை பொருள் கை மாறுதல் நடந்துள்ளதும் அதில் முக்கிய நபராக நடிகர் ஸ்ரீகாந்த் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்து ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் அவர் கொக்கைன் உபயோகித்தது அம்பலமானது. அதுமட்டுமின்றி கொக்கைன் வைத்து அவர் பார்ட்டி நடத்துவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்கொண்டு இது ரீதியாக அவரிடம் போலீசார் விசாரணை செய்கையில், எனக்கு பிரசாந்த் படம் நடித்ததற்கான பணம் தர வேண்டி இருந்தது. தர முடியாத காரணத்தினால் எனக்கு கொக்கைன் கொடுத்து பழக்கினார் என திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். இது ரீதியாக ஸ்ரீகாந்த் சுற்று வட்டாரங்களை விசாரணை செய்கையில் நடிகர் கிருஷ்ணா சிக்கியுள்ளார். ஆனால் அவரிடம் விசாரணை செய்ய தொடர்பு கொண்டபோது தலைமறைவாகி அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.

கட்டாயம் இவரும் கொக்கைனுக்கு பழக்கமானவர் தான் என்று விசாரணை செய்யாமலேயே போலீசாருக்கு நம்பிக்கை வந்து விட்டது. மேற்கொண்டு அவரைப் பிடித்து விசாரணை செய்கையில், எனக்கும் போதைப் பொருளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஏனென்றால் எனக்கு வாயு தொல்லை, இதய படபடப்பு மற்றும் ஆஞ்சியோ சிகிச்சை உள்ளிட்டவை நடந்துள்ளது. இதனால் என்னால் கொக்கைன் போன்ற போதை பொருளை உபயோகிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் ரத்த மாதிரி பரிசோதனையிலும் அவர் கொக்கைன் உபயோகிக்காதது தெரியவந்துள்ளது. மேலும் அவர் வீட்டை சோதனை செய்கையில் அவரது மருத்துவ பரிசோதனை சான்றுகளை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது போலீசார் அவரது செல்ஃபோன் குறுஞ்செய்திகளின் தரவுகளை எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.

அதில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பேசியதிலிருந்து தற்போது வரை உள்ள பல மெசேஜ்கள் டெலிட் செய்யப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கோட் வேர்ட் மூலம் பேசி உள்ளது தெரிய வந்துள்ளது. அந்த நபர்கள் யார் எதற்காக இந்த கோட் வார்ட் என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அவரை கைதும் செய்துள்ளனர்.

ஸ்டாலின் போல அன்புமணி இருக்க வேண்டும்.. கூட்டணி குறித்து பேசிய ராமதாஸ்!!

0

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையே தலைவர் பதவிக்கு மோதலானது இருந்து வருகிறது. இதில், ராமதாஸ் ஒரு பக்கம் நான் தான் தலைவர் எனக் கூறி மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் என்று பலரை நியமித்து வருகிறார். மறுபக்கம் அன்புமணி ராமதாஸ் நியமித்த அனைவரையும் கட்சியை விட்டு நீக்கி வருகிறார். அந்த வகையில் நேற்று சேலம் எம்எல்ஏ அருளுக்கு இணை பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு எதிராக அன்புமணி அவரை கட்சியை விட்டு நீக்கி மறு அறிவிப்பை வெளியிட்டார். இவர்களின் செயல்களால் கட்சி நிலை குலைந்துள்ளது. அதேபோல சில தினங்களுக்கு முன்பு ராமதாஸ் அவர்களின் 60வது திருமண விழாவானது நடைபெற்றது. இதில் அன்புமணி மட்டும் கலந்து கொள்ளவில்லை. இது ரீதியாக சமூக வலைத்தளத்தில் பலரும் பல விமர்சனங்கள் கூறி வந்தனர். ஆனால் ராமதாஸ் வாய் திறக்காமல் இருந்தார். தற்போது இது ரீதியாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

அதில், எந்த பிரச்சனைக்கும் முடிவு என்பது கட்டாயம் உண்டு, அதிலும் பாமக விவகாரம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தான் வருகிறது. என்னால் தான் இந்த கட்சி தொடங்கப்பட்டது அதனால் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவராக இருப்பேன். அதுமட்டுமின்றி கலைஞர் கருணாநிதி எப்படி சாகும் வரை அவரே தலைவராக இருந்தாரோ அதேபோல தான் நானும் பாமகவின் தலைவராக இருப்பேன். திமுகவில் ஸ்டாலின் செயல் தலைவராக இருந்தது போல அன்புமணி செயல்பட வேண்டும். ஆனால் அந்த பொறுப்பை அன்புமணி ஏற்கவில்லை.

திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி தலைவராக இருந்த வரையில் ஸ்டாலின் செயல் தலைவராக தான் இருந்தார் அவர் தரப்பிலிருந்து எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மேற்கொண்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்களின் கருத்துக்களில் வேறுபாடு இருந்தாலும் அவர்களை கொச்சைப்படுத்துவது மிகவும் தவறு என கூறினார். மேலும் எனது அறுபதாவது திருமண விழா நிகழ்ச்சியில் அன்புமணி கலந்து கொள்ளாதது எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்று கூறியதை விட சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும்  தெரிவித்துள்ள்ளார்.

மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்; இனி 5 நாட்கள் தான் பள்ளி!

0

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வு முடிவடைந்து. 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. பள்ளி திறப்பு இரண்டு வாரத்திற்கு தள்ளிப் போகலாம் என எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் மழை பெய்து குளிர்ச்சி காரணமாக பள்ளி திட்டமிட்டபடி ஜூன் இரண்டாம் தேதி பிறந்தனர்.

இந்நிலையில் பள்ளி திறக்கப்பட்டு மூன்று வாரங்கள் ஆகும் நிலையில் எந்த ஒரு விடுமுறையும் அதிகம் விடப்படாமல் இருக்கின்றது.. ஜூலை மாதம் விடுமுறை கிடைக்கும் என மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் இந்த மாதமும் எந்த பண்டிகையும் வராததால் அரசு விடுமுறை கிடையாது என தெரியவந்துள்ளது.

ஏமாற்றமடைந்த மாணவர்களுக்கு குட் நியூஸ் அளிக்கும் விதமாக ஒவ்வொரு நடப்பு கல்வி ஆண்டுக்கான வேலை நாட்கள், பள்ளி விடுமுறை நாட்கள், தேர்வு தேதிகள், பொது தேர்வு தேதிகள் ஆகிய விவரங்கள் பள்ளி கல்வித்துறை சார்பாக முன்கூட்டியே வெளியிடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நாட்காட்டியை பள்ளி கல்வித்துறை அண்மையில் வெளியிட்டது. அதில் மொத்தம் 210 நாட்கள் வேலையை நாட்களாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்வியாண்டின் இறுதி வேலை நாள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஆகும்.

காலாண்டு விடுமுறை ஒன்பது நாட்கள், அரையாண்டு விடுமுறை 12 நாட்கள் விடப்பட்டுள்ளது. இந்த வருடம் தீபாவளிக்கு மூன்று நாட்கள், பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்கள் விடுமுறை உள்ள நிலையில் இந்த கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளி விடுமுறை என அறிவித்துள்ளனர். மாணவர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

ரேஷன் கார்டு இருக்கா; அரசு சொன்ன அப்டேட்!

0

ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது, ரேஷன் அட்டை வைத்திருந்தாலும் மட்டுமே அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை பெற முடியும். மேலும் அரசு சார்பாக மலிவு விலையில் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்நிலையில் ரேஷன் கார்டு இல்லாவிட்டால் அரசின் பல்வேறு உதவிகளை பெற முடியாத சூழல் உள்ளது, ரேஷன் கார்டு இல்லாமல் பல அரசு திட்ட சலுகைகளை பெற முடியாதவர்கள் இருக்கின்றனர், வருமானத்தின் அடிப்படையில் ரேஷன் கார்டு வெவ்வேறு வகைகளாக பிரித்து வழங்குகின்றனர்.

ரேஷன் கார்டு இல்லாமல் இலவச ரேஷன் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது ஒவ்வொரு குடிமகனுக்கும் குறைந்த விலையிலும் இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் அரசிடம் இருந்து வழங்கப்படுகின்றது. இந்த ரேஷன் உதவிகள் பொது விநியோக முறை மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் உதவிகள் மக்களுக்கு கிடைத்து வரும் நிலையில் கோதுமை பருப்பு, அரிசி சர்க்கரை, எண்ணெய் மட்டுமின்றி வேறு சில உதவிகளும் கிடைக்கின்றது.

ரேஷன் கார்டு இல்லாமல் ரேஷன் உதவிகள் நிறுத்தப்படுவது மட்டுமின்றி வேறு சில திட்டங்களிலும் பயன்பெற முடியாது. அதனால் மகளிர் உரிமைத் தொகை இலவச சிலிண்டர், வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பயனடைய முடியாமல் இருக்கின்றது.

ரேஷன் கார்டு இல்லை என்றால் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு பெற முடியாது. இந்த திட்டத்தின் மூலம் பலன்களை பெறுவதற்கு விண்ணப்பதாரரிடம் ரேஷன் அட்டை இருப்பது கட்டாயம் ரேஷன் கார்டு இல்லாமல் மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது.

பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இதன் கீழ் தேவைப்படுபவர்களுக்கு ஐந்து லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம் ஆனால் இந்த திட்டத்தின் மூலம் பயன்களை பெற ரேஷன் அட்டை வைத்திருப்பது அவசியம். இந்தத் திட்டத்திற்கான தகுதியை நிரூபிக்க ரேஷன் கார்டு தேவைப்படும்.

மேலும் பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்கப்படுகின்றது.

இந்த திட்டத்தினை பெறுவதற்கு ரேஷன் கார்டு அவசியம் கார்டு இல்லாவிட்டால் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் அனைவரும் ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும் என அரசு சார்பாக கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் புதிய ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பித்திருந்தால் விரைவில் அவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்

நான் இதெல்லாம் வேணும்னு செய்யல! என்னை இந்த பிரச்சனையில் சிக்க வச்சுட்டாங்க! ஸ்ரீகாந்த் கதறல்!

0

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார். பின்னர் தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போய்விட்டார். தற்போதும் அவ்வப்போது சில படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார்.

அதிமுக நிர்வாகி பிரசாந்த் என்பவர் நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் போதை பொருளை கொடுத்ததாக போலீஸ் விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதனால் நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தீங்கிரை என்ற படத்தை பிரசாந்த் தயாரித்துள்ளார். அந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகன் நடித்துள்ளார். தீங்கிரை திரைப்படத்திற்கு தர வேண்டிய சம்பளத் தொகையில் 10 லட்சம் ரூபாயை பிரசாந்த் ஸ்ரீகாந்துக்கு கொடுக்கவில்லை.

பணம் கேட்டு ஸ்ரீகாந்த் பிரசாந்தை தொடர்பு கொண்ட போது அடிக்கடி கொக்கைன் போதை பொருளை கொடுத்து சம்பளத் தொகையில் கழித்து வந்துள்ளார். இதற்கு மேல் ஸ்ரீகாந்த் கொக்கைன் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்.

கைதாவதற்கு முன்புதான் அவரிடம் இருந்து 250 கிராம் பாக்கெட் வாங்கினேன். எனது நுங்கம்பாக்கம் வீட்டில் கொக்கைன் பார்ட்டி நடத்தினேன். படத்திற்கு தரவேண்டிய 10 லட்சம் ரூபாய் சம்பளம் பாக்கி பற்றி பிரசாந்திடம் கேட்டபோது எனக்கு கொக்கைன் கொடுத்து சம்பளத்தை ஈடு கட்டினார். தொடர்ந்து சம்பளம் கேட்கும் போதெல்லாம் என்னிடம் கொக்கைன் கொடுத்து என்னை இந்த பழக்கத்திற்கு அடிமையாக்கியது பிரசாந்த் தான் என அதிமுக நிர்வாகி மீது குற்றம் சாட்டி உள்ளார் ஸ்ரீகாந்த்.

இந்த விஷயத்தில் ஸ்ரீகாந்த்க்கு மட்டும் தான் தொடர்பு உள்ளதா இல்லை வேறு ஏதேனும் நடிகர் நடிகைகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இயக்குனர் விஷ்ணுவரதனின் சகோதரர் கிருஷ்ணாவும் தற்போது இந்த வழக்கில் தேடப்பட்டு வருகிறார். அவர் கேரளா சென்று விட்டதாகவும் அவருடைய நம்பர் ஸ்விட்ச் ஆஃப் இல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காவல்துறையினர் நடிகர் கிருஷ்ணாவை தேடி வருகின்றனர்.

இது மட்டும் நடக்கலைனா நிச்சயம் நாங்க ஜெயிச்சிருப்போம்! சுப்மன் கில் ஓபன் டாக்!

0

இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அனுபவம் வாய்ந்த விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற முன்னணி வீரர்கள் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் இந்திய அணி இந்தத்தொடரில் வெல்வது கடினமே என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 471 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 465 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்தியா 364 ரன்களை குவித்தது. மொத்தமாக இந்தியா சார்பில் சுப்மன் கில் 1 சதம், ரிஷப் பந்த் இரண்டு இன்னிங்ஸிலும் சதம், ஜெய்ஸ்வால் 1 சதம், ராகுல் இரண்டாவது இன்னிங்சில் சதம் என ஒரே டெஸ்ட்டில் 5 சதங்களை இந்திய அணி குவித்தது.

இங்கிலாந்து அணி வெற்றி பெற 372 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்கை இந்தியா நிர்ணயித்தது. இருந்தும் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் 149 ரன்களை குவித்ததன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து இந்தியாவை வென்றது. இந்த தோல்விக்கு பிறகு சுப்மன் கில் தோல்விக்கான காரணம் என்ன என்று பேட்டி கொடுத்துள்ளார்.

போட்டியில் கேட்ச் தான் வெற்றிகளை தீர்மானிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். நாங்கள் நிறைய கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டோம். அதேபோல இரண்டு இன்னிங்சிலும் இன்னும் நிறைய ரன்கள் எங்களால் எடுத்திருக்க முடியும் . இரண்டு இன்னிங்ஸிலும் கடைசி ஐந்து விக்கெட்டுகளை மிகவும் சொற்பமான ர ன்களில் இழந்து விட்டோம். நாங்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டிய இடத்தில் ஆட்டத்தை தவற விட்டு விட்டோம். அதுவே எங்கள் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்து விட்டது. அடுத்த ஆட்டத்தில் எங்கள் முழு திறமையை வெளிப்படுத்துவோம் என்று பேட்டி கொடுத்துள்ளார் சுப்மன் கில்.

எனக்கு சப்போர்ட் செய்தால் தேர்தலில் சீட்.. பாமக அருளுக்கு போன பவர்!! அன்புமணிக்கு ராமதாஸ் கொடுத்த அட்டாக்!!

0

PMK: பாமக கட்சியானது இரண்டு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் இன்று ராமதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தைலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, என்னுடன் இருப்பவர்களுக்கு கட்டாயம் சட்டமன்றத் தேர்தலில் பதவி வழங்கப்படும். வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி பாமக மகளிர் மாநாடானது பூம்புகாரில் நடைபெற உள்ள நிலையில் இது ரீதியாக ஆலோசனை மேற்கொள்ள புதிய மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் உள்ளிட்டோரை நியமிக்க உள்ளோம்.

மேற்கொண்டு யாரெல்லாம் புதிய தலைவர்கள் என்பது குறித்து வெளிப்படுத்தவே இந்தக் கூட்டம். அந்த வகையில் என்னுடனே இருக்கும் எம்எல்ஏ அருளுக்கு பாமகவின் இணை பொது செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இமயமலையின் உயரத்தின் அளவிற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர் என்றைக்கும் என்னுடன் இருப்பவர். மேலும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப்படும் என்பது குறித்து தற்போது வரை முடிவெடுக்கவில்லை.

அதேபோல என்னுடன் சேர்ந்து செயல்படுபவர்களுக்கு கட்டாயம் தேர்தலில் சீட்டு வழங்கப்படும். பாமகவின் அனைத்து முடிவுகளையும் நான்தான் எடுப்பேன், அதற்கான அதிகாரமும் என்னிடம் தான் உள்ளது. எங்களது தேர்தல் கூட்டணியானது வித்தியாசமான முறையிலும், சிறந்து விளங்கும் வகையிலும் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அப்பா மகனுக்கிடையே ஏற்பட்ட உட்கட்சி மோதலால் அன்புமணியை செயல் தலைவராக நியமனம் செய்து மாவட்ட செயலாளர் என பலரை ராமதாஸ் மாற்றி அமைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது வரை 70-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர் 60க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் இதற்கு எதிராக அன்புமணியும் அறிவிப்பை வெளியிட்டு பொது குழு கூட்டத்தை நடத்தி வருகிறார். தற்போது பாமக அருளுக்கு புதிய பதவி வழங்கியதை அடுத்து அன்புமணி ரீதியாக எந்த ஒரு எதிர் அறிவிப்பும் வெளியாகவில்லை.

6 அல்லது 8 சீட் கொடுத்து ஏமாற்ற முடியாது.. தேர்தலில் போட்டியிடாமல் கூட போகலாம்!! ஸ்டாலினுக்கு திருமா வைக்கும் ட்விஸ்ட்!!

0

VSK: சட்டமன்ற தேர்தல் தொடங்க இன்னும் 1 வருடம் இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுமென பலரும் கூறி வருகின்றனர். ஏனென்றால் தற்போது ஆரம்பித்த விஜய் கட்சியே கூட்டணியில் பங்கு என பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுவிட்டது. இதனிடையே பாஜகவும் சுதாரித்துக் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து, இலை மேல் தாமரை மலரும் கட்டாயம் கூட்டணி ஆட்சி தான் என கூறுகின்றனர். ஆனால் அதிமுக அதற்கு ஒப்புதல் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு புதிய நடவடிக்கைளை மாற்று கட்சியினர் செய்கையில், இதனால் ஆளும் திமுக விற்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

அதாவது, அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சியில் பங்கு வேண்டுமென கேட்க ஆரம்பித்துவிட்டனர். இல்லையென்றால் தொகுதி ஒதுக்கீட்டில் டிமெண்ட் வைத்து வருகின்றனர். இதன் வெளிப்பாட்டை சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸிடம் பார்க்க முடிந்தது. இதில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் திருமா மறைமுக விருப்பத்தை தெரிவித்துள்ளார். எல்லோரும் எங்களுக்கு திமுக 6 அல்லது 8 தொகுதிகள் தான் தரும், 10 தொகுதிகளை தாண்டி சீட் கொடுத்து ஊக்குவிக்க மாட்டார்கள் என கூறுகின்றனர். எங்களை டீ பன் கொடுத்தெல்லாம் ஏமாற்ற முடியாது.

நாங்கள் 234 தொகுதிகளுக்கும் தகுதியானவர்கள், எங்களுக்கென்று பெரிய வலிமை உண்டு. நான் இவ்வாறு சொல்வதில் ஆணவம் இல்லை. தேர்தல் மதிப்பீட்டிலும் கூறவில்லை. சமூக சூழல் களம் மாறியுள்ளது. அதை வைத்து தான் சொல்கிறேன். எனக்கு பதவி நாற்காலி மீது பெரிதாக நம்பிக்கை என்பதில்லை. அது இல்லாமல் கூட கீழே அல்லது பிளாஸ்டிக் சாரில் கூட அமர தயார். ஏன் தேர்தலில் இனி போட்டியிட போவதில்லை என்று கூட அறிவிக்கலாம். எந்த தேர்தலிலும் சீட் பேரம் பேசுவதற்காக இந்த கட்சி இல்லை என தெரிவித்ததோடு, கோவிலில் வைத்த திருநீரை அளித்தது குறித்தும் விளக்க தெரிவித்தார்.

பெண்களின் வங்கி கணக்கில் இனி 1500 கிரெடிட் ஆகும்; அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

0

பெண்களின் நலனை கருதி மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெண்கள் சுதந்திரமாக இருக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

அதிலும் பெண்களுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டங்கள் பல்வேறு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் மூலம் தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு மாதம் தோறும் தங்களது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகின்றது

இத்திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படுகின்றது. இது போலவே கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பெண்களின் வங்கி கணக்கிலேயே நேரடியாக இந்த தொகை வரவு வைக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாநிலத்தில் தொகை மட்டுமே வேறுபடுகின்றது.

மத்திய பிரதேசத்தில் லாட்லி பெஹ்னா யோஜனா என்ற பெண்களுக்கு மாதம்தோறும்  ஊக்கத்தொகை வழங்க்கபடுகின்றது. மத்திய பிரதேச பெண்களுக்கு மாதந்தோறும் 1250 ரூபாய் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் பத்தாம் தேதியே இந்த தொகை பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டத்தில் இணைவதற்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

மத்திய பிரதேச அரசின் சங்கரா அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் சங்கரா தனிநபர் அட்டை ஆதார் அட்டை, ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மொபைல் எண் ஆகியவை இத்திட்டத்தில் கொண்டிருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் மூலமாக உதவித்தொகை பெற குடும்ப வருமானம் 2.5 லட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துவோர்  இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது.

இத்திட்டத்தில் சேர்ந்துள்ள பெண்களுக்கு பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக உதவித்தொகை வழங்க மாநிலம் முடிவு எடுத்துள்ளது.. அதன் பேரில் வரும் ஜூலை மாதத்தில் மத்திய பிரதேசத்தில் இத்திட்டத்தின் மூலமாக பயன்பெறக்கூடிய பெண்களுக்கு 250 ரூபாய் கூடுதலாக கொடுக்கப்பட்டு  ஜூலை மாதத்தில் இருந்து  1500 ரூபாய் வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது