Home Blog Page 250

சாப்பிட்டதும் குளிக்கலாமா? குளித்த பின் செய்யவேக் கூடாத விஷயங்கள்!!

0

நம் உடல் ஆரோக்கியத்திற்கு உணவு அடிப்படையான ஒன்று.நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதேபோல் உணவு உட்கொண்ட பிறகு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டியது முக்கியம்.

உணவு உட்கொண்ட பிறகு உடற்பயிற்சி,நடைப்பயிற்சி போன்றவற்றை செய்யக் கூடாது என்பது பெரும்பாலானோருக்கு தெரியும்.அதேபோல் சாப்பிட்ட உடனே குளிக்க கூடாது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

சாப்பிட்ட பிறகு உறங்க கூடாது,கடின வேலை செய்யக் கூடாது என்பது போல் சாப்பிட்ட பிறகு குளிக்கவும் கூடாது.நம் வீட்டில் இருக்கின்ற பெரியவர்கள் சாப்பிட்ட பின்னர் குளிக்க கூடாது என்று சொல்லவர்கள்.அதற்கு பின்னால் ஆச்சர்யப்படும் காரணம் இருக்கிறது.

நாம் சாப்பிட்ட பிறகு குளிப்பதற்கு 45 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.சாப்பிட்ட பின்னர் உணவு செரிமானமாக தாமதமாகும்.சாப்பிட்ட உணவு வயிற்றை நோக்கி செல்ல இரத்த ஓட்டம் அவசியம் தேவைப்படும்.நமது உடலில் மற்ற இடங்களுக்கு இரத்தம் பாய தாமதமாகும்.இந்த நேரத்தில் குளித்தால் செரிமான மண்டல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.இதனால் மலச்சிக்கல்,வயிற்று வலி,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

அதேபோல் உணவு சாப்பிட்ட பிறகு பழங்கள் சாப்பிடக் கூடாது.சாப்பிட்ட பிறகு உறங்க கூடாது.சாப்பிட்ட உடனே சூடான பானங்கள் பருகக் கூடாது.சாப்பிட்ட பின்னர் சிகிரெட் பிடிக்க கூடாது.சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி செய்யக் கூடாது.சாப்பிட்ட பின்னர் வேகமாக நடக்க கூடாது.சாப்பிட்ட பின்னர் வயிற்றுக்கு அழுத்தம் கொடுக்கும் வேலையை தவிர்க்க வேண்டும்.எனவே உணவு உட்கொண்ட பிறகு இது போன்ற விஷயங்களை செய்வதை தவிர்க்க வேண்டும்.

இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் 5 மோசமான உணவுப்பழக்க வழக்கங்கள் இதோ!!

0

தற்பொழுது இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை பலரும் சந்திக்கின்றனர்.மாரடைப்பு,மார்பு வலி,கார்டியாக் அரெஸ்ட் போன்ற பாதிப்புகளை பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை பலரும் சந்திக்கின்றனர்.

இதய ஆரோக்கியம் பாழாக நாம் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகளே காரணம்.தற்பொழுது ருசிக்கு மட்டுமே முக்கியத்தும் கொடுக்கின்றோம்.இதனால் உடல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது.

நம் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் மோசமான உணவுப்பழக்கங்கள்:

1)சர்க்கரை உணவுகள்

இன்று தவிர்க்க முடியாத ஒரு சுவையாக இனிப்பு உள்ளது.டீ,காபி முதல் சுவீட்ஸ் வரை இனிப்பு சேர்க்கப்படுகிறது.இந்த இனிப்பு உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

இனிப்பு உணவுகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.உடலில் கொழுப்பு அளவை அதிகரித்து மாரடைப்பிற்கு வழிவகுத்துவிடும்.

2)கொழுப்பு உணவுகள்

நாம் கொழுப்பு உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் இரத்தத்தில் கெட்ட கொழுப்பு படிந்து இதய நோய் பாதிப்பை உண்டாக்கிவிடும்.எனவே கொழுப்பு உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

3)வறுத்த உணவுகள்

தற்பொழுது வறுத்த உணவுகள் அனைவரும் பேவரைட்டாக இருக்கிறது.குறிப்பாக வறுத்த அசைவ உணவுகளை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.வறுத்த உணவுகள் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்துவிடும்.இதனால் மாரடைப்பு,இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகள் வரக் கூடும்.

4)பதப்படுத்தப்பட்ட உணவுகள்

சைவ,அசைவ உணவுகளை பதப்படுத்தி சாப்பிடும் பழக்கம் தற்பொழுது அதிகரித்து வருகிறது.ஆனால் பதப்படுத்திய உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.இனி பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிருங்கள்.\

5)சோடிய உணவுகள்

அறுசுவைகளில் உப்பு சுவை நாம் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடிய ஒன்று.இந்த உப்பில் நன்மைகள் நிறைந்திருக்கிறது என்றாலும் இதை அதிகமாக சாப்பிட்டால் இரத்தம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.எனவே உணவில் உப்பு அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.

கல்லீரலில் கொழுப்பு படிய என்ன காரணம்!! இதை தவிர்க்க சிறந்த வழிகள் இதோ!!

0

நமது உடலின் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல்.இந்த உறுப்பில் கொழுப்பு சேர்ந்தால் அவை சீக்கிரம் ஆரோக்கியத்தை இழந்துவிடும்.கல்லீரலில் கொழுப்பு படிய நாம் செய்யும் தவறுகளே காரணம்.கல்லீரலில் கொழுப்பு குவிந்தால் வயிறு வீக்கம்,தோல் அரிப்பு,தோல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

கல்லீரலில் கொழுப்பு குவிந்தால் உயர் இரத்த அழுத்தம்,உடல் பருமன்,நீரிழிவு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.கல்லீரல் கொழுப்பு வகைகளில் இரண்டு வகைகள் இருக்கிறது.ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல்,ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல்.மது அருந்தவதால் கல்லீரலில் கொழுப்பு படிகிறது.இதை ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் என்று அழைக்கின்றோம்.அதேபோல் ஆல்கஹால் அருந்தாமல் கல்லீரலில் கொழுப்பு படிவதை ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் என்று அழைக்கின்றோம்.

கொழுப்பு கல்லீரல் நோய் அறிகுறிகள்:

1)உடல் பருமன்

2)உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் படிதல்

3)உயர் இரத்த அழுத்தம்

4)மாதவிடாய் முதிர்ச்சி

5)தொப்பை கொழுப்பு

கொழுப்பு கல்லீரலுக்கான காரணங்கள்:

1)கெட்ட கொழுப்பு

2)நீரிழிவு நோய்

3)மருந்து பக்க விளைவுகள்

கல்லீரல் கொழுப்பை கரைக்க மூலிகை வைத்தியம்:

தேவைப்படும் பொருட்கள்:

**ஒரு தேக்கரண்டி சீரகம்
**ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு
**ஐந்து புதினா இலைகள்
**அரை லிட்டர் தண்ணீர்

செய்முறை விளக்கம்:

பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சீரகத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஐந்து புதினா இலைகள் மற்றும் அரை எலுமிச்சை சாறை அதில் பிழிந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.இந்த பானத்தை குடித்து வந்தால் கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பு கரைந்துவிடும்.

இந்த 06 அறிகுறிகள் இருந்தால்.. உங்கள் கல்லீரல் டேமேஜ் ஆகிவிட்டது என்று அர்த்தம்!!

0

நம் உடலில் அதிக வேலை செய்யும் உறுப்பு என்றால் அது கல்லீரலாகதான் இருக்கும்.நமது கல்லீரல் ஆரோக்கியம் சேதமாகிவிட்டதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.கல்லீரல் சேதமானால் பாதத்தில் வீக்கம் ஏற்படும்.இது முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

கல்லீரல் சேதமாகிவிட்டதை ஆரம்ப நிலையில் கண்டறிவது கடினம்.கல்லீரல் சேதமாகிவிட்டது உறுதியானால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

கல்லீரல் சேத அறிகுறிகள்:

1)மஞ்சள் காமாலை
2)குமட்டல்
3)வாந்தி
4)பசியின்மை
5)வயிற்று வலி
6)சிறுநீர் நிறத்தில் மாற்றம்
7)இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல்
8)உடல் சோர்வு
9)கணுக்கால் வீக்கம்
10)வயிறு வீக்கம்

சேதமான கல்லீரலை சரிசெய்யும் வீட்டு வைத்தியங்கள்:

**ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு கிளாஸில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் ஊற்றி நன்றாக கலந்து பருக வேண்டும்.ஆப்பிள் சீடர் வினிகர் பானம் கல்லீரலில் தேங்கிய கழிவுகளை அகற்ற உதவுகிறது.

**பெரிய நெல்லிக்காய்

ஒரு முழு நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை அரைத்து ஜூஸ் செய்து குடித்தால் கல்லீரலில் தேங்கிய கழிவுகள் வெளியேறும்.கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நெல்லிக்காய் ஜூஸ் பருகலாம்.

**அதிமதுரம்

நாட்டு மருந்து கடையில் அதிமதுரம் கிடைக்கும்.இதை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பாலில் இந்த அதிமதுரப் பொடியை போட்டு குடித்தால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.

**ஆளிவிதை

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஆளிவிதை போட்டு ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.

**மஞ்சள்

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் கலந்து குடித்தால் கல்லீரலில் தேங்கிய கழிவுகள் வெளியேறும்.

நல்ல தூக்கத்தை அனுபவிக்க வேண்டுமா? அப்போ இதை இரவில் செய்து பாருங்கள்!!

0

மனிதர்களுக்கு நல்ல தூக்கம் அவசியமான ஒன்று.ஆனால் இன்று பலர் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.உடலுக்கு போதுமான ஓய்வு தூக்கத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது.அப்படி இருக்கையில் நிம்மதியான தூக்கம் இல்லையென்றால் நிச்சயம் உடல் நோய்வாய்ப்பட்டுவிடும்.

இன்றைய தலைமுறையினர் செல்போன் பயன்படுத்திக் கொண்டு உரிய நேரத்தில் தூங்காமல் இருக்கின்றனர்.இதனால் மன அழுத்தம்,மன உளைச்சல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.நீங்கள் நல்ல தூக்கத்தை அனுபவித்ததை சில அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ளலாம்.அதேபோல் நாம் உறங்குவதால் நமது உடலில் இருக்கின்ற கழிவுகள் தானாக வெளியேற்றப்படுகிறது.தூங்கி எழுந்ததும் வாயில் துர்நாற்றம் வீசுதல்,கண்களில் ஒருவித பிசிபிசுப்பு உணர்வு,அடர் மஞ்சள் சிறுநீர் போன்றவை வெளிப்பட்டால் நீங்கள் நல்ல தூக்கத்தை அனுபவித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.இது உடல் கழிவுகள் வெளியேறி விட்டதை உணர்த்துகிறது.

நல்ல தூக்கத்தை அனுபவிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

1)இரவில் நேரமாக தூங்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.அதற்கு முன்னர் இரவு உணவை நேரமாக முடித்துவிட வேண்டும்.

2)இரவு நேரத்தில் அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் சூடான பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும்.காஃபின் பானங்கள் தூக்கத்தை இழக்க செய்யும்.

3)மின் விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டான அறையில் உறங்குவதை பழகிக் கொள்ள வேண்டும்.

4)பாலில் ஜாதிக்காய் பொடி கலந்து குடித்தால் குடித்தால் நல்ல தூக்கம் வரும்.தினமும் காலையில் எழுந்ததும் தியானம்,யோகா போன்றவற்றை செய்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

5)மனதில் குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும.இரவில் மொபைல்,டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

6)பகல் நேரத்தில் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.இரவில் வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பணம் பெருகவும், வாஸ்து பிரச்சனை நீங்கவும் மஞ்சளை வைத்து செய்யக்கூடிய 10 பரிகாரங்கள்..!!

0

இயற்கையான கிருமி நாசினியாக இருக்கும் மஞ்சள் ஆனது அனைத்து வீட்டின் சமையலறையிலும், பூஜை அறையிலும் கண்டிப்பாக இருக்கும். அதேபோன்று சுப காரியங்கள் அனைத்தும் மஞ்சள் இல்லாமல் முழுமை அடையாது. ஜோதிடத்தின் படி மஞ்சளானது குருபகவானின் அம்சம் கொண்டது. மேலும் இது நேர்மறை ஆற்றல்களை உருவாக்கும் தன்மை கொண்டது.

இந்த மஞ்சளை சில நோய்களுக்கும், உடலில் ஏற்படும் காயங்களுக்கும் நேரடியாக பயன்படுத்தலாம். அதுபோலவே வாஸ்து பிரச்சனைகளை சரி செய்யவும், நிதி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யவும் இந்த மஞ்சள் பெரிதும் பயன்படுகிறது. இந்த மஞ்சளை வைத்து செய்யக்கூடிய பூஜை, பரிகாரங்கள், வழிபாடுகள் ஆகிய அனைத்தும் மிகுந்த சக்தி நிறைந்ததாக இருக்கும்.

இப்படிப்பட்ட மஞ்சளை வைத்து வீட்டில் இருக்கும் பண பிரச்சனைகளையும், வாஸ்து பிரச்சனைகளையும் எவ்வாறு சரி செய்யலாம் என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

1. மஞ்சள் என்பது குரு பகவானின் அம்சம் கொண்டது. எனவே இந்த மஞ்சளை நம்முடன் வைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு. இதனால் உங்களுடைய வலிமை அதிகரிக்கும். இந்த மஞ்சளை கையில் வைத்துக் கொண்டு குருபகவானின் மந்திரங்களை கூறும் பொழுது, வாழ்க்கையில் பல நன்மைகள் உண்டாகும்.

2.குரு பலன் குறைவாக இருக்கும் ஜாதக அமைப்பை கொண்டவர்கள் குருவின் அருளைப் பெற, வியாழன் கிழமை தோறும் பச்சை மஞ்சள் துண்டு ஒன்றை எடுத்து, அதனை மஞ்சள் துணியில் வைத்து கையில் கட்டி கொண்டால் குரு பலன் கூடும்.

3.வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டவும் மஞ்சள் பயன்படுகிறது. நிதி மற்றும் பொருளாதார பிரச்சனைகளை நீக்குவதில் மஞ்சள் முக்கியத்துவம் வகிக்கிறது. அதேபோன்று மஞ்சள் உடன் கிராம்பு சேர்த்து பயன்படுத்தும் பொழுது அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.

4.வாஸ்து பிரச்சனைகள் நீங்க வேண்டும் என்றால் 15 நாட்கள் தொடர்ந்து மஞ்சள் கலந்த நீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதனால் நல்ல ஒரு மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

5.வீட்டின் முன்பாக சுவஸ்திக் சின்னத்தை மஞ்சள் மூலம் போட்டு வந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.

6.ஐந்து மஞ்சள் துண்டுகளுடன் சிறிது அரிசியை சேர்த்து, ஐந்து அடி நீளம் உள்ள ஒரு மஞ்சள் நிற துணியில் இதனை கட்டி வீட்டில் மங்களகரமான ஒரு இடத்தில் வைக்கும் பொழுது, தன காரகனான குருவின் பலம் அதிகரித்து வீட்டில் செல்வம் சேரும்.

7.வியாழன் கிழமை தோறும் குளிக்கும் நீரில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து குளித்து வந்தால் உடல் மற்றும் மனம் தூய்மை அடையும். அதேபோன்று மஞ்சள் தூளினால் திலகம் இட்டு கொண்டு வெளியே செல்லும் பொழுது, உங்களது வேலை மற்றும் தொழில் முயற்சிகள் ஆகிய அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

8.புதியதாக ஒரு வேலையில் சேர செல்லும் பொழுது மஞ்சள் திலகம் இட்டு சென்றால் நல்ல ஒரு வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கணக்கு வழக்குகள் பார்க்கும் புத்தகத்தில் மஞ்சள் தூளை தெளித்து விட்டால் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும்.

9.வியாபாரத்தில் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டு கொண்டே இருந்தால், வளர்பிறையில் வரும் முதல் வியாழன் கிழமை அன்று
“ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ”என்று 108 முறை சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு மஞ்சள் துணியில் கருப்பு மஞ்சள், கோமதி சக்கரம் ஆகியவற்றை சேர்த்து அதனை ஒரு கருப்பு நிற துணியில் கட்டி வைக்க வேண்டும். இது வியாபாரத்தில் இருக்கும் சிக்கல்களை போக்கும்.

10.ஒரு வெள்ளிக்கிழமை நாளில் குங்குமச்சிமிழில் சிறிதளவு மஞ்சள் மற்றும் குங்கும பூவை சேர்த்து மகாலட்சுமி தாயின் பாதத்தில் வைத்து பூஜை செய்து அவனை பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இந்த அடுத்து வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் லட்சுமி தேவியின் முன்பு வைத்து பூஜை செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். பண வரவும் அதிகரிக்கும்.

தெரிந்து கொள்ளுங்கள்.. Iron Tablet சாப்பிடுபவர்கள் செய்யக் கூடாத தவறுகள்!!

0

நமது உடலுக்கு தேவைப்படும் முக்கிய சத்துக்களில் ஒன்று இரும்பு.இது நமது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.இந்த இரும்புச்சத்து குறைந்தால் உடல் சோர்வு,இரத்த சோகை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

சிலர் இரும்புச்சத்து குறைபாட்டை போக்க மாத்திரை உட்கொள்கின்றனர்.ஆனால் இயற்கை உணவுப் பொருட்களை சாப்பிட்டாலே இரும்புச்சத்து கிடைக்கும்.முருங்கை கீரை,பேரிச்சை,கீரை வகைகள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும்.

இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இரும்புச்சத்து மாத்திரை மலச்சிக்கல்,வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.அதிகளவு இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால் வாந்தி,மயக்கம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

அளவிற்கு அதிகமாக இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால் நுரையீரல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.இரும்புச்சத்து மாத்திரையை அதிகமாக சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.அதேபோல் இரத்த வாந்தி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இரும்புச்சத்து மாத்திரையின் அளவு வயதை பொருத்து சாப்பிட வேண்டும்.

19-50 வயதிற்குள் இருக்கும் நபர்கள் நாளொன்றுக்கு 18 மில்லி கிராம் இரும்புச்சத்து மாத்திரையை உட்கொள்ளலாம்.கர்ப்பிணி பெண்கள் 27 மில்லி கிராம் அளவிற்கு உட்கொள்ள வேண்டும்.

இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்ட பிறகு பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் தண்ணீர்,சூடான பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.ஆனால் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்ட பிறகு வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை பானத்தை பருகலாம்.

பால் மற்றும் சூடான பானங்கள் இரும்புச்சத்து மாத்திரையின் பவரை குறைத்துவிடும்.ஆனால் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்ட பிறகு வைட்டமின் சி சத்து பானங்கள் பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

விரதம் இல்லை..!! பூஜை இல்லை..!! தினமும் இந்த ஒரு வார்த்தையை குலதெய்வத்தை நினைத்து 3 முறை கூறினால் போதும்..!!

0

தினமும் காலையில் எழுந்தவுடன் உங்களது உள்ளங்கையை பார்த்து இந்த ஒரு வார்த்தையை மூன்று முறை கூறினால் போதும், அந்த நாள் முழுவதும் வெற்றியை தரக்கூடிய நாளாக உங்களுக்கு அமையும். இன்று அனைவருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையே பண பிரச்சினை தான். அந்த பண பிரச்சனையையும் போக்கி பண வரவை தரக்கூடிய வார்த்தையும் இந்த ஒரு வார்த்தை தான்.

பண பிரச்சினை மட்டும் அல்லாமல் அனைத்து விதமான பிரச்சனைகளையும் இந்த ஒரு வார்த்தை போக்கி விடும். அதிகாலை எழுந்ததும் நாம் எந்த பொருளை பார்க்கின்றோமோ அதனைப் பொறுத்துதான் அந்த நாள் முழுவதும் அமையும் என்று கூறுவர். அதே போன்று தான் காலை எழுந்ததும் உங்களது உள்ளங்கையை பார்த்து இந்த ஒரு வார்த்தையை கூறும் பொழுது, அந்த நாள் முழுவதும் உற்சாகமான நாளாக அமையும்.

இதனை ஒரு நாள் மட்டும் செய்யாமல் அனைத்து நாட்களும் செய்யும்பொழுது, வெற்றி மேல் வெற்றியை குவிக்கும் ஒரு நல்ல வாய்ப்பை இது தேடி தரும். ஒரு சில வீடுகளில் பணத்திற்கு எந்த ஒரு குறைவும் இருக்காது, ஆனால் அந்த வீட்டில் நிம்மதி என்பது இருக்காது. என்னதான் பணம், பொருள் என நம்மிடம் இருந்தாலும், நிம்மதி என்பதும் மிகவும் முக்கியம். அந்த ஒரு மன நிம்மதியையும் இந்த ஒரு வார்த்தையின் மூலம் நாம் பெற முடியும்.

அந்த ஒரு வார்த்தையானது என்னவென்றால் “அம் பகவ”. அம் என்பது ஒரு மங்கல சொல். பகவ என்பது பகவானை குறிக்கும் ஒரு சொல். எனவே இந்த ஒரு வார்த்தையை தினமும் காலையில் எழுந்தவுடன் உங்களது உள்ளங்கையை பார்த்தவாறு மூன்று முறை கூற வேண்டும். இந்த ஒரு வார்த்தையை கூறும் பொழுது உங்களது குலதெய்வத்தையும் மனதார நினைத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் குலதெய்வத்தின் அருள் என்பது மிகவும் அவசியம். தினமும் அதிகாலையில் உங்களது குலதெய்வத்தை நினைப்பது மிக மிக சிறப்பு. எனவே தினமும் எழுந்தவுடன் உங்களது உள்ளங்கையை பார்த்து, உங்களது குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு, இந்த ஒரு வார்த்தையை மூன்று முறை கூறும் பொழுது உங்களது வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை உங்களால் கண்கூடாக காண முடியும்.

இது ஒரு பரிகாரமும் கிடையாது, பூஜையும் கிடையாது. இது ஒரு சாதாரண செயல்பாடு தான். இதனை முழு நம்பிக்கையுடனும், முழு மனதுடனும் தினமும் செய்து வந்தால் உங்களது வாழ்க்கையில் பல வெற்றிகளை காணலாம்.

உங்கள் குழந்தை என்ன சாப்பிட்டாலும் வெயிட் போட மாட்டேங்குறாங்களா? இதுதான் காரணம்!!

0

சிலர் அளவாக சாப்பிட்டாலும் உடல் எடை கூடிவிடுவார்கள்.ஆனால் சிலர் வயிறு முட்ட சாப்பிட்டாலும் உடல் எடை ஏறாமல் நோஞ்சான் போன்று ஒல்லியாக இருப்பார்கள்.இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.உணவை பொறுத்து குழந்தைகளின் உடல் எடையை நிர்ணயிக்க முடியாது.குழந்தை உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சில நோய் பாதிப்புகள் காரணமாக இருக்கலாம்.

குழந்தைகள் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க காரணம்:

1)குடல் புழு பிரச்சனை இருந்தால் குழந்தைகள் உடல் எடை கூடாமல் இருப்பார்கள்.எனவே குடல் புழுக்களை வெளியேற்ற கசப்பு நிறைந்த பொருட்களை சாப்பிடக் கொடுக்கவும்.வேப்பிலை,பாகல் இலை போன்றவற்றை ஜூஸாக அரைத்து குடிக்க கொடுக்க வேண்டும்.

2)மிகவும் குறைவான கலோரி நிறைந்த உணவுகளை சாப்பிடும் குழந்தைகள் உடல் எடை கூடாமல் இருப்பர்.

3)இரத்த சோகை பாதிப்பு இருக்கும் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க மாட்டார்கள்.தைராய்டு பாதிப்பு இருக்கும் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க மாட்டார்கள்.

4)ஹார்மோன் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருக்கும் குழந்தைகள் ஒல்லியாக இருப்பார்கள்.உடல் வளர்ச்சி இல்லாத குழந்தைகள் எடை கூடாமல் இருப்பார்கள்.

5)உடல் உயரம் அதிகமாக இருக்கும் குழந்தைகள் உடல் எடை குறைவாக இருப்பார்கள்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள்,அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகள் உடல் எடை தேறமாட்டார்கள்.

குழந்தைகள் உடல் எடையை அதிகரிக்க புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த உணவுகளை கொடுக்கலாம்.பாதாம் பருப்பு,புரதம் நிறைந்த உணவுகள் ஆகியவற்றை சாப்பிடக் கொடுக்கலாம்.வேர்கடலை மற்றும் கொண்டைக்கடலையை பொடித்து கஞ்சி செய்து கொடுத்தால் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்கும்.

வாழைப்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடக் கொடுக்கலாம்.பாலில் தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்கும்.தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிடக் கொடுக்கலாம்.இப்படி குழந்தையின் உடல் எடையை இயற்கை முறையில் அதிகரிக்கலாம்.

பெற்றோர்களே தெரிந்து கொள்ளுங்கள்!! குழந்தைகளுக்கு IQ திறனைவிட EQ லெவல் தான் முக்கியமாம்!!

0

இப்பொழுது உள்ள குழந்தைகள் சிறு வயதிலேயே புத்திசாலி தனமாக வளர்கின்றனர்.குழந்தைகளின் IQ லெவலை அதிகரிக்க பெற்றோர் பல்வேறு விஷயங்களை செய்கின்றனர்.குழந்தைகளுக்கு ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான காலத்தில் IQ லெவல் அதிகமாக வளரும்.

இந்த வயதில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு சதுரங்கள்,புதிர் விளையாட்டு மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட வைக்கின்றனர்.குழந்தைகளுக்கு பிற மொழிகள் கற்றுத் தருதல்,குறுக்கெழுத்து புதிர் போன்றவற்றின் மூலம் குழந்தையின் மூளை செயல்திறனை மேம்படுத்த முயற்சிக்கின்றனர்.

ஆனால் உண்மையில் இதுபோன்ற செயல்கள் மூலம் குழந்தையின் IQ லெவலை அதிகரிக்க முடியாது.இந்த ஆக்டிவிட்டிஸ் குழந்தையின் மூளை செயல்திறனை அதிகப்படுத்தாது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளுக்கு கார்டு விளையாட்டு சொல்லி தருவதை தவிர்த்துவிட்டு இயற்கை சூழலில் அவர்களை வளர்த்தால் IQ லெவல் அதிகரிக்கும்.குழந்தைகளுக்கு கதை சொல்லுதல்,பிரச்சனைகளுக்கு தீர்வு இப்படி காண்பது போன்றவற்றை சொல்லி கொடுத்தால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரிக்கும்.

குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிய நீங்கள்தான் விளையாட்டு பொம்மை.நீங்கள் அவர்களிடம் அதிக நேரத்தை செலவிட்டால் அவர்களின் குழந்தை பருவ வளர்ச்சி நன்றாக இருக்கும்.குழந்தைகளை ஓடிஆடி விளையாட வைத்தால் அவர்களின் மூளை செயல்திறன் அதிகரிக்கும்.குழந்தைகள் நன்றாக விளையாட ஆரம்பித்தால் அவர்களின் IQ லெவல் அதிகரிக்கும்.

அதேபோல் பெயிட்டிங்,ஓவியம்,பாடல் கேட்க வைப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வைத்தால் அவர்களின் மூளை நுண்ணறிவுதிறன் மேம்படும்.குழந்தைகளை EQ அதாவது Emotional Quotient சூழலில் வளர்த்தால் அவர்களின் IQ லெவல் அதிகரிக்கும்.