வியாழக்கிழமை, ஆகஸ்ட் 28, 2025
Home Blog Page 49

மாணவ மாணவிகள் ஒரே கழிவறையை பயன்படுத்தும் அவலம்! போராட்டத்தில் இறங்கிய ஆளும்கட்சி கவுன்சிலர் 

நெல்லை பாளையங்கோட்டை மாநகராட்சி எல்லைக்குள் கீழ் உள்ள மணகாவலம் பிள்ளை நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் நீண்ட காலமாக கட்டட வசதிகள் இல்லாமை, கழிவறை பயன்பாட்டில் பெரும் கோளாறு மற்றும் நிர்வாகத்தின் அலட்சியம் போன்ற அவல நிலைகள் தொடர்ந்தவாறு உள்ளதாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கழிவறை இல்லாமல் அவலம்!

8-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயிலும் இந்த அரசு பள்ளியில், ஆண் மற்றும் பெண் மாணவ, மாணவிகள் ஒரே கழிவறையை பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் வேதனையுடன் கூறுகின்றனர். குறிப்பாக வயதுக்கு வந்த மாணவிகளுக்கு இது மிகவும் சங்கடம் மற்றும் சிரமமான சூழ்நிலை. எனவே, பள்ளி நிர்வாகம் மற்றும் மாநகராட்சியின் மேல் அவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

நிரந்தர கட்டுமானம் இல்லை – போராட்டத்துக்கு வழக்குப்பதிவு?

பள்ளிக்கான கட்டிட பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நிர்வாக மெத்தனத்தால் நிறைவடையாமல் இருப்பது மட்டுமல்லாமல், அதை வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெற்றோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

திமுக கவுன்சிலர் வீதியில் – லட்டு கொடுத்து எதிர்ப்பு!

இந்தத் துயர நிலையை கண்டித்து, திமுக கவுன்சிலர் எம்.இந்திரா மற்றும் அவரது கணவர், பொதுமக்களுடன் இணைந்து வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, “லட்டு கொடுத்து” நிர்வாகத்துக்கு எதிராக எதிர்ப்பு பதிவு செய்தது மிகுந்த கவனம் பெற்றுள்ளது. ஆளும் கட்சி கவுன்சிலரே வீதியில் இறங்கி அரசு செயல்பாட்டை எதிர்த்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெயர்ந்து விழும் நிலையில் மேற்கூரை! வைரல் வீடியோ

பள்ளியின் மேற்கூரை தொடுதோறும் பெயர்ந்து விழும் அபாயகரமான நிலையில் இருக்கிறது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சீரான கட்டுமானமே இல்லாத நிலையில், வார்டு 7இல் உள்ள இந்த அரசு பள்ளியின் தரம் உயர்த்த பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.

மக்களே இனி 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது? ரிசர்வ் வங்கி கொடுத்த விளக்கம்!!

0

மத்திய அரசு புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது.அதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். அதன் பிறகு தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாததால் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்கின்றது.

இந்நிலையில் 500 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு விரைவில் 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற இருப்பதாகவும் கூறப்படுகின்றது. டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களில் மாற்றம் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. ரிசர்வ் வங்கி பிறப்பித்த ஒரு உத்தரவாக உள்ள நிலையில் மக்களிடம் 100 ரூபாய் 200 ரூபாய் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். அதனால் ஏடிஎம்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. 500 ரூபாய் நோட்டுக்கான டெண்டர் இன்னும் சட்டபூர்வமாகவில்லை. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கவும் 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது தொடர்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அதிகாரபூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. 

அதனால் தொடர்ந்து 500 ரூபாய் நோட்டுகள் நடைமுறையில் இருக்கும். அதனை மக்கள் அனைவரும் பயன்படுத்தலாம் எனவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆயிரம் மற்றும் 500 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியான நிலையில் மக்கள் அதிலிருந்து தற்போது தான் மீண்டு புதிய நோட்டுக்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் தற்போது மீண்டும் இந்த தகவல் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளுக்கு அரசு அறிவித்த அசத்தல் அப்டேட்; மாதம் தோறும் 1000 பெறுவது எப்படி தெரியுமா!!

0

தமிழக அரசு பல்வேறு நிதி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் புதுமைப்பெண் திட்டம் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பெண் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக தொடங்கப்பட்டது.

மேலும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றது. அரசு பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் சேர்க்கை மற்றும் இடைநீற்றலை குறைப்பதற்காகவும் அவர்களுடைய திறனை உணரவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. பொருளாதார சூழ்நிலையில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகள் மற்றும் இளம் மாணவிகளுக்கு இத்திட்டம் நிதி உதவி வழங்கி வருகின்றது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு பள்ளிகள் அல்லது கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியம். இத்திட்டத்தின் மூலம் மாதம் தோறும் உதவித் தொகையாக மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக 1000 ரூபாய் செலுத்தப்படும். மேலும் இளங்கலை பட்டம், டிப்ளமோ, ஐடிஐ ,தகுதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிற படிப்புகள் என பெண் தனது உயர்கல்வியை படித்து முடிக்கும் வரை உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ 698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க மாணவர்கள் தங்கள் பள்ளிகள் அல்லது கல்வி நிறுவனங்களின் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையில் இத உடனே பண்ணுங்க; ஜூன் 14 வரை மட்டுமே டைம்!!

0

ஆதார் அட்டை என்பது முக்கிய ஆவணமாக மாறி உள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள முகவரி உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலமாக இலவசமாக புதுப்பிப்பதற்காக ஜூன் 14ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு எந்த ஒரு புதுப்பிப்புகள் செய்தாலும் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து யூனிட் ஐடென்டிபிகேஷன் அத்தாரிட்டி ஆப் இந்தியா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஆதார் பதிவு செய்த நாளில் இருந்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அடையாள ஆவணங்கள் மற்றும் முகவரி ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும்.

இதன் மூலம் ஆதார் விவரங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு துல்லியமாக இருக்கும் என்பதால் இந்த புதுப்பிப்பை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் ஜூன் 14ஆம் தேதி வரை எந்த தகவல் மாற்றத்தையும் செய்து கொள்ளலாம். அதற்கு அருகே உள்ள ஆதார் மையத்திற்கு சென்று 50 ரூபாய் கட்டணத்துடன் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் ஆதார் அட்டையில் விரல் ரேகை , கண் நார் ஸ்கேன் மற்றும் புகைப்படம் ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது இதற்கு ஆதாரம் மையத்திற்கே செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

ஆதாரில் புதுப்பிப்பு செய்ய விரும்புபவர்கள் ஜூன் 14ஆம் தேதிக்குள் அதனை செய்து முடிக்க வேண்டும் இல்லையெனில் கட்டணம் செலுத்தி ஆதார் மையத்திற்கு நேரில் சென்று புதுப்பிக்க வேண்டும் என்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர். அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை முக்கிய ஒன்றாக உள்ள நிலையில் உடனே அப்டேட் செய்வது அவசியம்.

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; உடனே விண்ணப்பியுங்கள்!!

தமிழகத்தில் அண்மையில் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியானது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 11 வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தி வருகின்றனர்.

மேலும் முன்பு 1200 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதிய மாணவர்கள் தற்போது 11 ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கும் 12-ம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்படும். அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறு கூட்டல் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜூன் 5ஆம் தேதி முதல் மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வு துறை சார்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள் https://dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை ஜூன் ஐந்தாம் தேதி முதல் ஜூன் ஏழாம் தேதி வரை மட்டுமே மாவட்ட தேர்வுகள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்களின்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுடைய மதிப்பெண் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்து தரப்படும்.

காலையிலேயே மாணவர்களை குஷி படுத்திய அரசு; 4 நாட்கள் தொடர் விடுமுறை!!

0

தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. 45 நாட்களுக்கும் மேலாக விடுமுறை விடப்பட்ட நிலையில் ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்குச் செல்ல துவங்கி உள்ளனர். பள்ளிக்குச் சென்ற முதல் நாளே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை அறிவித்துள்ளது ஈகை பெருநாளாம் பக்ரீத் பண்டிகை ஜூன் 6ஆம் தேதி, 7 ஆம் தேதி, 8 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதி பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு நாட்கள் விடுமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும். இந்தியாவில் பிறை தெரிவதன் அடிப்படையில் ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதினால் மற்ற மாநிலங்களில் பக்ரீத் பண்டிகை நாள் வேறுபடும் இதனை கருத்தில் கொண்டு மாநிலங்களில் விடுமுறை விடப்படும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பக்ரீத் பண்டிகை ஜூன் 7ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுவதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்திருக்கின்றார்.

இதனால் தமிழ்நாட்டில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என நான் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஜூன் ஒன்பதாம் தேதி வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்பட இருப்பதினால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பை தவறவிட்ட EPS.. விஜய்க்கு அடித்த ஜாக்பாட்!! கூட்டணியில் கலக்கப்போகும் தவேக !!

0

ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாமக கூட்டணி நல்ல வாக்கு சதவீதத்தை கொடுத்திருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக பாஜகவுடன் கூட்டணி வைத்தது. பெரும்பான்மையான இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் மக்கள் மனதில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை காட்டிலும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதே தான் விரும்புகின்றனர். இதைத்தான் ராமதாஸ் அவர்களும் சமீபத்தில் தனது மகன் மீதான குற்றச்சாட்டுகள் அடுக்கிய பெட்டியில் கூட கூறியிருந்தார்.

அப்படி பாஜக பாமக அதிமுக என்ற முக்கோண கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி தவறி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் தற்போது நடைபெற போகும் ராஜசபா சீட் ஒன்றை அன்புமணிக்கு ஒதுக்கி இருந்தால் கட்டாயம் அதிமுகவுடன் கூட்டணி உறுதியா யிருக்கும். ஆனால் எடப்பாடி அவ்வாறு செய்யவில்லை. இந்த வாய்ப்பை விஜய் தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என எண்ணுகிறாராம். இது ரீதியாக குறிப்பிட்ட சில நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம். நாம் அரசியலுக்கு காலடி எடுத்து வைத்ததிலிருந்து பாமகவை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு செயல்முறையும் செய்து வருகிறோம்.

அதனை முன்னிறுத்தி எப்படியாவது பாமகவை நம் கட்சியுடன் இணைக்க பேச்சுவார்த்தை நடத்துங்கள். அத்தோடு அதிருப்தியில் இருக்கும் தேமுதிக தங்கள் பக்கம் இழுக்க முயலுங்கள் என்று கூறியுள்ளாராம். இவ்வாறு பாமக தேமுதிக என இரு கட்சிகளின் ஆதரவோடு நாம் தமிழர் சீமானும் சற்று ஆதரவை தெரிவிக்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் மேல் வாக்கு பெற்று விடலாம் என்று விஜய் கூறியுள்ளார். இதனால் எடப்பாடிக்கு பாமக தேமுதிக என்ற எந்த கூட்டணியும் இல்லாமல் பாஜகவுடன் தனித்தனி என்று இம்முறையும் தேர்தலில் பின்வாங்க போகிறார் என கூறுகின்றனர்.

துணை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி? வெளியான ஷாக் நியூஸ்!!

0

உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் படங்கள் தயாரிப்பது, நடிப்பதுமாக இருந்து வந்த நிலையில் அவர் தேர்தலின் பொழுது திமுகவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடைய பிரச்சாரம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் அவர் தற்போது முழு நேர அரசியலில் இறங்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் பொழுது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது திமுகவின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக இருக்கக்கூடிய இளைஞர் அணி செயலாளராக பதவி ஏற்றார். 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற்றார். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து இடங்களையும் வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

வெளி மாவட்ட பயணங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறைத்துக் கொண்ட நிலையில் அவருக்கு பதிலாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு ஆய்வுகளை செய்து வருகின்றார். இந்நிலையில் அனைத்து பொதுக் கூட்டங்களிலும், கட்சி நிகழ்வுகளிலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தவறாமல் கலந்து கொள்கின்றார். இந்நிலையில் மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் மேடையில் அமராதது பேசும் பொருளாக மாறியது.

உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் காரணமாக அவதிப்பட்டு வருவதால் அவரை சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் கலந்து கொள்ள இருந்த அனைத்து நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவால அதிகரித்து வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

சுகாதாரத்துறை இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. உதயநிதிக்கு கொரோனா தொற்று என வதந்தி பரப்பப்பட்டுள்ளது. அவருக்கு காய்ச்சல் தவிர வேறு எந்த பாதிப்பும் கிடையாது. அவர் தனிமைப்படுத்தப்படவும் இல்லை. காய்ச்சல் காரணமாக மக்களை சந்திக்காமல் இருக்கின்றார் என விளக்கம் தரப்பட்டுள்ளது. 

அதிமுக உங்களை ஏமாத்திருச்சு.. திமுக பக்கம் வந்துடுங்க!! தேமுதிக வுக்கு பகிரங்க அழைப்பு!!

0

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறப்பிற்கு பிறகு கட்சிக்கு முன்பை விட வலு சேர்ந்துள்ளது. அதை வைத்து சீட் வாங்கி விடலாம் என்று எண்ணத்தில் பிரேமலதா இருந்தார். குறிப்பாக தனது மகனை எம்பி ஆக்கி விட வேண்டும் என்ற எண்ணம் தீர்க்கமாக இருந்தது. இதை வைத்து அதிமுக விடும் காய் நகர்த்திய போது அதனை எடப்பாடி சிறிதும் கூட கண்டு கொள்ளவில்லை. பிரேமலதாவின் அழுத்தமானது கூட்டணி பேச்சுவார்த்தை வரை வந்து முடிந்தது. சீட் கொடுத்தால் தான் கூட்டணி என கூறினார்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த ஆண்டு எம் பி சீட் வழங்குவதாக தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டதுடன் எங்களுடன் தேமுதிக கூட்டணி தொடரும் என்றும் கூறினார். ஆனால் பிரேமலதா இது ரீதியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. மாறாக அதிருப்தியில் உள்ளதாக சுற்று வட்டாரங்கள் கூறினர். இப்படி இருக்கையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இந்தியா கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு தேமுதிகவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தேமுதிக எங்களுடன் இணைவது குறித்து இந்திய கூட்டணியின் தமிழக தலைவர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் அப்படி இவர்கள் எங்களுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் அவர்களை வரவேற்க காத்திருக்கிறோம் என கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி எம்பி சீட் அடுத்த வருடம் தருவதாக தேமுதிகவிற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அப்பா மகன் சண்டைக்கு பாஜக தான் முக்கிய காரணம்!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!

0

PMK BJP: பாமக கட்சிக்குள் அப்பா மகனிடையே உட்கட்சி மோதல் இருக்கும் நிலையில் இந்த ரீதியாக தற்போது வரை கூட்டணி கட்சியான பாஜக வாய் திறக்காமல் உள்ளது. ஒரு பக்கம் இவர்களின் சண்டைக்கு பாஜகவும் முக்கிய காரணம் என கூறுகின்றனர். அன்புமணி ராமதாஸ் தனது ஆதாயத்திற்காக மட்டுமே பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பார்த்துள்ளாராம். இது ரீதியாக ராமதாஸ் அவர்களே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பார்.

தனது காலை பிடித்து தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். அதிமுக பாமக கூட்டணி இயற்கை சமநிலை போன்றது என தெரிவித்திருப்பார். பாஜக கூட்டணியிலிருந்து கொண்டு இவர்களின் சண்டைக்கு மிகப்பெரிய காரணம் என்று கூறுகின்றனர். அன்புமணியிடம் அனைத்து அதிகாரத்தையும் வாங்க சொல்லி அழுத்தத்தை தருவதும் பாஜக தான் எனக் கூறுகின்றனர்.

கட்சிக்குள்ளயே சில நிர்வாகிகள் அன்புமணிக்கு எதிராக திரும்பிய நிலையில் இவ்வாறான யோசனையை பாஜக கொடுத்துள்ளதாம். இதில் ராமதாஸுக்கு துளி கூட விருப்பமில்லை என்பதை அவர் அளித்த பேட்டியின் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. தற்போது ராமதாஸ் தலைமை பொறுப்பில் இருக்கும் பட்சத்தில் இனிவரும் நாட்களில் கூட்டணி எந்த பக்கம் திரும்பும் என்பது தெரியவில்லை. குறிப்பாக வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணையலாம் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது.