Home Blog Page 50

ஆட்சி பங்கு கோரிக்கையை நாங்கள் கைவிடவில்லை.. ஓப்பனாக பேசிய திமுக கூட்டணி கட்சி!!

0

DMK VCK: சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 5, 6 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் வேகமெடுத்துள்ளது. இதற்கு மேலும் மேலும் தீனி போடும் வகையில் அமைந்தது தான் விஜய்யின் அரசியல் வருகை, SIR பணிகள், திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிளவு போன்றவையாகும். அதிமுக பல்வேறு அணியாக பிரிந்தது அனைத்து ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டு வரும் வேலையில், திமுகவின் கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது என்று அனைவரும் நினைத்து வந்தனர். ஆனால் தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து திமுக கூட்டணி கட்சிகள் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்டு வருவதை கண் கூடாக பார்க்க முடிகிறது. இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறும் ஸ்டாலினுக்கு தற்போது புதிதாக விசிகவும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகிறது. இது குறித்து விசிகவின் நிர்வாகி சங்கத்தமிழன் ஆட்சியில் பங்கிற்காக நாங்கள் எந்த வேலையையும் செய்வோம், என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது விசிகவின் தலைவரான திருமாவளவனும் இது குறித்து பொதுவெளியில் பேசியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக பேசிய அவர், 2026 தேர்தலில் ஆட்சி பங்கு என்பது எங்களுடைய கோரிக்கையாக இருக்காது. அதற்காக இந்த கோரிக்கையை கைவிட போவதும்  கிடையாது என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து, திமுகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியில் திமுகவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய கட்சி மற்றும், மக்கள் செல்வாக்குள்ள ஒரு கட்சி என்றால் அது விசிக தான். அப்படி இருக்க விசிகவின் இந்த கோரிக்கையை ஸ்டாலின் ஏற்க மறுத்தால் திருமாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.

ஒருங்கிணைப்பு வேண்டாம்.. திமுக தான் கெத்து!! ஓபிஎஸ் எடுத்த திடீர் முடிவு!!

0

ADMK DMK: பீகாரை தொடர்ந்து தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், மாநில  கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. திமுக இந்த முறையும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டுமென்று தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், அதிமுகவும் அதற்கு இணையாக போராடி வருகிறது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அதிமுகவின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை இப்போது இல்லையென்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுவது, அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பது மற்றும் இபிஎஸ்யின் தலைமை வெறி என்று பலரும் கூறுகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்து நால்வர் அணியாக உருவானவர்கள் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார்கள்  என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவர்கள் விஜய்யுடன் கூட்டணி அமைப்பார்கள் என்ற செய்தி பரவி வரும் வேலையில், ஓபிஎஸ்யின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக திமுக பக்கம் சாய்ந்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மருது அழகுராஜ், அன்வர் ராஜா,  மனோஜ் பாண்டியன் போன்றோர் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது புதிதாக, ஓபிஎஸ் அணியின் விருதுநகர் மாவட்ட செயலாளராக இருந்த எஸ்.எஸ் கதிரவன் நேற்று திமுகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக திமுக பக்கம் செல்வதால் கூடிய விரைவில் ஓபிஎஸ்யும் திமுக பக்கம் செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இதற்கு முன் ஓபிஎஸ் ஒரு முறை அவரது மகனுடன் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியது, மனோஜ் பாண்டியன்  திமுகவில் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பி போது  எல்லாம் நன்மைக்கே என்று பதிலளித்தது போன்றவை  இதற்கு உதாரணங்களாக பார்க்கப்படுகிறது. மேலும் இவரின் மூலம் நால்வர் அணியும் திமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று பலரும் கூறுகின்றனர்.

இபிஎஸ்க்கு டாடா காட்டிய பிரேமலதா.. அடுத்த டார்கெட் இவங்க தான்!! திடீர் ட்விஸ்ட்!!

0

DMDK ADMK DMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட தொடங்கியுள்ளது. அதேபோல் மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை தேர்தல் வியூகங்களிலும், கூட்டணி கணக்குகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் மக்களை சந்திக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரை தெப்பக்குளம் பகுதியில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், நேரில் சந்தித்துப் பேசினார்.

இவர்களின் இந்த சந்திப்பு கூட்டணிக்காக அச்சாரம் என்று பேசப்பட்ட சமயத்தில் தற்போது திடீர் திருப்பமாக ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. திராவிட கட்சிகளுக்கு இணையாக தேமுதிகவும் மக்களை சந்திக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பெயரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மேற்கொண்டு வரும் பரப்புரை, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற போது அதில் பேசிய அவர், SIR மூலம் உங்கள் வாக்குகள் திருடப்படுவதாக தகவல் வந்தது, அதனால் ஒவ்வொரு தனி நபரும் சென்று உங்கள் வாக்கை உறுதி செய்யுங்கள். அதை திருடும் உரிமை இந்த உலகத்தில் எவனுக்கும் இல்லை.

ஜனநாயக நாட்டில் நம்முடைய ஓட்டுரிமையை உறுதி செய்வது நம்முடைய கடமை என்று கூறினார். தற்சமயம் திமுக SIR யை தீவிரமாக எதிர்த்து வருகிறது, அதனால் இவரின் இந்த கூற்று திமுகவிற்கு ஆதரவாக உள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதிமுக-தேமுதிக கூட்டணி உருவாகுமென்று நினைத்த பட்சத்தில் பிரேமலதாவின் இந்த பேச்சு இவர் திமுக பக்கம் தாவுவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணிக்கு விஜய் மறுத்ததால் ஏமாற்றத்தில் இருந்த இபிஎஸ் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்த்து அதனை சரி கட்டி விடலாமென்று நினைத்தார். ஆனால் தற்போது பிரேமலதாவின் இந்த நகர்வு இபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

சேலம் தான் அடுத்த டார்கெட்.. எடப்பாடி கோட்டையிலேயே கை வைக்கும் விஜய்!! அதிமுக-வை கவுக்க மாஸ்டர் பிளான்!!

0

TVK ADMK: கரூரில் நடந்த அசம்பாவிதத்திற்கு பிறகு விஜய் சில நாட்கள் வெளியே தலைக்காட்டவே இல்லை. இதனிடையே ஆளும் கட்சி மற்றும் மாற்றுக் கட்சியினர் பல நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் இனி விஜய் எந்த ஒரு சுற்றுப்பயணத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையையும் ஆளும் கட்சி காட்டமாக விதித்து வந்தது. இவையனைத்தையும் தகர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிறகு மீண்டும் தனது இயல்பு நிலைக்கு விஜய் திரும்பியுள்ளார்.

அந்த வகையில் இவரின் இக்கட்டான சூழலில் இவருக்காக அதிமுக துணை நின்று பேசியது. மீண்டும் இவர்களது கூட்டணி உறுதியாகும் என கூறினர். அதற்கு தான் எடப்பாடி அடியெடுத்தும் வைத்தார். ஆனால் அவையெல்லாம் வீணாகி போனது. இந்த சூழலில் தான் விஜய் தனது சுற்றுப்பயணத்தை எடப்பாடி கோட்டையாக இருக்கும் சேலம் மாவட்டத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க இருக்கிறாராம். கடந்த ஐந்தாம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் திமுகவை காரசாரமாக விமர்சித்திருப்பார்.

அந்த பொதுக்குழு கூட்டம் முடிந்த உடனேயே தனது நெருங்கிய புள்ளியிடம் சேலத்தில் தான் அடுத்த சுற்றுப்பயணம் எனக் கூறியுள்ளாராம். இது ரீதியான அனுமதி வாங்குதல் இடம் பார்ப்பது உள்ளிட்ட வேலைகளை தற்போதையிலிருந்து ஆரம்பித்துள்ளார்களாம். ஒரு சில மாதங்களில் விஜய் சேலத்திலிருந்து சுற்றுப்பயணத்தை ஆரம்பிப்பார் என கூறுகின்றனர். அன்று எடப்பாடிக்கு எதிராக அவர் களத்திலேயே பேசுவாரா என்பதே பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்திய அரசின் “YUVA AI for ALL” திட்டம் – அனைவருக்கும் இலவச செயற்கை நுண்ணறிவு பாடம்

0

YUVA AI for ALL புதிய டிஜிட்டல் யுகத்துக்காக இந்தியா எடுத்த முக்கியமான படி!

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), IndiaAI Mission திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் – குறிப்பாக இளைஞர்களுக்காக “YUVA AI for ALL” எனப்படும் இலவச தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த பாடத்திட்டம் என்ன?

மொத்தம் 4.5 மணி நேரம் நீளமான, தனித்தே கற்றுக்கொள்ளக்கூடிய (self-paced) இந்த ஆன்லைன் பாடம் மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு பற்றிய அடிப்படை அறிவை எளிமையாகப் புரியவைக்கிறது.

இதில் இந்தியாவின் உண்மையான உதாரணங்களுடன் கூடிய
எளிமையான விளக்கங்கள் உள்ளன. அதனால் கற்றல் சுவாரஸ்யமாகவும் நடைமுறைப்படியும் இருக்கும்.

எங்கே கற்கலாம்?

இந்த பாடம் இலவசமாக கிடைக்கிறது.

  • FutureSkills Prime

  • iGOT Karmayogi

  • மற்றும் பல பிரபலமான Ed-Tech தளங்களில்.

பாடத்தை முழுமையாக முடித்த பிறகு, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ சான்றிதழ் (Certificate) வழங்கப்படும்.

பாடத்தின் முக்கிய அம்சங்கள்

மொத்தம் 6 சிறிய ஆனால் ஈர்க்கும் பகுதிகள் கொண்டது:

  1. AI என்பதென்ன? அது எப்படி செயல்படுகிறது?

  2. கல்வி, கலை, வேலை வாய்ப்புகளில் AIயின் தாக்கம்

  3. AI கருவிகளை பாதுகாப்பாகவும் பொறுப்புடன் பயன்படுத்துவது எப்படி

  4. இந்தியாவில் உள்ள உண்மையான AI பயன்பாடுகள்

  5. எதிர்காலத்தில் AI தரும் புதிய வாய்ப்புகள்

  6. நெறிமுறையுடன், பொறுப்புடன் செயல்படும் AI பற்றிய விழிப்புணர்வு

 ஏன் “YUVA AI for ALL”?

  • இது முழுக்க முழுக்க இலவசம்

  • எப்போதும், எங்கிருந்தும் கற்றுக்கொள்ளலாம்

  • இந்திய அரசின் சான்றிதழ் கிடைக்கும்

  • எதிர்கால வேலை வாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களை உருவாக்கும்

  • AI-யை மையப்படுத்திய இந்தியா உருவாகும் பயணத்தின் ஒரு பகுதி

இந்தியாவின் நோக்கம்

இந்த திட்டத்தின் மூலம் அரசு, 1 கோடி இந்தியர்களுக்கு (10 மில்லியன் பேர்) அடிப்படை AI திறன்களை வழங்க விரும்புகிறது.

இதன் நோக்கங்கள்:

  • டிஜிட்டல் பாகுபாட்டை குறைப்பது

  • பொறுப்பான AI பயன்பாட்டை ஊக்குவித்தல்

  • இந்திய இளைஞர்களை எதிர்கால வேலைகளுக்கு தயார் செய்வது

பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் ஆகியவை இந்த பாடத்தை இணைத்து மாணவர்களுக்கு பரப்பும் வகையில் IndiaAI Mission உடன் இணைந்து செயல்படலாம்.

உருவாக்கியவர்

இந்த பாடத்திட்டத்தை வடிவமைத்தவர் ஜஸ்ப்ரீத் பிந்த்ரா (Jaspreet Bindra),
AI வல்லுநர், AI & Beyond நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் எழுத்தாளர்.

அவர் உலகளாவிய அறிவையும் இந்திய சூழலையும் இணைத்து,
எதிக்கல் மற்றும் இன்கிளூசிவ் AIயை மையப்படுத்தி வடிவமைத்துள்ளார்.

பாடத்திட்டத்தை அணுகும் லிங்க்:

👉 https://www.futureskillsprime.in/course/yuva-ai-for-all/

YUVA AI for ALL

செயற்கை நுண்ணறிவு அறிவை அனைவருக்கும் கொண்டு செல்லும் இந்தியாவின் புதிய இயக்கம்!

ஓபிஎஸ்யின் தொகுதியை தேமுதிகவிற்கு ஒதுக்கிய இபிஎஸ்.. கடுப்பில் ஓபிஎஸ்!!

0

DMDK AIADMK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் வேகமெடுத்துள்ளது. இந்த வேகத்தை மேலும் கூட்டும் வகையில் அரசியல் அரங்கில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி விட்டன. விஜய்யின் அரசியல் வருகை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவுகள் போன்றவை இதற்கு மிக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற சுற்று பயணத்தையும் தொடங்கி அதனை செயல்படுத்தியும் வருகிறது. திராவிட கட்சிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் நாங்கள் இல்லையென்பதை உறுதிப்படுத்தும் வகையில் தேமுதிகவும் இல்லம் தேடி, உள்ளம் நாடி என்ற பிரச்சார பயணத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று நடந்த தேமுதிக பிரச்சாரத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பிரேமலதாவை சந்தித்து பேசி, கூட்டணிக்கு அச்சாரமிட்டார். கூட்டணி குறித்து இரு கட்சிகளும் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், பிரேமலதாவின் செயல்பாடுகள் அதிமுக-தேமுதிக கூட்டணி உருவானதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய பிரேமலதா, போடிநாயக்கனூர்  சட்டமன்றத் தொகுதி கடந்த 15 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. தற்போது போடு எம்.எல்.ஏ யார் என்று  தொண்டர்களிடம் கேட்டார், அதற்கு ஓபிஎஸ் என்று பதில் வந்தது.

பூட்டி கதவுகள் திறக்கபடவில்லையா? என கூறிய அவர் நமது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் சட்டமன்ற அலுவலகம் திறக்கப்படும் என்று  தெரிவித்தார். இபிஎஸ்க்கு எதிராக உள்ள ஓபிஎஸ்யை நேரடியாக விமர்சனம் செய்ததால், பிரேமலதா அதிமுக கூட்டணியில் இணைந்து விட்டார் என்பதற்கு சான்றாகவே பார்க்கப்படுகிறது. மேலும் தேமுதிக-அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தையின் போது போடி தொகுதியை தேமுதிகவிற்கு ஒதுக்குவதாக இபிஎஸ் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2011 முதல் தற்போது வரை போடி தொகுதியில் வெற்றி பெற்று வரும் ஓபிஎஸ் இவர்களின் செயலால் கடும் கோபத்தில் உள்ளார் என்று  ஓபிஎஸ்யின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 

கூட்டணி இல்லனா நாங்க இல்ல.. பளிச்சென்று பேசிய திமுகவின் முக்கிய தலை!!

0

DMK: பீகாரை தொடர்ந்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட தொடங்கியுள்ளது. பீகாரில் பெற்ற வெற்றியை போலவே தமிழகத்திலும் மாபெரும் வெற்றி பெற வேண்டுமென பாஜக கூறி வருகிறது. மேலும் பீகாரின் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திமுக கூட்டணியில் பல்வேறு விரிசல்கள் தொடர்வதால் அதன் நிலைமை இன்னும் ஓரிரு மாதத்தில் முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது இருக்கும் அரசியல் சூழலில் எந்த ஒரு கட்சியும் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் போன்ற மாபெரும் அரசியல் மேதாவிகள் இறந்ததிலிருந்தே திராவிட கட்சிகள் அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருகின்றன. மாநில கட்சிகளின் பிரச்சனையை தீர்ப்பதற்கு மத்திய அரசின் உதவியை நாடுவது இதற்கு சிறந்த உதாரணமாகும். கூட்டணி கட்சிகள் தான் வெற்றியை உறுதி செய்யும் என்பதால் திமுகவும், அதிமுகவும் அதனை தக்க வைத்து கொள்ள முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில் கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் திராவிட கட்சிகள் ஒன்றுமே செய்ய முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில், திமுகவை சேர்ந்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு கருத்தை கூறியுள்ளார். திமுகவிற்கு கூட்டணி தான் பலம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளையும், ஒவ்வொரு கொள்கைகளையும் கொண்டவர்களாக இருந்தாலும் எங்களின் பொது எதிரி யார் என்பதை அறிந்து போராடுவோம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து திமுக கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் விரிசலை சரி செய்யும் வகையில் அமைந்துள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

வளர்ச்சி காணாத காங்கிரஸ்.. அதிக தொகுதிகளை கேட்பது நியாயமல்ல!! கொந்தளிக்கும் திமுக!!

0

DMK CONGRESS: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளது. அதற்காக கட்சிகளனைத்தும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. திராவிட கட்சியான அதிமுக ஜெயலலிதா இறந்த காலத்திலிருந்தே தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. அதனால் இந்த தேர்தலை கண்ணும் கருத்துமாக கவனித்து வெற்றி பெற போராடி வருகிறது. ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை இந்த சமயம் இரண்டு பக்கத்திலிருந்தும் எதிரிகள் தாக்குவதால் அதனை தற்காத்துக் கொள்ள இந்த முறையும் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டுமென்ற நோக்கில் உழைத்து வருகிறது.

ஆனால் அதன் கூட்டணி கட்சிகளோ ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என திமுக தலைமையை வலியுறுத்தி வருகிறது. அதிமுக-தவெகவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தவிக்கும் திமுகவிற்கு இது மேலும் பிரச்சனையை கூடியுள்ளது. திமுக கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் மற்ற கட்சிகளை விட ஒரு படி மேலே சென்று, உட்கட்சி விவகாரத்தை பொது வெளியில் கூறி வருகிறது. இதற்கு திமுக ஒப்புக் கொள்ளவில்லை  என்றால் தவெக கூட்டணிக்கு சென்று விடுவோம் என்று கூறியதாகவும் தகவல் வெளியானது.

காங்கிரஸின் கோரிக்கை குறித்து எந்த பதிலும் கூறாமலிருந்த திமுக தலைமை பீகார்  தேர்தல் வரை காத்திருந்தது. பீகார் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்ததால், இதனை காரணம் காட்டி காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை தர வேண்டாமென  திமுக முடிவெடுத்து விட்டதாக திமுக வட்டாரங்கள் கூறி வந்தன. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளராக இருந்து திமுக பக்கம் தாவிய மருது அழகுராஜ் ஒரு கருத்தை கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் பெரியளவு செல்வாக்கு இல்லை. மேலும் பீகார் தேர்தலில் தோல்வியுற்றதை மையப்படுத்தி பேசிய மருது அழகுராஜ், நாங்கள் சென்ற தேர்தலை விட இந்த தேர்தலில் வளர்ச்சி கண்டிருக்கிறோம் என்பதற்கான ஆதாரத்தை காட்டி விட்டு அதிக தொகுதிகளை கேட்டால் நியாயம்.

அப்படி இல்லாமல் எதிரே ஒரு கூடாரம்  வந்துவிட்டது, அதிக தொகுதிகளை தரவில்லையென்றால் அங்கே போய் விடுவோம் என்று சொல்வது சந்தர்ப்பவாதம். அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் கட்சி அதனை நிச்சயம் செய்யாது என்று நம்புகிறேன் என கூறினார். இவரின் இந்த கருத்து காங்கிரஸுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை, அதோடு பீகார் தேர்தலிலும் தோல்வி அடைந்ததால், அதன் மதிப்பு திமுக கூட்டணியில் குறைந்து விட்டது என்பதை  நிரூபித்திருக்கிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையில்லை.. திமுகவிற்கு சாதகமாக பேசிய பாஜக தலைவர்!!

0

BJP DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4, 5 மாதங்களே உள்ள நிலையில், மாநில கட்சிகளனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் கூட்டணி வியூகங்களை வலுப்பெற்று வரும் நிலையில், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக மட்டுமே திமுகவை பிரதான எதிர்க்கட்சியாக வைத்து விமர்சித்து வந்த நிலையில், அந்த வரிசையில் தற்போது தவெகவும் இணைந்துள்ளது. விஜய் கட்சி ஆரம்பித்தது முதலே திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி வருகிறார். ஆனாலும் பாஜகவை சேர்ந்தவர்கள் விஜய் கூட்டணி வேண்டுமென்று விஜய்யை விமர்ச்சிக்காமல் இருந்தனர்.

அவருக்கு பல்வேறு வகையில் உதவுவது போலவும் காட்டி கொண்டனர். அப்போதும் கூட விஜய் பாஜகவை விமர்ச்சிப்பதை கைவிடவில்லை. மேலும் கூட்டணிக்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜய்யை நேரடியாக விமர்சித்து, தவெக ஒரு கட்சியே இல்லையேன்று கூறி வந்தனர். இந்நிலையில் விஜய் பாஜகவை விமர்ச்சிப்பது குறித்து பேசிய தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவிற்கு சாதகமாகவும் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

தவெக வெற்றி பெற வேண்டுமென்றால், நீங்கள் மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தீர்கள், அடுத்த கட்டமாக என்ன செய்ய போகிறீர்கள் என்பதை தான் மக்கள் பார்ப்பார்கள், யாரை எதிர்கிறீர்கள் என்று யாரும் பார்க்க மாட்டார்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பீகாரில் தோல்வியுற்ற பிரசாந்த் கிஷோர் நல்லவராக இருந்தாலும் சரி, கெட்டவராக இருந்தாலும் சரி, ஆட்சி மாற்றம் தேவையில்லை  என்றால் எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறினார். இவரின் இந்த கருத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையில்லை என்று மக்கள் நினைத்தால் அதிமுக, தவெக போன்ற எந்த கட்சிக்கும் வாக்கு அதிகரிக்காது என்பதை அவர் வெளிப்படையாக கூறியுள்ளார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தவெக உடன் தான் கூட்டணி.. ஓப்பனாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர்!!

0

ADMK TVK: தமிழக அரசியல் 2026 தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த சமயத்தில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. யார், யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போது வரை ஓயவில்லை. தற்சமயம் அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே உறுதியான நிலையில், திமுக கூட்டணியில் பல்வேறு சலசலப்பு நிலவி வருவதால் அந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியும் நிலையில் உள்ளது. பாமக, தேமுதிக இன்னும் அதன் கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் விஜய்யின் தவெக எங்கள் தலைமையில் தான் கூட்டணி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த சமயத்தில் அதிமுகவிலிருந்து பிரிந்து நால்வர் அணியாக உருவாகியுள்ள செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றோர் யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் கூட்டணி யாருடன் என்பதை செங்கோட்டையன் மறைமுகமாக கூறியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இவர், பாஜக எப்போதும் என்னை அழைத்து அறிவுறுத்தல் கொடுத்தது இல்லை. அமித்ஷாவை நேரில் பார்த்தேன், அப்போது பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டது. அதையெல்லாம் ஊடகங்களிடம் சொன்னால் அரசியல் நாகரிகமாக இருக்காது என்று கூறினார். மேலும் விஜய்யுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டணி குறித்து எந்த தகவலும் இப்போது சொல்ல முடியாது, அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறினார்.

இவரின் இந்த கூற்று சந்தேகத்தை வரவழைப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஏனென்றால் விஜய் உடன் கூட்டணி இல்லையென்றால் அதனை வெளிப்படையாக கூறியிருக்கலாம். அதை தவிர்த்து வேறு விதமாக இவர் பதிலளித்தது, விஜய் உடனான கூட்டணியை மறைமுகமாக ஒப்பு கொண்டார் என்றே பார்க்கப்படுகிறது. மேலும் டிடிவி தினகரனும் திமுகவிற்கும், நாங்கள் இடம்பெறும் கூட்டணிக்கும் தான் போட்டி என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.