பிரயாகிராஜில் உள்ள ஒரு 17 வயது மாணவர் UPSC தேர்வுக்குத் தயாராகும் போது , தன்னை பெண்ணாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து தனது அந்தரங்க உறுப்பைக் வெட்டியுள்ளார்.
அவர் “எவ்வாறு ஒரு பெண்ணாக உடல் மாற்றம் செய்யலாம்” என்று கூகுள் மற்றும் யூடியூப் மூலம் தேடியுள்ளார்.முதலில், அவர் அனஸ்தீஷியா எப்படி கொடுப்பது என்பது மேற்கொண்டு “அந்தரங்க உறுப்பைக் வெட்டுதல்” போன்ற வீடியோக்களை பார்த்துள்ளார்.
उत्तर प्रदेश-
प्रयागराज में UPSC की तैयारी करने आए 17 साल के स्टूडेंट ने लड़की बनने के लिए अपना प्राइवेट पार्ट काट लिया। 14 साल की उम्र में जब वो लड़कियों संग डांस कर रहा था, तब उसे अहसास हुआ कि वो लड़का जरूर है, लेकिन बाकी लड़कों की तरह नहीं है।
ஆபரேஷன் செய்வதற்கு முன், தானே அன்த்தீஷியா கொடுத்துள்ளார். மேற்கொண்டு சிகிச்சை செய்து கொள்ளவே வலி தாங்க முடியவில்லை.இப்போது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
BJP: அதிமுக, பாஜக-வின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக கழகத் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதிமுக-வினர் இன்று எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை தீர்மானிப்பது அவர்களது தலைமை அல்ல; பாஜக-வினர் தான், குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வார்த்தையை அதிமுக-வின் அரசியல் நகர்வை தீர்மானிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டு இருக்கிறார்.
அதிமுக எப்போது கூட்டணி முடிவு எடுக்க வேண்டும், எப்போது பிரச்சாரம் செய்ய வேண்டும், எந்த கோஷங்களை எழுப்ப வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிப்பது கட்சித் தலைவர் அல்ல, அமித்ஷா தான் என்று தன்னுடைய கடுமையான வாதத்தை முன்வைத்துள்ளார். கட்சியின் தலைவருக்கு சுயமாக முடிவெடுக்க முடியாத சூழ்நிலை உருவானது அந்த கட்சிக்கும், தமிழக அரசியலுக்கு ஆபத்தானதாகும் என்று தெரிவித்தார்.
அதிமுக-வின் முடிவெடுக்கும் சுதந்திரம் அனைத்தும் இன்று பாஜக-வின் கையில் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார். அதிமுக-வின் தற்போதைய நிலையைப் பார்த்தால் கட்சியின் தொண்டர்கள் அதிருப்தியடைந்து வேறு வழிக்கு மாறிவிடுவார்கள் என்றும் வலியுறுத்தினார்.
இப்படியே தொடர்ந்தால் அதிமுக-வுக்கு எதிர்காலமே இல்லாமல் போகும், தங்களின் சுயமரியாதையை இழக்கும் நிலை வந்துவிடும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கடுமையான விமர்சனத்தால் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் தீவிரமாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
BJP : பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பால் பண்ணை தொடங்க போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இவர் தனது அறிக்கையில் பாஜக என்று குறிப்பிடாமல் “Ex IPS” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு இவர் அரசியலில் இருந்து முழுமையாக வெளியேற போகிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதற்கு முன் பாஜக-வில் இருந்து வெளியேறிய கே.நாராயணராவ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார், அதே போல் பாஜக-வின் தேசிய தலைவராக இருந்த ஜன கிருஷ்ணமூர்த்தி தற்போது சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர்கள் வரிசையில் அண்ணாமலையும் இடம் பெற போவதை போல அவரின் அறிவிப்பு உள்ளது.
அரசியலுக்கு வருவதற்கு முன்னரே தன்னுடைய சொந்த முயற்சியில் பால் பண்ணையை ஆரம்பித்தார். அதேபோல், சில முதலீட்டு நிறுவனங்களிலும் பங்குகளை வைத்துள்ளார். இதன் மூலம் வரும் வருமானம் தான் தன்னுடைய குடும்ப செலவுகளுக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் உதவியாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
நான் அரசியலில் இருக்கிறேன் என்பதற்காகவே யாரிடமும் பணம் கேட்பதில்லை, என்னுடைய உழைப்பின் மூலம் தான் வாழ்க்கையை நடத்துகிறேன் என்று கூறியுள்ளார். இயற்கை விவசாயத்தின் மீது நான் கொண்ட ஆர்வத்தினால் எங்கள் “we the leaders” என்ற அறக்கட்டளையின் மூலம் இயற்கை விவசாயம் தொடர்பாக பல ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் நமது இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனத்தையும் தொடங்குவேன் அதற்கு அடித்தளமாக இது அமையும் என்றும் கூறியுள்ளார். “அரசியலை வியாபாரம் ஆக்கவில்லை” என்ற கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்றும் சிலர் கூறுகின்றனர்.
தமிழக அரசியலில் கடந்த ஒரு வாரமாக பதவி நீக்க அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒரே வாரத்தில் முதன்மை கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக அதிமுக-வில் எம்.ஜி.ஆர் காலம் முதல் இன்று வரை அனைவராலும் அறியப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
கட்சியின் உள்விவகாரங்களை பொது வெளியில் பேசியதாலும், தலைமைக்கு எதிராக பேசியதாலும் பதவியில் இருந்து நீக்கினோம் என்று இ.பி.எஸ் கூறினார். அவரது பதவி பறிப்பு அ.தி.மு.க-வில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இவ்வாறு தொடர்ந்து இரண்டு பதவி நீக்கு அறிவிப்புகளும் வெளியான நிலையில், அதன் சூடு கூட தணியாத நேரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை நீக்கி உள்ளார். பாமக-வில் அன்புமணிக்கும் அவருடைய தந்தை ராமதாசுக்கும் இடையே தலைமை போட்டி நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலை அரசியலில் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அன்புமணி தனிக்கட்சியாக செயல்படுவதாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட 16 ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டுகளுக்கு கெடு விதித்திருந்தும், அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்காததுமே காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் பாமக-வில் பெரிய பிளவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் மூவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? தனது கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்குவார்களா? இல்லை தனித்து செயல்படுவார்களா, அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி அமைப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒரே வாரத்தில் பல கட்சிகளில் பதவி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதால் இது சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ADMK BJP: அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி வைத்தாலும் கட்சிக்குள்ளேயே பனிப்போர் நடைபெற்ற வருகிறது. பாஜக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் அதிமுக வரவேண்டும் என நினைக்கிறது. ஆனால் இது நடக்காத காரியம். ஆரம்பத்தில் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவருக்கு எதிரான டிடிவி தினகரன் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை ஒதுக்கியே வைத்தது. ஆனால் கட்சிக்குள் மற்றொரு மூத்த தலைவரை வைத்து மறைமுகமாக காய் நகர்த்தி வருகிறது.
அந்த வகையில் செங்கோட்டையன் ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் எனக் கூறியதோடு எடப்பாடிக்கு பத்து நாள் கெடு வைத்தார். அந்த பத்து நாளுக்கு சரி பதிலடி கொடுக்கும் விதமாக அவரை அடிப்படை பதவியிலிருந்தே எடப்பாடி நீக்கம் செய்தார். பதவி நீக்கிய ஓரிரு தினங்களிலேயே செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய மந்திரி, நிதியமைச்சர் என அனைவரையும் சந்தித்து ஆலோசனையும் பெற்று வந்துள்ளார்.
அதிமுக கட்சியிலிருந்து நீக்கிய வரை பாஜக சந்திப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவிலிருக்க அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற ஆதரவு பாஜக மத்தியில் உள்ளது. ஆனால் எடப்பாடி இந்த அரவணைப்புக்கு ஒருபோதும் ஒத்து வரவில்லை. இதனால், முக்குலத்தோரின் வாக்கு எனத் தொடங்கி செங்கோட்டையனின் கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பெரும்பான்மையான இடங்களிலும் வாக்கு வாங்கி சிதறக்கூடும். இதனால் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் கருத்து.
ஆரம்ப கட்டத்தில் எடப்பாடியின் போக்கில் விட்டு விட்டு பின்பு நமக்கு ஏற்றார் போல் கட்சியை வடிவமைத்துக் கொள்ளலாம் என நினைத்துள்ளனர். ஆனால் அது சாத்தியமற்றது. அதிமுகவின் நிலையற்ற தன்மையை பயன்படுத்தி பாஜக முன் வந்து விடலாம் என்று நினைக்கிறது. இதனால் தான் ஆரம்பத்தில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தது போல் இருந்துவிட்டு தற்பொழுது கூட்டணிக்குள்ளேயே எதிரான வேலைகளை பாஜக செய்து வருகிறது.
BJP DMK: தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. அண்ணாமலை திடீரென தி.மு.க-வுக்கு நெருக்கம் காட்டும் வகையில் நடந்து கொள்வதாகவும், இது அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த போது தொடர்ந்து தி.மு.க அரசை விமர்சித்து வந்தார், ஆனால் தற்போது தி.மு.க-விற்கு சாதகமாக அவரது கருத்துகள் உள்ளன என்று கூறப்படுகிறது. அதிமுக-வுடன் கூட்டணி வைத்துக் கொள்வதா இல்லையா என்ற விவகாரத்தில் அண்ணாமலை மற்றும் அமித்ஷா இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக சொல்லப்படுகிறது.
கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் கூட்டணிக்குள் நிலவும் பிளவுகள் மற்றும் அண்ணாமலையின் அரசியல் கனவுகள் ஆகியவை அவர் பா.ஜ.க-விலிருந்து விலகும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக பேசப்படுகிறது. ஏற்கனவே அ.தி.மு.க, பா.ம.க கட்சியில் ஏற்பட்ட பிளவுகளை சமாளிக்க முடியாத நிலைமையில் இருக்கும் பா.ஜ.க அரசு, அண்ணாமலையின் முடிவால் மேலும் சிக்கலில் சிக்க வாய்ப்பு உள்ளது.
அண்ணாமலையின் தி.மு.க-விற்கு சாதகமான கருத்துகள் தமிழக அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பா.ஜ.க-வின் முன்னாள் மாநில தலைவர் திடீரென திசை மாறுவது எதிர்கால அரசியலுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
TVK: தமிழக அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியிலிருந்து அடுத்ததாக யார் வெளியேறப் போகிறார்கள் என்பது தற்போது பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
ஏற்கனவே டி.டி.வி தினகரன் த.வெ.க உடன் சேர அதிக வாய்ப்புள்ள நிலையில், பாரதம் கட்சியின் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி சமீபத்தில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருப்பதும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கூறியிருப்பதும் புதிய அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
இவரின் இந்த கருத்து இவர் அ.தி.மு.க கூட்டணியில் நீடிப்பாரா? இல்லையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் சிறிய கட்சிகள் தங்களது அடையாளத்தை நிலைநிறுத்தும் முயற்சியில், அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி த.வெ.க-வுக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பூவை. ஜெகன் மூர்த்தியின் இந்தக் கருத்து, அ.தி.மு.க கூட்டணியில் நடக்கவுள்ள பிரிவுகளின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் அ.தி.மு.க கூட்டணியில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பூவை. ஜெகன் மூர்த்தியின் இந்த கருத்தும், அந்த மாற்றத்துக்கு அடித்தளமாக அமைகிறது.
தமிழக அரசியல் களத்தில், கூட்டணிகள் எப்போது உருவாகின்றன, எப்போது கலைகின்றன என்பதில் எப்போழுதும் ஆர்வம் குறையாது. குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அ.ம.மு.க மற்றும் த.வெ.க இணைந்து செயல்படப்போகிறதா இல்லையா என்ற கேள்வி கடந்த சில வாரங்களாகவே எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இதுகுறித்து விளக்கத்தை அளித்துள்ளார். விஜய்யுடன் கூட்டணி அமைக்க போகிறிர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இன்னும் அதை பற்றி யோசனை செய்யவில்லை. அ.ம.மு.க இன்று வரை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறோம். உறுதியாக வெற்றி பெரும் கட்சியிலேயே கூட்டணி வைத்துக் கொள்வோம் என்று கூறினார்.
த.வெ.க உடனான கூட்டணி பேச்சுகள் நடந்தன என்பது உண்மை. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த முடியும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். அரசியல் கூட்டணிகள் என்பது மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும். வெறும் பதவி, அதிகாரம் என்ற நோக்கில் செயல்பட கூடாது. எங்கள் கட்சி எப்போதும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும்.
A.M.M.K. – T.V.K alliance .. TTV has revealed the truth!
எந்த கூட்டணியில் நாங்கள் இணைந்தாலும், அது மக்களின் நலனையும், எதிர்கால வளர்ச்சியையும் முன்னிலைப்படுத்துவதாக அமையும் என்றும், மக்கள் விருப்பமே இறுதியில் தீர்மானிக்கும் சக்தி என்றும் தினகரன் வலியுறுத்தினார். இவரின் இந்த விளக்கம் அ.ம.மு.க –த.வெ.க கூட்டணி குறித்து நிலவும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
மேலும், வரவிருக்கும் 2026 தேர்தலை முன்னிட்டு அ.ம.மு.க பல்வேறு கட்சிகளுடன் ஆலோசனைகள் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க ஆகியவை தங்களின் கூட்டணித் திட்டங்களை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், டி.டி.வி. தினகரனின் இந்த விளக்கம் அரசியலில் மேலும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதேசமயம், தேர்தலுக்கு முன்பு இன்னும் பல்வேறு கட்சிகளிடையே கூட்டணி மாற்றங்கள் நிகழ அதிகளவு வாய்ப்பு உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அ.தி.மு.க-வில் சமீபத்திய அரசியல் மாற்றங்கள் மற்றும் பிரிவுகளை தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்துகளை சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளார். அவர், “அ.தி.மு.க-வின் நிரந்தர பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தான் தொடர வேண்டும்; அது தான் எங்களுக்கு ஈசி” என்று கூறி நகைச்சுவை கலந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
உதயநிதியின் இந்த கருத்து, தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் சிரிப்பையும், கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதன் பொருள், அ.தி.மு.க-வின் தலைமையில் சிக்கல் நீடித்தால், அது தி.மு.க-வின் அரசியல் முன்னேற்றத்தில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது என்பதே ஆகும்.
இ.பி.எஸ் ஆட்சியின் கீழ் அ.தி.மு.க பல அணிகளாக பிளவுபட்டு பல தேர்தல்களில் எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்துள்ளன என்பதையும், இதனால் தி.மு.க-வுக்கு அரசியலில் வெற்றி பெறுவது எளிதில் கிடைக்கும் என்பதையும் அவர் நகைச்சுவையாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க வலுவிழந்து விட்டதை மக்கள் மத்தியில் திணிக்கும் முயற்சியில் தி.மு.க ஈடுபட்டு வருகிறது. அந்த முயற்சியின் ஓர் அங்கமாக உதயநிதியின் இந்த கருத்தை பார்க்க முடிகிறது. இந்த சொற்கள், ஒரு பக்கம் உதயநிதியின் அரசியல் கூர்மையை வெளிப்படுத்துகின்றன. மற்றொரு பக்கம், அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை மற்றும் பலவீனங்களை சுட்டிக்காட்டுகிறது.
இது அ.தி.மு.க-வின் ஆதரவாளர்களை சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. உதயநிதியின் இந்த கருத்து ஆழமான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம், தி.மு.க தனது நம்பிக்கையை வலுப்படுத்தி வருகிறது.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மற்றும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை குறித்தும், இ.பி.எஸ் தலைமையிலான தேர்தல் தோல்விகள் குறித்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் அ.தி.மு.க எப்போதும் வெற்றிப் பாதையில் நடந்தது.
சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்திலும் மக்கள் நம்பிக்கையோடு அ.தி.மு.க-க்கு வாக்களித்தனர். ஆனால் இ.பி.எஸ் கையில் அ.தி.மு.க சென்றதிலிருந்தே, தேர்தலில் தோல்விகள் தொடர்கின்றன. இடைத்தேர்தல், உள்ளாட்சி, நாடாளுமன்றம் எதிலும் வெற்றியை பார்க்க முடியவில்லை.
இதுவே அவரது தலைமையின் திறமையைக் காட்டுகிறது” என தினகரன் ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் அ.தி.மு.க மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது என்றும் கூறியுள்ளார். இ.பி.எஸ் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு பதிலாக, அதிகாரப் போட்டியில் மூழ்கியுள்ளார் எனவும், இ.பி.எஸ்-யின் தவறான முடிவுகள், தலைமை வெறியே இதற்கு காரணம் என்று அவர் சாடியுள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் அ.தி.மு.க-வின் நிலைமை இன்னும் மோசமடையும் என்றும், இ.பி.எஸ் தன்னை திருத்தி கொள்ளவில்லையெனில் மக்கள் மாற்று வழியை தேடுவார்கள், இந்நிலை நீடித்தால் அ.தி.மு.க-வின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்” என்று தினகரன் எச்சரித்தார். அ.தி.மு.க-வில் தலைமைப் பிரச்சனை மீண்டும் தீவிரமடையும் நிலையில், தினகரனின் இந்த கருத்துகள் அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.