சனிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2025
Home Blog Page 5

குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்திய வடமாநில இளைஞர் கைது

0

ஓமலூர் அருகே சொகுசு காரில் 330 கிலோ பான் குட்கா போன்ற போதை பொருட்களை கடத்திய வடமாநில இளைஞரை ஓமலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கடத்துவதாக சேலம் மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சங்ககிரி காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீஸ் குழுவினர் ஆர்சி செட்டிப்பட்டி மற்றும் புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சொகுசு கார் வேகமாக வருவதை அறிந்து அந்த காரை பிடித்து சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பான் குட்கா போன்ற போதை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து காரையும் கடத்தலில் ஈடுபட்ட நபரையும் ஓமலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்பு ஓமலூர் போலீசார் விசாரணையில் பெங்களூரில் இருந்து கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு 330கிலோ பான் குட்கா கடத்தி சென்றதாகவும், கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலம் பாலி தாலுக்கா குஜால்பூர் பகுதியைச் சேர்ந்த சௌகாராம் என்பவருடைய மகன் தினேஷ்(22) என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து சுமார் 10லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் மற்றும் 330கிலோ பான் குட்கா போன்ற புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடத்திய குற்றத்திற்காக ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

0

தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம வங்கி ஊழியர்கள் அலுவலர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

சேலம்

தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் அதிகாரிகள் சங்கம் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள கிராம வங்கி தலைமை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் கிராம வங்கிகள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது குறிப்பாக 40 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு கிராம வங்கிகள் செயல்பட்டு வருகிறது 12 லட்சம் கோடி வணிகம் நடைபெற்று வரும் இந்த வங்கியின் பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய முயற்சித்து வருகிறது.

ஒன்றிய அரசு தமிழ்நாடு கிராம வங்கியின் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது தொடர்ந்து கிராம வங்கிகளாகவே செயல்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர் சங்கம் கிராம வங்கி ஊழியர் சங்கம் கிராம வங்கி அதிகாரிகள் சங்கம் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம வங்கி அலுவலர் சங்கத்தின் தலைவர் ஆண்டோ தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் செயலாளர் அறிவுரை நம்பி அகில இந்திய தலைவர் அஸ்வத், இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொருளாளர் லட்சுமி நாராயணன், அதிகாரிகள் சங்க செயலாளர் மெய்ஞான சேகர், உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனை.. தமிழர்களுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் பெற்றுத் தந்த பிரதமர் மோடி!!

0

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் உலக அரங்கில் ஒரு புதிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்துள்ளது. தமிழை தேசத்தின் அடையாளமாக முன்னிறுத்தி, பல்வேறு திட்டங்களையும் முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

அரசின் புரட்சிகர முயற்சிகள்

மோடி அரசு தமிழை உலக அரங்கில் உயர்த்துவதற்காக பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
உலகளாவிய தமிழ் பெருமை: பிரதமர் மோடி எப்போதுமே, வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் தமிழை உலகின் பழமையான மொழிகளில் ஒன்று எனக் கூறி புகழ்ந்து வருகிறார். ஐ.நா. சபை, ஜி20 உச்சி மாநாடுகள் மற்றும் பிற வெளிநாட்டு மேடைகளிலும் தமிழ் கவிஞர்களின் மேற்கோள்களைப் பயன்படுத்தி வருகிறார். பிஜி போன்ற நாடுகளில் முதன்முறையாக இந்திய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பிக்கும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

காசி – தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்: இந்தியாவின் கலாச்சார மற்றும் பாரம்பரியப் பிணைப்பை வலுப்படுத்தும் வகையில், இந்தச் சங்கமங்கள் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர். இத்தகைய நிகழ்வுகள் வட இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே ஒரு வலுவான கலாச்சாரப் பாலத்தை உருவாக்கியுள்ளன.

தமிழில் உயர்கல்விக்கு வலியுறுத்தல்: மருத்துவக் கல்வியைத் தமிழில் வழங்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், பல்வேறு மத்திய அரசுத் தேர்வுகள் முதன்முறையாக தமிழில் எழுதும் உரிமை வழங்கப்பட்டது, இது தமிழ் மாணவர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

தமிழ் கலாச்சாரத்திற்கு மரியாதை

மோடி அரசு தமிழர்களின் கலாச்சாரம், வீரம் மற்றும் பாரம்பரிய சின்னங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.

செங்கோல், நடராஜர், தமிழ்ப் புனிதங்கள்: புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் சைவ ஆதீனங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய சின்னமான ‘செங்கோல்’ தேசிய மரியாதையுடன் நிறுவப்பட்டது. ஜி20 மாநாட்டில் பிரமாண்டமான நடராஜர் சிலை நிறுவப்பட்டு, ஆண்டவனின், “ஆனந்த தாண்டவம்” உலக அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது.

அகத்தியர், திருவள்ளுவர்: அகத்தியர், திருவள்ளுவர் போன்ற புலவர்களுடன் சேர்த்து, தமிழ் இலக்கியப் பெருமைகளை வெளிக்கொணர பாஜக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவர்களைப் பற்றிய புதிய ஆய்வுகளும் வெளியீடுகளும் வெளிவந்துள்ளன.

ராஜேந்திரச் சோழன்: கடல் கடந்து ஆட்சி செய்த ராஜேந்திர சோழனுக்கோ, அவரது தந்தை ராஜராஜ சோழனுக்கோ உரிய முக்கியத்துவத்தை இதுவரை மத்திய, மாநில அரசுகள் செய்தது இல்லை. ஆனால் பிரதமர் மோடி சோழர்களின் பெருமைகளை பல மேடைகளில் பேசியுள்ளார். அதன் உச்சமாக, கங்கைகொண்ட சோழபுரம் சென்று, ஆடித் திருவாதிரை நிகழ்வில் பங்கேற்றதோடு, ராஜேந்திர சோழனுக்கு நினைவு நாணயம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலைகளை தமிழகத்தில் அமைப்பேன் என வாக்கு கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள்

மோடி அரசு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறது.

அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு:சேத்தியாத்தோப்பு – சோழபுரம் நான்கு வழி நெடுஞ்சாலைப் பணிகள். தூத்துக்குடி விமான நிலையத்தில் ₹450 கோடி செலவில் புதிய முனையக் கட்டிடம். பம்பன் ரயில் கடல் பாலம் – அதாவது, இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் ரயில் பாலம்.

மின்சக்தி, ஸ்மார்ட் சிட்டி, ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்கள்: தமிழகத்தில், மத்திய அரசின் சார்பில், 11 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல திட்டங்கள் தொடர்கின்றன. 77 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. பல வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடி துறைமுகம் நவீனமயமாக்கப்பட்டு, ரூ.4,800 கோடிக்கும் அதிகமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சூரிய சக்தி வீட்டு மின்திட்டம்: ஆயிரக்கணக்கான வீடுகளில் சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன.

திமுக மீதான விமர்சனம்

மத்திய அரசின் தமிழ் வளர்ச்சி முயற்சிகள் ஒருபக்கம் என்றால், அதை செய்யவில்லை என்ற விமர்சனத்தை திமுக எதிர்கொள்கிறது. தேசிய கல்விக் கொள்கை (NEP), மும்மொழிக் கொள்கை போன்ற முக்கியமான மத்திய அரசின் திட்டங்களை தி.மு.க. அரசு எதிர்ப்பதால், தமிழ்நாட்டுப் பெண்கள் உள்ளிட்ட பலர் பயன்பெறும் திட்டங்கள் தடைபடுகின்றன. வாரிசு அரசியல், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாதது போன்ற விமர்சனங்கள் தமிழக அரசு மீது முன்வைக்கப்படுகின்றன.

திருவள்ளுவர், அகத்தியர் போன்ற தமிழ் இலக்கியப் பெருமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்குப் பதிலாக, தி.மு.க. குடும்ப அரசியல் மற்றும் வம்சாவளிப் பெருமைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்க முயற்சி எடுக்காத திமுக, கருணாநிதிக்கு பேனா சிலை வைக்க கடலுக்குள் இடம் தேடுவது சரியா என சமூக வலைத்தளங்களில் கேள்விகள் வந்தபடி உள்ளன.

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, தமிழ்நாட்டின் தேவைகளுக்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த தி.மு.க. தவறிவிட்டது. பள்ளிக் கல்வித் தரக் குறைவு, மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் வழங்குவதற்கான அடிப்படை ஒருங்கிணைப்புக் குறைவு போன்ற பிரச்சினைகள் உள்ளன என்ற விமர்சனங்களையும் திமுக அரசு எதிர்கொள்கிறது.

உண்மையான பெருமை யாருக்கு?

மோடி அரசு தமிழின் பெருமை, வீரர்களின் பங்களிப்பு, பாரம்பரியம், அரசியல் மற்றும் கல்வி மேம்பாடு எனப் பன்முகத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. உலக அரங்கில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இதற்கு மாறாக, தி.மு.க. அரசு தமிழ் வரலாறு சார்ந்த வீரர்களையும், பாரம்பரியச் சின்னங்களையும் ஒதுக்கி, மக்கள் மத்தியில் அவர்களது சாதனைகளை மறக்கடிக்க முயற்சி செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

எல்லா ஜாதியினரும் சோழர்கள் எங்கள் ஜாதிக்காரர்கள் என்று சொல்லும் அளவுக்கு ஜாதி பாகுபாடு இல்லாமல் திருமண உறவு வைத்தவர்கள் சோழர்கள். ஆனால் ஏன் அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை ஏன் தரவில்லை திமுக அரசு என்ற கேள்விகளை, மோடி அரசின் தமிழ் முன்னோடிகளை பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் எழுப்ப வழி செய்து கொடுத்துள்ளது. தமிழும் தமிழனும் ஒரு தேசத்தின் அடையாளம் என்பதை உலகிற்கு உணர்த்தியது மோடி அரசு போல இதற்கு முன்பு எந்த அரசும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அதிமுக எம்.பி! மண்டையில் குட்டு வைத்து புத்திமதி சொன்ன நீதிமன்றம்!

0

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடக்க இருக்கிறது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஆளும் திமுக அரசின் குறைகளை அனுதினமும் மக்களிடத்தில் எடுத்து சென்று திமுக கட்சியின் ஆட்சி அவலங்களை மக்களுக்கு எடுத்துரைக்கிறார்கள். இதனால் அரசியல் மேடையில் தினமும் சுவாரஸ்யமான சம்பவங்கள் அனுதினமும் நடந்து வருகின்றன.

அண்மையில் அதிமுக கட்சியை சேர்ந்த சி.வி.சண்முகம் அவர்கள் மக்களுக்கான திட்டங்களை அறிவிக்கும்போது அதனுடன் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்துவது தவறு என்றும், உங்களுடன் ஸ்டாலின், உங்களுக்காக ஸ்டாலின் போன்ற திட்டங்களில் இடம்பெற்றுள்ள முதல்வரின் பெயரை நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆட்சியில் இருக்கும் கட்சி முதல்வரின் பெயரில் திட்டத்தை அறிவிக்காமல் வேறு யாருடைய பெயரை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லையென்றும், கோர்ட் நேரத்தை வீணடித்ததால் தமிழக அரசுக்கு நஷ்டஈடாக 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அதிமுக எம்.பி.சண்முகத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஆளும் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய்க்கு கூட்டம் வர கூடாது.. திமுக தரும் தொடர் இடையூறு!! மாநாட்டை குறிவைக்கும் ஸ்டாலின்!!

0

TVK DMK: தென் மாவட்டங்களில் அதிமுகவையும் கடந்து திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடியது. வரப்போகும் தேர்தலில் மீண்டும் அதனையே நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளும் கட்சி உள்ளது. ஆனால் அதை உடைக்கும் வகையில் விஜய் பல லாபகரமான திட்டங்களை தீட்டு வருகிறார். அந்த வகையில் விஜய் தென் மாவட்டத்தை குறிவைத்து உள்ளதாகவும், அந்த இடத்தை தேர்வு செய்து தான் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளார். ஆனால் திமுக இதனை முன்கூட்டியே கணித்து தனது பொதுக்குழு கூட்டத்தை மிகவும் பிரம்மாண்டமான முறையில் மதுரையில் நடத்தி முடித்து விட்டது. ஆனால் விஜய்யை அடுத்த கட்டத்திற்கு நகர விடக்கூடாது என்பதற்காக அவர்கள் குறித்த தேதியில் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். ஏனென்றால் இவர் மாநாடு நடத்தும் தேதிக்கு அடுத்த நாள் விநாயகர் சதுர்த்தி என்பதால் ஏராளமான தொண்டர்கள் கூடுவது சாத்தியம்.

அதுவே தேதி மாற்றம் நடக்கும் போதும் அதற்கான வேலைகளில் பளு ஏற்படுவதோடு பெரும்பாலான தொண்டர்களால் கலந்து கொள்ள முடியாத சூழல் கூட உண்டாகலாம். இதனால் சம்பந்தமே இல்லாத 21ம் தேதிக்கு மாநாடு நடத்தும்படி அனுமதி அளித்துள்ளனர். இதன் மூலம் தொண்டர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என எண்ணுகின்றனர். ஆனால் விஜய் திமுகவின் அரசியல் வேரோடு சீர்குலைக்க நினைக்கிறார் என்பது இவரது அரசியல் நகர்வு வைத்து அறிந்து கொள்ள முடிகிறது.

திமுகவுக்கு எதிராக களமிறங்கிய விஜய்!! மதுரையில் வெடிக்கும் அரசியல் களம்!!

0

TVK DMK: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரையில் திமுகவின் பொதுக்குழு கூட்டமானது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது 47 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பெருவாரியாக தென் மாவட்ட வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக அந்தப் பொதுக்குழு கூட்டமானது மதுரையில் நடைபெற்றது. மேற்கொண்டு ரோடு ஷோ உள்ளிட்டவைகளையும் நடத்தினர். இதில் கிட்டத்தட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தவெக-வின் இரண்டாவது மாநில மாநாடானது மதுரையில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியானது. அப்போதையிலிருந்தே அவர்களுக்கு ஆளும் கட்சி சார்பில் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக காவல்துறையை வைத்து அவர்களுக்குரிய அனுமதி தராமல் அலைக்கழித்து வந்தனர். இதே போல தான் பரந்தூர் விமான நிலையம் ரீதியாக விஜய் களமிறங்கிய போதும் அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை, ஊருக்குள் செல்லக்கூட அனுமதி தரவில்லை.

இவ்வாறு திமுகவின் செயல்முறையானது தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அரசியலுக்குள் புதிய கட்சியாக நுழைந்து பெரும்வாரியான ஆதரவுகளை திரட்டியுள்ள விஜய் தங்களுக்கு எதிராக பெரும் சாம்ராஜத்தை உருவாக்கி விடுவார் என்ற அச்சம் திமுகவுக்குள் புகுந்து விட்டது. இதனாலேயே விஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி தராமல் அலைக்கழித்து வந்தனர்.

அதுமட்டுமின்றி விஜய்யின் அரசியல் எதிரியாக திமுக உள்ள நிலையில் அவரின் திட்டங்கள் அறிந்து பொதுக்குழு கூட்டத்தையும் முன்கூட்டியே மதுரையில் நடத்தி முடித்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் மாநாடானது தேதி மாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதிமுக நாம் தமிழர் கூட்டணி.. வாட இந்தியர்கள் தான் டிசைட் பண்ணுவாங்க!! பெரிய இடியை இறக்கிய சீமான்!!

0

NTK: மதுரை உயர்மறை மாவட்ட பேரயராக அந்தோணிசாமி பொறுப்பேற்றார். இவரை நேரில் கண்டு சீமான் வாழ்த்து தெரிவித்ததோடு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் தற்போது அரசியல் களம் என்ன என்பது குறித்து விவரித்து திமுகவை குற்றம் சாட்டி பேசினார். அதில், தமிழகம் தற்போது யாரிடத்தில் அடமானத்தில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்??  தேர்தல் வரும் சமயத்தில் மட்டும் திமுக நாடகம் போடுகிறது. அதேபோல எங்களுக்கு கூட்டணி என்பது தேவையில்லை.

எங்களுடன் இருப்பது சுதந்திர பசி, என்னை போலவே என்னுடன் இருப்பவர்களும் உறுதியானவர்கள். சீட்டுக்காக கட்சி என்றால் தனி தனி கொள்கைகள் எதற்கு?? தமிழகத்தில் வட இந்தியர்கள் அதிகளவு வாக்கை பெற்று வருகின்றனர். இதனை முக்கிய குறிக்கோள் என்னவென்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். நாளடைவில் அவர்கள் தான் தமிழக அரசியல் களத்தை முடிவு செய்யும் நிலைக்கு வந்துவிடும். வட இந்தியர்கள் எப்பொழுதும் பாஜகவிற்கு சாதகமாக தான் இருப்பார்கள்.

அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்றெல்லாம் வந்துவிட்டால் எங்கிருந்தும் நமக்கு தண்ணீர் வராது, அதே நான் ஆட்சியில் இருந்தால் வட இந்தியர்கள் தமிழகத்திற்குள் வர நுழைவு சீட்டு கேப்பேன். இந்தியா நாளுக்கு நாள் கடன்கார நாடாக மாறி வருகிறது. ஆனால் இதற்கு எதிர்மறாக இந்தியா வளர்ந்து வருகிறது எனக் கூறி நம்ப வைக்கிறார்கள். இது குறித்தெல்லாம் மக்கள் விழிப்புணர்வு பெற்று நல்லாட்சி அமைய வழி வகுக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு திமுக வேண்டாம் என்று அதிமுகவிற்கு அதிமுக வேண்டாம் என்று திமுகவிற்கு செல்வது பேயை விவாகத்து செய்து பிசாசை திருமணம் செய்வது போல் தான். மேற்கொண்டு புதிய கட்சியாக தவெக போன்றவை வந்தாலும் நிலையாக இருக்காது. கமலஹாசன் கட்சி எப்படியோ அப்படித்தான் அதுவும். விஜயகாந்திற்கு இல்லாத எழுச்சியா இவர்களுக்கு உள்ளது. திமுக அதிமுக என இரு கட்சிகளும் அண்ணா வழியில் செல்கிறது, ஆனால் நான் பிரபாகரன் அண்ணன் வழியை சொல்கிறேன்.

அதேபோல அமெரிக்க அதிபர் இந்திய பொருள்களுக்கு வரி விதித்துள்ளார் இது வரவேற்கத்தக்கது இது ரீதியாக இந்திய அரசு கட்டாயம் விழித்துக் கொள்கிறதா என்பதை பார்க்கலாம். மற்ற கட்சிகளைப் போல எங்களால் ரோடு ஷோ நடத்த முடியாது மாறாக மக்களின் தேவை பூர்த்தி செய்ய நிறைய போராட்டங்கள் உள்ளது. அதேபோல அதிமுகவுடன் என்றும் உங்களது கூட்டணி இருக்காது தனித்தே தான் இருப்போம் எனக் கூறியுள்ளார்.

OPS உடன் கூட்டு சேரும் TVK PMK Congress.. திமுக வுக்கு பீதி தரும் புதிய கூட்டணி!!

0

OPS TVK: அதிமுக பாஜக கூட்டணியால் ஓபிஎஸ்-ஐ நெருங்கு விடாமல் செய்ததால் அவர் NDA யிலிருந்து விலகிக் கொண்டார். இவரின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு செய்தியாளர் துரை கருணா பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,  முதலில் தமிழகம் வந்த மோடியினை சந்திப்பதற்கு நயினாருக்கு குறுஞ்செய்தி, அழைப்பு உள்ளிட்டவற்றை விடுத்துள்ளார்.

ஆனால் அதற்கு முன்பே எடப்பாடியிடமிருந்து அவருக்கு ஆர்டர் சென்றுவிட்டது. அதாவது ஓபிஎஸ் தரப்பில் யார் மோடியை பார்க்க அனுமதி கேட்டாலும் வழங்க கூடாது என கூறிவிட்டனர். இதனால் பன்னீர் செல்வம் மிகவும் அதிருப்தியில் மௌனம் காத்தே இருந்தார். ஆனால் அவரது நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் இனி NDA  கூட்டணியில் தொடர வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தினர் அதன் பெயரில் உடனடியாக அவர் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்.

மேற்கொண்டு இவர் பாரத ஜனதா கூட்டணியில் இருந்தாலும் திமுகவுக்கு எதிரான பலம் வாய்ந்த  கூட்டணியை உருவாக்க முடியாது.  அதிமுகவுடன் கை கொடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். ஆனால் இம்முறை அது நடக்காது.மாறாக கட்சியை விட்டு வெளியேறியவர் திமுகவுடன் இணைய மாட்டேன் என்றும் கூறிவிட்டார். இதற்கு முக்கிய காரணம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்தது தான்.

அதிலிருந்து வந்து தற்போது மீட்பு குழுவை ஆரம்பித்திருக்கும் பன்னீர்செல்வம் அவர்களுடன் இணைய மாட்டார். ஆனால் திமுக மீது அதிருப்தியில் இணைந்திருக்கும் காங்கிரஸ், அதனைத்தொடர்ந்து பாமக போன்ற கட்சிகளுடன் இவரும் ஒன்றிணைந்து தவெக வை முன்னிறுத்தி திமுகவுக்கு எதிரான பலம் வாய்ந்த கூட்டணியாக உருமாறும். இதனால்  வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் பாஜக மூன்றாவது இடத்திற்கு கூட செல்லலாம் என கூறியுள்ளார். 

OPS பின்னால் TTV க்கு வந்த RED சிக்னல்.. பாஜகவில் அரங்கேறும் தொடர் வெளியேற்றம்??

0

OPS TTV: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வைத்ததிலிருந்து பன்னீர்செல்வத்தை  தனித்து விடு ஆரம்பித்துவிட்டனர்.  அதன் உச்சகட்டமாக தமிழகம் வருகை புரிந்திருந்த பிரதமர் மற்றும் அமித்ஷா-வை சந்திக்க கூட விடவில்லை. இதனால் வேதனை அடைந்தால் பன்னீர்செல்வம், இனி இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக் கூடாது என்ற முடிவை எடுத்தார். மேற்கொண்டு கட்சியை விட்டு விலகி தனித்து செயல்பட போவதாக கூறினார்.

இவர் கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்து விடுவாரா?? என்ற கேள்வி அனைத்து பக்கமும் இருந்தது. ஆனால் கட்டாயம் திமுக வில் இணைய மாட்டேன் என்று கரராக கூறிவிட்டார். மேற்கொண்டு இவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு விஜய் தான், அந்தவகையில் வரும் நாட்களில் இது ரீதியாக ஆலோசனை செய்து பலம் வாய்ந்த கூட்டணியை தேர்ந்தெடுப்பதாக இவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே நயினார் நாகேந்திரன், ஒபிஎஸ் என்னிடம் கேட்டிருந்தால் மோடியை பார்க்க கட்டாயம் நேரம் வாங்கிக் கொடுத்திருப்பேன் என்று கூறினார். இவருக்கு எதிராக பன்னீர் செல்வமும் தனக்கு யாரும் நேரம் ஒதுக்கவில்லை என்று தனது தரப்பை முன் வைத்தார். தற்போது தென் மாவட்ட வாக்குகள் அனைத்தும் சிதறக்கூடும் என்பதால் பன்னீர் செல்வத்தை மீண்டும் தேச ஜனநாயக கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதற்கு ஏற்றார் போல் டிடிவி தினகரன் மீண்டும் கூட்டணியில் வந்து இணைந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் இவரே தற்போது பாஜக கூட்டணியில் தான் உள்ளாரா?? என்பது தெரியவில்லை என தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் கூறியுள்ளார். இது ரீதியாக அவர் பேசுகையில் தற்போது வரை பாஜக அதிகாரப்பூர்வமாக எந்த இடத்திலும் அமமுக தங்களது கூட்டணியில் உள்ளதாக தெரிவிக்கவில்லை.

அதேபோல மற்றொரு பக்கம் நையினார் நாகேந்திரனுக்கும் டிடிவி தினகரனுக்கும் பனிப்போர் இருந்து வருகிறது. சமீபத்தில் பனி போருக்கான சாயலை பேட்டிகளில் பார்க்க முடிந்தது. அந்த வகையில் பெரும் வாரியாக பாஜகவில் கலந்து கொள்ளாத டி டிவி எப்படி கூட்டணியில் இருக்க முடியும்?? பன்னீர்செல்வத்தை போல  இவரும் நாளடைவில் கட்சியை விட்டு வெளியேர அதிக வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.

பாமக-வில் உச்சத்தை எட்டும் தந்தை மகன் மோதல்.. ஹாக்கான அரசியல் அந்தரங்கம்!!

0

PMK: பாமக கட்சிக்கு அப்பா மகனுக்கிடையே உட்கட்சி மோதல் நிலவி வரும் பட்சத்தில் ராமதாஸ் தொடர்ந்து  அன்புமணிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதனிடையே கட்சியின் அதிகாரத்தன்மையானது இரண்டாக பிரிந்து செயல்பட்டும் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் ராமதாஸ் தங்கியிருக்கும் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் ரகசிய ஒட்டு கேட்டுக்கும் கருவி இருந்ததாகவும், இது வெளிநாட்டிலிருந்து வரவைத்து பொருத்தப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது.

இது ரீதியாக தனியார் துப்பறிவு நிறுவனத்திடம் ஆய்வு செய்ய சொல்லி கேட்டுக்கொண்டனர். அதன்படி அவர்கள் ஆய்வு செய்தது வீட்டில் உள்ள வைஃபை, சிசிடிவி உள்ளிட்ட அனைத்தும் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கட்சியின் நிறுவனர் வீட்டிலேயே இப்படி இணையதள செயல்பாட்டை சட்டவிரோதமாக  ஹேக் செய்துள்ளது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அச்சமயத்தில் இது ரீதியாக விழுப்புரம் சைபர் கிரைம் மற்றும் காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டது, மேற்கொண்டு இது ரீதியாக விசாரணை செய்தும் வருகின்றனர். தற்போது WiFi பயன்படுத்தி ராமதாஸ் அவர்களின் செல்போனையே ஹாக் செய்து உள்ளதாக புகார் அளித்துள்ளனர். மேலும் ஒட்டு கேட்கும் கருவியில் லைக்கா நிறுவனத்தின் சிம் கார்ட் இருந்ததாக புகாரில்  தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

மகனே தந்தையின் அடுத்த அரசியல் நகர்வை கண்டுபிடிக்க இப்படிப்பட்ட செயல்களில் இறங்கி உள்ளாரா என்று கேள்வியை முன் வைத்து வருகின்றனர்.