சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
Home Blog Page 5

தினகரன் கூட கூட்டணி சேருங்க.. இல்லன்னா தனிக்கட்சி தொடங்குங்க!! பாஜக போட்ட ஆர்டர்!!

0

ADMK AMMK BJP: 2026 யில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. ஆளுங்கட்சியாக உள்ள திமுக இந்த முறையும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மேலும் தொடர் தோல்விகளை தழுவி வரும் அதிமுகவுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் என்பதால் பாஜக உடன் கூட்டணி அமைத்து வெற்றி கணக்குகளை வகுத்து வருகிறது. அதிமுகவை விட பாஜக தமிழக தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றே சொல்லலாம்.

வெற்றி வாய்ப்பை தட்டி பறிக்க வேண்டும் என நினைக்கும் பாஜகவிற்கு அதிமுகவின் பிரிவினைகளும், எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை வெறியும் அதனை அடியோடு நசுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிமுகவின் வருகையால் பாஜக கூட்டணியிலிருந்த ஓபிஎஸ், தினகரன் விலகியது பாஜகவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்க முதன்மை காரணமாக இருந்த அண்ணாமலையின் பதவியும் பறிக்கப்பட்டது.

மேலும் செங்கோட்டையனும் தவெகவில் இணைந்து விட்டார். இவ்வாறு அதிமுகவில் பிரிவினைகள் தொடருவது, பாஜகவிற்கு பயத்தை ஏற்படுத்தியது. இதனால் இபிஎஸ்க்கு எதிராக ஒரு அணியை உருவாக்கி அவரை வீழ்த்தலாம் என திட்டம் தீட்டி இருக்கிறது. இதற்காக முதலில் இபிஎஸ்க்கு எதிராக உள்ள அண்ணாமலையும், ஓபிஎஸ்யும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினர். இதன் பின்னர் தினகரனும் டெல்லி செல்வார் என்று நினைத்த சமயத்தில், அமித்ஷாவே என்னை அழைத்தாலும் நான் அங்கு செல்ல மாட்டேன் என்று அவர் கூறியது, பாஜக மேலிருந்த கோபத்தை வெளிப்படுத்தியது.

இதனால் அமித்ஷா சார்பாக அண்ணாமலை தினகரனை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சு வார்த்தையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கபட்டதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி சென்ற அண்ணாமலையிடம் அமித்ஷா, தனிக்கட்சி தொடங்குங்க இல்லன்னா தினகரன் கூட கூட்டணி வைங்க என்று சொன்னதாக தகவல் பரவியுள்ளது. இதனை பற்றி பேச தான் அண்ணாமலையும், தினகரனும் சந்தித்திருப்பார்கள் என்ற கருத்தும் வலுப்பெறுகிறது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா.. அமித்ஷா சொன்ன வார்த்தை!! கலக்கத்தில் இபிஎஸ்!!

0

ADMK BJP: இந்திய அளவில் மிகப்பெரிய கட்சியான பாஜக பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் தனது கண்ணோட்டத்தை திருப்பியுள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக வேறு சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் பணியையும், மேற்கொண்டு வருகிறது. மேலும் அதிமுக தலைமையிடம் பல்வேறு நிபந்தனைகளையும் முன்வைத்து வருகிறது. அதிமுக கொங்கு மண்டல பகுதிகளில் வலுவாக இருப்பதால், அந்த தொகுதிகளில் நின்று வெற்றி பெற வேண்டுமென பாஜக நினைக்கிறது.

ஆனால் பாஜகவிற்கு வட மாநிலங்களில் அதிகளவில் செல்வாக்கு இருந்தாலும் தமிழகத்தில் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இப்படி இருக்கும் நிலையில், அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை அதற்கு ஒதுக்கினால் அங்கு அதிமுக தோல்வியை தழுவும் என்பது 100% உண்மை. இந்த பிரச்சனை ஒரு புறம் இருக்க, தமிழக அரசியல் மரபில் இல்லாத ஒரு கருத்தை பாஜக முன் வைத்துள்ளது. அது தான் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை. அதிமுகவை சேர்ந்த பலரும் பாஜக கூட்டணியில் மட்டும் தான் உள்ளது, தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி வந்தனர்.

ஆனால் பாஜகவை சேர்ந்தவர்களோ தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், கூட்டணி ஆட்சி குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமலும் சென்றது பாஜக தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தி விடும் என்பதை உறுதிப்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து எதுவும் கூறாமலிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிலும் பாரதிய ஜனதா கூட்டணி தான் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது என்றும் உறுதியுடன் கூறியுள்ளார். தற்சமயம் அதிமுக, பாஜக கூட்டணியை மட்டுமே நம்பியுள்ள நிலையில், அந்த கட்சியும் இது போன்ற நிபந்தனையை முன் வைத்திருப்பது இபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காங்கிரஸின் முக்கிய தலையை சந்தித்த விஜய்யின் தந்தை.. என்னவா இருக்கும்!!

0

TVK CONGRESS: பீகாரில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் தங்களது பலத்தை காட்ட வேண்டுமென ஆலோசித்து வருகிறது. சில காலமாகவே திமுக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் அதன் தலைமையிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்றவற்றை வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுகவோ பீகாரில் காங்கிரஸ் தோல்வியடைந்தன் காரணமாகவும், காங்கிரஸுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லையென்ற காரணத்தினாலும் அதன் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச 5 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது.

இவர்கள் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த நிலையில், திமுகவும் ஒரு தனி குழு அமைத்த பிறகு தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுன் கோரிக்கைகளை நிறைவேற்ற  திமுகவிற்கு விருப்பமில்லை என்பதை அறிந்த, காங்கிரசின் தலைவர்கள் விஜய்யை பகடை காயாக பயன்படுத்த நினைத்தனர். மற்றும் ஒரு தரப்பு விஜய் கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வந்தன. விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே அவருக்கும் காங்கிரசுக்கும் நல்ல நட்புறவு இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. இதனை அந்த கட்சியை சேர்ந்த ஜோதிமணியும் கூறியுள்ளார்.

மேலும் ராகுலின் நெருங்கிய நண்பரும், காங்கிரசின் முக்கிய முகமான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். இது பல்வேறு விவாதங்களுக்கு வழி வகுத்த நிலையில், நேற்று நடந்த சுப நிகழ்ச்சி ஒன்றில் தமிழக காங்கிரசின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமியும், தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரும் நேரில் சந்தித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒன்றாக காரில் பயணித்தால், அப்போது தவெக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக தவெக தலைவர் விஜயும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் விரைவில் சந்திப்பார்கள் என்று பலரும் கூறுகின்றனர். 

10 ஆம் வகுப்பு போதும் ! உதவியாளர் வேலை! சம்பளம் 18,000 -56,000 வரை!

0

தமிழகத்தில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி ஆணையத்தில் உதவியாளர் மற்றும் பல பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான (Sports Person Quota) ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள 20 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி ஆணையரகம் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், 08.12.2025 முதல் 07.01.2026 தேதிக்குள் https://gstchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் வைத்து ஆன்லைனிலேயே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

 

பணி: 

 

Tax Assistant (வரி உதவியாளர்) – ஏதாவது ஒரு பட்டம் (Any Degree)

Stenographer Grade – II (சுருக்கெழுத்தாளர் தரம் – II) -12-ஆம் வகுப்பு தேர்ச்சி (12th Pass)

Havaldar (ஹவால்தார்) -10-ஆம் வகுப்பு தேர்ச்சி (Matriculation/10th Pass)

Multi-Tasking Staff (பல்நோக்கு உதவியாளர்) 10-ஆம் வகுப்பு தேர்ச்சி (Matriculation/10th Pass)

 

வயது:

 

Tax Assistant (வரி உதவியாளர்) 18 முதல் 27 வயது வரை

Stenographer Grade – II (சுருக்கெழுத்தாளர் தரம் – II) 18 முதல் 27 வயது வரை

Havaldar (ஹவால்தார்) 18 முதல் 27 வயது வரை

Multi-Tasking Staff (பல்நோக்கு உதவியாளர்) 18 முதல் 25 வயது வரை

 

சம்பளம்: 

பதவியின் பெயர் சம்பள விகிதம்

Tax Assistant (வரி உதவியாளர்) ரூ.25,500/- முதல் ரூ.81,100/-

Stenographer Grade – II (சுருக்கெழுத்தாளர் தரம் – II) ரூ.25,500/- முதல் ரூ.81,100/-

Havaldar (ஹவால்தார்) ரூ.18,000/- முதல் ரூ.56,900/-

Multi-Tasking Staff (பல்நோக்கு உதவியாளர்) ரூ.18,000/- முதல் ரூ.56,900/-

 

ஆன்லைன் லிங்க் : https://gstchennai.gov.in/sportsrecruitment/index.html

 

அதிகாரம் பூர்வமான அறிவிப்பு: https://drive.google.com/file/d/1EW4kLlwOOpezSzFpsGPiTrVI0NsfGCfT/view

அவர் பக்கத்திலேயே வீடு வாங்கி கொடுத்த கணவர்!

0

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். சமந்தா நாக சைதன்யா பிரிவுக்கு என்ன காரணம் என்பது இதுவரை வெளிவராத புதிராகவே இருந்து வருகிறது. சமந்தாவுடன் விவாகரத்திற்கு பின் நாக சைதன்யா பிரபல நடிகை ஷோபிதாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

 

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். சமந்தா நாக சைதன்யா பிரிவுக்கு என்ன காரணம் என்பது இதுவரை வெளிவராத புதிராகவே இருந்து வருகிறது.

 

நடிகை சமந்தாவின் இரண்டாம் திருமணம் தி ஃபேமிலி மேன் இயக்குனர் ராஜ் நிடிமோரு அவருக்கும் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அவருக்கு பிரபலங்கள் பலரும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் தனது காதல் மனைவியான சமந்தாவிற்கு இயக்குனர் ராசு மீது ஒரு கோடிக்கணக்கிலான வைர மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார்.

 

மேலும் மும்பையில் ஒரு வீடும் மற்றும் ஜூப்ளி ஹில் பகுதியில் 65 கோடிக்கு ஒரு வீடும் வாங்கி தந்துள்ளார்.

 

அதே ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தான் சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவின் வீடும் அங்கே தான் உள்ளது.

 

இதே கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் சமந்தாவிற்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர். அதேபோல் அவர்கள் முன்னாலேயே நீங்கள் மிகவும் சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று வாழ்த்துக்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.

 

சமந்தா நிறைய கஷ்டங்களை பட்டிருக்கிறார்கள் இப்பொழுது ராஜ் நிடிமோரு அவர்கள் ஒரு நல்ல கணவராக இருக்கிறார் என்று நெட்டிசன்கள் சமந்தா கணவரை பாராட்டி வருகின்றனர்.

கோபியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்.. செங்கோட்டையனுக்கு ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்!!

0

ADMK: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக மாநில கட்சிகள் தங்களது பணியில் வேகமெடுத்துள்ளன. மேலும் கூட்டணி குறித்த பேச்சுகளும், தொகுதி பங்கீடும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் அதிமுகவில் பிரிவினை பஞ்சாயத்து குறித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. இது மேலும் வலுப்பெற்று அதிமுகவின் மூத்த அமைச்சராக அறியப்பட்ட செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதிக்க, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதற்கு பின் அதிமுக தலைமைக்கு எதிராக இருப்பவர்களுடன், ஒன்று சேர்ந்ததால் கட்சியிலிருந்தும் அடியோடு நீக்கப்பட்டார். இதனையடுத்து இவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என அரசியல் களமே உற்று நோக்கி கொண்டிருந்த நிலையில், திடீரென விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இவர் அதிமுகவில் கொங்கு மண்டலத்தின் முக்கிய அமைச்சர் என்பதால் அங்கு அதிமுகவின் வாக்கு வங்கி சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில், 8 முறை வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக இருந்த இவருக்கு பதிலாக அதிமுக சார்பில் யாரை நிறுத்தலாம் என இபிஎஸ் தீவிர ஆலோசனையில் இருந்த நிலையில், தற்போது அதற்கான முக்கிய முகம் கிடைத்துள்ளது.

செங்கோட்டையன் சொந்த அண்ணன் மகனும், திமுக ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருமான கே.கே செல்வம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் இவர் அதிமுகவில் இணைய போவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக செங்கோட்டையனை எதிர்த்து அதிமுக சார்பில் அவரது அண்ணன் மகனை நிறுத்த இபிஎஸ் யூகித்துள்ளாராம். எனவே இந்த சட்டமன்ற தேர்தலில் கோபி தொகுதியில் போட்டி வலுவாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.  

செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.. ஆடிப்போன அமலாக்கத்துறை!!

0

DMK: அதிமுகவில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், அது தற்போது அவர் திமுகவில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருக்கும் சமயத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதனால் கைது செய்யப்பட்ட அவர், தனது அமைச்சர் பதவியை இழந்தார்.

ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்ட அவர், நிபந்தனை ஜாமீன் பெயரில் விடுவிக்கப்பட்டார். நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இவருக்கு, வாரம் இருமுறை அதாவது திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை என இரு தினமும், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் நீதிமன்ற உத்தரவின் பேரில் வாரம் இருமுறை அமலாக்க துறையில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.

இவ்வாறான நிலையில் இந்த நிபந்தனையை தளர்த்த கோரி செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் மனு அளித்தது. இந்த மனு நேற்று நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க, செந்தில் பாலாஜி தரப்பு, கடந்த 17 வாரங்களாக செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வருகிறார். இனியும் வர வேண்டுமா என்று கேட்க, தேவைப்படும் போது மட்டும் வந்தால் போதும், இனிமேலும் வாரம் இருமுறை ஆஜராக வேண்டாம் என்று நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.

அன்புமணி-அதிமுக கூட்டணி செல்லாது.. பாமகவின் முக்கிய தலை பர பர பேட்டி!!

0

ADMK PMK: இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நெருங்க இருக்கும் சமயத்தில், பாமகவில் யார் கையில் அதிகாரம் உள்ளது என்று தெரியாத நிலைமை உள்ளது. தந்தை-மகனின் சண்டை டெல்லி உயர் நீதிமன்றம் வரை சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளையரணி தலைவர் பதவியில் அமர்த்தியதை விரும்பாத அன்புமணி இதனை மேடையிலேயே வெளிப்படுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் அரங்கேற, தனது மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவர் பதவியில் அமர்த்தினார் ராமதாஸ். இது அன்புமணிக்கு, ராமதாசுக்கு உண்டான மோதலை மேலும் அதிகப்படுத்தியது. இந்நிலையில் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார்.

இதனை தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட அன்புமணிக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்வதாக ராமதாஸ் அறிவித்த நிலையில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார். இதனை விசாரித்த நீதிமன்றம், பாமகவில் யார் தலைவர் என்பதில் குளறுபடிகள் இருப்பதால், தேர்தல் நேரத்தில் வேட்பு மனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை எழும். இதனால், பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கியது. இவ்வாறு இருக்க பாமக யாருடன் கூட்டணி என்பதில் ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லை. ராமதாஸ் திமுக பக்கமும், அன்புமணி அதிமுக-பாஜக பக்கமும் தனது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ராமதாஸ் கூட்டணி குறித்து எந்த ஒரு முயற்சியையும் எடுக்காத நிலையில், அன்புமணி அதிமுக உடன் பேசி வருகிறார். இதையறிந்த ராமதாஸ் தரப்பை சேர்ந்த பாமக மேற்கு சட்டமன்ற உறுப்பினரான அருள், செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, ராமதாஸ் தான் உண்மையான பாமக. வேறு யாரும் யாருடனும் கூட்டணி குறித்து பேசி ஏமாற வேண்டாம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து அதிமுக உடன் அன்புமணி எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் ராமதாஸ் முடிவே இறுதியானது என்பதை பிரதிபலிக்கிறது. மேலும், ஏமாற வேண்டாம் என்று அவர் கூறியதால் ராமதாஸ் அதிமுகவை தவிர்த்து வேறு கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்று யூகிக்கப்படுகிறது. 

விஜய்யிடம் பேசும் திமுக கூட்டணி கட்சிகள் இது தான்.. நயினார் சொன்ன உண்மை தகவல்!!

0

TVK CONGRESS VCK: அடுத்த வருடம் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையையும் திராவிட கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றன. அதிமுக உடன் பாஜக, தமாகா கூட்டணி மட்டுமே உறுதியான நிலையில், திமுக உடன் முக்கிய கட்சிகளான விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், போன்ற கட்சிகள் தொடர்கின்றன.

இந்நிலையில் தான் திமுகவின் கூட்டணி கட்சிகள் விஜய் கட்சியான தவெகவை பயன்படுத்தி ஸ்டாலினிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. விஜய்யை பகடை காயாக மட்டுமே பயன்படுத்தி வருவதால் இவர்கள் திமுகவை விட்டு, புதிய கட்சியான தவெகவில் சேர மாட்டார்கள் என்ற கருத்து பரவியது. ஆனால் உண்மையாகவே திமுகவை விட்டு விலகி தவெகவில் சேர போகிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் நயினார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணி சுவாமி கோயிலுக்கு வருகை புரிந்த இவர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, காங்கிரஸும், விசிகவும் தவெக உடன் கூட்டணிக்காக பேசி கொண்டிருக்கிறார்கள் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இவரின் இந்த கூற்று திமுகவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்து பேசியது மற்றும் விசிகவின் தலைவர் திருமாவளவன் விஜய்க்கு ஆதரவாக பேசி வருவது போன்றவை இவர்கள் தவெகவில் சேர்வதற்கான சாத்திய கூறுகளாக பார்க்கப்படுகிறது.

கல்லீரல் கொழுப்பு குறையனுமா ? 3 பொருள் போதும்! 20 நாட்களில்

0

 

 

கல்லீரல் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து உடலுக்கு தேவையான சத்துக்களை பிரித்து உறுப்புகளுக்கு கொண்டு சேர்க்கிறது. அது எப்பொழுது பழுதாகிறது என்றால் நமது உணவு பழக்க வழக்கங்கள். மேலும் நாகரீக வளர்ச்சி.

துரித உணவுகளை உண்டு கல்லீரலை பழுதக்கி விடுகிறோம். கல்லீரலை சுற்றிக் கொழுப்புகள் படிந்து விடுகிறது. இப்படி அதிகமாக படிப்பதனால் நாளடைவில் அது மஞ்சள் காமாலையாக மாறிவிடுகிறது.

கல்லீரலை சுத்தம் செய்யும் அற்புதமான டாணிக்கை பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

 

1. நிலவேம்பு பொடி

2. கீழாெல்லி பொடி

3. நாட்டு சர்க்கரை

 

செய்முறை:

 

1. முதலில் கீழா நெல்லி மற்றும் நிலவேம்பு பொடி இரண்டையும் சம அளவில் எடுத்து கொள்ளவும். இரண்டும் 2 ஸ்பூன் அளவு எடுத்து கொள்ள வேண்டும்.

2. பின் ஒரு கடாயில் பொடிகள் இரண்டு பங்கு என்றால் தண்ணீர் 4 பங்கு ஊற்றி கொள்ளவும்.

3. தண்ணீர் ஒரு கொதி வந்ததும் பொடியை சேர்த்து கொள்ளவும்.

4. பொடி நன்றாக கொதித்த உடன் அதை வடிகட்டி மீண்டும் அதே கடாயில் ஊற்றி கொள்ளவும்.

5. பின் சம அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

6. ஒரு கம்பி பதம் அளவு இருக்க வேண்டும்.

7. இதனை கண்ணாடி ஜாடியில் போட்டு மூடி வைக்கவும்.

8. 20 நாள் வரை பயன்படுத்தலாம்.

 

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாப்பிடலாம். சிறுவர்களுக்கு 2.5 ml, பெரியவர்களுக்கு 10 ml varai கொடுக்கலாம்.

 

எதனுடன் கொஞ்சம் உடற்பயிற்சி தேவைப்படுகிறது. ஒரு நாட்களுக்கு 30 நிமிடம் வரை நடப்பது மிகவும் உகந்தது

 

ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு இதனை சாப்பிட்டு வர உடனடியாக கல்லீரல் சுத்தமாகி நன்றாக வேலை செய்யும்.