Home Blog Page 4

தமிழகத்தில் பாஜக இறக்கிய முக்கிய அஸ்திரம்.. மோடி சென்ற அடுத்த நொடியிலிருந்து ஆரம்பம்

நீ எதை வைத்து திராவிட கோட்டையை உருவாக்கினாயோ, அதையே வைத்து அதை சுக்குநூறாக்குவேன் என்ற குரல், கன்னியாகுமரியில் இருந்து ஒலிக்க தொடங்கியிருக்கிறது. சொந்த மண்ணுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதியுடன், அரசியலை ஒரு பதவியாக அல்ல… ஒரு பொறுப்பாகக் கருதி களத்தில் பயணித்து வருபவர் சதீஷ் ராஜா.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மக்களின் நலன்தான் அவரது அரசியல் இலக்கு. இன்று வரை எந்தப் பதவிக்காகவும் அல்ல… மக்கள் பணிக்காக மட்டுமே அரசியல் செய்து வருகிறார். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டால், நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன், அந்த உறுதியை கட்சி தலைமையிடமே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அனைத்து சமூகங்களையும் சமமாகக் காணும் மனப்பான்மையுடன் செயல்படுகிறார் சதீஷ் ராஜா. மதம், ஜாதி, மொழி என்ற எல்லைகளைத் தாண்டி, “மக்கள்” என்ற ஒரே அடையாளத்தோடு பணியாற்றும் தலைவராக, நாகர்கோவில் தொகுதி முழுவதும் அறியப்பட்ட பாஜக முகமாக திகழ்கிறார். நாட்டுப்பற்று, வளர்ச்சி அரசியல், மக்கள் நலன் ஆகியவை அவரது அரசியல் அடையாளங்கள்.

“நாட்டின் பாதுகாப்பும், மாநிலத்தின் வளர்ச்சியும், இளைஞர்களின் எதிர்காலமும் உறுதியடைய பாஜகவே தேவை” என்ற தெளிவான அரசியல் நிலைப்பாட்டுடன், தரையிலிருந்து தொடர்ந்து பயணித்து வருகிறார். கட்சி கொள்கைகளை மேடை அரசியலாக அல்ல… மக்களிடம் நேரடியாக எடுத்துச் செல்வதே அவரது பணி. இதற்காக வீடு வீடாகச் சென்று பேசும் அடித்தள அரசியலிலேயே தனது பயணத்தை தொடங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம், தெற்கு தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் ராஜா, சாதாரண குடும்ப சூழலில் பிறந்து, சமூக சேவை மீது ஆர்வம் கொண்டவராக வளர்ந்தவர். 2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, ஒரு அடிப்படை தொண்டராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். உள்ளூர் பிரச்சனைகள், மக்கள் தேவைகள், சமூக அநீதிகள் – அனைத்திலும் களத்தில் நின்று போராடினார்.

2017 ஆம் ஆண்டு, பாஜக சிறுபான்மை மோர்ச்சாவின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், கிறிஸ்தவ மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, சமூக பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளில் தனிப்பட்ட கவனம் செலுத்தினார். 2022 ஆம் ஆண்டு முதல் மாநில பொதுச் செயலாளராக உயர்ந்து, அரசு திட்டங்கள் உண்மையில் மக்களிடம் சென்றடைய முக்கிய பங்காற்றினார்.

அரசியலுடன் மட்டுமல்ல… சமூக சேவையிலும் தனித்த அடையாளம் பெற்றவர் சதீஷ் ராஜா. கொரோனா காலத்தில் ரூ.1.5 கோடிக்கும் மேல் செலவில் நிவாரண உதவிகள், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவு, மருத்துவ உதவிகள், ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் – இவை அனைத்தும் அவரது அரசியல் சேவையின் ஓர் அங்கமாகவே தொடர்ந்தன.

கன்னியாகுமரி மற்றும் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதில் அவர் காட்டும் அக்கறை குறிப்பிடத்தக்கது. மீன்பிடித் துறை மேம்பாடு, நவீன துறைமுக வசதிகள், குளிர்சாதன கிடங்குகள், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் போன்றவற்றுக்காக தொடர்ந்து அரசியல் ரீதியாக குரல் கொடுத்து வருகிறார்.

BBA பட்டம் பெற்ற சதீஷ் ராஜா, தொழில் அனுபவம் மற்றும் நிர்வாக அறிவை அரசியல் பணியில் பயன்படுத்தி வருகிறார். 2025 ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக வர்த்தக பிரிவின் மாநில தலைவராக செயல்பட்டு, வணிகர்கள், சிறு தொழிலதிபர்கள், MSME நிறுவனங்கள், சுயதொழில் முனைவோர்களை கட்சியுடன் இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அடித்தளத்தில் இருந்து உழைத்து, படிப்படியாக உயர்ந்து, இன்று மாநில அளவிலான தலைவராக உருவாகியுள்ள சதீஷ் ராஜா, இளம் தலைமுறைக்கு ஒரு முன்னுதாரணம். உழைப்பு, நேர்மை, மக்கள் தொடர்பு, சமூக சேவை – இவையே அவரது அரசியல் வாழ்க்கையின் அடையாளங்கள்.

மக்கள் நலன், வேலைவாய்ப்பு, சமூக ஒற்றுமை, மாநில வளர்ச்சி – இவை அனைத்தையும் மையமாக வைத்து, தமிழக அரசியலில் மக்கள் நம்பிக்கை கொண்ட வலுவான தலைவராக உருவாக வேண்டும் என்பதே சதீஷ் ராஜாவின் எதிர்கால இலக்கு.

“Infosys, AI முன்னிலையில் 20,000 புதிய வேலை வாய்ப்புகள் குறித்து அறிவிப்பு!!

0

INFOSYS JOB: Infosys CEO சலீல் பரேக், Davos 2026 உலக பொருளாதாரக் கருத்தரங்கில், FY27-ல் நிறுவனம் 20,000 புதிய பட்டதாரிகளை வேலைக்கு எடுக்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுவதன்படி, , மென்பொருள் மேம்பாடு, வாடிக்கையாளர் சேவை மற்றும் பழைய செயலிகளை (legacy applications) புதுப்பிப்பதில் AI-ஐப் பயன்படுத்துவதால் புதிய சேவை தேவைகள் அதிகரித்து வருகின்றன. Infosys, AI-முதல் (AI-first) திறன்கள் கொண்ட freshers-ஐ கவர்வதற்காக entry-level சம்பளங்களை உயர்த்தி, சில சிறப்பு தொழில்நுட்ப துறைகளில் ஆண்டிற்கு ₹21 லட்சம் வரை வழங்கி வருகிறது.

பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் AI திட்டங்கள் PoC நிலையை கடந்து production-ல் deployed ஆகி பயன்படுத்தப்படுகின்றன. AI எஜென்ட்கள் மற்றும் மனித குழுக்கள் இணைந்து வேலை செய்யும் திட்டங்களில் புதிய விலை மாதிரிகள் உருவாகி வருகின்றன. பரேக் கூறியதாவது, அமெரிக்காவின் வலுவான GDP வளர்ச்சி பெரிய நிறுவனங்களில் தொழில்நுட்ப முதலீடுகளை ஊக்குவிக்க வாய்ப்பாக உள்ளது. Infosys தற்போது AI வளர்ச்சியை மையமாக்கி, புதிய சேவை வாய்ப்புகளையும் வேலை வாய்ப்புகளையும் விரிவாக்கி வருகிறது.

விஜய்க்கு என்னுடைய முழு ஆதரவும் உண்டு.. ராகுல் காந்தி போட்ட ட்வீட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்..

0

DMK TVK CONGRESS: 2026 க்கான சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற இருப்பதால் தமிழக அரசியல் அரங்கு மிகவும் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் தமிழ் திரையுலகில் மிக பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியிருக்கிறார். இந்த கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்திலிருந்தே இதற்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு இருந்தது. இதனால் விஜய் கூட்டணியில் சேரவும், அவரை கூட்டணியில் சேர்க்கவும் திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் முயற்சித்தன. விஜய் திமுகவையும், பாஜகவையும் எதிரி என்று கூறியதால், காங்கிரஸ் அல்லது அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று யூகிக்கப்பட்டது.

ஆனால் விஜய் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி என்ற நிபந்தனையை இபிஎஸ் ஏற்காததால் இந்த கூட்டணி கிடப்பிலேயே உள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சி மட்டுமே மீதமிருப்பதாலும், விஜய் காங்கிரசுடன் நெருக்கம் காட்டி வருவதாலும் இவர்களின் கூட்டணி உறுதியாகும் என்று பலரும் கூறினார்கள். இதனை மேலும் வலுபடுத்தும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வரவிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் வழங்காத காரணத்தினால் தற்போது வரை அந்த படம் திரைக்கு வராமல் உள்ளது.

தணிக்கை வாரியம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பாஜக வேண்டுமென்றே சதி செய்கிறது என்று விமர்சிக்கபட்ட நிலையில், தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது புது புயலை கிளப்பியுள்ளது. இது குறித்து சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்ட அவர், ஜனநாயகன் படத்தை தடுப்பதற்கான முயற்சி, தமிழ் கலாச்சாரத்தின் மீது நடத்தபடும் தாக்குதலாகும் என்றும், மோடி அவர்களே தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதில் நீங்கள் ஒரு போதும் வெற்றி பெற மாட்டீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு, காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகுவதற்கான சமிக்கையாகவே பார்க்கப்படுகிறது. 

அட்டாக் செய்யும் பாஜக.. மிரண்டு போன தவெக.. விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு எண்டு கார்டு..

0

BJP TVK: அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருகின்றன. இந்நிலையில் தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கரூரில் தவெக சார்பில் நடந்த பரப்புரையில் எதிர்பாராத விதமாக 41 உயிரிழப்புகள் ஏற்பட்டது நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் குழு அமைத்த நிலையில் இதனை தவெக தரப்பு ஏற்கவில்லை.

இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டுமென தவெக தரப்பினர் மனு அளித்ததால், இது மத்திய அரசின் கைக்கு சென்றது. விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி வரும் நிலையில், அவருக்கு பெருகும் ஆதரவை கண்ட பாஜக, அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது மட்டுமல்லாமல் கரூர் விவகாரத்தில் அவருக்கு துணையாக நின்றது. ஆனால் அப்போதும் கூட விஜய் பாஜக உடன் கூட்டணி சேர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக விஜய்யை நேரடியாக விமர்சிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் தான் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வரவிருந்த நிலையில், சென்சார் போர்டு வழங்காததன் காரணமாக படம் திரையரங்குக்கு வரவில்லை. கரூர் வழக்கும், தணிக்கை வாரியமும் மத்திய அரசின் கட்டுபாட்டின் கீழ் உள்ளதால் இதனை வைத்து விஜய்யிடம் அரசியல் ஆதாயம் பார்த்து விடலாம் என்று பாஜக திட்டம் தீட்டி இருக்கிறது. இந்த சூழலில் தவெகவை சேர்ந்த யாரும் பாஜகவை விமர்சிக்காதது, பாஜக மேலுள்ள பயத்தினால் தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

நாதகவுக்கு ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்.. பின்னணியில் விஜய்யா.. முடிவை மாற்றும் சீமான்..

0

CONGRESS NTK TVK: தமிழக அரசியல் அரங்கில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், நீண்ட காலமாக தனித்து நின்று தேர்தலை சந்தித்து வரும் நாதகவை கூட்டணியில் சேர்க்க காங்கிரசும், தவெகவும் முயற்சித்து வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது. நாம் தமிழர் கட்சி தொடங்கபட்டதிலிருந்தே யாருடனும் கூட்டணி இல்லை, கடைசி வரை தனித்து நின்று தான் களம் காணுவோம் என்று கூறி அவர்களது கொள்கையில் உறுதியாக உள்ளனர். இந்த காலகட்டத்தில் எந்த ஒரு கட்சியாலும் தனித்து நின்று ஆட்சியை பிடிப்பது கடினம். ஆனால் நாதக தனித்து நின்றே குறிப்பிட்ட அளவு வாக்குகளை சேகரித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இவரின் வாக்குகளை கவர நினைக்கும் பாஜக, காங்கிரஸ், தவெக போன்ற கட்சிகள் அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சிப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நேற்று பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, சீமானின் கட்சியை சாதாரணமாக எடைபோட கூடாது. அவர் அவரது கொள்கையில் உறுதியாக உள்ளார். அவரது கொள்கை எனக்கு பிடிக்கிறதோ இல்லையோ, அது இரண்டாம் பட்சம். ஆனால் அவர் தேர்தலுக்கு தேர்தல் நிற்கிறார் என்று பாராட்டி இருந்தார். இவரின் கருத்து புகைச்சலை கிளப்பிய நிலையில் தற்போது புதிதாக, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியான கார்த்திக் சிதம்பரம், நாதகவை பற்றி புகழ்ந்து பேசியது தற்போது வைரலாகியுள்ளது.

இது குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் தனியாக நிற்கின்ற ஒரே கட்சி நாதக மட்டும் தான். அவர்களுக்கு மட்டும் தான் எவ்வளவு வாக்கு சதவிகிதம் இருக்கிறது என்பது தெளிவாக தெரியும், மற்ற கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்துள்ளதால் அவர்களின் வாக்கு வங்கியை கணிக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த பேச்சு நாதகவை கூட்டணியில் சேர்பதற்கான தந்திரமாக தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் தவெக உடன் தற்போது வரை எந்த கூட்டணியும் உறுதியாகததாலும், நாதகவுக்கு தமிழகத்தில் நல்ல செல்வாக்கு இருப்பதாலும், விஜய் காங்கிரஸ் மூலம் சீமானை கூட்டணியில் சேர்க்க முயற்சிகிறார் என்று மூத்த அரசியல் நிர்வாகிகள் கூறுகின்றனர். விஜய்க்கும் அரசியலில் அதிக ஆதரவு இருப்பதால், சீமான் விஜய்யுடன் கை கோர்ப்பார் என்று பலரும் கூறுகின்றனர்.

அடுத்த திருப்பம்.. திமுக கூட்டணியிலிருந்து விலகும் முக்கிய கட்சி.. தனித்து களம் காண முடிவு.. 

0

DMK VCK: மார்ச் மாதம் தமிழகத்தில் 2026 க்கான சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் வெற்றி பெற வேண்டுமென திராவிட கட்சிகளும், வெற்றி கூட்டணியில் இணைய வேண்டுமென சிறிய கட்சிகளும் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் மிகவும் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ள திமுக கூட்டணியில் தற்போது ஒரு விரிசல் விழப் போகிறது. பல ஆண்டுகளாக திமுக உடன் அங்கம் வகித்து வரும் விசிக தற்போது பாமகவின் வருகையால் விலக போகிறது என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. சில காலமாகவே பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் மோதல் போக்கு பெரிதாகி கொண்டே சொல்கிறது. இதனால் இரண்டாக பிரிந்துள்ள பாமகவின் ஒரு பகுதி அதிமுக கூட்டணிக்கு சென்று விட்டது.

மீதமிருப்பது ராமதாஸ் தரப்பு மட்டும் தான். அன்புமணி அதிமுக பக்கம் சாய்ந்ததால், ராமதாஸ் திமுக கூட்டணிக்கு செல்ல அதிகளவு வாய்ப்புகள் உள்ளது என்று யூகிக்கப்பட்டது. இந்நிலையில் விசிகவின் தலைவர் தொல். திருமாவளவன் பாமகவின் ஒரு பகுதி திமுகவிற்கு வந்தால் கூட விசிக கூட்டணியிலிருந்து வெளியேறும் என்று கூறி இருக்கிறார். இந்த சூழலில் தான் திமுக உடன் இணைவீர்களா என்று ராமதாஸிடம் கேள்வி எழுப்பிய போது, திமுக உடன் கூட்டணி என்றும் சொல் முடியாது, இல்லையென்றும் சொல்ல முடியாது என்று கூறியிருந்தார்.

இவரின் இந்த கருத்து திமுக உடன் இணைவதை உறுதிப்படுத்தி இருக்கிறது என்று பலரும் கூறுகின்றனர். இதன் காரணமாக விசிக திமுகவிலிருந்து வெளியேறும் என்று கணிக்கப்படுகிறது. மேலும், பாஜக இருக்கும் கூட்டணியிலும் இணைய மாட்டோம் என்று திருமாவளவன் கூறியுள்ளதால், இவர் அதிமுக உடனும் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது தெளிவாகிறது. அது மட்டுமல்லாமல் புதிய கட்சியான விஜய்யுடன் கூட்டணி அமைக்கவும் அவர் யோசிப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவ்வாறான நிலையில், விசிக இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ்.. டிடிவி தினகரனுக்கு செக் வைத்த எடப்பாடி.. திக்குமுக்காடும் அமமுக..

0

ADMK AMMK: எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைய போவதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுகவில் பல்வேறு பிரிவினைகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற ஆரம்பத்திலேயே கட்சியின் முக்கிய முகங்களாக அறியப்பட்ட ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றோரை கட்சியிலிருந்து நீக்கினார். இதன் பின்னர் டிடிவி தினகரன் புதிய கட்சி தொடங்கிய நிலையில், ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றை அமைத்தார். சசிகலா அரசியலிலிருந்து விலகி இருந்தார்.

இவ்வாறான நிலையில் அதிமுக கூட்டணியில் இணைந்த பாஜக இவர்களை ஒருங்கிணைக்க முயற்சித்தும் அந்த முயற்சி கை கூடவில்லை. இந்நிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறி கூட்டணியிலிருந்து விலகினார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி ஓபிஎஸ்யை மட்டும் கூட்டணியில் சேர்க்க சம்மதம் தெரிவித்து விட்டதாக பலரும் கூறுகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம், ஓபிஎஸ் எந்த ஒரு இடத்திலும் இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறவில்லை. மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என்பதை மட்டுமே வலியுறுத்தி வந்தார். இதன் காரணமாக எடப்பாடி, ஓபிஎஸ்க்கு சில தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் எக்காரணம் கொண்டும் என்னை முதல்வர் வேட்பாளராக ஏற்காத டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க முடியாது என்பதில் எடப்பாடி தெளிவாக உள்ளாராம். 

விஜய்யின் டெல்லி ட்ரிப் .. பாஜகவின் பிளான் இது தானாம்.. போட்டுடைத்த செல்வப்பெருந்தகை..

0

TVK BJP CONGRESS: கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக விஜய் நேற்று டெல்லி சென்றார். இது குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விஜய்யை டெல்லிக்கு வரவழைத்து அரசியல் வலையில் வீழ்த்துவதற்கான வேலையை செய்ய பாஜக முயற்சிகிறது என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். தமிழக தேர்தல் என்றாலே அதில் பல்வேறு காரசாரமான விவாதங்கள் நிகழும். இதனை மேலும் மெருகேற்றும் வகையில் நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். இவர் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே இவருக்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு உள்ளது. இதனை தொடர்ந்து மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்ட விஜய் 5 இடங்களில் அதனை சிறப்பாக செய்து முடித்தார்.

6 வதாக கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது, எதிர்பாராத விதமாக 41 பேர் உயிரிழந்ததுடன், 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தனர். இந்த சம்பவம் திமுகவின் கோட்டையாக கருதப்படும் கரூரில் நடந்ததால் இது திமுகவின் சதி என்று தவெக கூற, திமுகவை சேர்ந்தவர்களோ இது தவெகவின் அரசியல் அறியாமை என்று கூறி வந்தனர். இதனால் இதனை விசாரிக்க தமிழக அரசு சார்பில் தனி நபர் குழு அமைக்கப்பட்டது. இதனை ஏற்காத விஜய் தரப்பு சிபிஐ விசாரணையை கோரியது. சிபிஐ மத்திய அரசின் கட்டுபாட்டில் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. கரூர் சம்பவம் சிபிஐ ஒப்டைக்கப்பட்டதை பயன்படுத்த நினைத்த பாஜக, விஜய்யை கூட்டணிக்கு அழைக்க, விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறியதால் அவர்களுடன் கூட்டணி அமைக்க மறுத்து விட்டார்.

இவ்வாறான சமயத்தில் தான், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விசாரித்த சிபிஐ நேற்று கட்சி தலைவர் விஜய்யிடமும் விசாரணை நடத்தியது. நேற்று காலை 6 மணியளவில் டெல்லி புறப்பட்ட விஜய்யிடம் சுமார் சில மணி நேரம் கேள்விகள் எழுப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விஜய் சிங்கத்தின் வாயில் சிக்கியுள்ளார். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறினார். மேலும், விஜய்யை டெல்லிக்கு வரவழைத்து வரை கூட்டணியில் சேர்ப்பது தான் பாஜகவின் திட்டம் என்றும் தெரிவித்துள்ளார். 

அன்புமணிக்கு வந்த வினை.. ராமதாஸின் அதிரடி ஆக்சன்.. சரியும் பாமக கோட்டை..

0

PMK: இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரம் காட்டி வரும் வேளையில் பாமகவில் மட்டும் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட தலைமை பிரச்சனை தற்போது வரை தீர்ந்த பாடில்லை. இது அண்மை காலமாக உச்சத்தை எட்டிய நிலையில், நிறுவனர் ராமதாஸ் புதிதாக ஒரு செய்தியை கூறியுள்ளார். அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் மூன்று பேரை கட்சியிலிருந்து நீக்க உத்தரவு பிறப்பித்துள்ள அவர் இன்னும் சில முக்கிய முடிவுகளையும் கூடிய விரைவில் அறிவிப்பார் என்று பாமகவின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாமக இரண்டாக பிரிந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் தலைவராக அன்புமணி இருந்த நிலையில், இளையரணி தலைவராக ராமதாசின் பேரன் முகுந்தன் நியமிக்கப்பட்டார். இதில் விருப்பமில்லாத அன்புமணி அவரது எதிர்ப்பை மேடையிலேயே வெளிப்படுத்தியிருந்தார். அப்போது ஆரம்பித்த மோதல் டெல்லி உயர்நீதி மன்றம் வரை சென்று விட்டது. ராமதாஸுக்கு எதிராக அன்புமணி சில செயல்பாடுகள் செய்து வந்ததால் அவர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. இதனால் ராமதாஸ் இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வதாக கூறி டெல்லி உயர் நீதிமன்றம் செல்ல, அங்கும் அன்புமணிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. அன்புமணி தான் தலைவர் என்பதை மறுக்காத நீதிமன்றம், பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்க உத்தரவிட்டது.

இவ்வாறான நிலையில் தான், அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாசின் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் போன்ற செயல்கள் அங்கேறி வந்தன. அந்த வகையில், தற்போது அன்புமணியின் ஆதரவு எம்எம்ஏ-க்களான மயிலம் சட்டமன்ற உறுப்பினர் .ச.சிவகுமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி. வெங்கடேஸ்வரன் ஆகிய 3 மூன்று பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபட்டு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகலிளிருந்தும் நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த நிகழ்வு அன்புமணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் பலரும் கூறுகின்றனர். 

கடுமையான குளிர் அலைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது – எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை

“கடுமையான குளிர் அலைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது; இதயம், நுரையீரல், சிறுநீரகம் தொடர்பான நோயாளிகள் அதிக ஆபத்தில் உள்ளனர்” – எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை

வட இந்தியா முழுவதும் கடந்த திங்கட்கிழமை கடுமையான குளிர் அலை வீசியதால், இந்த பருவத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகி, கடும் குளிர் சூழல் நிலவியது. தேசிய தலைநகர் டெல்லி உட்பட பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், AIIMS Delhi மருத்துவர்கள், கடுமையான குளிர் நிலை நீடித்தால் இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் மாற்றுச் சுரப்பி (metabolic) தொடர்பான நீண்டகால நோய்கள் உள்ளவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் தீவிரமடையக்கூடும் என எச்சரித்துள்ளனர்.

டெல்லியில் 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்த ஜனவரியில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவான நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. நகரின் பல வானிலை நிலையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது. சப்தர்ஜங் வானிலை நிலையம் 3.2 டிகிரி செல்சியஸ் என பதிவு செய்துள்ளது; இது இந்த பருவத்தில் இதுவரை பதிவான மிகக் குறைந்த வெப்பநிலையாகும். தேசிய தலைநகர் பிராந்தியத்தின் புறநகர் பகுதிகளில், சில இடங்களில் பூஜ்யத்துக்கு அருகிலான வெப்பநிலையும் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

India Meteorological Department (இந்திய வானிலை ஆய்வு மையம்) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த கடும் குளிர் நிலை இன்னும் சில நாட்கள் தொடரக்கூடும். வட இந்தியாவின் சில பகுதிகளில் தனித்தனியாக கடுமையான குளிர் அலை நிலவ வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதய நோய்களுக்கு குளிர் ஆபத்து அதிகம் என Dr Rajiv Narang, எய்ம்ஸின் இதயவியல் பேராசிரியர் தெரிவித்துள்ளார். குளிர்காலத்தில் ரத்த நாளங்கள் சுருங்குவதால், நீர் அருந்தும் அளவு குறைவதாலும், உப்பு உணவு அதிகரிப்பதாலும் ரத்த அழுத்தம் உயரும் அபாயம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக இதயஅட்டாக் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகமாகும் என்று அவர் கூறினார். கடும் குளிரும் காற்று மாசும் இருக்கும் நேரங்களில், குறிப்பாக அதிகாலை நடைபயிற்சியைத் தவிர்க்க வேண்டும் என்றும், இதய நோயாளிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மேலும், வெப்ப அலைகளைப் போலவே குளிர் அலைகளையும் தீவிரமான பொது சுகாதார பிரச்சனையாகக் கருதி, அரசு மட்டத்தில் குளிர் செயல் திட்டங்கள் (Cold Action Plans) அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு குளிர் காற்று மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என எய்ம்ஸின் மருத்துவத் துறையைச் சேர்ந்த Dr Sanjeev Sinha தெரிவித்துள்ளார். நேரடியாக குளிர் காற்றை சுவாசிப்பதால் சுவாச பாதைகள் எரிச்சலடையும்; இதனால் மூச்சுத் தளங்களில் சுருக்கம் ஏற்பட்டு, திடீர் மூச்சுத்திணறல் (bronchospasm) ஏற்படலாம் என அவர் விளக்கினார். குறிப்பாக சிஓபிடி (COPD), நீண்டகால பிராங்கைட்டிஸ், எம்ஃபிசீமா மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். குளிர் அலைகளின் போது இத்தகைய நோயாளிகளில் இருமல், மூச்சுத்திணறல் மற்றும் சீழ்விசிறல் அதிகரிப்பதோடு, நிமோனியா போன்ற தொற்றுகளுக்கும் ஆளாகும் அபாயம் உள்ளது என்றார்.

தற்போது வெளிநோயாளர் பிரிவுகளில் குளிர் தொடர்பான சுவாசப் பிரச்சனைகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், தினமும் ஏழு முதல் பத்து பேர் வரை இதுபோன்ற குறைபாடுகளுடன் வருவதாகவும் அவர் தெரிவித்தார். அவசியம் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம், பல அடுக்குகளாக சூடான உடைகள் அணியவும், மருந்துகள் மற்றும் இன்ஹேலர்களை தவறாமல் பயன்படுத்தவும், சூடான திரவங்களை அருந்தவும் அவர் அறிவுறுத்தினார். குளிர் அலைகளும் வெப்ப அலைகளைப் போலவே உடலில் பெரும் உடலியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால், வட இந்தியா இதை ஒரு தீவிரமான பொது சுகாதார சவாலாக உணர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

குளிர்காலத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கான பராமரிப்பு சிரமமாகிறது என எய்ம்ஸின் மாற்றுச் சுரப்பி நிபுணர் Dr Rajesh Khadgawat தெரிவித்துள்ளார். குளிர் காரணமாக உடற்பயிற்சி குறைவதால், இரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது கடினமாகிறது என்றார். எனவே, வீட்டிற்குள் நீட்டிப்பு பயிற்சி, யோகா அல்லது லேசான உடற்பயிற்சிகள் மூலம் செயலில் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். மேலும், பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி அவசியம் என்றும், நிமோகாக்கல் தடுப்பூசி (PPS23) நிமோனியா, இரத்தத் தொற்று மற்றும் மெனிஞ்ஜைட்டிஸ் போன்ற கடுமையான தொற்றுகளிலிருந்து பாதுகாப்பளிக்கிறது என்றும் அவர் விளக்கினார்.

குளிர் அலைகளின் போது குழந்தைகள், குறிப்பாக乳குழந்தைகள் மற்றும் காலத்துக்கு முன் பிறந்த குழந்தைகள் அதிக ஆபத்தில் இருப்பதாக எய்ம்ஸின் குழந்தை மருத்துவ பேராசிரியர் Dr Rakesh Lodha எச்சரித்துள்ளார். குழந்தைகளின் உடல் எடையை ஒப்பிடும்போது தோல் பரப்பளவு அதிகமாக இருப்பதால், உடல் வெப்பம் வேகமாக இழக்கப்படும் என்றார். இதனால் சோர்வு, சரியான உணவு உட்கொள்ள முடியாமை மற்றும் மூச்சுப் பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும், குளிர்காலத்தில் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான முக்கிய காரணம் சுவாசத் தொற்றுகளே என்றும் அவர் கூறினார். தலை பகுதியை மூடுவது மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிறுநீரக நோயாளிகளுக்கு குளிர்காலத்தில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மிக முக்கியம் என எய்ம்ஸின் நெப்ராலஜி பேராசிரியர் Dr Sandeep Mahajan தெரிவித்துள்ளார். பெரும்பாலான சிறுநீரக நோயாளிகள் உயர் ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருப்பதால், குளிர்காலத்தில் அதைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றார். பெரும்பாலான நோயாளிகளுக்கு 130/80 மிமீ ஹெச்.ஜி.க்கு கீழ் ரத்த அழுத்தத்தை வைத்திருக்க வேண்டும் என்றும், முதியவர்களுக்கு 140–145 வரை அனுமதிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். அதிக உப்பு மற்றும் புரத உணவுகளைத் தவிர்க்கவும், மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பசலைக் கீரை, கடுகுக் கீரை போன்ற பருவ கீரைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.

மொத்தத்தில், குளிர் அலைகள் வெறும் வானிலை மாற்றம் மட்டுமல்ல; அவை மனித உடலுக்கு தீவிரமான சுகாதார அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, தனிநபர் மட்டத்திலும் அரசியல் மற்றும் நிர்வாக மட்டத்திலும் விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சரியான மருத்துவ பராமரிப்பு அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.