வெள்ளிக்கிழமை, மே 3, 2024
Home Blog Page 4

இரட்டை குழந்தை! காலம் தவறிய மருத்துவர்! சோகத்தில் புதுக்கோட்டை! முன்னாள் அமைச்சர் இரங்கல்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு – தமிழரசி தம்பதியினரின் மகள் அஞ்சுதா. இவர் புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவரவாக பணியாற்றி வந்தார்

இந்நிலையில், பிரசவ வலி ஏற்பட்டு, கால தாமதமாய் தான் பணியாற்றிய இராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. ஆனால் மருத்துவர் அஞ்சுதாவின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. மருத்துவர் அஞ்சுதாவின் மரணம் புதுக்கோட்டை மாவட்ட மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், மருத்துவர் அஞ்சுதாவின் மறைவுக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு – தமிழரசி தம்பதியினரின் அன்பு மகளும், புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவருமான Dr. R.அஞ்சுதா M.S.,(OG) -ன் அகால மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது.

<blockquote class=”twitter-tweet”><p lang=”ta” dir=”ltr”>“தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகம்கூட காணாமல் உயிரிழந்த மருத்துவர் அஞ்சுதா-வின் மறைவு பெருந்துயரம்” <br><br>புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு – தமிழரசி தம்பதியினரின் அன்பு மகளும், புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவருமான… <a href=”https://t.co/JwjBo9AXaA”>pic.twitter.com/JwjBo9AXaA</a></p>&mdash; Dr C Vijayabaskar – Say No To Drugs &amp; DMK (@Vijayabaskarofl) <a href=”https://twitter.com/Vijayabaskarofl/status/1785888216727388655?ref_src=twsrc%5Etfw”>May 2, 2024</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

பிரசவ வலி ஏற்பட்ட உடனே சிறிதும் தாமதமின்றி மருத்துவமனைக்கு விரைந்திருக்க வேண்டியவர், கால தாமதமாய் தான் பணியாற்றிய இராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரட்டைக் குழந்தைகள் ஈன்றெடுத்து உயிரிழந்திருக்கிறார்.

மகப்பேறு காலத்தில் நேரத்தின் அருமையை நன்கறிந்து எத்தனையோ பிரசவங்களை செய்திருக்க வேண்டிய மகப்பேறு மருத்துவரே, கால தாமதத்தால் உயிர் பிரிந்தது சொல்லிலடங்கா துயரம்.

மருத்துவர் அஞ்சுதாவை இழந்து வாடும் அவரது கணவர் பல் மருத்துவர் கார்த்திக் மற்றும் செங்கல் இறக்கும் வேலையும், சித்தாள் வேலை செய்தும் மகளை படிக்க வைத்த பாசமிகு பெற்றோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

நிலவின் தரைக்கு அடியில் தண்ணீர்! சாதித்து காட்டிய இந்தியாவின் சந்திரயான்-3!.

நிலவின் துருவ பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும், அந்த தண்ணீர் ஐந்து முதல் எட்டு மீட்டர் ஆழத்தில் பனி கட்டிகளாக உறைந்து இருப்பதையும் இஸ்ரோ உறுதி செய்துள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.250 கோடியில் இஸ்ரோ(இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்) வடிவமைத்தது.

ஏற்கனவே சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவை சுற்றிவரும் நிலையில், லேண்டர், ரோவர் பாகங்கள் உடன் சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்துக்கு அருகே மான்சினஸ் சி மற்றும் போகுஸ்லாவ்ஸ்கி பள்ளங்களுக்கு இடையே சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.

Chandrayaan 3 starts its mission to the moon tomorrow!! Information released by ISRO!!
Chandrayaan 3 starts its mission to the moon tomorrow!! Information released by ISRO!!

நிலவில் ஹீலியம் போன்ற வாயு மூலக்கூறுகள், நிலவு உருவான விதம், பனிக்கட்டிகளின் நிலை, தனிமங்கள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்வதே சந்திரன் 3 திட்டத்தின் முக்கிய பணியாகும்.

இந்நிலையில், நிலவின் துருவப் பகுதிகளில் தரைக்கடியில் தண்ணீர் இருப்பதை இஸ்ரோ உறுதி செய்துள்ளது . நிலவை ஆராய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 தரவுகளை ஐஐடி கான்பூர், யூனிவர்சிட்டி ஆஃப் சதன் கலிபோர்னியா ஆகிய பல்கலைக்கழகமுடன் இணைந்து ஆராய்ச்சி செய்தன.

அதில், நிலவின் துருவ பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அந்த தண்ணீர் ஐந்து முதல் எட்டு மீட்டர் ஆழத்தில் பனி கட்டிகளாக உறைந்து இருப்பதையும் இஸ்ரோ உறுதி செய்துள்ளது.

தர்மபுரி | 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிர்பிழைத்த அதிசியம்!

0

தர்மபுரி அருகே 120 அடி ஆழ கிணற்றில் விழுந்த 14 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த நெகிழ்ச்சி சம்பவம் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டி அருகே 120 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவன், கிணற்றில் இருந்த 4 அடி நீரால் உயிர்பிழித்து, பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாப்பிரெட்டி அடுத்த கேத்திரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் பவித்ரன். இன்று அதிகாலை இந்த சிறுவன் வீட்டின் அருகே உள்ள 120 அடி ஆழம் கொண்ட விவசாய கணக்கில் தவறி விழுந்துள்ளார்.

இந்த கிணற்றில் நான்கு அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்து அபாய குரல் எழுப்பியுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறுவனை பத்திரமாக கயிறு கட்டி மேலே தூக்கி வந்தனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் பள்ளி மாணவர்கள் நீர் நிலைகளில் தவறி விழுந்து உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களின் அலட்சியமே/

பள்ளி மாணவர்களுக்கு இது கொடை விடுமுறை காலம் என்பதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீது அதிக கவனத்தை செலுத்த வேண்டும். ஏரி, குளம், வாய்க்கால், ஆறு, கிணறு போன்ற பகுதிகளுக்கு சிறுவர்களை அனுப்பாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

வாகன ஓட்டிகளே உஷார்! இன்று முதல் அமலுக்கு வந்த விதி! மீறினால் அபராதம்!

வாகனங்களில் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

இந்த விதிகளை மீறி போலீஸ், பாதுகாப்புத்துறை என வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும், ஊடகங்களில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் ஊடகம் என்ற ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

முதற்கட்டமாக போலீஸ், பாதுகாப்புத்துறை என ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களில் மட்டுமே இன்று ஆய்வு நடத்த உள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Attention motorists!! Change of direction of traffic on major roads!!
Attention motorists!! Change of direction of traffic on major roads!!

இதுகுறித்த காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பில், சென்னை நகரில் உள்ள தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச செயலகம், டி.என்.இ.பி., — ஜி.சி.சி., காவல் துறை உட்பட துறைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை வாகன எண் தகட்டிலும் (நம்பர் பிளேட்), வேறு பகுதியிலும் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை பலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர்.

இதை கருத்தில் கொண்டு, வாகனங்களில் உள்ள ஸ்டிக்கர்கள் மற்றும் துறை சார்ந்த அடையாளங்களை சரி செய்து கொள்ள மே, 1ம் தேதி வரை சென்னை போக்குவரத்து காவல்துறை கால அவகாசம் வழங்குகிறது.

அதன் பிறகும், இவ்வித மீறலில் ஈடுபடுபவோர் மீது, மே 2ம் தேதி முதல் (இன்று முதல்) எம்.வி.,சட்டம், 1988 -ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும் என்று காவல்துறை வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டு வீட்டை AC இருப்பது போல் குளுமையாக மாற்றலாம்.. இதோ இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க!!

0

ஓட்டு வீட்டை AC இருப்பது போல் குளுமையாக மாற்றலாம்.. இதோ இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க!!

கோடை காலம் வந்துவிட்டாலே பலரது வீடுகளில் வெப்பமானது அப்படியே உள்ளிரங்கும். இதனால் வீட்டினுள் தூங்க முடியாமல் பலரும் சிரமப்படுவதுண்டு. குறிப்பாக ஓட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு பகல் நேரத்தில் வீட்டினுள்ளே இருக்க முடியாது. அவர் இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும் உங்கள் ஓட்டு வீடு கூட ஏசி இல்லாமலேயே குளுமையாக மாற்றிவிடலாம்.

ஓட்டு வீட்டை குளுமையாக மாற்றுவது எப்படி:

பொதுவாகவே ஓட்டு வீட்டில் அதிகப்படியான வெப்பமானது இறங்கும்.
இதனை சமாளிக்க நாம் கடைகளில் கிடைக்கும் கோணி பைகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.
கிட்டத்தட்ட பத்து கோணி பைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து நன்றாக தைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இதனை நமது ஓட்டின் மேற்கூறையில் போட வேண்டும்.
பின்பு இதில் அவ்வபோது தண்ணீர் தெளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்து வர கூரையின் மீது விழும் வெப்பத்தை கோணியானது தாங்கிக் கொள்ளும்.
இதனால் பெரும்பான்மையான வெப்பம் வீட்டிற்குள் இறங்காது.
வீடும் குளுமையாக இருக்கும்.

அதேபோல அதிக பிரகாசமான வண்ணம் நிறைந்த பொருட்கள் வீட்டினுள் இருந்தாலும் அது அதிகளவு வெப்பத்தை எடுத்துக் கொள்ளும்.
அதனால் அதனைத் தவிர்த்து விட்டு பிரகாசம் குறைந்த வண்ணம் உள்ள பொருட்களை வீட்டினுள் வைக்கலாம்.
குறிப்பாக நமது வீடுகளில் பயன்படுத்தும் ஸ்கிரீனானது எப்பொழுதும் பிரகாசமாக தான் இருக்கும்.

அதனை சற்று குறைந்த நிற வண்ணத்தில் இருப்பதை பயன்படுத்தும் பொழுது வீட்டினுள் வெப்பம் உண்டாகுவதை தவிர்க்கலாம்.
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் பிடித்துக் கொள்ள வேண்டும்.
அதனை ஃபேனுக்கு கீழாக வைக்கும் பொழுது அந்த அறை முழுவதும் குளுமையாக இருக்கும்.

1 முறை இதை மட்டும் தடவுங்கள் சேற்றுப்புண் இருக்கும் இடம் தெரியாமல் போகும்!!

0

1 முறை இதை மட்டும் தடவுங்கள் சேற்றுப்புண் இருக்கும் இடம் தெரியாமல் போகும்!!

சேற்றபுண்ணானது அதிகமாக தண்ணீரில் இருப்பவர்களுக்கு வந்துவிடும்.மழைக்காலங்களில் இந்த பாதிப்பானது அதிகப்படியானவருக்கு இருக்கும்.ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்களுக்கு கால் விரல்களில்  ரத்தப்போக்கானது சீராக இல்லாமல் இருப்பதால் சேற்றுப்புண் வந்துவிடும். சேற்றுப்புண் வந்து விட்டால் அந்த இடம் மருத்து போவது போல் ஆகிவிடும்.

போதுமானளவு ஹீமோகுளோபின் மற்றும் இரும்புச்சத்து இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.ஒரு சிலருக்கு இது புண்ணாகவே மாறி அரிப்பு எரிச்சல் போன்றவை உண்டாகிவிடும்.அதேபோல தண்ணீரை வெதுவெதுப்பாக்கி அதில் உப்பு சேர்த்து கால்களை 10 நிமிடம் வைத்து வர கிருமிகள் எல்லாம் அழிந்து காலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.மேலும் காலணி மற்றும் ஷூகளை மிகவும் இறுக்கமாக போடுவதையும் தவிர்க்க வேண்டும்.

வீட்டு வைத்தியம் முறையில் சேற்றுப் புண்ணை சரி செய்வது எப்படி:

தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு செய்து அதில் கற்பூரம் ஒன்றை போட வேண்டும்.
கால் விரல்களை நன்றாக துடைத்து விட்டு இதை தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.

இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு மருதாணியுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை சேற்றுப்புண் உள்ள இடத்தில் தடவலாம்.
இவ்வாறு செய்து வந்தால் உடல் உஷ்ணம் மற்றும் சேற்றுப்புண் இதை இரண்டும் சரி செய்ய உதவும்.

இதேபோல தேன் மற்றும் மஞ்சள் கலவையை சேற்றுப்புண் உள்ள இடத்தில் போடலாம்.இதையெல்லாம் செய்துவர சேற்றுப்புண் விரைவில் குணமாகும்.

உடல் சூட்டால் குழந்தையின்மையா!! இதை மட்டும் செய்யுங்கள் அடுத்த மாதமே கர்ப்பம் தான்!!

0

உடல் சூட்டால் குழந்தையின்மையா!! இதை மட்டும் செய்யுங்கள் அடுத்த மாதமே கர்ப்பம் தான்!!

பெண்கள் அதிகப்படியானவர்கள் இந்த உடல் சூடு பிரச்சனை இருக்கும். இதனால் வெள்ளைப்படுதல் என தொடங்கி கர்ப்பம் தரிப்பது வரை தாமதம் ஏற்படலாம். எப்பொழுதும் பெண்கள் மட்டுமின்றி அனைவரும் உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்துக் கொள்வது கட்டாயம். இல்லையென்றால் அது பல உபாதைகளுக்கு வழி வகுத்து விடும்.

அந்த வகையில் பெண்கள் உடல் வெப்பமானது அதிகரித்து விட்டால் உடல் ரீதியான பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.அதிலும் திருமணம் ஆன பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பது என்பது பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கிவிடும்.பொதுவாக 100 டிகிரிக்கும் கீழ் இருப்பது தான் உடலின் சரியான சமநிலை. இதற்கு மேலாக இருந்தால் உடல் சூடு அதிகரித்து விட்டது என்று அர்த்தம்.

உடலில் உள்ள சூட்டை குறைத்து விரைவில் கருத்தரிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.உடல் சூடு அதிகரித்து விட்டால் மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் தோல் வியாதி போன்றவை உண்டாகும்.குறிப்பாக பெண்களுக்கு அந்தரங்க பகுதிகளில் வலி போன்றவையும் உண்டாகும்.பொதுவாகவே பெண்களுக்கு அந்தரங்க பகுதியில் பி எச் லெவல் எப்பொழுதும் அதிகமாக தான் இருக்கும்.

அதனை சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். சமநிலைக்கு மீறி பி எச் லெவல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பெண்களால் கருத்தரிக்க முடியாது. அந்த உயிரணுக்கள் கர்ப்பப்பையை அடைவதற்கு முன்பாகவே இங்கு சுரக்கும் அமிலத்தன்மை அதனை அழித்துவிடும்.உயிரணுக்கள் ஆனது கர்ப்பப்பையில் 72 மணி நேரம் உயிருடன் இருக்கும்.ஆனால் இந்த அமிலத்தன்மையால் அதால் அதிக மணி நேரம் கர்ப்பப்பையில் இருக்க முடியாது.

இதனால் பெண்களால் கருத்தரிக்க தாமதமாகும். இதனை கட்டுப்படுத்த பெண்கள் அதிக அளவு தண்ணீர் மற்றும் உடலை எப்பொழுதும் நீறோற்றமாக வைத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் அதேபோல வெளியில் கிடைக்கும் துரித உணவுகள் போன்றவற்றை எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். உடல் சூட்டை குறைப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். கோழி இறைச்சி போன்றவற்றை எடுத்துக் கொள்வதும் தவிர்க்க வேண்டும்.

உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி:
சிறிதளவு நல்லெண்ணையை எடுத்து சூடு படுத்திக் கொள்ள வேண்டும்.
இதில் இரண்டு பூண்டு மற்றும் ஒரு மிளகு சேர்க்க வேண்டும்.
என்னை ஆரியதும் இதனை கால் கட்ட விரல்களில் மட்டும் தடவ வேண்டும்.
கட்டை விரல்கள் தடவி 20 நிமிடத்திற்குள் அதனை துடைத்து எடுத்து விட வேண்டும்.
இவ்வாறு செய்து வர உடல் உஷ்ணமானது குறையும்.

உடலுக்கு புத்துணர்ச்சியை அள்ளித் தரும் ஜல்ஜீரா பானம்! இதை எப்படி தயார் செய்வது? 

0
உடலுக்கு புத்துணர்ச்சியை அள்ளித் தரும் ஜல்ஜீரா பானம்! இதை எப்படி தயார் செய்வது?
தற்பொழுதைய காலத்தில் அனைவருக்கும் புத்துணர்ச்சி என்பது நிமிடத்திற்கு நிமிடம் தேவைப்படும் ஒன்றாக மாறிவிட்டது. வேலைக்கு செல்பவர்கள், பள்ளி செல்பவர்கள், வெளியில் செல்பவர்கள் என்று அனைவரும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அந்தந்த வேலை சரியாக நடக்கும்.
புத்துணர்ச்சியாக இல்லாமல் நாம் சோர்வுடன் எடுக்கும் அனைத்து காரியங்களும் தடைபட்டு போகும். புத்துணர்ச்சி என்றாலே ஒரு சிலருக்கு நியாபகம் வருவது டீ அல்லது காபி. இந்த டீ அல்லது காபிக்கு பதிலாக ஜல்ஜீரா பானம் தயார் செய்து குடித்து வந்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் எடுத்த செயல்களை எளிமையாக செய்து முடிக்கலாம். இந்த ஜல்ஜீரா பானத்தை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* புளிச் சாறு
* சீரகப் பொடி
* இஞ்சி சாறு
* எலுமிச்சை சாறு
* உப்பு
* புதினா இலைகள்
செய்முறை:
முதலில் ஒரு புளியை கரைத்து ஒரு டம்ளர் அளவு புளி கரைசல் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் கால் ஸ்பூன் அளவு சீரகப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் அளவுக்கு இஞ்சி சாறு, ஒரு ஸ்பூன் அளவுக்கு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு குடிக்கலாம்.
ஜல்ஜீரா பானம் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பது மட்டுமில்லாமல் பசியை தூண்டுகிறது. செரிமானப் பிரச்சனையை சரி செய்கின்றது. மேலும் உடலை நன்கு நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும் உதவி செய்கின்றது.

உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? பூண்டை இப்படி சாப்பிடுங்க! 

0
உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? பூண்டை இப்படி சாப்பிடுங்க!
உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்கள் அவர்களுடைய அதிகப்படியான உடல் எடையை வைத்துக் கொண்டு படாதபாடு படுவார்கள். மேலும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பல வகையான முயற்சிகளை எடுப்பார்கள்.
அதாவது ஜிம் செல்வது, டயட் இருப்பது, பலவித மருந்துகளை உட்கொள்வது, மூலிகை மருந்துகளை உட்கொள்வது, நடைபயிற்சி என்று பல முயற்சிகளை மேற் கொள்வார்கள். என்ன செய்தாலும் பலன் இருக்கும். ஆனால் இருக்காது. இந்த பதிவில் பூண்டை வைத்து உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
பூண்டு இயற்கையாகவே மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள். இந்த பூண்டை வைத்து நாம் வாயுத் தொல்லையை சரி செய்யலாம். அதே போல உடல் எடையை குறைக்கவும் பயன்படுத்தலாம். பூண்டில் அல்லிசின் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க செய்யும். இந்த பூண்டை மேலும் ஒரு பொருளுடன் சேர்த்து சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்கலாம். அது என்ன பொருள் எவ்வாறு சாப்பிடுவது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* தேன்
* பூண்டு
செய்முறை:
முதலில் 15 பல் பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு. கண்ணாடி ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த கண்ணாடி ஜாரில் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கண்ணாடி ஜாரில் பூண்டு பற்கள் அனைத்தும் மூழ்கும் அளவுக்கு தேன். சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் இதை மூடி வைத்து விடவேண்டும். இரண்டு நாட்கள் கழிந்து நன்கு ஊறிய பின்னர் இதை சாப்பிடலாம். இதை பிரிட்ஜ்ஜில் வைத்து தினமும் காலை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடை குறையத் தொடங்கும்.

வெயிலுக்கு இதமாக உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி சர்பத்! எப்படி செய்வது என்று பாருங்க! 

வெயிலுக்கு இதமாக உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி சர்பத்! எப்படி செய்வது என்று பாருங்க!
வெயில் காலம் வந்துவிட்டாலே அனைவரும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக் கூடிய உணவுகளை வாங்கி சாப்பிடுகின்றனர். தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். மேலும் உடல் சூடும் குறையும். அந்த வகையில் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக் கூடிய வெள்ளரிக்காயை வைத்து சர்பத் எவ்வாறு செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளரிக்காய்
* இஞ்சி
* கொத்தமல்லி
* கற்றாழை
* பெருங்காயம்
* உப்பு
* மோர்
செய்முறை:
முதலில் ஒரு மிக்சி ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் வெள்ளரிக்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதில் தோல் நீக்கிய இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் கற்றாழை ஜெல் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் கொத்தமல்லி இலைகளை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இதில் பெருங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கூழ் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக இதில் மோர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிது வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் வேண்டும் என்றால் ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொண்டு குடிக்கலாம். இதனால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.