Home Blog Page 51

பாஜகவுடன் இணையும் திமுக கூட்டணி கட்சி.. செம்ம ஷாக்கில் ஸ்டாலின்!!

0

MDMK BJP DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் திராவிட கட்சியான அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையும் , ஆளுங்கட்சியாக உள்ள திமுக ஒரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பிலும் மக்களை சந்திக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மேலும் மூன்றாம் நிலை கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தீவிர ஆலோசனையில் உள்ளன. தவெகவின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை.

இந்நிலையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஸ்டாலினிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக திமுக கூட்டணிக் கட்சிகள் பிரியும் அபாயமும் உள்ளது என்று மதிப்பிடப்படுகிறது. இந்நிலையில் விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் நேரடியாக ஆட்சி பங்கை வலியுறுத்தி வரும் சமயத்தில், திமுக கூட்டணியிலிருக்கும் மதிமுக மறைமுகமாக சில வேலைகளை செய்து வருகிறது. இதனை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் மதிமுகவிலிருந்து பிரிந்த மல்லை சத்யா.

புதிய கட்சி துவங்க போவதாக அறிவித்த இவர், வைகோவிற்கு மத்திய அமைச்சராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால் அவர் பாஜக உடன் கூட்டணி சேர விரும்புகிறார் என்ற தகவலை கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து ஸ்டாலினுக்கு பேரிடியாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தற்சமயம் பாஜக மட்டுமே இருக்கும் நிலையில், பாமக, தேமுதிக உடன் கிட்ட தட்ட கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் மதிமுகவும் அதிமுக உடன் சேர்ந்தால் இந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அதிமுகவில் குடும்ப அரசியல்.. இபிஎஸ்யை மறைமுகமாக சாடிய முக்கிய அமைச்சர்!!

0

ADMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பீகாரின் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். 7வது முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்று திமுக கடுமையாக போராடி வரும் நிலையில், இந்த முறையாவது வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும்  என்று அதிமுக பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்துள்ளது. அதிமுக தனது பிரதான அரசியல் எதிரியான திமுகவை கடுமையாக விமர்சித்து வருவது வழக்கம்.

அந்த விமர்சனத்தில் அவர்கள் மிக தீவிரமாக முன் வைப்பது, திமுகவின் குடும்ப அரசியலை தான். இதனை பலரும் விமர்சித்து வரும் நிலையில், அதிமுகவில் குடும்ப அரசியல் இல்லை என்று மக்கள் நம்பி வந்தனர். இந்நிலையில் அதிமுகவிலும்  குடும்ப அரசியல் உள்ளது என்று கூறி இபிஎஸ்யை மறைமுகமாக சாடியுள்ளார் அதிமுகவின் துணை பொது செயலர் கே.பி முனுசாமி.

அதிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், பீகாரில் நடைபெற்ற தேர்தல் மூலம் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது போல, 2026 தேர்தல் மூலம் தமிழகத்திலும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து செங்கோட்டையனின் கருத்துடன் ஒத்துப் போகிறது என்று பலரும் கூறி வருகின்றனர். செங்கோட்டையன் ஏற்கனவே ஒரு முறை அதிமுகவில் இபிஎஸ்யின் மகன் மற்றும் மைத்துனரின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. கூடிய விரைவில் இதுவும் குடும்ப அரசியலாக மாறும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தை ஆரம்பித்த மல்லை சத்யா.. சத்தமின்றி வைகோ செய்த சம்பவம்!!

0

MDMK: தமிழக அரசியல் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமில்லை. அதிலும் தற்சமயம் சட்டமன்ற தேர்தல் நெருங்க இருக்கிறது. இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் நடந்து வருகின்றன. அதில் முதலாவதாக பார்க்கப்படுவது விஜய்யின் அரசியல் வருகை என்றே கூறலாம். விஜய் வருகையை சுற்றியே சுழன்று கொண்டிருக்கும் அரசியல் களம், தற்போது புதிய கட்சியின் வருகையையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. மதிமுகவிலிருந்து வைகோவால்  நீக்கப்பட்ட மல்லை சத்யா நவம்பர் 20 ஆம் தேதி கட்சி துவங்க போவதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

இந்த செய்தி புதிய திருப்பத்தை ஏற்படுத்தியதோடு, பல்வேறு கேள்விகளுக்கும் வழிவகுத்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மல்லை சத்யா பல திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். துரை வைகோ மீது குற்றம் சுமத்திய அவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் வைகோவின் குடும்பத்திற்கு 250 கோடி மதிப்பில் சொத்து உள்ளது என்றும், வைகோவின் உறவினர்கள் மதுபான ஆலை  வைத்திருப்பதால் அதன் மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும், ராமதாஸ் அன்புமணியை ஏன் கட்சியில் சேர்த்தோம் என்று வருத்தபடுவதை போல, வைகோவும் துரை வைகோவை நினைத்து வருத்தப்படுவார் என்று அவர் எச்சரித்தார். மல்லை சத்யாவின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு ஊழல் புகார்களை எழுந்த நிலையில், திமுக கூட்டணியிலிருகும் மதிமுக மீது மல்லை சத்யா கூறிய கூற்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவரின் புதிய அரசியல் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தவெகவுக்கு தாவும் காங்கிரஸின் முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் அரசியல் களம்!!

0

TVK CONGRESS: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களம்  விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த விறுவிறுப்புக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது தமிழ்  திரையுலகின் பிரபல நட்சத்திரமாக அறியப்பட்ட விஜய்யின் அரசியல் வருகை. தவெகவின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சோகம் நாட்டையே உலுக்கியது. மேலும் இது விஜய்யின் அரசியல் வாழ்க்கையை அடியோடு சறுக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்த சம்பவம் குறித்து மாநில அரசு தொடங்கி மத்திய அரசு வரை அனைவரும் விசாரித்து வந்தனர். எந்த ஒரு சம்பவத்திற்கும் இவ்வளவு ஆர்வம் காட்டி அதிகாரியை நியமிக்காத தமிழக அரசு கரூர் சம்பவத்தில் மட்டும் உடனடியாக தனி நபர் ஆணையத்தை அமைத்தது. விஜய் தனது கொள்கை எதிரி என்று கூறி வந்த பாஜகவும் விஜய்க்கு உதவுவதாக கூறி பாஜக எம்பி ஹேமாமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வந்ததது.  இதனால் பாஜக தவெக கூட்டணியில் சேர்க்க முயற்சிக்கிறது என்ற சந்தேகமும் எழுந்தது.

ஆனால் விஜய்க்கு  மிகவும் நெருக்கமான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கரூர் சம்பவம் குறித்து எந்த கருத்தும்  பதிவிடாமல் இருந்தார். அது மட்டுமல்லாமல் இந்த விவகாரத்தில் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு பதிய பட்ட போது, விஜய் மீது வழக்கு போடப்படவில்லை. தமிழக அரசின் இந்த செயல் திமுக கூட்டணியிலிருக்கும் ராகுலின் கட்டளை என்று பலரும் கூறி வந்தனர். இதன் காரணமாக தவெக-காங்கிரஸ் கூட்டணி திரை மறைவில் பேசப்படுகிறது என்ற தகவலும் பரவியது.

விஜய், காங்கிரஸுடன் நெருக்கமாக இருப்பதால் இந்த கூட்டணி சாத்தியம் என்ற கருத்தும் வலுப்பெற்றது. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், செல்வப்பெருந்தகை ஒரு கருத்தை கூறியுள்ளார். தவெக குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மக்களுக்காக தொடர்ந்து போராடும் தமிழக  வெற்றிக் கழகத்தை  பாராட்டுகிறோம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கூற்று தவெக-காங்கிரஸ் கூட்டணிக்கு அடித்தளமிட்டது போல் உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

எடப்பாடிக்கு ஷாக்!! விஜய்யுடன் கூட்டணி.. நடந்தே தீரும்!! செங்கோட்டையன் பளிச் பதில்!!

0

ADMK: எம்ஜிஆர் காலகட்டத்திலிருந்து கட்சியிலிருக்கும் செங்கோட்டையன் தற்போது நீக்கப்பட்டது பெரும்பாலான நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியது. முதலமைச்சர் பொறுப்பு வரை இவர் பெயரும் ஒரு காலத்தில் பரிந்துரை செய்யப்பட்டது தான். அதன் பிறகு எடப்பாடியின் மவுசு அதிகரிக்கவே கட்சியில் இவரை ஓரங்கட்ட ஆரம்பித்தனர். அதிலும் சமீப நாட்களாக இவருக்கு பின்வந்த அமைச்சர்களுக்கு கொடுத்த மரியாதை கூட தனக்கு கொடுக்கவில்லை என்பதுதான் இவரின் புலம்பல்.

நாளடைவில் எடப்பாடி சரிப்பட்டு வர மாட்டார் என எண்ணி, ஓபிஎஸ் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களை கூட்டணியில் இணைக்க வேண்டும் என்ற குறள் ஓங்க ஆரம்பித்தது. அனைவரும் ஒரு வரிசையில் இருக்க இவர் மட்டும் தனித்து நிற்கும் போது எடப்பாடி கட்சிக்குள் வைத்திருப்பது சாத்தியமற்ற ஒன்றுதான். அந்த வகையில் செங்கோட்டையனை அனைத்து பதவிகளிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதன்பிறகு பாஜக, எடப்பாடி மீது கோபமடைந்தது ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுகவில் முக்கிய தலைகள் அனைவரும் பிரிந்து செல்வது கட்சிக்கு நல்லதல்ல என அறிவுரை சொல்ல ஆரம்பித்தது. அதேபோல கட்சியிலிருந்து வெளியானவர்களிடமும் பேச முன் வந்தது. அப்படி செங்கோட்டையனை அழைத்து பல நிபந்தனைகளை பாஜக போட்டதாக தகவல்கள் வெளியானது. இது ரீதியாக செங்கோட்டையனிடம் கேட்டபோது, எனக்கு யாரும் எந்த நிபந்தனையும் போடவில்லை.

ஒருமுறை அதிமுக சார்பாக எனக்கு அழைப்பு வந்தது நான் சென்று அமித்ஷா வை சந்தித்தேன். மற்றொரு முறை நானாகத்தான் சென்று சந்தித்தேன். நாங்கள் என்ன பேசினோம் என்றெல்லாம் பேட்டியில் கூறினால் அரசியல் நாகரீகமாக இருக்காது. கூடிய விரைவில் ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும் என கூறினார். மேற்கொண்டு அதிமுகவில் இணைவீர்களா?? என்று கேட்டதற்கு, கட்சி மேலிடம்தான் அதன் முடிவெடுக்கும்.

அதுமட்டுமின்றி நீங்கள் சசிகலா தினகரன் மூவரும் சேர்ந்து விஜய்யுடன் கூட்டணி வைக்க சாத்தியமுள்ளதா என்ற கேள்வி எழுப்பி உள்ளனர். இது ரீதியாக இப்போது எந்த கருத்தையும் சொல்ல இயலாது எனக் கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார். அதிமுக பாஜக தரப்பிலிருந்து எந்த ஒரு எதிர் பதிலும் இல்லாத போது விஜய் பக்கம் இவர்கள் திரும்ப அதிக வாய்ப்புள்ளதாம்.

திமுக சாம்ராஜ்யத்தை ஒட்டு மொத்தமாக நொறுக்க போகுது.. அதிமுக-வுடன் இணைந்த பழைய கை!!

0

ADMK DMDK: அதிமுக மீது தேமுதிக மிகவும் அதிருப்த்தியான நிலையில் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் தனது மகனுக்கு எம்பி சீட் தராததுதான். மகனை முக்கிய பொறுப்பில் உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று பிரேமலதா மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் அதற்கு எடப்பாடி இடம் கொடுக்காததால் நாங்கள் கூட்டணியில் இல்லை என்று கூறினார். நாங்கள் யாருடன் கூட்டணி வைப்போம் என்பது குறித்து ஜனவரியில் நடக்கும் மாநாட்டிற்கு பிறகு தான் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தனர்.

ஆனால் அதிமுக தேமுதிக-வை அதிமுக விடுவதாக தெரியவில்லை. எம் பி சீட் தர மறுத்தும் மறுநாளே அடுத்த வருடம் தருவதாக ஒப்பந்தம் ஒன்றை வெளியிட்டனர். ஆனால் பிரேமலதா இதனை துளிகூட ஏற்கவில்லை. இதனிடையே, பாஜக திமுக என பலரும் கூட்டணி குறித்து அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பலமிழந்து நிற்கும் அதிமுகவில் தேமுதிக இல்லையென்றால் மாற்றுக் கட்சியினரை எல்லாம் சமாளிப்பது மிகவும் கடினம்.

வெற்றி வாகை சூடுவதிலும் சந்தேகம் வந்துவிடும். இதனால் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த்திடம் அதிமுக முக்கிய புள்ளிகள் பேச்சுவார்த்தை நடத்தி தான் வருகின்றனர். அந்த வகையில் மதுரை தனியார் மண்டபம் ஒன்றில், அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் பிரேமலதாவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு கூட்டணி குறித்துதான் என அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். மாநாட்டை முடித்த பிறகு அல்ல மாநாட்டிற்கு முன்பே அதிமுகவில் தான் தங்களது கூட்டணி என்பதை பிரேமலதா வெளிப்படையாக சொல்லாமல் இதன் மூலம் காண்பித்து விட்டார் என்றும் பேசுகின்றனர்.

2026 ஐ ஒரு கை பார்த்துவிடலாம்.. விஜய்யை கூட்டாளியாக்க ராமதாஸ் பேச்சு!! வெளியான அரசியல் சூழ்ச்சி!!

0

TVK PMK: தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கரூர் அசாம்பாவிதத்திற்கு பிறகு அவரின் வருகை ஆளும் கட்சியை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இதை வைத்து பலரும் அவருடன் நெருக்கம் கட்ட முயற்சித்து வருகின்றனர். அதிலும் அதிமுக, தனித்தனி ஒப்பந்தம் போட்டு கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று கூட விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இதில் இரு சவால்கள் உள்ளது.

முதலாவது அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது, இரண்டாவது தலைமை யாருக்கு என்பதுதான். தற்போதைக்கு இதன் முடிவு எட்டப்படாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாற்று கட்சியினர் அவருடன் கூட்டணி வைக்க முயற்சிக்கின்றனர். அந்த வகையில் பாமக கட்சியை விட்டு நீக்கிய அன்புமணி ராமதாஸ் அவரை தொடர்பு கொண்டுள்ளாராம். எனது அப்பாவை நம்பி அரசியலில் எதையும் செய்ய முடியாது, உங்களுடன் சேர்ந்தால் பலம் வாய்ந்த கூட்டணியாக மாறி ஆளும் கட்சி உள்ளிட்டவர்களை எதிர்க்கலாம். எனக்கூறி உள்ளாராம்.

கட்சியை நிறுவின தனது அப்பாவையே எதிர்த்து நிற்கும் சமயத்தில் பெரும் ஆதரவு இவருக்கு தேவைப்படுவதோடு அவரின் முன் வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்று முனைப்பும் உள்ளது. இவையனைத்தும் குறைந்த கட்ட கால அளவில் நடக்க வேண்டுமென்றால் நல்ல கூட்டணியுடன் அச்சாரம் போட வேண்டும். அந்த காரணத்தினால் திமுகவை தனது எதிரியாக நினைக்கும் விஜய்யை கூட்டாளியாக மாற்றிக் கொள்ளலாம் என்று ரகசிய பேச்சுவார்த்தையை ராமதாஸ் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசியலில் புதிய திருப்பம்.. மல்லை சத்யா போட்ட வெடி!! அனல் பறக்கும் தேர்தல் களம்!!

0

MDMK: இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் அதன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் மத்திய அரசு அமல்படுத்திய SIR பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை அதிமுக ஆதரித்தும், திமுக எதிர்த்தும் வருகிறது. இந்நிலையில் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக  நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்துள்ளார். இவரது கட்சியான தவெக 2026 தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்ததிலிருந்தே தேர்தல் களம் மேலும் வேகமெடுத்துள்ளது.

அது மட்டுமல்லாமல் இவரது வருகை திராவிட கட்சிகளையே ஆட்டம் காண வைத்து விட்டது என்றே சொல்லலாம். விஜய்யின் அரசியல் வருகையிலிருந்தே மீள முடியாமல் தவிக்கும் அரசியல் களம், தற்போது மற்றொறு கட்சியின் அரசியல் வருகையையும் எதிர் நோக்கி காத்திருக்கிறது. மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்த மல்லை சத்யா நவம்பர் 20 ஆம் தேதி புதிய கட்சி தொடங்க போவதாக அறிவித்திருக்கிறார்.

வைகோ உடனான கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இவர் சட்டசபை தேர்தல்களில் தொடர் தோல்விகளை தழுவினாலும் கட்சிக்காக அயராது உழைத்தவர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் வைகோவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் இவர் புதிய கட்சி தொடங்க போவதாக வெளியான அறிவிப்பு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதிய கட்சி தொடங்கிய உடன், இவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

கூட்டணிக்கு அஸ்திவாரமிட்ட ஆர்.பி. உதயகுமார்.. இறுதி முடிவை எட்ட போகும் தேமுதிக!!

0

ADMK DMDK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாக செயல்பட தொடங்கிவிட்டது. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் எந்தெந்த கட்சிகளை கூட்டணியில் சேர்க்கலாம் என்று ஆலோசித்து வருகின்றன. அந்த வகையில் பாமக அதிமுக கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டி வரும் சமயத்தில், தேமுதிக திமுக, அதிமுக என இரண்டு பக்கமும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. மேலும் அனைத்து செய்தியாளர் சந்திப்பிலும் எங்களது கூட்டணி வெற்றி கூட்டணியாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்து வந்தார் பிரேமலதா.

இந்நிலையில் தேமுதிக சார்பில் இல்லம் தேடி உள்ளம் நாடி என்ற பிரச்சார பயணமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்ளும் போது, அங்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பிரேமலதாவை சந்தித்து பேசினார். இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆர். பி உதயகுமார் கூறினாலும், இதன் பின்னாலும் அரசியல் ஒளிந்திருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில், தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் தருவதாக கூறி கடைசி நேரத்தில் இல்லையென்று கூறியதால், பிரேமலதா இபிஎஸ் மீது கடும் கோபத்தில் இருந்தார்.

இதன் காரணமாக இந்த தேர்தலில் ராஜ்ய சபா சீட்டை எந்த கட்சி ஒதுக்குகிறதோ அந்த கட்சியுடன் தான் கூட்டணி என்று பிரேமலதா உறுதியாக இருந்தார்.  தற்போது அதிமுக பலமிழந்து உள்ளதால் தேமுதிகவின் கூட்டணியையும் தவற விட்டால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்த இபிஎஸ் சென்ற தேர்தல் போல இப்போது நடக்காது என்ற வாக்குறுதியை பிரேமலதாவிற்கு அளித்திருக்கிறார் என்ற அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக இன்னும் சிறிது நாட்களில் அதிமுக- தேமுதிக கூட்டணியும் உறுதி செய்யப்படும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். ஆர்.பி. உதயகுமாரின் இந்த சந்திப்பும் அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

தவெகவுக்கு அட்வைஸ் செய்த மதிமுக நிர்வாகி.. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு!!

0

MDMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தேர்தல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும் பட்சத்தில், முதன்மை காரணமாக அறியப்படுவது விஜய்யின் அரசியல் வருகை. இவரின் அரசியல் பிரவேசம், மாநில கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் யாருடன் கூட்டணி அமைப்போம் என்ற செய்தியை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளார். இதனாலேயே இவரின் கூட்டணி குறித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

விஜய்யின் பிரச்சாரம் அனைத்திலும் கூடும் கூட்டத்தை கண்ட கட்சி தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும் அது வெறும் ரசிகர்களின் கூட்டம், தொண்டர்களின் கூட்டம் அல்ல என்று கூறி வந்தனர். இதனை கண்டு கொள்ளாத விஜய் அவரது தனித்த பாதையில் பயணித்து கொண்டிருந்தார். மேலும் அவர் எதிர்க்கும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. மதிமுகவின் முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ அவர்கள், விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு கருத்தை கூறியுள்ளார்.

விஜய் குறித்து பேசிய அவர், விஜய் மிகப்பெரிய திரை நட்சத்திரம். அவருக்கு பின்னால் லட்சகணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர் மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் இளைஞர்கள் அவரது பின்னால் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து, விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது போல உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், திமுக கூட்டணியிலிருக்கும் மதிமுக திமுகவை அரசியல் எதிர் என்று கூறிய விஜய்க்கு ஆதரவு அதிகம் உள்ளது என்று பேசியிருப்பது திமுக கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.