Home Blog Page 5622

+2 பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது? – அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு தாமதமாகவே விடைத்தாள் திருத்தும் பணி துவங்கப்பட்டது. சென்னை உட்பட கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளின் விடைத்தாள்கள் வேறு மையத்திற்கு மாற்றப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகிறது.

வரும் ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பள்ளி கல்வித் துறை மற்றும் தேர்வு துறை அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பொதுவாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே மாதத்தில் வெளியாவது வழக்கம். அதே போல் 10ம் வகுப்புக்கான முடிவுகள் மே இறுதி வாரத்திலோ, ஜூன் மாதத்திலோ வெளியாகும்.

இந்த ஆண்டு 12ம் வகுப்பை பொருத்த வரை விடை தாள் திருத்தும் பணியே தற்போது தான் நடைபெற்று வருகிறது, 10ம் வகுப்பு தேர்வே இன்னும் துவங்காத நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

விரைவில் 11 இலக்க எண்களாக மாறவிருக்கும் அலைபேசி எண்கள்!

1990களின் இறுதியில் இந்தியாவில் மொபைல் ஃபோன் எனப்படும் அலைபேசி பயன்பாடு அதிகரிக்க துவங்கியது. அலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப காலத்தில் ஸ்கைசெல், ஆர்பிஜி உள்ளிட்ட விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலான ஆப்பரட்டர்களே இருந்தனர். அப்போது 98400, 98410, 98401, 98411 என ஆரம்பிக்கும் எண்களே அலைபேசி எண்களாக இருக்கும். இன்கமிங், பகுதியை என இரண்டுக்கும் கட்டணம் வசூலிக்கபட்ட அந்த சமயத்தில் பணக்காரர்கள் மட்டுமே அலைபேசி பயன்படுத்தக் கூடும் என்ற நிலை இருந்து வந்தது.

நாளடைவில் இன்கமிங் அழைப்புகளுக்கு கட்டணமில்லை என நிலை மாற மெல்ல நடுத்தர வர்க்கத்தினரும் அலைபேசி பயன்படுத்த துவங்கினர். இதனையடுத்து ஆப்பரேட்டர்களும் அதிகரித்தனர். இதனால் சந்தாதாரர்களுக்கு அளிக்கப்படும் முதல் 5 இலக்க எண்களை ஆப்பரேட்டர்கள் அடிப்படையில் ட்ராய் ஒதுக்கியது.

2000தின் மத்தியில் ரிலயன்ஸ் 501 ரூபாய்க்கு மொலை ஃபோன் அறிமுகம் செய்தது பெரும் புரட்சியாக அமைந்தது. அதனால் மளமளவென அலைபேசி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இன்று அலைபேசி வைத்திருக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற நிலை ஏறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் எனப்படும் டிராய், இந்தியாவில் உள்ள மொபைல் போன்களுக்கான 10 இலக்கு எண்ணை 11 இலக்கு எண்ணாக மாற்றுவதற்கு பரிந்துரை செய்துள்ளது.

தகவல் தொடர்பு மற்றும் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2050 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்ய சுமார் 2.6 பில்லியின் புது எண்கள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைப்பேசி இணைப்புகளின் தேவை எண்ணிக்கை அதிகரிப்பதே இந்த நடவடிக்கைக்கான முக்கிய காரணம் என்று டிராய் இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது.

இது குறித்து டிராய் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது வழங்கப்படும் 10 இலக்க எண்களுக்கு பதில், 11 இலக்க எண்களாக வழங்கலாம். தற்போது லேண்ட் லைன் மூலம் அலைப்பேசி தொடர்பு கொள்ளும் போது 10 இலக்க எண்களுக்கு முன் பூஜ்யத்தைப் பயன்படுத்தலாம். இப்படி 11 இலக்க எண்களாக மாற்றும் போது புதிய தொடர்பு எண்கள் வழங்குவது எளிதாக இருக்கும்.”

இந்த கொள்கைப்படி, 11 இலக்க எண்கள் ஒதுக்கப்பட்டால், 1000 கோடி தொடர்பு எண்கள் புதிதாக வழங்க முடியும். அதில் இந்தியாவின் தேவை 70 சதவீதம் பூர்த்தியாகும்.

மேலும், தரவு பயணப்பாட்டிற்கு (டாங்கிள் இணைப்புகளுக்கு) மட்டும் பயன்படுத்தும் எண்களை 10 இலக்கங்களிலிருந்து 13 இலக்க எண்களாக வழங்கவும் பரிந்துரைத்து உள்ளதாக டிராய் கூறியுள்ளது.

ஊட்டியில் தோன்றிய வெட்டுக்கிளி – விஞ்ஞானி விளக்கம்

கடந்த சில தினங்களாக வட மாவட்டங்கள் கிராமத்து வயல்களில் கூட்டம் கூட்டமாக படையெடுத்த வெட்டுக்கிளிகளால் உணவு பயிர்கள் நாசமாகின. இதனால் இந்தியா முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என கூறப்பட்டு வந்த நிலையில் ஊட்டியிலுள்ள காந்தள் எனும் பகுதியில் இது வரை கண்டிராத வெட்டுக்கிளிகள் காணப்பட்டன. இதனால் மக்கள் அச்சமடைய, அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த வெட்டுக்கிளியைப் பாட்டிலில் அடைத்து மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தார்.

அதனை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆய்வுக்கு அனுப்பி வைத்தார் ஆட்சியர். இதனையடுத்து அந்த வெட்டுக்கிளியையும் காந்தள் பகுதியையும் ஆய்வு செய்த அதிகாரி மற்றும் விஞ்ஞானிகள் அங்கு காணப்பட்ட வெட்டுக்கிளி சிறு கொம்பு வெட்டுக்கிளி என்றும் இது குறித்து விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினர்.

இதனால் அப்பகுதி விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.

கொரானாவை விட பெரிய விஷக்கிருமி – காவல்நிலையம் இழுத்து மூடல்

சேலம் அருகே இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்தில் கைதாகியுள்ள நபருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

சேலம் மாவட்டம் சஞ்சீவராயன் பேட்டை அடுத்துள்ள தாதகப்பட்டியிலுள்ள லோகநாதன். அப்பகுதியைச் சேர்ந்த ஏழை பெண்கள் சிலரை பணத்தாசையை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்திருந்தான்.

இவனும், இவனது மனைவியும் கடந்த வெகு நாட்களாக பிரதீப், சிவா ஆகியோரின் உதவியுடன் வறுமையில் உள்ள பெண்கள், கணவனை இழந்து தனிமையில் உள்ள பெண்களை குறிவைத்து அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயற்சித்துள்ளனர்.
அதற்கு சம்மதிக்காத பெண்களை லோகநாதனின் மனைவியின் மூலமாக ஆபாசமாக படமெடுத்தும் லோகநாதன் சம்மதிக்காத பெண்களை மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் சேலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து லோகநாதன் மற்றும் அவரது நண்பர்களான பிரதீப், சிவா மூவரும் கைது செய்யப்பட்டனர்.
சேலத்தில் இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதன் பின்னணியில் யாருக்கெல்லாம் சம்மந்தம் இருக்கிறது என போலீஸார் விசாரித்து வந்துள்ளனர்.

பின்னர் அவர்களுக்கு காவல் நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு லோகநாதனுக்கு கொரானா தொற்று இருப்பதை கண்டறிப்பட்டு லோகநாதன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவனிடம் விசாரணை நடத்திய போலீசார் தனிமைப்படுத்தப்பட்டு சம்மந்தப்பட்ட மகளிர் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ” வச்சான் பாரு ஆப்பு ” என்பதற்கேற்ப குற்றவாளிக்கு கொரானா தொற்று இருப்பதைக் கண்டு மக்கள் நகைத்தனர். மேலும் லோகநாதன் போன்ற விஷக்கிருமிகளுக்கு தொற்று ஏற்பட்டு கொரானா தன் மதிப்பை இழந்து விட்டது எனவும் சிலர் கேலிக்கையாக பேசி வருகின்றனர்.

ரகசிய சினேகிதியுடன் மனைவியிடம் கையும் களவுமாக பிடிபட்ட கணவன்

0

“பேட்டரியே நிக்காத மொபைலுக்கு டியூயல் சிம்மா” – கணவனை நடு ரோட்டில் அடித்து உதைத்த மனைவி

சமீபத்தில் ‘உனக்கு நான் உழைச்சு கொட்டணும், குடும்பம் நடத்த வேற பொண்ணா’? ‘வசமாக சிக்கிய கணவன்’ ‘நடு ரோட்டில் துவைத்த மனைவி’யின் வீடியோ வைரலாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தெலுங்கானா மாநிலம் வாரங்கலை அடுத்த போத்தனகரில் துளசி என்கிற பெண்மணி வசித்து வந்தார். இவர் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். காடுகளில் பெண்சிங்கம் வேட்டையாடி வந்ததை எதுவும் செய்யாமல் சும்மா இருக்கும் ஆண் சிங்கத்திடம் கொடுக்க, ஆண் சிங்கமானது வேட்டையாடி வந்த உணவை குடும்பத்தில் உள்ள சிங்கங்களுக்கு பகிர்ந்து அளிக்குமாம். அதுபோல ஆண்சிங்கமான துளசியின் கணவன் சீனிவாஸ் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி அரசு வேலையில் இருப்பதால், அவருடைய சம்பளத்தில் வரும் பணத்தில் சுக வாழ்க்கையை அனுபவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கணவர் சீனிவாஸ் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். அதுகுறித்து துளசி விசாரித்தபோது, பீட் பஜார் எனும் பகுதியில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வரும் தகவலை அறிந்து அதிர்ந்து போனார். இதையடுத்து அந்த தகவலை உறுதி செய்து கொண்ட துளசி, உறவினர்களுடன் கணவன் இல்லற வாழ்க்கை நடத்தி வரும் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்குச் சென்று வீட்டின் கதவைத் தட்டிவிட்டு துளசி காத்திருந்த நிலையில், வெகு நேரமாக அவர் கதவைத் திறக்காமல் இருந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து சீனிவாஸ் கதவைத் திறந்த நிலையில், மனைவி துளசி ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். அதன்பிறகு வீட்டினுள் சென்ற துளசி, தனது கணவருடன் குடும்பம் நடத்தி வந்த பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்து இழுத்துச் சென்றார். அதன்பிறகு கணவரை அடித்து உதைத்த துளசி அவரது சட்டையைப் பிடித்து இழுத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த வீடியோ காணொளி வைரலாகி வருகிறது. சீனிவாஸிற்கு குழந்தை பாக்கியம் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளது குறிப்பிட தக்கது. சீனிவாஸின் செயலானது ” பேட்டரியே நிக்காத மொமைபைலுக்கு டியூயல் சிம்மா ” என்ற வசனத்திற்கேற்ப அமைந்துள்ளது என வீடியோவை பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது.

1000 வெட்டுகிளியை பிடித்தால் ஒரு குவாட்டராம்!

பெரும்பாலும் சமூகவலைத்தளங்களில் பலர் நேரம் செலவழிப்பதற்கு முக்கிய காரணம் மீம்ஸ் (Memes). இந்த மீமஸ் வந்தபிறகு சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகள், நாட்டு நடப்புகள் போன்றவற்றை காமெடியாக சித்தரித்து மீம்ஸ் கிரியேட்டர்கள், மீம்ஸ்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் கைப்புள்ள, கட்டதுரைக்கு கட்டம் சரி இல்ல, அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா என்று வித விதமாக நகைச்சுவை தலைப்புடன் பல பக்கங்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டனர். பெருபாலும் வடிவேல், விவேக் போன்றவர்கள் தான் இவர்களின் ஹீரோ.

இந்நிலையில் இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதை வைத்து ஒரு மீம்ஸ் கிரியேட்டர் வித்தியாசமான ஒரு மீம்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

“ஆயிரம் வெட்டுக்கிளியை புடிச்சிட்டு வந்தா ஒரு குவாட்டர் இலவசம் என்று சொல்லுங்கள் ஒரே நாளில் வெட்டுக்கிளியின் இனமே அழிந்துவிடும் ” இந்த மீம் சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தனது சினிமா காட்சியை வைத்து, நகைச்சுவையான கருத்துடன் சித்தரித்ததால் நடிகர் விவேக்கை இந்த மீம் மிகவும் கவர்ந்துள்ளது. இந்த மீம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து நகைச்சுவையாக ஒரு கமெண்ட் போட்டுள்ளார் நடிகர் விவேக். அதாவது “ஒரு படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்ரீங்க!! யாரை எல்லாம் ஓட்டுரீங்க!! “Memes பசங்க ஐடியா உள்ள பசங்க!!” என்றும் பாராட்டியுள்ளார்.

ஒரு குவாட்டருக்கு அவிச்ச முட்டை இலவசம் என்று அறிவித்த முதல் மாநிலமும் நாம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் உத்தரவை மீறி EMI எடுத்த வங்கி – போலீசில் புகார்

0

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் மார்ச் முதல் மே மாதம் வரை கடன் தவனை வசூலிக்க கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சலுகை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் இதனை பெரும்பாலான வங்கிகள் அதனை மதிக்கவில்லை என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை அம்பத்தூரை சேர்ந்த லாரி உரிமையாளர், தவணை தேதிக்கு முன்னரே ஐசிஐசியை வங்கி தனது கணக்கிலிருந்து தவனையை எடுத்துள்ளது என காவல்துறையில் புகாரளித்துள்ளார். அதில் தான் ஒவ்வொரு மாதம் 22ம் தேதி 65642 ரூபாய் தவனை செலுத்துவது வழக்கம் என்றும், தவனை சலுகை அறிவிக்கப்பட்டதையடுத்து வங்கியில் அந்த சலுகையை எடுக்க விண்ணிப்பித்திருந்ததாகவும் ஆனால் மே மாத தவனையை 5ம் தேதியே வங்கி எடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வங்கியிடம் புகாரளித்த போது பணத்தை திரும்ப செலுத்துவதாக சமாதானம் கூறியவர்கள் தொடர்ந்து இழுததடித்து வருவதையடுத்து தனது வங்கி கணக்கை வங்கி நிர்வாகம் தன்னிச்சையாக கையாளுவதாகவும், ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி செயல்படும் ஐசிஐசிஐ வங்கியின் அம்பத்தூர் கிளை மேலாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் யுவராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

ஜூன் 1 முதல் தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்கள் மாநிலத்துக்கு செல்லும் வகையில் ஷார்மிக் ரயில்கள் இயக்கப்பட்டன. அதனை தொடர்ந்து 20 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் வரும் ஜூன் 1ம் தேதியிலிருந்து 100 சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்திலிருப்பதால் ரயில் போக்குவரத்து தற்போதைக்கு வேண்டாம் என முதல்வர் பழனிசாமி கோட்டு கொண்டதால் தமிழகத்திற்கான ரயில்கள் அப்போது அறிவிக்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமில்லாத தமிழக நகரத்தினிடையே ரயில் போக்குவரத்தை துவங்க தமிழகத்தின் சார்பில் தென்னக ரயில்வேவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தற்போது இதற்கு அனுமதியளித்துள்ள தென்னக ரயில்வே ஜூன் 1ம் தேதி முதல் கீழ்கண்ட ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ரயில்கள் விவரம் :

  • கோயம்புத்தூர் – மயிலாடுதுறை ஜன சதாப்தி சிறப்பு ரயில்
  • மதுரை- விழுப்புரம் இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில்
  • திருச்சி – நாகர்கோவில் அதிவிரைவு ரயில்
  • கோயம்புத்தூர் – காட்பாடி இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில்

கோயம்புத்தூர்-மயிலாடுதுறை ஜன சதாப்தி சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை தவிர அனைத்து நாட்களும் இயக்கப்படும் என்றும் மற்ற மூன்று ரயில்கள் வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் பள்ளி பாட திட்டங்கள் குறைக்கப்படுகிறதா?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று இன்னும் சரி வர தெரியவில்லை.

தற்போதைக்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் பள்ளிகள் திறக்கப்படலாம் என கூறப்பட்டாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் நிலை நீடித்தால் ஆகஸ்ட் மாதம் கூட பள்ளி துவங்குவது சந்தேகம் தான்.

நமது கல்வியாண்டின் படி ஜூன் மாதத்தில் அடுத்த கல்வியாண்டு துவங்கிவிடும். செப்டம்பரில் குறிப்பிட்ட அளவு பாடங்கள் எடுத்து முடிக்கப்பட்டு காலாண்டு தேர்வுகள் நடத்தப்படும். ஆனால் தற்போதைய நிலவரப்படி செப்டம்பரில் தான் பள்ளிகள் திறக்கும் என்ற நிலை இருப்பதால் கல்வியாண்டிற்குள் எவ்வாறு பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு எடுத்து முடிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை பாடத் திட்டங்களை அப்படியே எடுத்து முடிக்க முயன்றாலும் அது மாணவர்களுக்கு பெரும் சுமையாக மாற வாய்ப்புள்ளது.

எனவே இது குறித்து விவாதித்து பரிந்துரைக்க பள்ளி இயக்குனர் தலைமையில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சிலர் பாடத்திட்டங்களைக் குறைக்கலாம் என்றும் சிலர் அவ்வாறு குறைத்து மாணவர்களுக்கு அடிப்படையை சொல்லி கொடுக்காமல் அடுத்த வகுப்பிற்கு அனுப்பினால் அது பாடங்களை புரிந்து கொள்வதில் அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாடத் திட்டங்களை குறைப்பதற்குப் பதில் கூடுதல் பாடங்கள் இருந்தால் அதை தவிர்த்து விட்டு மற்ற பாடங்களை எடுக்கலாம் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து சம்மந்தப்பட்ட கல்வியாளர்கள், ஆசிரியர்களின் பரிந்துரையை கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

இந்தியாவின் பெயரை மாற்ற உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

0

இந்தியாவில் அவ்வப்போது வித்தியாசமான பொது நல வழக்குகள் தொடுக்கப்படுவது வழக்கம். அதில் பெரும்பாலும் வழக்கு தொடுப்பவர்கள் தங்களை விளம்பரப்படுத்தும் நோக்கிலேயே அந்த வழக்கை தொடர்வார்கள். அப்படி கண்டறியப்படும் வழக்குகளுக்கு நீதிபதிகள், நீதிமன்ற நேரத்தை வீணடித்த காரணத்திற்காக கண்டனத்ததை தெரிவித்து அபராதம் விதிப்பது வழக்கம்.

அப்படியும் சில வழக்குகள் முழுக்க முழுக்க நல்லெண்ணத்தின் அடிப்படையில் தொடுக்கப்படுவதும் வழக்கம்.

தற்போது உச்சநீதிமன்றத்தில் டில்லியை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நமது நாட்டிற்கு இந்தியா எனும் பெயரை மாற்றி விட்டு ‘பாரத்’ அல்லது ‘ஹிந்துஸ்தான்’ என பெயரை மாற்ற உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்தியா எனும் பெயர் ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்கத்தை நினைவு படுத்துவது போல் உள்ளதாம். அதனால் பெயரை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். இந்த் மனு வரும் ஜுன் 2ம் தேதி விசாரனைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மனுதாரருக்கு அறிவுரையா?, கண்டனமா?, அபராதமா அல்லது மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.