Home Blog Page 5658

தயாரிப்பாளர்களுக்கு உதவ சம்பளத்தில் 25% குறைத்த விஜய் ஆண்டனி

0

தயாரிப்பாளர்களுக்கு உதவ சம்பளத்தில் 25% குறைத்த விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகனாக உள்ள விஜய் ஆண்டனி “கொலைகாரன்” படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மூன்று படங்களில் பணியாற்றி வருகிறார்.

விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. அவர் நடிப்பில் உருவான “பிச்சைக்காரன்” திரைப்படம் தொலைக்காட்சி வெளியீட்டிலும் பெரிய சாதனை படைத்தது. ஏப்ரல் 14-ம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட “திமிரு புடிச்சவன்” திரைப்படமும், பார்வையாளர்களின் எண்ணிக்கையில் “தர்பார்” மற்றும் “சீமா ராஜா” திரைப்படங்களுக்கு இனையான சாதனை படைத்தது.

விஜய் ஆண்டனி தற்போது FEFSI சிவா அவர்களின் தயாரிப்பில் “தமிழரசன்” என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது அம்மா கிரீயேஷன்ஸ் T. சிவா அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் “அக்னி சிறகுகள்” என்ற படத்திலும், இயக்குநர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் “காக்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் 2020-ல் வெளியிடப்படும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன.

எல்லாமே திட்டப்படி சென்றுகொண்டிருந்த நேரத்தில், கொரோனா ஊர்டங்கு தமிழ் சினிமாவை மொத்தமாக புரட்டி போட்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

திரையரங்குகள் செயல்பட துவங்கி புது படங்கள் வெளியாக மேலும் மூன்று மாதங்கள் ஆகும் என்ற சூழ்நிலையில், தன்னை நம்பி திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கபடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ளுமாறு இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களையும் கேட்டு கொண்டுள்ளார்.

இந்த சம்பள குறைப்பு மூலம், மூன்று தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் மொத்த பட்ஜெட்டில் கணிசமான அளவுக்கு செலவு குறைத்து, வெகு விரைவில் படங்களை எந்த பிரச்சனைகளும் இல்லாமல் வெளியிட முடியும் என்று விஜய் ஆண்டனி நம்புகிறார்.

விஜய் ஆண்டனியின் இந்த தாராள மனதை “அக்னி சிறகுகள்” படத்தின் தயாரிப்பாளர் T. சிவா ““50 நாட்களுக்கு மேலாக இந்த கொரோனா லாக் டவுன் காரணமாக தவித்து வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு இப்படி ஒரு முன்னணி நடிகர் தாமாகவே முன்வந்து தன் சம்பளத்தை குறைந்த கொண்டது அனைவரும் பாராட்ட வேண்டிய, தமிழ் சினிமாவுக்கு முன்னுதாரணமாக இருக்க போகும், ஒரு நடவடிக்கை.

அவரை போலவே அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியையே தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுத்து அனைத்து தயாரிப்பாளர்களையும் இந்த இக்கட்டான நேரத்தில் காப்பாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன்.

அப்படி செய்தால் தான், தற்போது வெளியாக காத்திருக்கும் படங்களும், முடிக்கவிருக்கும் படங்களும் எந்த நிதி சிக்கலும் இல்லாமல் வெளியாகும். இப்படி ஒரு முன்னுதாரணமான செயலை செய்து தயாரிப்பாளர்களுக்கு உதவும் விஜய் ஆண்டனியை மனதார பாராட்டுகிறேன். அவர் மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்.” என விஜய் ஆண்டனியின் செயலை பாராட்டியுள்ளார்.

மீதம் இரண்டு பட தயாரிப்பாளர்களும் விஜய் ஆண்டனியின் இந்த உதவியை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டனர்.

மீண்டும் 3 மாதம் EMI அவகாசம் நீட்டிப்பு? – RBI ஆலோசனை

மீண்டும் 3 மாதம் EMI அவகாசம் நீட்டிப்பு? – RBI ஆலோசனை

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டது. மார்ச் மாத மத்தியில் தொடர்ந்து தொற்று அதிகரிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21ம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் பலரும் வீட்டுக்குள் முடங்கினர். ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு 1 முதல் 50 சதவீதம் வரை சம்பள குறைப்பு அறிவிக்க, தினமும் வேலைக்குச் சென்று வந்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையில் பலரும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் வீட்டுக் கடன், தனி நபர் கடன், பொருட்கள் கடன் என எந்த தவணையையும் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, RBIயுடன் ஆலோசித்து மூன்று மாதங்களுக்கு (மே 31 வரை) தவணை நீட்டிப்பை அறிவித்திருந்தது. அதன் படி மூன்று மாத காலம் பயனாளர்கள் கடன் செலுத்த வங்கிகள் நிர்பந்திக்கக் கூடாது. ஆனால் தவணை செலுத்தாத காலத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டு அசலில் இனைத்து அது மாத தவணையாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இது நிச்சயம் வங்கிகளுக்கு சாதகமான அறிவிப்பு தான் என்றாலும், தங்களை நிதி சுமையிலிருந்து தற்காலிகமாகக் காத்து கொள்ள பயனாளர்களுக்கு ஓர் வடிகாலாக இருந்தது.

இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பான்மையான மக்கள் இன்னும் வேலைக்கு செல்ல முடியாத நிலையே நீடிக்கிறது.

இதை கருத்தில் கொண்டும் இன்னும் மூன்று மாதங்களுக்கு தவணை செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்கலாமா என RBI ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தற்காலிகமாக பயனாளர்களுக்கு உதவி புரியலாம். ஆனால் 6 மாத வட்டியை கணக்கிட்டு அசலுடன் இனைத்தால் அது மேலும் நிதி சுமையாகவே இருக்கும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது. தவணை நீட்டிப்பை பரிசீலிக்கும் RBI, கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த காலத்திற்கு வட்டி தள்ளுபடி செய்தால் மட்டுமே மக்களுக்கு இந்த அரசு செய்யும் பேருதவியாக இருக்கும் என்ற கருத்து வலுக்கிறது.

உயரும் கொரோனா தொற்று… நடுங்கும் உலக நாடுகள்… அச்சத்தில் தமிழக மக்கள்..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 35 லட்சத்து 82 ஆயிரத்து 469 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 11 லட்சத்து 62 ஆயிரத்து 563 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

உயரும் கொரோனா தொற்று... நடுங்கும் உலக நாடுகள்... அச்சத்தில் தமிழக மக்கள்..!!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 42,836 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 1,389 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 11,762 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 12,974/548
குஜராத் – 5,428/290
டெல்லி – 4,549/64
ராஜஸ்தான் – 2,772/65
மத்திய பிரதேசம் – 2,942/165
உத்தரபிரதேசம் – 2,766/50
தமிழ்நாடு – 3,023/30
தெலுங்கானா – 1,085/29
கேரளா – 500/04
ஆந்திர பிரதேசம் – 1,650/36
கர்நாடகா – 651/27
ஜம்மு & காஷ்மீர் – 726/08
மேற்கு வங்கம் – 1,259/133
பஞ்சாப் – 1,233/23
ஹரியானா – 517/06
பீகார் – 528/04
அசாம் – 43/01
சண்டிகர் -102/01
உத்தர்கண்ட் – 60/01
லடாக் – 41/0
அந்தமான் & நிக்கோபார் -33/0
சத்தீஸ்கர் – 58/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 41/01
ஒடிசா – 169/01
பாண்டிச்சேரி – 08/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 115/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 29/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 12/01

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 31 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 1,409 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

உயரும் கொரோனா தொற்று... நடுங்கும் உலக நாடுகள்... அச்சத்தில் தமிழக மக்கள்..!!

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

மதுவுக்கு 70% வரி – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

0

மதுவுக்கு 70% வரி – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

கொரோனா காரணமாக மார்ச் 21ம் தேதி முதல் ஊரடங்கு அமலிலுள்ள நிலையில், நேற்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதியளித்திருந்தது.

இதனையடுத்து சுமார் 45 நாட்களுக்குப் பின்னர் சிலமாநில அரசுகள் மது கடைகளைத் திறப்பதாக அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக மதுபானக் கடைகள் நேற்று திறக்கப்பட அதில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கொரோனா பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை மேற்கொள்ள அறிவுறுத்தியிருந்த போதும் மது ஆர்வலர்கள் மதுபாட்டிலை வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே இருந்ததால் பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது.

இதனால் டெல்லியில் மதுக்கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன. இது தொடர்பாக ஆலோசனையை மேற்கொண்ட டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் ஓர் அதிரடி முடிவை எடுத்தார். அதன் படி டெல்லியில் விற்கப்படும் விலையிலிருந்து 70% வரி விதிக்கப்பட்டுள்ளது. உதாரணதிற்கு ஒரு பாட்டிலின் விலை 100 ரூபாய் என்றால் அதற்கு 70 ரூபாய் வரி விதிக்கப்பட்டு 170 ரூபாய் வசூல் செய்யப்படும்.

இது குறுத்து வீடியோ கான்ஃபரின்சிங் மூலம் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் “தேசிய தலைநகரில் உள்ள மதுபானக் கடைகளில் சமூக இடைவெளி விதிமுறைகளில் குழப்பம் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. சமூக இடைவெளி மற்றும் பிற விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அந்த பகுதிகளுக்கு சீல் வைக்கப்படும் மற்றும் தளர்வுகள் ரத்து செய்யப்படும். நாம் அனைவரும் பொறுப்புள்ள குடிமக்களைப் போல நடந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரசை தோற்கடிப்பதற்கு, முககவசங்களை அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், அடிக்கடி கையை சுத்தப்படுத்த வேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

கெஜ்ரிவாலின் இந்த முடிவால் மதுக்கடைகளில் கூட்ட நெரிசல் குறையும் என்று கூறப்படுகிறது. அவரது இந்த முடிவை மற்ற மாநிலங்களும் பின்பற்றலாமே என்ற கோரிக்கை வலுக்கிறது.

மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு பரப்பியதற்காக விசிக நிர்வாகி வன்னியரசு மீது வழக்கு பதிவு

மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு பரப்பியதற்காக விசிக நிர்வாகி வன்னியரசு மீது வழக்கு பதிவு

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் மர்ம நபரால் அம்பேத்கார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சூழ்நிலையை உணர்ந்த காவல் துறையினர் இது குறித்த விசாரணையை ஆரம்பித்தனர்.

இந்த நேரத்தில் காவல் துறையினரின் விசாரணை முடிவு தெரிவதற்குள் வழக்கம் போல இதை வைத்தும் அரசியல் செய்ய நினைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதற்கான போலி பரப்புரையில் இறங்கிறனர்.

குறிப்பாக இதற்கு முன்பு அக்கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள வன்னியரசு எதற்கெடுத்தாலும் பாமக மற்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்வது வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் இந்த சம்பவத்திலும் மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு பரப்பும் வகையில் விமர்சனம் செய்திருந்தார்.

Vanniyarasu-News4 Tamil Online Tamil News
Vanniyarasu-News4 Tamil Online Tamil News

இதனையடுத்து சில தினங்களில் செருப்பு மாலை அணிவித்த அந்த மர்ம நபரை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். அந்த மர்ம நபருக்கும் பாமகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் அடிப்படை ஆதாரம் இல்லாமல் விமர்சனம் செய்த விசிகவினர் மீது பாமக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து பாமக வழக்கறிஞர் K.பாலு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

வன்னியரசு மட்டுமல்லாமல் தமிழக அரசால் திறக்கப்பட்ட ராமசாமி படையாட்சியார் மணி மண்டபத்திற்கு மிரட்டல் விடுத்ததற்காக அக்கட்சியை சேர்ந்த மற்றொரு நபர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி – தற்காலிகமாக மூடப்படும் கோயம்பேடு சந்தை

0

கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று தமிழகத்தில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டார்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா தொற்றுக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இதனால் இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு சென்று ஆய்வை மேற்கொண்டார் சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தவர் “அதன் பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்தவர் “கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்குச் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது பாதிப்பு கண்டறியப் படுபவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா குறித்த அறிகுறி எதுவும் தென்படவில்லை. ஆனால் அவர்களுக்குப் பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது. இந்த பரிசோதனையை அதிகரிப்பதால் பாதிப்பு அதிகமாகத் தெரியவருகிறது.

கோயம்பேட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு. இந்த பரிசோதனையை அதிகரிப்பதால் பாதிப்பு அதிகமாகத் தெரியவருகிறது. கோயம்பேட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோயம்பேடு சந்தை நிர்வாக குழு சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “பொதுமக்களுக்குக் காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களைச் சென்றடையவும் சென்னை திருமழிசையில் வருகின்ற (7.5.2020) வியாழக் கிழமை முதல் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம்.

பொதுமக்களின் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்படும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் திறப்பு – தேதியை அறிவித்த தமிழக அரசு

0

நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் திறப்பு – தேதியை அறிவித்த தமிழக அரசு

கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, கடந்த மார்ச் 21ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்கும் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், மருந்தகங்கள், அடுமனைகள், உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குச் செயல்பட அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு சிலர் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டாலும் மதுக் கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் திண்டாடிப் போனார்கள். இதனால் மே 3ம் தேதிக்காகக் காத்திருந்தனர். கொரொனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை மே 17ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. கொரோனா பாதிப்பை ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் ஊரடங்கைத் தளர்த்திக் கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இதனையடுத்து கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிகாலை முதலே மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர் குடிமகன்கள். மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்து விடத் தமிழகத்தில் எப்போது மது கடைகள் திறக்கப்படும் என ஏக்கத்துடன் காத்திருக்கும் ‘குடி’மக்களுக்கு ஓர் நற்செய்தி. வரும் 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை கீழ் வருமாறு:

கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக்கடைகள், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது. எனினும் மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக்கடைகளை திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிலும் மதுபானக்கடைகளை வரும் 7.5.2020 முதல் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனினும் நோய்கட்டுப்பாட்டு பகுதிகளிலுள்ள மதுபானக்கடைகள் திறக்கப்படமாட்டாது. நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு

வெளியே உள்ள மதுபானக்கடைகள் மட்டும் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு திறக்க அனுமதிக்கப்படுகிறது.

  1. மதுபானக்கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும்.
  2. ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக பராமரிக்கப்படவேண்டும்.
  3. மதுபானக்கடைகளில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
  4. மதுபானக்கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது.
  5. அனைத்து மதுபானக்கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
  6. ஒவ்வொரு மதுபானக்கடைகளிலும் தேவைகேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை.

பாப்கார்ன் விலை பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை – திருப்பூர் சுப்பிரமணியம் அடாவடி

0

பாப்கார்ன் விலை பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை – திருப்பூர் சுப்பிரமணியம் அடாவடி

ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவுக்கு சொந்தமான 2டி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ஃப்ரெட்ரிக இயக்கியுள்ளார். மார்ச் இறுதி வாரத்தில் வெளியாகியிருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரானா ஊரடங்கு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த படம் வெளியாகவிருந்த சூழலில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனத்திற்கு விற்ற தயாரிப்பு தரப்பு, அதில் படத்தினை மே மாதம் அவர்கள் தளத்தில் வெளியிட்டுக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியாகததால் அந்த சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாகிக் கொள்ள நினைத்த அமேசான் தரப்பு, படத்தினை நேரடியாக தங்கள் தளத்தில் வெளியிட முன் வந்தால் அதற்கு ஓர் பெரிய தொகையைத் தருவதாக கூறியுள்ளது. ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாத காரணத்தால் அவர்கள் கேட்ட தொகை லாபகரமாக இருந்ததால் 2டி தரப்பும் அமேசானில் நேரடியாகப் படத்தை வெளியிட ஒப்புக் கொண்டது.

இந்த தகவல் வெளியில் கசிய, சூர்யாவுக்கு எதிராகத் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் திரண்டனர். ‘பொன்மகள் வந்தாள்’ படத்தினை நேரடியாக டிஜிட்டலில் வெளியிட்டால் சூர்யாவின் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப் போவதில்லை என அறிவித்தனர்.

‘பொன்மகள் வந்தாள்’ படத்தினை நேரடியாக டிஜிட்டலில் வெளியிடுவதன் மூலம் தங்களுக்கான புதிய வியாபார கதவு திறப்பதை உணர்ந்து கொண்ட தயாரிப்பாளர்கள் சூர்யாவுக்கு ஆதரவாக நின்றனர். மேலும் இது குறித்து நாள் தோறும் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் விவாதத்தில் ஈடுபட்டு வாட்ஸாப் ஆடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் திரையரங்கில் பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்கள் அதிக விலைக்கு விற்பதாலும், அரசு நிர்ணயித்த பார்க்கிங் கட்டணத்தை பின் பற்றாததாலுமே மக்கள் திரையரங்கைப் புறக்கணிக்கத் துவங்கியுள்ளதாகத் தயாரிப்பாளர்கள் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டனர். அதில் படத்தை முதலீடு செய்து தயாரிக்கும் தங்களுக்கு அதை எங்கு வேண்டுமானாலும் வெளியிட்டு முதலீட்டைத் திரும்பப் பெற உரிமையுள்ளது எனவும் தெரிவித்திருந்தனர்

அதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரபல விநியோஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் “சமீபமாகத் தயாரிப்பாளர்கள் அனைவருமே OTT-ல் படங்கள் வெளியாவது எங்கள் உரிமை எனப் பேசுகிறீர்கள். தாணு சார், சிவா சார் தொடங்கி அனைத்து நண்பர்களுமே இதைத் தான் பேசியுள்ளனர். கொஞ்சம் பின்னால் திரும்பிப் பாருங்கள். எத்தனை மேடைகளில் எத்தனை தயாரிப்பாளர்கள் சிறு படங்களுக்குத் திரையரங்கு உரிமையாளர்கள் ஆதரவு தரவில்லை எனப் பேசியிருப்பீர்கள்.

அப்போது என்ன படம் போடுவது, போடாதது அவர்கள் உரிமை என்று தெரியவில்லையா. இஷ்டப்பட்டால் போடட்டும் இல்லையென்றால் விட்டு விடட்டும் என விட்டிருக்கலாமே நீங்கள். ஏன் மேடைகளில் அவ்வளவு பேசினீர்கள்?. அப்படியெல்லாம் பேசியிருக்கவே கூடாது. திரையரங்க உரிமையாளர்கள் காட்சி கொடுப்பதும், கொடுக்காதது அவர்களுடைய விருப்பம் என்று அல்லவா பேசியிருக்க வேண்டும். நாங்களாவது ஒரு காட்சி, 2 காட்சி கொடுத்தோம். டிஜிட்டல் நிறுவனத்தில் சதவீத அடிப்படையில் கொடுத்தீர்கள் என்றால், உங்களுடைய படம் எங்கிருக்கும் என்றே தெரியாது.

அதே போல் திரையரங்க உரிமையாளர்கள் சரியாகக் கணக்கு கொடுப்பதில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆன்லைன் டிக்கெட் புக்கிங் முறைக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், டிஜிட்டல் முறையில் போய் நீங்கள் கணக்குக் கேளுங்கள். அவர்கள் எப்படி கணக்குக் கொடுக்கிறார்கள் என்பதை நாங்களும் தெரிந்து கொள்கிறோம். அவர்கள் என்ன டைப் செய்து கொடுக்கிறார்களோ அது தான் கணக்கு. மொத்தமாக விற்றுவிட்டால் வேண்டுமானால் அமைதியாக இருந்துக் கொள்ளலாம்.

திரையரங்கில் படம் ஓட்டி பேமஸ் ஆக்கிக் கொடுத்த படங்களை மட்டுமே டிஜிட்டல் நிறுவனம் விலைக்கு வாங்குவார்கள். மீதி அத்தனை படங்களையும் சதவீத அடிப்படையில் தான் போடச் சொல்வார்கள். மறுபடியும் சொல்கிறேன். ‘பொன்மகள் வந்தாள்’ படம் டிஜிட்டலில் வெளியிட்டதற்கு வருத்தப்பட்டதற்கு ஒரே காரணம். மூன்று மாதங்களாகப் படப்பிடிப்பு இல்லை. இருக்கும் படங்களை டிஜிட்டலில் விற்றால், நான் திரையரங்குகளைத் திறக்கும் போது என்ன படம் போடுவது.

நஷ்டம் என்பது அனைத்து தொழிலுக்கும் உள்ளது. நஷ்டத்தைத் தாங்கிக் கொண்டு தான் நாங்களும் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு பெரிய நிறுவனம் அவர்களுடைய படத்தை 3 மாதம் கழித்து வெளியிட்டால் பணம் வரப்போகிறது. அவர்கள் கொடுத்துவிட்டார்கள் என்ற ஆதங்கத்தில் தான் சொன்னாமே ஒழிய, தனிப்பட்ட பகை எதுவுமே இல்லை. திரையரங்கைத் திறந்தால் போடுவதற்குப் படமில்லை என்ற ஆதங்கத்தில் தான் பேசினோம். அதை வைத்துக் கொண்டு கடந்த 4 நாட்களாகத் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

அதுமட்டுமன்றி, பாப்கார்ன் 100 ரூபாய்க்கு விற்கிறார்கள், டிக்கெட் அதிகவிலைக்கு விற்கிறார்கள் என மேடையில் எவ்வளவோ விஷயம் பேசுகிறீர்கள். இனிமேல் மேடையில் நீங்கள் வாயைத் திறந்து பேசுங்கள். திரையரங்கில் யாரேனும் முதலீடு செய்துள்ளீர்களா? நான் முதலீடு போட்டுக் கட்டியிருக்கும் திரையரங்கில் விற்கும் பாப்கார்னுக்கு முதலமைச்சர் வரை போய் புகார் கொடுத்தீர்கள்.

இனிமேல் பாப்கார்ன் விலை, பார்க்கிங் கட்டணம் என யாராவது பேசினீர்கள் என்றால், நாங்களும் பின்பு கடுமையாகப் பேச வேண்டியதிருக்கும். உரிமை உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல. எங்களுக்கும் சொந்தம். திரையரங்கை நாங்கள் முதல் போட்டுக் கட்டியுள்ளோம். அதில் என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பது எல்லாம் எங்களுடைய உரிமை. நீங்கள் முடிவு பண்ணியது போல் நாங்களும் முடிவு பண்ணிக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடு – பீதியால் 52000 ரூபாய்க்கு சரக்கு வாங்கிய ‘குடி’மகன்!

0

கொரோனா கட்டுப்பாடு – பீதியால் 52000 ரூபாய்க்கு சரக்கு வாங்கிய ‘குடி’மகன்!

கொரோனா பரவுவதைத் தடுக்கு பொருட்டு, கடந்த மார்ச் 21ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்கும் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், மருந்தகங்கள், அடுமனைகள், உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குச் செயல்பட அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு சிலர் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டாலும் மதுக் கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் திண்டாடிப் போனார்கள். இதனால் மே 3ம் தேதிக்காகக் காத்திருந்தனர்.

கொரொனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை மே 17ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. கொரோனா பாதிப்பை ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் ஊரடங்கைத் தளர்த்திக் கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இதனையடுத்து கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிகாலை முதலே மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர் குடிமகன்கள்.

இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டால் மதுக்களை வாங்க முடியாதோ என எண்ணிய ஒரு குடிமகன் 52000 ரூபாய்க்கு மது பாட்டில்களை வாங்கியுள்ளார். இது தற்போது சமூக வலைத் தளம் மூலம் வரலாகி வருகிறது.

இதற்கு கூட கட்டணம் வசூலிப்பதா? மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

இதற்கு கூட கட்டணம் வசூலிப்பதா? மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பானது அதிகரித்து வரும் சூழலில் வெளி மாநிலங்களில் பணிபுரிய வந்தவர்களை தங்கள் சொந்த ஊருக்கு அழைத்து செல்ல மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாநிலத்தவர்கள் அவர்கள் ஊருக்கு செல்ல ரயில் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இன்று அவர் “இடம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கக் கூடாது!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ வழியின்றி தவித்துக் கொண்டிருக்கும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் பயணிக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி நள்ளிரவில் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது முதல் இப்போது வரையிலான 40 நாட்களாக அவர்கள் வேலையில்லாமல் வாடுகின்றனர். தங்குவதற்கு இடமும், உண்ண உணவும் இல்லாமல் தவித்த அவர்கள், ஏதாவது ஒரு வழியில் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்றனர். ஆனால், அவர்களால் நோய்ப் பரவி விடக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதாலும், பல புதியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும் தான் அவர்கள் வாழும் பகுதிகளில் மாநில அரசு ஏற்படுத்தித் தந்த முகாம்களில் 40 நாட்களாக தங்கியிருந்தனர். உழைத்து சேமித்த பணம் முழுவதையும் செலவழித்து விட்டு, அடுத்த வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் தவிக்கும் அவர்களிடம் கட்டணம் செலுத்தும்படி ரயில்வே நிர்வாகம் கட்டாயப்படுத்துவது நியாயமல்ல.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவத் தொடங்கிய போது சீனா, ஐரோப்பிய நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தவித்த இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்கப்பட்டனர். அதற்காக ஜனவரி 31-ஆம் தேதியிலிருந்து மார்ச் 22-ஆம் தேதி வரை ஏராளமான சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. அந்த விமானங்கள் இந்தியாவிலிருந்து காலியாக சென்று பயணிகளை ஏற்றி வந்தன. வணிக நோக்கத்தில் பார்த்தால் அதற்காக இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒருவரிடமிருந்து கூட, ஒரு ரூபாய் கூட கட்டணமாக வசூலிக்கப்படவில்லை. மாறாக, அந்த தொகையை ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசே செலுத்தி விட்டது.

விமானத்தில் பயணம் செய்தவகளுடன் ஒப்பிடும் போது, தொடர்வண்டிகளில் இப்போது பயணிக்கும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமானது. அவர்கள் சொந்த ஊர்களில் வாழ வழியில்லாமல் தான் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள ஊர்களுக்கு சென்று பணியாற்றுகின்றனர். அவ்வாறு பணியாற்றும் போதும் கூட கடுமையான உழைப்பு சுரண்டல்களுக்கு ஆளாகின்றனர். ஆனாலும் சொந்த ஊர்களில் இருந்தால் அதற்கு கூட வழியில்லை என்பதால் தான் உழைப்புச் சுரண்டல்களை பொறுத்துக் கொண்டு பணியாற்றி வருகின்றனர்.

இப்போதும் கூட நோய் பயம் காரணமாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்ற அச்சம் காரணமாகவும் தான் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். நிலைமை சீரடைந்து அவர்கள் பணிக்கு திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதுவரை அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடையாது. அப்படிப்பட்ட சூழலில் உள்ளவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை ரயில்வே கைவிட வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்தவர்கள் விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்ட போது, எத்தகைய நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதே நடைமுறை இப்போதும் பின்பற்றப்பட வேண்டும். இடம்பெயர்ந்த தொழிலாளர்களை கட்டமிண்றி அழைத்துச் சென்று விட்டு, அதற்கான கட்டணத்தை மத்திய அரசிடம் தொடர்வண்டித்துறை வசூலித்துக் கொள்ள வேண்டும். தொடர்வண்டித்துறை அறப்பணிகளுக்காக செலவிடும் தொகையுடன் ஒப்பிடும் போது இதற்கான செலவு மிகவும் குறைவாகும். அதேபோல், கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்காக மத்திய அரசு இதுவரை ரூ. 3 லட்சம் கோடிக்கும் கூடுதலாக செலவழித்துள்ள நிலையில் இந்த செலவு ஒரு சுமையல்ல. எனவே, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்வண்டிகளில் இலவசமாக சொந்த ஊர் செல்லலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசும், தொடர்வண்டித்துறையும் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.