Home Blog Page 5712

சாணக்யா விருது வழங்கும் விழாவில் ரஜினியின் புதிய அறிவிப்பால் உற்சாகத்தில் தொண்டர்கள்

0

சாணக்யா விருது வழங்கும் விழாவில் ரஜினியின் புதிய அறிவிப்பால் உற்சாகத்தில் தொண்டர்கள்

நேற்றைய தினம் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூடியூப் சேனலின் சார்பாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

அதில் ரஜினிகாந்த் கூறியதாவது:
நான் கூறிய கருத்துகள் தேர்தல் நேரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழக அரசியலில் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு அலை தமிழகத்தில் உருவாகிக்கொண்டே உள்ளது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் அரசியலுக்கு வந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக பாடுபட்டார். அவர் பொருளாளராக இருந்த போது ஏற்பட்ட பிரச்சனையால் வெளியே வந்து மக்கள் மன்றத்தில் தன் நியாயத்தை தெரிவித்தபோது மக்களிடம் அவர் ஒரு மிகப்பெரிய அலையை ஏற்படுத்தினார். அது தமிழக வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

எல்லாருடைய அறிவுரையையும் கேட்பவர்கள் ஒருபோதும் உருப்பட முடியாது அதே சமயம் யாருடைய பேச்சையும் கேட்காதவர்களும் உருப்பட முடியாது. தமிழக அரசியலில் நிச்சயம் தேர்தல் நேரத்தில் நிச்சயம் அலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ரங்கராஜ் பாண்டே நடத்நிய விழாவில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்களுக்கு சாணக்யா விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது அதனை நல்லக்கண்ணு அவர்கள் புறக்கணித்து விட்டார்.

எஸ் வங்கி திவாலானதற்கு அனில் அம்பானிதான் காரணமா? ரிலையன்ஸ் குழுமத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

0

எஸ் வங்கி திவாலானதற்கு அனில் அம்பானிதான் காரணமா? ரிலையன்ஸ் குழுமத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

சமீபத்தில் நிதி முறைகேட்டில் சிக்கியுள்ள எஸ் வங்கியானது முறைகேடாக பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தது தெரியவந்துள்ளது.
அவ்வாறு முறைகேடாக பணம் பெற்ற நிறுவனங்களில் மிக முக்கிய நிறுவனமாக ரிலையன்ஸ் குழுமம் உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சுமார் 12,800 கோடி ரூபாய் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எந்த வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.இதன் மூலன் எஸ் வங்கியின் நிறுவனர் 4200 கோடி ரூபாய் வரை மறைமுகமாக ஆதாயம் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ரிலையன்ஸ் குழுமத்திற்கு விசாரனைக்கு நேரில் ஆஜராகும் படி அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்நிறுவனத்தின் தலைவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி இதுநாள் வரை அமலாக்கத்துறை விசாரனைக்கு ஆஜராகாமல் உள்ளார். இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

மேலும் முறைகேடாக கடன் வழங்கிய எஸ் வங்கியின் நிறுவனர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்

வம்பிழுக்கும் வன்னியரசின் நாக்கை என்ன செய்வார் மருத்துவர் ராமதாஸ்?

0

வம்பிழுக்கும் வன்னியரசின் நாக்கை என்ன செய்வார் மருத்துவர் ராமதாஸ்?

தமிழகத்தில் பெரியார் கொள்கை என்ற பெயரில் தொடர்ந்து சாதி மறுப்பு கொள்கைகளை பேசி வரும் அரசியல் அமைப்புக்கள் கலப்பு திருமணம் செய்து வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இதில் சில அரசியல் கட்சி தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்களை மட்டும் குறி வைத்து காதலிக்க சொல்லும் விதமாக கடந்த கால பேச்சுகள் அமைந்துள்ளன.

இதை பாமக நிறுவனர் ராமதாஸ் ஆரம்பத்திலிருந்து எதிர்த்து வருகிறார். மேலும் இது போல அரசியல் மற்றும் பண ஆதாயத்திற்காக சிலரால் தூண்டப்பட்டு நடத்தப்படும் நாடக காதலை அவர் தொடர்ந்து கண்டித்து வருகிறார். மேலும் அவ்வப்போது பெற்றோர்களுக்கும் பெண்களுக்கும் முறையான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நாடக காதலை தோலுரித்து காட்டும் விதமாக திரௌபதி திரைப்படம் வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான தமிழக மக்களும் நாடக காதலுக்கு பலியான குடும்பங்களும் இந்த படத்தை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

இந்த சூழலில் தான் வழக்கம் போல பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள் சேலம் மாவட்டத்தில் ஒரு கலப்பு திருமணத்தை நடத்தி வைத்தனர். அதாவது ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கவுந்தர்பாடி பகுதியை சேர்ந்தவர் செல்வன் என்பவரும், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியை சேர்ந்த இளமதி என்பவரும் காதலித்து வந்ததாகவும், வெவ்வேறு சாதி என்பதால் இவர்களுக்கு எதிர்ப்பு எழுந்ததாகவும் கூறி பெரியார் அமைப்பினர் கலப்பு திருமணத்தை நடத்தி வைக்க முயற்சித்துள்ளனர்.

திராவிடர் கழகம் சார்பில் சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் இவர்களுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்க முயற்சித்த போது அங்கு வந்த எதிர் தரப்பினர் அவர்களிடமிருந்து பெண்ணை காப்பாற்றி சென்றுள்ளனர். இதனையடுத்து பெண்ணை கடத்தி சென்றதாக தி.க அமைப்பினர் புகார் கொடுக்க கடந்த 14 ஆம் தேதி மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜர் ஆனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தன்னுடைய பெற்றோருடன் செல்வதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த சாதி மறுப்பு இயக்கங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பல்வேறு வகையான விமர்சன கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நாடக காதலை தொடர்ந்து எதிர்த்து வரும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு கட்சி கூட்டத்தில் பேசிய மருத்துவர் ராமதாஸ் இனிமேல் யாராவது மரவெட்டி என்று சொன்னால் அவர்கள் நாக்கை வெட்டிவிட்டு தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது வன்னியரசு பதிவிட்டுள்ள டிவிட்டர் விமர்சன பதிவில் மரவெட்டி ராமதாஸ் என்று குறிப்பிட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் அல்லது நிர்வாகிகள் என்ன எதிர் வினையாற்ற போகிறார்கள் என்ற கேள்வி கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ரஜினி கூறியது அதிமுகவை அல்ல திமுகவை அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கம்

0

ரஜினி கூறியது அதிமுகவை அல்ல திமுகவை அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கம்

டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இதுவரை எந்திரங்களால் செய்யப்பட்ட தீக்குச்சிகளுக்கு ஜி.எஸ்.டி வரி 18 சதவீதமாகவும் கையால் செய்யப்பட்ட தீக்குச்சிகளுக்கு 5 சதவீதமாகவும் இருந்தது.ஆனால் இந்த கூட்டத்தில் அனைத்து வகையான தீக்குச்சிகளுக்கும் 12 சதவீத வரியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

மேலும் ரஜினிகாந்த் கைறிய எந்த கருத்தும் அ.தி.மு.க.வுக்கு பொருந்தாது அவை அனைத்துமே தி.மு.க.க்கு மட்டுமே பொருந்தும்.

எந்த சக்தியாளும் இனி அ.தி.மு.க ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற முடியாது. 2021 ஆம் ஆண்டு மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி கோட்டையில் பறக்கும் என்றும் தெரிவித்தார்.

கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் மிகவும் சிறப்பான முறையிலே செய்யப்பட்டு வருகிறது. நானும் டெல்லியில் இருந்து சென்னை வந்த உடனே எனக்கும் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது நான் எப்போதும் கூலாக இருப்பதால் என்னை எந்த வைரஸும் தாக்குவதில்லை என்றும் தெரிவித்தார்.

நிர்பயா வழக்கில் அதிரடி திருப்பம் தூக்கில் போடுபவர் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

0

நிர்பயா வழக்கில் அதிரடி திருப்பம் தூக்கில் போடுபவர் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் குற்றவாளிகளின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குற்றவாளிகளுக்கு அதிகபட்சமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் வரும் 20 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டை சார்ந்த பவன் ஜல்லாட் என்ற ஊழியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் டெல்லி திகார் சிறை நிர்வாகம் சார்பாக உத்திரப்பிரதேச சிறைத்துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
பவன் ஜல்லாட் அவர்கள் செவ்வாய் கிழமையே அதாவது தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே திகார் சிறைச்சாலைக்கு வந்து சேரும்படி அறிவுருத்தப்பட்டுள்ளது.

மூன்று கைதிகள் தங்களது குடும்பத்துடன் இறுதி சந்திப்பை நிகழ்த்திவிட்ட நிலையில் வினய் என்ற கைதியின் குடும்பத்தினர் மட்டும் இதுவரை அவனை சந்திக்கவில்லை என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாளை முதல் ஏடிம் கார்டுகளுக்கு புதிய கட்டுப்பாடு மோடி அரசின் அதிரடி அறிவிப்பு

0

நாளை முதல் ஏடிம் கார்டுகளுக்கு புதிய கட்டுப்பாடு மோடி அரசின் அதிரடி அறிவிப்பு

மத்தியில் பாஜக ஆட்சி தொடங்கியதில் இருந்து அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்குதல் என்பதை தங்களது சித்தாந்தமாக கொண்டு ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றது.

ஆனால் இன்றைக்கு பெருகிவரும் இணையவழி குற்றங்களை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் பெரும்பாலான திருட்டு சம்பவம் என்பது இன்றைக்கு ஏடிம் கார்டுகளை தவறாக பயன்படுத்தியோ அல்லது ஒருவருடைய வங்கி கணக்கின் தகவல்களை தெரிந்து கொண்டு அவருடைய பணத்தை திருடுதல் என்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது‌. இதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் நாள் வெளியிட்டு இருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட செய்தி யாதெனின் இனி வங்கிகளால் வெளியிடக்கூடிய ஏடிம் கார்டுகளை ஏடிம் இயந்திரங்களிலும் ஸ்வைப் இயந்திரங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். மாறாக ஏடிம் கார்டுகளின் பின் உள்ள CCV எண்களை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்ய இயலாது என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இந்த நடைமுறை மார்ச் 16 உடன் நடைமுறைக்கு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கைலாசா வாசிகளுக்கு நித்தியானந்தா ஆச்சரிய தகவல் : இதனை பின்பற்றுமாறு உலக மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்!

0

சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று இத்தாலி தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் இதுவரை 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 1 லட்சத்து 35 ஆயிரம் பேரை நோய் தாக்கியுள்ளது. இந்த நோயை குணப்படுத்த பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்பது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஆச்சரியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் இந்த நோய் தொற்று கைலாசா வாசிகளுக்கு ஏற்படாமல் இருக்க அனைவரும் சமயபுரம் மகாமாரியம்மனுக்கு ‘பச்சை பட்டினி’ விரதம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் மகாமாரியம்மனுக்கு பச்சை பட்டினி விரதம் இருந்தால் அனைவரையும் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம் என்று கூறியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் நித்தியானந்தாவை நக்கலடித்து வருகின்றனர்.

ஸ்டிக்கர் ஒட்ட 3.50 கோடி ஒதுக்கீடு சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

0

ஸ்டிக்கர் ஒட்ட 3.50 கோடி ஒதுக்கீடு சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

நேற்றைய தினம் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான விவாதம் நடைபெற்றது‌. அப்போது அமைச்சர் தங்கமணி அவர்கள் துறை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை அறிக்கையாக வெளியிட்டார்.

அதில் மதுவுக்கு எதிராக அரசாங்கம் மது பாட்டில்களில் குடி குடியை கொடுக்கும் என்றும் மது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் இதுநாள் வரையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வந்தது இனி அதில் குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர் என்ற வாசகமும் சேர்த்து அச்சடித்து மக்களிடையே மதுவுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்காக அரசு 3.50 கோடி ரூபாய் நிதியை கூடுதலாக ஒதிக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் டாஸ்மாக் நிறுவனத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வாக ரூ.500 வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் ஆண்டொன்றுக்கு அரசுக்கு கூடுதலாக 15.42 கோடி கூடுதல் செலவாவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனையடுத்து கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் அவர்கள் அமைச்சரின் இந்த அறிவிப்பு முற்றிலும் தொழிலாளர்களுக்கு எதிரானது. ஊழியர்கள் தொகுப்பூதியம் மட்டுமே பெருகின்றர் அவர்களுக்கு இந்த குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஏமாற்றத்தை தருவதாகவே அமைகிறது.

மேலும் டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்குதல் பணி நிரந்தரம் செய்தல், கல்வித்தகுதிப்பு ஏற்ப பணி உயர்வு வழங்குதல் உள்ள எந்த கோரிக்கையையும் அரசு பரிசீலிக்காதது மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. இதுகுறித்து அனைத்து தொழிற்சங்கங்களும் விரைவில் கூடி கோரிக்கைகளை வலியுருத்தி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

அமேரிக்க அதிபர் குடும்பத்துக்கு கொரோனா தொற்று : பரிசோதனை செய்து கொள்ள போகிறார் டிரம்ப்!

0

சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று இத்தாலி தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.

இந்த நோயை குணப்படுத்த பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்பது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் இருமல் தும்மல் கைகுலுக்குவது தொடுவது போன்ற நேரடி தொடர்புகள் மூலமாகவே அதிகம் பரவுகிறது.

இந்த நிலையில் அமேரிக்க அதிபர் மற்றும் டிரம்ப் அயர்லாந்து பிரதமர் இருவரும் சந்திக்கும் போது வணக்கம் கூறி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் டிரம்ப் தான் இந்தியா சென்று வந்ததில் இருந்து கைகுலுக்குவதை தவிர்த்து வணக்கம் கூறுவதையே பின்பற்றி வருவதாகவும் கூறியிருந்தார்.

அந்த சந்திப்பில் அயர்லாந்து பிரதமருடன் வந்த அதிகாரிகளுள் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியில் அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா மற்றும் குடும்பத்தினரும் கலந்து கொண்டதால் அனைவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அமேரிக்க அதிபர் குடும்பத்துக்கு கொரோனா தொற்று : பரிசோதனை செய்து கொள்ள போகிறார் டிரம்ப்!

இது குறித்து டிரம்பிடம் கேட்ட போது தனக்கு இது எந்த அறிகுறியும் இதுவரை இல்லை, இந்த சந்தேகத்தை தீர்க்க பரிசோதனை செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

இருக்கிற கொரோனா பீதியில் போலி கிருமி நாசினியா? அதிர்ச்சியில் மக்கள்!

0

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 130000க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 2 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.

இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோய் பரவாமல் தடுக்க முகத்தில் மாஸ்க் அணிய வேண்டும் அடிக்கடி சாணிடைஸர்கள் கொண்டு கழுவ வேண்டும் என்று அறிவுறுத்துவருகிறது.

இந்த நிலையில் ஹரியானா மாநிலம் குர்கானில் ஒரு தனியார் நிறுவனம் போலி சாணிடைஸர்களை தயாரித்தது தெரிய வந்துள்ளது. அதில் சாணிடைஸர்கள் நிறத்தில் உள்ள ஒரு திரவத்தை வழக்கமான பாட்டில்களில் அடைத்து வந்துள்ளனர்.

அதிரடியாக சோதனை செய்த சுகாதாரத்துறை அந்த நிறுவனத்தை சீல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தகவல் பொது மக்களை நீதிக்கு உள்ளாக்கியது என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.