Home Blog Page 5847

திட்டமிட்ட படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா?

0

2011 ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி இட ஒதுக்கீடு உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் வார்டு மறுவரை குளறுபடி இருப்பதாக கூறி திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா அல்லது மீண்டும் தள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு வழங்கியது.

திட்டமிட்ட படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா?

2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டது இதையடுத்து தமிழகத்தில் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த ஆணையத்தின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து கடந்த 9ம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் மாநில மற்றும் மாவட்ட அரசு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன மேற்படி தேர்தல் வார்டு மறுவரையறை வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் பதவி இடங்களுக்கான இட ஒதுக்கீடு ஆகியவற்றைப் பொறுத்தவரை 2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுப்ரீம் கோர்ட் நேற்று வழங்கிய தீர்ப்பின் படி நடைபெற உள்ள தேர்தல்கள் அனைத்தும் 2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென்று ஆணையிட்டுள்ளது கிராம ஊராட்சி வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் உள்ள வார்டு மறுவரையறை மற்றும் மேற்கு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அரசின் அறிக்கைகள் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அமைந்துள்ளது.

எனவே சுப்ரீம் கோர்ட் ஆணையின்படி ஏற்கனவே ஒன்பதாம் தேதி நாளை அறிவிப்பு அறிவிப்பில் உள்ள தேர்தல் அட்டவணையின்படி எந்த மாற்றமுமின்றி நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு நிறைவடையும் என்று இவ்வாறு கூறப்பட்டுள்ளது. எனவே திட்ட மிட்ட படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது: திமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா

0

ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது: திமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா

பழம்பெரும் அரசியல்வாதியும், விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் முதலமைச்சர் வேடத்தில் நடித்தவருமான பழ.கருப்பையா இன்று திமுகவில் இருந்து வெளியேறினார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டில் ஒன்றில் இருந்தே அவர் விரைவில் திமுகவில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தனது விலகலுக்கான காரணத்தை பழ.கருப்பையா ஒரு நீண்ட விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபின் திமுகவில் செல்வதில் எனக்கு தயக்கம் இருந்தது. ஒரு பொது விழாவில் கலைஞர் மிகைபடச் சொன்னாரோ என எண்ணுமளவுக்கு என்னை வலியுறுத்தி அழைத்தார். கலைஞர் மறைந்த அன்று திமுகவை விட்டு வெளியேறுவது குறித்து சிந்தித்தேன். ஆனால் பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்புணர்வு, நாடாளுமன்றத் தேர்தல் என இவற்றின் காரணமாக அந்த முடிவு தள்ளிப் தள்ளிக்கொண்டே இருந்தது.

கழகத்தின் நிகழ்கால நடவடிக்கைகள், போக்குகள், சிந்தனை பங்குகள், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் கட்சியை நடத்தும் விதம், அறிவும் நேர்மையும் பின்னுக்கு தள்ளப்பட்டு பணமே எல்லாம் என்று கருதுகின்ற தன்மை இவையெல்லாம் என்னிடம் பெரிய மன சலிப்பையும் உண்டாக்கி இருந்தன. இவற்றோடு பொருந்திப் போக முடியாத நிலையில் திமுகவை விட்டு ஒதுங்கிக் கொள்வது என்றும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக் கொள்வது என்றும் முடிவெடுத்தேன். நேரடியாக ஸ்டாலினை பார்த்து விடை பெற்றேன்

ஊழல்வாதிகளை முன்னிலைப்படுத்துவது, ஊழலை பொது வாழ்வின் அங்கமாக ஏற்பது, கட்சிக்குள்ளேயே விமர்சிக்க முடியாதவாறு கட்சி விசுவாசம் என்னும் பெயரால் அவற்றை நிலைநாட்டுவது இவையெல்லாம் எந்த வகையிலும் பொதுவாழ்க்கைக்கு ஏற்புடையது அல்ல.

மாநிலங்களை பல கூறுகளாக உடைப்பது, இந்தியாவை இந்து என்னும் பொது அடையாளத்திற்கு கொண்டுவருவது, இவையெல்லாம் மொழிவழி இன உணர்வை சிதைக்கின்ற போக்குகள் ஆகும். இதில் உள்ள ஆபத்தை திமுக சரியாக புரிந்து கொண்டு இருக்கிறது என்று என்னால் கருத முடியவில்லை. வெறும் ஒரு ஒருநாள் அறிக்கைகளோடு எல்லாம் முடிந்து விடுபவை அல்ல. கடந்த 50 ஆண்டுகளாக ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது. இது அல்ல மாற்று அரசியல் என்னும் கருத்தே என்னுடைய விலகலுக்கான காரணம் ஆகும். இவ்வாறு பழ கருப்பையா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது: திமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா

நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா செய்த சாதனை என்ன?

0

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 240 ரன்கள் எடுத்தது தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும் கேஎல் ராகுல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். கேப்டன் கோலியும் தன் பங்குக்கு சிக்ஸர்மலைகளாக அடித்து நொறுக்கினர்.


241 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்தது இதன்மூலம் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா செய்த சாதனை என்ன?

இந்த ஆட்டத்தின் முதல் சிக்சரை அடித்த ரோகித் சர்மா, சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்களை கடந்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 400 சிக்சர்களை அதிவேகமாக எட்டிய வீரர், மொத்தத்தில் இந்த மைல்கல்லை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார்.

சர்வதேச அதிக சிக்சர் விளாசிய பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் முறையே வெஸ்ட் இண்டீஸ் இன் கிரிஸ்ட் 534 சிக்ஸர் பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி சிக்ஸர்கள் அடித்துள்ளனர் உள்ளனர் 354 சர்வதேச போட்டிகளில்(ஒருநாள் போட்டி- 234, டெஸ்ட்-52,இருபதுஓவர்-120)விளையாடியுள்ள ரோகித் சர்மா இதுவரை 404 சிக்ஸர்கள் அடித்துள்ளார்

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? விறுவிறுப்பான வாக்குப்பதிவு

0

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை பிரிட்டனில் தேர்தல் நடைபெற்று புதிய பிரதமரை தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று அந்நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரக்சிட் விவகாரம் இந்த தேர்தலில் பெரும் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி உள்பட மொத்தம் ஏழு கட்சிகள் போட்டியிட்டாலும், ம் கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று காலை 7 மணிக்கு இங்கிலாந்து நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் 650 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெறும் இன்றைய வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஒரு சில மணிநேரங்களிலேயே வாக்குகள் எண்ணப்படும் என்றும் அனேகமாக நாளை அதிகாலைக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என்றும் அடுத்த பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு விடும் என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் வெற்றி பெற்ற கட்சி இங்கிலாந்து ராணியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டும் என்பது வழக்கமான நடைமுறை ஆகும். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரியவந்து உள்ளது. இருப்பினும் கடைசி நேரத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று வைரலானதால் முடிவுகளில் திருப்பம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை! வீடியோ வெளியிட்ட ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள்!

0

நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை!

வீடியோ வெளியிட்ட ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள்!

அவ்வப்போது இணையதளத்தில் தோன்றி தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து வருகிறார் நித்யானந்தா.  சென்ற மாதத்தில் கூட தனது மகள்களை நித்தியானந்தா அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்களை விடுவிக்கக் கோரியும் குஜராத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மா, நித்யானந்தா மீது வழக்கு தொடர்ந்திருந்தார். தென்னமெரிக்காவின் ஈக்வடார் நாட்டின் ஒரு தீவையே நித்தியானந்தா வாங்கி இருப்பதாகவும் அதற்கு அவர் கைலாசம் என பெயரிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நித்தியானந்தா இணையத்தில் தோன்றி தன்னை யாராலும் அழித்துவிட முடியாது என நேரலையில் தனது ஆதரவாளர்கள்/ பக்தர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.

ஜனார்த்தனன் சர்மாவின் மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம் டிசம்பர் 10ஆம் தேதி இரு பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஜனார்த்தனன் சர்மாவின் இரு மகள்களும் நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், தற்போது நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று தெரிவித்துள்ளனர். அவர்களது வழக்கறிஞர் பிபி நாயக் இருவரையும் சமூக வலைதளங்கள் மூலம் தான் தொடர்புகொள்வதாகவும் இருவரும் எங்கிருக்கிறார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஜனார்த்தனன் சர்மாவால் இருவருக்கும் ஆபத்து உள்ளதால் அவர்கள் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அல்லது அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் வாயிலாக ஆஜராவதாக, விர்ஜினியாவில் இருந்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் இரு பெண்களின் பிரமாணப் பத்திரத்தை ரத்து செய்ததோடு வரும் 19ஆம் தேதிக்குள் வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அதோடு குஜராத் போலீஸுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, இவ்வழக்கில் தினசரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

சசிகலாவுடன் கைகோர்க்கும் எடப்பாடி – அதிமுகவில் இருந்து விலகும் ஓபிஎஸ்!

0

சசிகலாவுடன் கைகோர்க்கும் எடப்பாடிஅதிமுகவில் இருந்து விலகும் ஓபிஎஸ்!

முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா மறைவிற்குப்பின், ஆட்சி தொடர்வதற்கு எந்த ஒரு பெரிய பாதிப்பும் இல்லை என்றாலும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. சசிகலா தரப்பு அதிமுகவின் நிர்வாகத்தை பொறுப்பேற்க முற்பட்டபோது, திரு. பன்னீர்செல்வம் அவர்கள், தர்மயுத்தம் செய்து அதில் வெற்றியும் கண்டார். சசிகலாவின் சிறை வாசத்திற்கு பிறகு, டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியை தொடங்கி, இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் கண்டார். ஆனாலும் அதிமுகவிற்கு அதிமுக தலைமை ஏற்றிருக்கும் அரசிற்கு இதுவரையில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் ஆட்சி தொடர்ந்துகொண்டிருக்கிறது.

எடப்பாடியும் – ஓ.பி.எஸ். கைகோர்த்து தற்போது அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், கட்சியிலிருந்து ஓபிஎஸ் ஓரங்கட்டப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை தடுக்க முடியாமல் ஓ.பி.எஸ். விரக்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி அலட்சியப்போக்கு தொடரவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஓ.பி.எஸ். என் ஆதரவாளர் திரு. முனுசாமியின் பேத்தி நடன அரங்கேற்றம் சென்னையில் நடைபெற்றது. நடன அரங்கேற்றத்துக்கு முறைப்படி முனுசாமி எடப்பாடியை அழைத்தும், ஆனால் முதல்வர் எடப்பாடி அவர்களோ அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டார். இந்த நிகழ்வு ஓ.பி.எஸ். அணியினர் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தாள் எதிர்காலத்தில் சசிகலாவும் எடப்பாடியும் கைகோர்த்து விடும் சூழல் நேர்ந்தால், தான் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் ஓபிஎஸ் உள்ளதாக சொல்லப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்க்கு ஒரு இடம் கிடைத்தால் போதும் எனவும். அது நடந்துவிட்டால் தான் முற்றிலும் அதிமுகவிலிருந்து விலகி விடுவதாகவும், ஓ.பி.எஸ். முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றன.

T20 தொடரை கைப்பற்றிய இந்தியா!

0

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர்.

T20 தொடரை கைப்பற்றிய இந்தியா!

இந்த ஆட்டத்தின் முதல் சிக்சரை அடித்த ரோகித் சர்மா, சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்களை கடந்து அசத்தினார்.
மறுபுறம் ராகுலும், கேப்டன் விராட் கோலியும் தங்களது அதிரடியை தொடர்ந்ததால் இந்திய அணியின் ரன் வேகம் கணிசமாக உயர்ந்தது.கே.எல்.ராகுல் 56 பந்தில் 91 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 240 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி 70 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
இதையடுத்து, 241 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.

T20 தொடரை கைப்பற்றிய இந்தியா!

இந்திய அணியினரின் துல்லிய பந்து வீச்சால் முன்னணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 17 ரன்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து திணறியது.
அடுத்து இறங்கிய ஹெட்மையரும், கேப்டன் பொல்லார்டும் சற்று நேரம் நிலைத்து ஆடினர். இருவரும் இணைந்து 74 ரன்கள் ஜோடி சேர்த்த நிலையில் ஹெட்மையர் 41 ரன்னில் அவுட்டானார்.


ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொல்லார்டு சிக்சர்களாக விளாசி அரை சதம் கடந்தார். அவர் 39 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரி என 68 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
பொல்லார்டு அவுட்டானதும் இந்தியாவின் வெற்றி உறுதியானது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் டி 20 தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்று அசத்தியது இந்தியா. ஆட்ட நாயகனாக கே.எல்.ராகுலும் தொடர் நாயகனாக கோலியும் தேர்வு செய்யப்பட்டனர்.

சர்வதேச அளவில் டாடா மோட்டார்ஸ் விற்பனை 15 சதவீதம் சரிந்தது.

0

சர்வதேச அளவில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 15 சதவீதம் வரை சரிவடைந்து உள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் உலக அளவில் ஜாகுவார் லேண்ட்ரோவர் சொகுசு கார்கள் உட்பட மொத்தம் 89 ஆயிரத்து 676 வாகனங்களை விற்பனை செய்துள்ளது இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் உடன் ஒப்பிடும்போது 15 சதவீத சரிவை அப்போது ஒரு லட்சத்து 4 ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்கு வாகனங்களாக இருந்தது.

இதில் டாடா பயணிகள் வாகனங்கள் 12 சதவீதம் சரிந்து 66 ஆயிரத்து 429 அதில் இருந்தது இருந்து 58 ஆயிரத்து 641 ஆக குறைந்திருக்கிறது வர்த்தக வாகனங்கள் 19 சதவீதம் குறைந்தது
டாடா நிறுவனம் மொத்தம் 46 ஆயிரத்து 542 ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை விற்பனை செய்துள்ளது சென்ற ஆண்டு இதே மாதத்தில் ஒப்பிடும்போது இது 3.4 சதவீதம் குறைவாகும் இதில் ஜாகுவார் கார்கள் விற்பனை 11464 உள்ளது லேண்ட் ரோவர் கார் விற்பனை 35078 ஆகும்.


டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூபாய் 216 கோடியை ஒட்டு மொத்த நிகர இழப்பாக கண்டு இருக்கிறது.

கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இது ஒரு டாட்டா நிறுவனம் மொத்தம் 46 ஆயிரத்து 542 ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை விற்பனை செய்துள்ளது சென்ற ஆண்டு இதே மாதத்தில் ஒப்பிடும்போது இது 3.4 சதவீதம் குறைவாகும் இதில் ஜாகுவார் கார்கள் விற்பனை 11464 உள்ளது லேண்ட் ரோவர் கார் விற்பனை 35 ஆயிரத்து 78 டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூபாய் 216 கோடியை ஒட்டுமொத்த சிறப்பாக கண்டிருப்பது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 1048 கோடியாக இருந்தது.


மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகம் தொடங்கியபோது டாட்டா மோட்டார்ஸ் பங்கு 160 ரூபாய் 50 பைசாவுக்கு கைமாறியது வர்த்தகத்தின் இடையே அதிகப்பட்சமாக 162 ரூபாய் 90 க்கும் அது குறைந்தபட்சம் 157.45 கும் சென்ற பங்கு இறுதியில் ரூபாய் 161.75 நிலைகொண்டது முந்தைய நாள் இறுதி நிலவரத்தை ஒப்பிடும்போது 1.3 என்ற சதவீத உயர்வாகும்.

கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருள் விளம்பரங்களை ஒழிக்க வேண்டும்: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

0

கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருள் விளம்பரங்களை ஒழிக்க வேண்டும்: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

பாமக இளைஞர் அணி தலைவரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த போது நாடு முழுவதும் மக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் புகையிலை பொருட்களை விற்க தடை கொண்டு வந்து இந்திய மக்கள் அனைவரிடமும் பாராட்டை பெற்றார். அவர் பதவிக்காலம் முடிந்த பிறகு அதற்கான கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்த பட்டு அட்டை படங்களில் புகையிலையை பயன்படுத்துவதால் ஏற்படும் கடுமையான விளைவுகளை விளம்பரமாக அச்சிட்டு விற்கலாம் என்ற நிலைக்கு வந்து விட்டது. சினிமாவில் புகையிலை மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளை வைக்கவும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி பார்க்கும் விளையாட்டான கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானங்களில் இது போன்ற புகையிலை பொருட்களின் விளம்பரங்கள் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் இதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி 20 சர்வதேச கிரிக்கெட் போட்டி வரும் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருட்கள் விளம்பரங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.

அக்கடிதத்தின் நகல்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர், தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு பிரிவின் பொறுப்பு அதிகாரி, இந்திய சுகாதார அமைச்சகத்தின் புகையிலை கட்டுப்பாட்டுப் பிரிவு இணைச் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
அவர் வெளியிட்டுள்ள அந்த கடிதத்தின் விவரம்:

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே டி 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் டிசம்பர் 6 ஆம் நாள் ஹைதராபாத் நகரிலும் டிசம்பர் 8 ஆம் நாள் திருவனந்தபுரம் நகரிலும் நடைபெற்ற போது ‘பான் பஹார், பாபா, சைனி கைனி, கம்லா பசந்த், ஷிகார்’ ஆகிய புகையிலைப் பொருட்கள் விளம்பரம் செய்யப்பட்டதை உங்களது கவனத்துக்கு கொண்டுவருகிறேன். ‘பான் மசாலா’ என்கிற போலி பெயரில் இந்த புகையிலை பொருட்களின் விளம்பரங்கள் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தன. தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டன. கிரிக்கெட் விளையாட்டை பின்பற்றும் பல கோடி இளைஞர்களை ஈர்ப்பதற்கு புகையிலைப் பொருள் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தியுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியம் தனது சமூக பொறுப்பை உணர்ந்து, கிரிக்கெட் போட்டிகள் மூலம் புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துவதில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

புகையிலைப் பொருட்களுக்கு மனிதர்கள் அடிமையாவதை ‘ஒரு தொற்றவைக்கப்படும் நோய்’ (a communicated disease) என்று உலக சுகாதார அமைப்பு அழைக்கிறது. விளம்பரங்கள், விளையாட்டுகள் உள்ளிட்ட வழிகளில் இந்த நோய் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. புகையிலை பழக்கத்தால் நோய்வாய்ப்பட்டு இறந்து போகும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஈடாக, புதிய வாடிக்கையாளர்களை இளம் வயதிலேயே அடிமையாக்கும் நோக்கில் புகையிலைப் பொருள் நிறுவனங்கள் திட்டமிட்டு விளம்பரம் செய்கின்றன. அந்த நிறுவனங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்குவதற்கு அவற்றின் இத்தகைய விளம்பர யுக்திகளே காரணமாகும்.

விளம்பரங்களாலும் புகையிலையை திணிக்கும் இதர நடவடிக்கைகளாலும் ஒட்டுமொத்த புகையிலைப் பொருள் பயன்பாடு அதிகமாகிறது. எனவே புகையிலைப் பொருட்கள் மீதான விளம்பரத்தடைகளை முழுமையாக செயலாக்குவதன் மூலம் இத்தீமையை கணிசமாக குறைக்க முடியும். புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகி, பின்னர் அதிலிருந்து மீண்டவர்களை மீண்டும் அடிமையாக்க இத்தகைய விளம்பரங்கள் வழிவகுக்கின்றன. புகையிலைப் பொருட்கள் மீதும் அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் மீதும் மக்களிடையே நிலவும் வெறுப்புணர்வை சரிக்கட்டவும் விளம்பரங்கள் வழிசெய்கின்றன. எனவே புகையிலைப் பொருட்களால் நேரும் அடிமைத்தனம், நோய்கள், இறப்பு ஆகியவற்றை தடுப்பதற்கு புகையிலைப் பொருட்களின் விளம்பரம், ஊக்குவிப்பு நடவடிக்கைகள், புரவலர் செயல்பாடுகள் ஆகியவற்றை முழுமையாக தடுக்க வேண்டும்.

“புகையற்ற புகையிலை (Smokeless tobacco)”

உலக அளவில் புகையிலைப் பயன்பாடு என்பது தீங்கான பழக்கமாக மட்டுமல்லாமல், மனித குலம் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பொதுச் சுகாதார பேராபத்தாகவும் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால் இறந்து போகிறார்கள். இந்தியாவில் நிகழும் பத்து மரணங்களில் ஒன்றிற்கு புகையிலைப் பழக்கம் காரணமாக உள்ளது.

இந்தியாவில் பீடி, சிகரெட் போன்ற புகைபிடிக்கும் பழக்கத்தை விட – குட்கா, பான்மசாலா, கைனி போன்ற புகையற்ற புகையிலைப் பொருட்கள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. 2017 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு படி இந்தியாவின் 15 வயதுக்கு மேற்பட்டோரில் 21.4% பேர் புகையற்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். புகை பிடிப்போர் அளவு 10.7% ஆகும்.

புகையற்ற புகையிலை பழக்கம் என்பது புகையிலையை பற்றவைத்து புகையை சுவாசிக்காமல் – வாய்வழியாகவோ, மூக்குவழியாகவோ நேரடியாக புகையிலை பொருட்களை உட்கொள்ளும் பழக்கம் ஆகும். இப்பழக்கம் மிக அதிக அளவு அடிமையாக்கக் கூடியதாகும். வாய் மற்றும் கழுத்துப் பகுதி புற்று நோய்களுக்கு இது காரணமாகும். கூடவே இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களை இப்பழக்கம் உருவாக்குகிறது. இந்தியாவில் ஏற்படும் வாய்ப்புற்று நோய்களில் 90% அளவுக்கு இதுவே காரணமாகும்.

இந்தியாவில் புகையற்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மலைக்கவைக்க கூடிய அளவாக இருக்கிறது:

கைனி எனும் புகையற்ற புகையிலைப் பொருளை 10,40,81,000 இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இது பிலிப்பைன்ஸ் நாட்டின் மக்கள் தொகைக்கு ஈடானது ஆகும்.

குட்கா எனும் புகையற்ற புகையிலைப் பொருளை 6,35,83,000 இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இது பிரான்ஸ் நாட்டின் மக்கள் தொகைக்கு ஈடானது ஆகும்.

வெற்றிலையை புகையிலையுடன் சேர்த்து 5,40,97,000 இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இது மியான்மர் நாட்டின் மக்கள் தொகையை விட அதிகம் ஆகும்.

புகையிலையை நேரடியாக 3,57,04,000 இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இது கனடா நாட்டின் மக்கள் தொகைக்கு ஈடானது ஆகும்.

பான் மசாலாவை புகையிலையுடன் சேர்த்து 2,65,37,000 இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட அதிகம் ஆகும்.

மூக்குப்பொடியை 58,38,000 இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இது சுவீடன் நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.

ஆகவே, இந்தியாவில் புகையற்ற புகையிலை விற்பனை என்பது பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் மாபெரும் தொழில் ஆகும். அதனால், புகையற்ற புகையிலைப் பொருள் நிறுவனங்கள் மேற்கொள்ளும் விளம்பரங்களும் மாபெரும் அளவில் உள்ளன.

“கிரிக்கெட்டும் புகையிலை விளம்பரங்களும்”

இந்தியா ஒரு விளையாட்டு தேசமாக உருவெடுத்து வருகிறது. விளையாட்டுகளை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதனை உறுதி செய்கின்றன. விளையாட்டு அணிகள் மீதும் வீரர்கள் மீதும் தங்களது அன்பையும் விசுவாசத்தையும் விளையாட்டு ரசிகர்கள் வெறித்தனமாக வெளிப்படுத்தி வருகின்றனர். விளையாட்டுகள் மீதான இளைஞர்களின் பேரார்வத்தை புகையிற்ற புகையிலை நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை திணிப்பதற்கான ஒரு வாய்ப்பாக பார்க்கின்றன. விளையாட்டுகளை பார்க்கும் கோடிக்கணக்கானவர்களிடம் தங்களது புகையிலைப் பொருட்களை அறிமுகப்படுத்தவும், அவர்களது மூளைக்குள் புகையிலைப் பொருட்களை திணிக்கவும் விளையாட்டை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் மிகப்பிரபலமான விளையாட்டாக இருப்பது கிரிக்கெட் தான். இங்கு கிரிக்கெட் ஒரு மதமாக மாறி சமூகத்தில் ஊடாகவும் பாவாகவும் ஊடுருவி உள்ளது.

இந்திய ஒலிபரப்பு வாடிக்கையாளர் ஆய்வு நிறுவனத்தின் 2018 அறிக்கை படி – இந்தியாவில் 76.6 கோடி பேர் விளையாட்டுகளை தொலைக்காட்சிகள் மூலம் பார்க்கின்றனர். அவர்களில் 93% பேர் கிரிக்கெட்டை பார்க்கிறார்கள். அவர்களில் 52% பேர் 30 வயதுக்கு கீழான இளைஞர்கள் ஆகும். 2018 ஆம் ஆண்டில் மட்டும் 2.29 லட்சம் விளம்பரங்கள் கிரிக்கெட் போட்டிகளின் போது தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அவற்றில் முன்னணி விளம்பரங்கள் பட்டியலில் புகையற்ற புகையிலைப் பொருட்கள் விளம்பரம் உள்ளது. 2019 ஐபிஎல் போட்டிகளின் போது மட்டும், ‘பான் மசாலா, சர்தா, குட்கா’ ஆகிய புகையற்ற புகையிலை விளம்பரங்கள் 10,452 முறை செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் போது மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்கள் பட்டியலில் இது மூன்றாவது இடத்தில் வந்துள்ளது. இந்திய குழந்தைகளின் மீதும் இளைஞர்கள் மீதும் புகையற்ற புகையிலைப் பொருட்களை திணிக்கும் ஒரு கருவியாக கிரிக்கெட் போட்டிகளை புகையிலைப் பொருள் நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

“புகையிலைப் பொருள் விளம்பரத் தடை”

இந்தியாவில் புகையிலைப் பொருட்கள் விளம்பரங்களை மேற்கொள்வதற்கு 2004 ஆம் ஆண்டுமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (விளம்பரத் தடுப்பு மற்றும் வணிகம், மொத்தவியாபாரம், உற்பத்தி, கொள்வினை கொடுப்பினை, மற்றும் விநியோகம் முறைப்படுத்தல்) சட்டம் 2003 (The Cigarettes and Other Tobacco Products (Prohibition of Advertisement and Regulation of Trade and Commerce, Production, Supply and Distribution) Act 2003). பிரிவு 5-ன் கீழ் புகையிலைப் பொருட்களை விளம்பரம் செய்வதும், ஊக்குவிப்பதும், ஆதரிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. புகையிலைப் பொருட்களை ஒலி ஒளி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் விளம்பரப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. சிகரெட் மற்றும் புகையிலைக் குழுமங்கள் எந்த ஒரு விளையாட்டு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு விளம்பர ஆதரவு தரக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மேற்படி சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் ஐந்து ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்திய நலவாழ்வுத்துறை அமைச்சக அரசாணை எண். GSR 345, நாள் 31.05.2005-ன் படி புகையிலைப் பொருட்களின் பிராண்ட், அதன் வண்ணம், வடிவம், வணிகச்சின்னம் போன்ற எதனைப் போன்றும் தோற்றமளிக்கும் வேறு எந்தவொரு பொருளையும் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட விவரங்கள் அடிப்படையில், புகையற்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்கள் அனைத்தும் சட்டவிரோதம் ஆகும். புகையற்ற புகையிலைப்பொருள் நிறுவனங்கள், இந்திய கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி உள்ளிட்ட சட்டத்தை மீறும் அனைவரும் இக்குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆகும்.

“சென்னையில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் போட்டி”

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே டி 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் டிசம்பர் 6 ஆம் நாள் ஹைதராபாத் நகரிலும் டிசம்பர் 8 ஆம் நாள் திருவனந்தபுரம் நகரிலும் நடைபெற்ற போது புகையிலைப் பொருட்கள் விளம்பரம் செய்யப்பட்டதை போன்று, சென்னையில் வரும் டிசம்பர் 15 ஆம் நாள் நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் புகையிலைப் பொருட்கள் விளம்பரம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

புகையிலை பழக்கம் பல லட்சம் இளைஞர்களின் வாழ்வை சீரழித்து வருவதை தடுக்கும் வகையில் இத்தகைய விளம்பரங்களுக்கு காரணமாவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே சென்னையில் டிசம்பர் 15 ஆம் நாள் நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது பான் பஹார், பாபா, சைனி கைனி, கம்லா பசந்த், ஷிகார் உள்ளிட்ட புகையிலைப் பொருள் விளம்பரங்கள் சென்னையில் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் வைக்கப்படுவதும், தொலைக்காட்சி மூலம் விளம்பரப்படுத்தப்படுவதும் 2003 தடுக்கப்பட வேண்டும். இது இந்திய புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டத்தில் கூறப்பட்டுள்ள படி அவசியமாகும்.

எல்லாவிதமான புகையிலைப் பொருட்களையும் விளம்பரம் செய்வதையும், ஊக்குவிப்பதையும், ஆதரிப்பதையும் இந்தியாவில் முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

T20 #INDvsWI #INDvWI #WestIndies #India #EndTobaccoAdvertisingInCricket

கிரிக்கெட் போட்டிகளில் புகையிலைப் பொருள் விளம்பரங்களை ஒழிக்க வேண்டும்: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

(படம்: சென்னையில் டிசம்பர் 15 அன்று நடக்கவுள்ள ஒருநாள் போட்டிக்காக – சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டு அரங்கில் வைக்கப்படும் புகையிலை விளம்பரம்)

தமிழகத்திற்கு 500 டன் எகிப்து வெங்காயம் வருகிறது அமைச்சர் காமராஜ் தகவல்!

0

திருவாரூரில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் நிருபருக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது.

கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலையில் மாற்றங்கள் இருந்து வருகிறது வெங்காய விலை உயர்வு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ள அவர் கொடுத்த அறிக்கையை ஒரு மாயை என குறிப்பிட்ட அவர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பே வெங்காய விலை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது படிப்படியாக வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது.

தமிழகத்திற்கு 500 டன் எகிப்து வெங்காயம் வருகிறது அமைச்சர் காமராஜ் தகவல்!

2010ம் ஆண்டு வெங்காயத்தின் விலை ரூ 160 வரை விற்கிறது அப்போது திமுக ஆட்சியில் இருந்தது அப்போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறினால் அப்போது ஐந்து கடைகள் மட்டுமே குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்தார்கள் ஆனால் தமிழக அரசு பசுமைப் பண்ணை கடைகள் 40க்கு தற்போது வரை விற்பனை தொடர்ந்து வெங்காயத்தை விற்று வருகிறோம் எகிப்து நாட்டிலிருந்து வந்த வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்கிறது.

இதில் தமிழகத்திற்கு 1000 டன் வெங்காயம் கேட்கப்பட்டுள்ளது முதற்கட்டமாக இன்னும் இரண்டு நாட்களில் 500 டன் வெங்காயம் தமிழகத்துக்கு வந்துவிடும் அதை மானிய விலையில் கொடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது மேலும் தமிழகத்தில் 6000 ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.