Home Blog Page 5892

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா?

0

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா?

சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கின்றாரா? அல்லது தங்கையாக நடிக்கின்றாரா? என்பது குறித்த தகவலை இன்னும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

திருமணத்துக்கு பின்னர் 36 வயதினிலே என்ற படத்தில் நடித்த ஜோதிகா, அந்த படம் கொடுத்த வெற்றியை அடுத்து காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், செக்க சிவந்த வானம் என தொடர்ச்சியாக தனது வயதுக்கு ஏற்ற கேரக்டர்களில் நடித்து வந்தார்.

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா?

தற்போது கார்த்தியுடன் இணைந்து ஒரு படத்திலும், பொன்மகள் வந்தாள் என்ற படத்திலும் ஜோதிகா நடித்து வருகிறார். இந்த நிலையில் கத்துகுட்டி பட இயக்குனர் இரா.சரவணன் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஜோதிகா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் கதைப்படி ஹீரோவின் தங்கை கேரக்டர் ஒன்று இருப்பதாகவும், அந்த கேரக்டரில் தான் ஜோதிகா நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் தொடங்கவுள்ளது.

திமுக எம்பி கனிமொழிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! அதிர்ச்சியில் திமுக தலைமை

0

திமுக எம்பி கனிமொழிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! அதிர்ச்சியில் திமுக தலைமை

திமுக எம்.பி கனிமொழி வெற்றிக்கு எதிராக அப்போதைய தமிழக பாஜக தலைவராக பதவி வகித்தவரும்,தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டவருமான தற்போதைய தெலுங்கானா ஆளுநராக பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை தற்போது தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்குப் பதில் தூத்துக்குடி வாக்காளர் தொடர்ந்து நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்ற பின் தங்களுக்கு இந்த வழக்கால் பெரிய பிரச்சினை இருக்காது என்று எதிர்பார்த்திருந்த திமுக தலைமைக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு கனிமொழி வெற்றி பெற்றார். கனிமொழியின் இந்த வெற்றியை எதிர்த்து முன்னாள் தமிழக பாஜக தலைவரும், தற்போதைய தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்த மனுவில், கனிமொழியின் கணவர் மற்றும் மகன் சிங்கப்பூர் குடிமகன்கள். அவர்கள் வருமான விவரங்கள் பொருந்தாது என்று வேட்பு மனுவில் கனிமொழி குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் கனிமொழி சிங்கப்பூர் அரசு வழங்கிய குடிமக்கள் சான்றிதழ்களை இணைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் இணைக்க வில்லை. அவருடைய வேட்பு மனு குறைபாடுடையது. எனவே அவரது வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் கனிமொழிக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெற்றார். இதனால் திமுகவிற்கு வரவிருந்த பிரச்சினையும் தீர்ந்தது என அக்கட்சியின் தலைமை நிம்மதி அடைந்தது. ஆனால் இது குறித்து பத்திரிகையில் விளம்பரம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, அந்த தொகுதி வாக்காளரான ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், கனிமொழிக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அப்போது வழக்கைத் திரும்பப் பெற்றதால், தமிழிசை வழக்கு செலவை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால் தான் வழக்கு வாபஸ் பெற்றதாகத் தெரிவித்து அவரது இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.ஆனால் கனிமொழிக்கு எதிரான இந்த வழக்கை தொடர்ந்து நடத்தலாம் என்று நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலையில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு! தீர்ப்பு என்ன சொல்கிறது??!

0

சபரிமலையில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு! தீர்ப்பு என்ன சொல்கிறது??!

அயோத்தி வழக்கு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வெளியான நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான அமர்வு அடுத்து  சபரிமலை உள்ளிட்ட சில முக்கிய வழக்குகளில் நவம்பர் 17 ஆம் தேதிக்கு முன்பு தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள வெளியாகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்து.

இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சபரி மலையின் நம்பிக்கையில் தலையிடும் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட் மனுவை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த வெள்ளிக் கிழமைக்குள் எப்போது வேண்டும் என்றாலும் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக பிரச்சினையில் உள்ள தற்போது தீர்ப்பு வெளியான அயோத்தி விவகாரம் போலவே சபரிமலை பிரச்சனையில் பாஜக முக்கிய இடம் பெறுகிறது. ஏனெனில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதை எதிர்த்து கடந்த ஆண்டு பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதனால் சபரிமலையில் கடந்த ஆண்டு சீசனில் தொடர் போராட்ட களமாக இருந்தது.

சிவன் மற்றும் விஷ்ணுவின் பெண் அவதாரம் மோகினி ஆகியோரின் மகனாகக் கருதப்படும் சபரிமலையில் உள்ள அய்யப்பன் சுவாமியை பல்வேறு மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். அய்யப்பன் சுவாமியின் பிரம்மச்சாரியம் காரணமாக மாதவிடாய் காரணமாக வயதுக்கு வந்த பெண்களை கோவிலின் வளாகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்பது பக்தர்களின் பல ஆண்டுகள் நம்பிக்கை ஆகும். சிறு வயது பெண் குழந்தைகள் அல்லது முதியோர்களுக்கு அனுமதி உண்டு.

அய்யப்ப பக்தர்களின் இந்த நம்பிக்கைக்கு 1991 ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரி மலைக்குள் நுழைவதைத் தடை செய்ததால் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது.

இந்நிலையில் காலங்காலமாக பின்பற்றி வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த 6 பெண் வழக்கறிஞர்கள், பெண்களுக்கு சபரிமலையில் விதித்த தடையை எதிர்த்து 2006 ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தனர். இது இந்திய அரசியலமைப்பின் விதிகளையும் சாரத்தையும் மீறுவதாக தங்கள் மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

இதனையடுத்து உச்சநீதிமன்றம், கடந்த 2018 ஆண்டு செப்டம்பர் மாதம், 1991 ஆம் ஆண்டில் கேரளா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றி அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்தது.

அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொது மக்களின் நம்பிக்கைக்கு எதிரான இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாஜக, பெண்களை நுழைய விடாமல் சபரிமலையில் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தியது. இந்நிலையில் மக்களின் எதிர்ப்பால் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இன்னும் சில நாட்களில் தீர்ப்பு அளிக்க உள்ளது.

மேலும் சபரிமலை சீசன் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் அளிக்க உள்ள தீர்ப்பு எதுவாக இருந்தாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. பெண்களை அனுமதித்தாலும் அனுமதிக்கவில்லை என்றாலும் இந்த வருடமும் சர்ச்சைக்களுக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16 ஆம் தேதி திறக்கப்பட்டு 17 ஆம் தேதி முதல் பூஜைகள் நடைபெற உள்ளன.

இதையடுத்து சபரிமலை கோயிலுக்கு கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டல பூஜை காலத்தில் 23 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பக்தர்களின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

நடிகர்களின் அரசியல் குறித்த முதல்வரின் கருத்து குறித்து திருமாவளவன்

0

நடிகர்களின் அரசியல் குறித்த முதல்வரின் கருத்து குறித்து திருமாவளவன்

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் திரையுலகை சேர்ந்தவர்கள் குறிப்பாக நடிகர்கள், நடிகைகள் அரசியலுக்கு வருவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் பெரும்பாலான நடிகர்கள் வந்த வேகத்தில் மீண்டும் அரசியலைவிட்டு திரும்பி சென்று விடுகின்றனர். அல்லது மக்களின் ஆதரவு இன்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நடிகர்களின் அரசியல் இனி எடுபடாது என்று தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள், ‘இன்றைய சூழலில் அரசியல் விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளது. நடிகர்களுக்கு அரசியலில் எந்த அளவு முக்கியத்துவம் கிடைக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று நான் கருதுகிறேன். எம்ஜிஆர் அவர்களை போல் பெரிய தாக்கத்தை இன்றைய நடிகர்கள் ஏற்படுத்த முடியாது என்ற முதல்வரின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன்’ என்று தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திருமாவளவன் கூறியதுபோல் இதுவரை அரசியலுக்கு வந்த பெரிய நடிகர்களான விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன், சிரஞ்சீவி, பவன்கல்யாண், உள்பட எந்த நடிகர்களும் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறையை ரஜினிகாந்த் அவர் போக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தருமபுரி எம்பி செந்தில்குமார் நாடாளுமன்ற உறுப்பினரா? நாலாந்தர அரசியல்வாதியா? ட்விட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

0

தருமபுரி எம்பி செந்தில்குமார் நாடாளுமன்ற உறுப்பினரா? நாலாந்தர அரசியல்வாதியா? ட்விட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் செந்தில்குமார் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறேன் என்ற பெயரில் சில பதிவுகளை போடுவதும் அதை மாற்று கட்சியினர் விமர்சனம் செய்வதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. இவ்வாறு அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யும் நபர்களுக்கு பதிலளிக்க முடியாமல் அவர்களை பிளாக் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிகமாக பிளாக் செய்த அரசியல் தலைவர்கள் பட்டியலில் இவருக்கு முக்கிய இடம் கிடைக்கும் என்றும் பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

அரசியல் விளம்பரத்திற்காக ஆரம்பித்த இவரது ட்விட்டர் பதிவுகள் நாளடைவில் தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதையும் மறந்து ஒரு நாலாந்தர அரசியல்வாதியை போல பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ட்விட்டர் பதிவில் விமர்சனம் செய்து விளம்பரம் தேடிக் கொள்வது வரை வந்தது. அரசியலில் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் அவருக்கு எதிரான விமர்சனங்கள் நிச்சயமாக இருக்கும் ஆனால் அது ஒரு தலைவரின் பதிவில் போய் பின்னூட்டம் இடும் அளவிற்கு கீழ் தரமாக இருக்க வாய்ப்பில்லை.

ஒரு அரசியல் தலைவரின் கருத்து குறித்தோ அல்லது அவரை பற்றியோ விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் தனியாக ஒரு அறிக்கை அல்லது ட்விட்டர் பதிவுகளாக வெளியிடலாம். ஆனால் தருமபுரி எம்பி செந்தில்குமார் தொடர்ந்து பாமக நிறுவனரின் ட்விட்டர் பதிவுளில் விமர்சனம் செய்து தனக்கான விளம்பரத்தை தேடி கொண்டிருந்தார்.

இந்நிலையில் தான் பாமக இணையதள தொண்டர்கள் தருமபுரி பகுதியில் செந்தில்குமார் எம்பியின் குடும்பம் வன்னியர் சங்க சொத்தை அபகரித்து விட்டதாக குற்றசாட்டை வைத்தனர். இதனையடுத்து பாமக நிர்வாகிகளும் இந்த குற்றசாட்டு குறித்து ஊடகங்களுக்கு முறையான விளக்கமளித்தனர். இதனால் பதறி போன திமுக தலைமை கொஞ்ச காலம் எம்பியை அமைதியாக இருக்க கட்டளையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கொஞ்ச காலம் அமைதியாக இருந்த செந்தில்குமார் எம்பி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆளும் கட்சியை சார்ந்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்தும் பேசி வரும் நிலையில், சமீபத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்றும் பாலியல் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இவரை விமர்சனம் செய்யும் வகையில் டாக்டர் செந்தில்குமார் எம்பி ட்விட்டரில் பதிவிட்ட கருத்து தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. அவரை நம்பி வாக்களித்த தொண்டர்களே அவரும் ஒரு நாலாந்தர அரசியல்வாதி தான் என விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

மாஃபா பாண்டியராஜன் குறித்து திமுக எம்பி செந்தில்குமாரின் ட்விட்டர் பதிவு:

இவருடைய இந்த பதிவிற்கு எதிராக எழுந்த கருத்துக்கள் இது வரை மறைத்து வந்த திமுகவின் வரலாற்றை ஆரம்பம் முதல் தற்போது வரை அனைத்தையும் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. அவற்றில் சில பதிவுகள்.

https://twitter.com/m198029/status/1194301000271699968

தற்போது சுயமரியாதையை பற்றி பேசும் எம்பி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது தானும் அன்புமணி ராமதாஸ் அவர்களின் சமூகம் தான் என சாதியை வைத்து வாக்கு கேட்ட இவர் வெற்றி பெற்ற பின் தான் திராவிடன் என்றும், மேலும் சாதி பெயரை ஒழிக்க போவதாகவும், சாதியை கூறிக் கொண்டு தொகுதி மக்கள் தன்னை பார்க்க வரக் கூடாது என்றும் கூறியுள்ளார். தான் வெற்றி பெற சாதியை பயன்படுத்தலாம் ஆனால் தொகுதி மக்கள் அந்த சாதி பெயரை பயன்படுத்தி கொண்டு தன்னை பார்க்க வரக் கூடாது என்பது தான் சுய மரியாதையா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சிலைகள் மீட்பு குறித்து தமிழக அரசின் விளக்கம்: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி

0

சிலைகள் மீட்பு குறித்து தமிழக அரசின் விளக்கம்: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி

ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டதற்கு பொன் மாணிக்கவேல் காரணம் அல்ல, பிரதமர் மோடியே காரணம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளதற்கு பொன் மாணிக்கவேல் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது

சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் பதவியேற்றதில் இருந்து வெளிநாட்டில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழக கோவில்களின் சிலைகள் மீட்கப்பட்டதற்கு பொன் மாணிக்கவேலுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது

இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘பொன்.மாணிக்கவேல் முயற்சியால் ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும், யுரேனியம் கொள்முதல் செய்ய நடந்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது பிரதமர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது

அரசு தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் குறித்த வழக்கு வரும் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால், இந்த வழக்கு விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். கஷ்டப்பட்டு சிலையை பொன் மாணிக்கவேல் மீட்டு கொண்டு வந்த நிலையில் இந்த மீட்புக்கு அவர் காரணம் இல்லை என்று அரசுத்தரப்பே கூறியுள்ளது அவரது தரப்பினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தாக்கல் செய்த இரண்டு வழக்கு: திருப்பம் ஏற்படுமா?

0

உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தாக்கல் செய்த இரண்டு வழக்கு: திருப்பம் ஏற்படுமா?

மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க அளவிற்கு தனி மெஜாரிட்டி இல்லை என்பதால் கூட்டணி ஆட்சி அமைக்க அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிர முயற்சி செய்தன

முதல் கட்டமாக பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இழுபறி ஏற்பட்டது. இதனையடுத்து சிவசேனா கட்சி தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தது. ஆனால் இந்த முயற்சி பலிக்கவில்லை

இந்த நிலையில் பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க மாநில ஆளுநர் தனித்தனியாக அழைப்பு விடுத்தார். மூன்று கட்சிகளுக்கும் கொடுத்த காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து இன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு அம்மாநில ஆளுநர் கூடுதல் அவகாசம் வழங்க மறுத்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவசேனா நிர்வாகிகள் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெறும் என உச்சநீதிமன்ற பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்

இதுமட்டுமன்றி மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து சிவசேனா மற்றொரு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கும் நாளை விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் வழங்கும் உத்தரவால் மகாராஷ்டிர மாநிலத்தில் திருப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீதான பழிவாங்கலை கைவிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

0

பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீதான பழிவாங்கலை கைவிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

உரிமைக்காக போராட்டம் நடத்தும் பல்கலைக்கழக பணியாளர்களை பழிவாங்க பெரியார் பல்கலைக்கழகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊதிய உயர்வு, பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் தொழிலாளர் சங்க நிர்வாகிகளை பணி நீக்கம் செய்யும் நோக்கத்துடன், அவர்களிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. உரிமைக்காக போராட்டம் நடத்தும் பல்கலைக்கழக பணியாளர்களை பழிவாங்க பல்கலைக்கழகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் ஆகியோரின் ஊதிய உயர்வு, வருங்கால வைப்பு நிதி, தொழிற்சங்க அங்கீகாரம், பல்கலைக்கழகத்திற்கு முழுநேர பதிவாளர் நியமனம் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு கட்ட அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகள் மிகவும் நியாயமானவையாகும்.

இந்த கோரிக்கைகள் குறித்து பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் குழந்தைவேலு தங்களை அழைத்து பேச வேண்டும் என்று தொழிலாளர் சங்கம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அதன்பின் இன்றுடன் சரியாக 100 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை தொழிலாளர்களை அழைத்து பேச்சு நடத்த துணைவேந்தர் முன்வரவில்லை. மாறாக, புதுப்புது வாய்ப்புகளை உருவாக்கி தொழிலாளர்களை பழிதீர்க்க அவர் முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வரிசையில் இப்போது உங்களை ஏன் பணிநீக்கக்கூடாது? என்று விளக்கம் அளிக்கும்படி 54 தொழிலாளர்களுக்கு பொறுப்பு பதிவாளர் முனைவர் தங்கவேல் மூலமாக துணை வேந்தர் குழந்தைவேல் குறிப்பாணை (மெமோ) அனுப்பியுள்ளார் . இதற்காக குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் மிகவும் அற்பமானவை ஆகும்.

பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது 54 தொழிலாளர்களும் சற்று தொலைவில் அமர்ந்திருந்தனர் என்பது தான் குறிப்பாணையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆகும். இதன் மூலம் உறுதியேற்பு விழாவை அவர்கள் அவமதித்து விட்டதாகக் குற்றஞ்சாட்டி, பணி நீக்கம் செய்வது தான் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நோக்கம் ஆகும். குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளவாறு எந்தவித அவமதிப்பிலும் ஈடுபடவில்லை என்று தொழிலாளர்கள் கூறிய போதிலும், அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்த அவர்களை துணைவேந்தர் பழிவாங்கத் துடிப்பது எத்தகைய மனநிலை என்று தெரியவில்லை.

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் குழந்தைவேலு சிறந்த கல்வியாளர்; ஊழல் கறை படியாதவர்; எந்த வகையான சர்ச்சைகளிலும் சிக்காதவர். அப்படிப்பட்டவர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு வரும் போது விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டும். மனதில் பழிவாங்கும் உணர்வை தேக்கி வைத்துக் கொண்டு, எத்தனை நல்ல குணங்களை வைத்திருந்தாலும் யாருக்கும் எந்த பயனும் இல்லை. தொழிலாளர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் அவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டவை ஆகும். உதாரணம் காட்ட வேண்டுமானால், தொகுப்பூதிய பணியாளர்களுக்கு கடந்த ஓராண்டாக மாதத்திற்கு 22 நாட்கள் மட்டும் தான் ஊதியம் வழங்கப்படுகிறது; இதை மாற்றி ஏற்கனவே இருந்ததைப் போல 30 நாட்களுக்கு ஊதியம் வழங்கும்படி கோருகிறார்கள். இது மிகவும் நியாயமானது. இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக, கோரிக்கையை முன்வைத்துப் போராடுபவர்கள் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி பணிநீக்கம் செய்வது எந்தவகையிலும் அறமல்ல.

எனவே, 54 தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பாணைகளை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் போக்கை கைவிட்டு, பணியாளர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பெரியார் பல்கலைக்கழகம் முன்வர வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி: ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

0

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி: ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்.எல்.ஏக்களை பெற்றிருந்தும், சிவசேனா கட்சியின் பேராசையால் அந்த கூட்டணி ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது

சிவசேனா தனித்து ஆட்சி அமைக்க எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததால் தற்போது யாருக்கும் இன்றி அம்மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு தேவையான 145 இடங்கள் எந்தக் கட்சியிடமும் இல்லை என்றாலும் பாஜக-சிவசேனா கூட்டணி அமைந்திருக்கலாம். ஆனால் சிவசேனாவின் பேராசை மற்றும் பிடிவாதம் இன்று குடியரசு தலைவர் என்ற நிலையை கொண்டு வந்துள்ளது

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

0

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்னும் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுவதால் அம்மாநிலத்தின் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளதால் சிவசேனா உள்ளிட்டஅரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இன்று மதியம் மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்புக்கு உட்பட்டு மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பதால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356வது பிரிவின் சரத்துகளை அடிப்படையாகக் கொண்டு குடியரசுத் தலைவருக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்

தனிப்பெரும் கட்சியான பாஜக, இரண்டாவது இடத்தை பெற்ற சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தனித்தனியே ஆட்சி அமைக்க ஆளுனர் அழைப்பு விடுத்தார். ஆட்சி அமைக்க தங்களுக்கு விருப்பம் இல்லை என்று பாஜக தெரிவித்துவிட்ட நிலையில் தங்களுக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதைக் காட்ட ஆளுநர் தங்களுக்கு வழங்கிய காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று சிவசேனா கோரிக்கை விடுத்தது. ஆனால் ஆளுனர் அவகாசம் கொடுக்க மறுத்துவிட்டார். அதேபோல் இன்று இரவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவும் முடிவடைகிறது

இதனையடுத்தே மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுனர் பரிந்துரை செய்துள்ளார். மேலும் மத்திய அமைச்சரவையும் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்து கடிதம் கொடுத்துள்ளது. இந்த கடிதத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது