Home Blog Page 5903

இந்தியாவில் வாட்ஸ் ஆப் தகவல்கள் திருடப்பட்டதா? வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்

0

இந்தியாவில் வாட்ஸ் ஆப் தகவல்கள் திருடப்பட்டதா? வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்

இந்தியாவில் வாட்ஸ் ஆப் பயன்படுத்திவரும் நபர்களின் தகவல்கள் திருடப்பட்டதா என்பது பற்றி வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதில் ஏற்கனவே இது பற்றி அரசுக்கு தகவல் தெரிவித்ததாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் வசிக்கும் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்களின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அது பற்றி முறையான விளக்கம் அளித்துள்ளது.

இதில் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டது என்ற தகவல்களை கடந்த மே மாதமே மத்திய அரசுக்கு தெரிவித்து விட்டதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய சைபர் தாக்குதல் தடுப்பு அமைப்பான சி.இ.ஆர்.டி.-விடம் உளவு பார்க்கப்பட்ட தகவல்களை கூறியதாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் ‘பெகாசஸ்’ என்ற மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதையோ, எந்த வகையில் தகவல்கள் திருடப்பட்டன என்பது பற்றியோ இதில் எதுவும் கூறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விளக்கம் அளித்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம் தனி நபர்களுக்கு வரும் தகவல்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை தருவோம் என்றும் உறுதி அளித்துள்ளது.

இந்தியாவில் வாட்ஸ் ஆப் தகவல்கள் திருடப்பட்டதா? வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்

உளவு பார்த்தது பற்றிய தகவல் தெரிந்த உடனேயே உளவு பார்க்க பயன்படுத்திய அந்த மென்பொருளை தயாரித்த என்.எஸ்.ஒ. நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில் இது குறித்து தொடர்ந்துள்ள வழக்கில் 20 நாடுகளில் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.

நாட்டின் குடிமக்களின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்ற இந்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். சைபர் தாக்குதல் நிகழ்த்தியவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து வாட்ஸ் ஆப் பயனாளர்களின் தகவல்களையும் பாதுகாக்க வாட்ஸ் ஆப்  நிறுவனம்உறுதி பூண்டுள்ளது” என வாட்ஸ் ஆப் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா-வங்காளதேசம் இடையேயான கிரிக்கெட்: ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தல்! நடந்தது என்ன?

0

இந்தியா-வங்காளதேசம் இடையேயான கிரிக்கெட்: ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தல்! நடந்தது என்ன?

இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

இதையொட்டி வங்காளதேச அணி வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அங்கு காற்றில் மாசு அதிகரித்து ஒரே புகைமண்டலமாக காட்சி அளிப்பதால் சில வீரர்களும், தலைமை பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ, சுழற்பந்து வீச்சு ஆலோசகர் டேனியல் வெட்டோரி போன்றோரும் பயிற்சியின் போது சுவாச கவசம் அணிந்து இருந்தனர்.

இதன்படி இன்று நடக்கவிருக்கும் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா (அருண் ஜெட்லி ஸ்டேடியம்)  ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. இந்திய அணியில், கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா இந்திய அணியை வழி நடத்துகிறார்.  

இதனிடையே டெல்லியில் காற்றின் மாசு அபாயகரமான அளவை தாண்டி விட்டது. அங்கு எங்கு, பார்த்தாலும் புகைமூட்டமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் தான் வங்காளதேச அணியில் பெரும்பாலான வீரர்கள் சுவாச கவசம் அணிந்தபடி பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இப்போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாட்டை குறைக்க வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படுகிறது. மேலும்  இன்று நடைபெறும்  போட்டியை காண வரும் ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்! அது ஒரு போதும் நடக்காது-திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி

0

சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்! அது ஒரு போதும் நடக்காது-திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்! அது ஒரு போதும் நடக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும் பெரியார் மற்றும் அண்ணாவின் சிந்தனைகள் உள்ள வரை திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் அவர் பேசியிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் நடந்த திமுகவின் மூத்த நிர்வாகி காசி விஸ்வநாதன் வீட்டு திருமண விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது.

இந்தியாவிலேயே சுயமரியாதை முழு அரசு அங்கீகாரத்துடன் நடந்து வருகிறது தமிழகத்தில் தான் . தற்போது தமிழகத்தில் சுயமரியாதை ஒரு இயக்கமாக நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சியில் தான் சுயமரியாதை திருமணத்திற்கு முதன் முதலாக அனுமதி வழங்கப்பட்டது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்

இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, பெரியார் மற்றும் அண்ணாவின் சிந்தனைகள் உள்ளதால் தான் தமிழகத்தில் எந்த ஆதிக்க சக்தியாலும் நுழைய முடியவில்லை. திமுகவை அவர்களின் கருத்துக்கள் தான் வழி நடத்தி வருகிறது. திமுக பல சமூக சீர் திருத்தங்களை செய்து இருக்கிறது.

அதாவது முதன் முதலாக சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான்.1967 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை சீர் திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. கடந்த 1967 ஆம் ஆண்டில் முதல்வர் ,பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக தான் ஆட்சி அமைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது தெய்வீக திருமணத்தை நான் எதிர்க்கவில்லை. மேலும் பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் இருக்கும் வரை தமிழகத்தில் திமுகவை எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது. தமிழகத்தில் மிக விரைவில் திமுக ஆட்சி அமையும்.

ஒரு சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள், அது ஒரு போதும் நடக்காது. திமுக எப்போதையும் விட மிக வலிமையாக இருக்கிறது. லோக்சபா தேர்தலில் நாங்கள் பெற்ற வெற்றியை சட்டசபை தேர்தலிலும் பெறுவோம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்

மருத்துவர் ராமதாஸ் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு ஏன்? ஆட்சியில் பங்கு! அன்புமணி ராமதாஸ் துணை முதல்வரா?

0

மருத்துவர் ராமதாஸ் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு ஏன்? ஆட்சியில் பங்கு! அன்புமணி ராமதாஸ் துணை முதல்வரா?

நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து ஆளும் தரப்பிற்கு கிடைத்த நம்பிக்கையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆளும் அதிமுக தரப்பு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

இந்நிலையில் கூட்டணி கட்சியான பாமக சார்பாக அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பாமக தரப்பில் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்,முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் மற்றும் அதிமுக தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி,எஸ்.பி.வேலுமணி போன்றோரும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் மறைந்ததற்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின் பொது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி சட்டமன்ற இடைதேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளதை போல விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் அதன் பிறகு வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெறுவதற்கு பாமகவின் வாக்குகளும் மருத்துவரின் பிரச்சாரமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதால் அடுத்து வரும் தேர்தல்களிலும் இதே வியூகத்தை பின்பற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதில் அதிமுக மற்றும் திமுகவுக்கு இடையேயான போட்டி என்பது மாறி பாமக மற்றும் திமுக இடையேயான போட்டி என்ற நிலைக்கு மாறி காரசாரமான விமர்சனங்கள் மற்றும் விவாதங்களுடன் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் திமுக வெற்றி பெற்றால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறியது பற்றியும் இனி வரும் தேர்தல்களில் இது போன்ற வாக்குறுதிகளை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் விவாதித்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

மருத்துவர் ராமதாஸ் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு ஏன்? ஆட்சியில் பங்கு! அன்புமணி ராமதாஸ் துணை முதல்வரா?

மேலும் நடைபெறவுள்ள உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பாமகவிற்கான தொகுதிகள் எத்தனை என்பது பற்றியும், கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பாமக ஆதரவளித்ததை போல இல்லாமல் இந்த முறை நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியில் பங்கு மற்றும் அன்புமணி ராமதாஸுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டதாக தெரிகிறது. எப்படியாவது அடுத்த முறையும் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமி பாமகவின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்றே எதிர்பார்க்கபடுகிறது.

தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை மற்றும் நடைபெற்ற இடைதேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாமகவின் வாக்கு வாங்கி எந்த அளவிற்கு உதவியது என்பதையெல்லாம் கவனிக்கும் போது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் இந்த அரசியல் நகர்வு சரியானதாகவே பார்க்கபடுகிறது. மேலும் தற்போதைய சூழலில் ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட்டு வந்தாலும் தேர்தல் நேரத்தில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் அந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பலத்தை காட்ட பாமகவின் நிலையான வாக்கு வங்கியை நம்பி தான் ஆக வேண்டும் அதற்கு பிரதிபலனாக பாமகவிற்கான முக்கியத்துவத்தை அளிக்கவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

விஷ வண்டு தாக்கி புதுவை முன்னாள் எம்எல்ஏ மரணம் தமிழக முதலமைச்சர் இரங்கல்

0

விஷ வண்டு தாக்கி புதுவை முன்னாள் எம்எல்ஏ மரணம் தமிழக முதலமைச்சர் இரங்கல்

புதுச்சேரி மாநில அதிமுகவின் முன்னாள் மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய புருஷோத்தம்மன் விஷவண்டு தாக்கி உயிரிழந்தார், புதுச்சேரி சட்டமன்றத்தில் இரண்டு முறை மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார்,. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி,

விஷ வண்டு தாக்கி புதுவை முன்னாள் எம்எல்ஏ மரணம் தமிழக முதலமைச்சர் இரங்கல்

புதுச்சேரி அதிமுகவில் மாநில துணைச் செயலாளர், மாநில புறநகர் செயலாளர், விவசாயப் பிரிவுச் செயலாளர் போன்ற பல பதவிகளை வகித்தவர்,. அவர் தனக்கு சொந்தமான புதுவை திருக்கனூர் பக்கத்தில் உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் ராதாபுரத்தில் தனது விவசாய நிலத்தில் நடைபெற்ற பணிகளை பார்த்து கொண்டிருக்கும்போது விஷவண்டு கொட்டியதில் சம்பவ இடத்திலே மயங்கி விழுந்துள்ளார்,.

உடனடியாக அங்குள்ளவர்கள் அவரை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்,. ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,.

விஷ வண்டு தாக்கி புதுவை முன்னாள் எம்எல்ஏ மரணம் தமிழக முதலமைச்சர் இரங்கல்

நாளை அவரது இறுதிச்சடங்கு புதுச்சேரியில் நடக்கும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். புருஷோத்தமன் மரணத்திற்கு தமிழுக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

விஜய் நடிக்க வேண்டிய படத்தில் புதுமுக நடிகர்: டைட்டில் அறிவிப்பு

0

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ’யோகா அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் துப்பறியும் நிபுணராக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது

ஆனால் இந்த படம் திடீரென டிராப் செய்யப்பட்டது. அதற்கான காரணம் கூறப்படவில்லை. இந்த படத்தில் நடிக்க விஜய் விரும்பவில்லை என்று கூறியதாக செய்திகள் வெளியாகின.

விஜய் நடிக்க வேண்டிய படத்தில் புதுமுக நடிகர்: டைட்டில் அறிவிப்பு

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த படம் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த படத்தில் அறிமுக நடிகர் வருண் என்பவர் நடிக்க உள்ளார். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷின் நெருங்கிய உறவினர் என்பதும் இந்த படத்தையும் இதே நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ’இமைபோல் காக்க’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் தூய தமிழில் இந்த படத்தின் டைட்டிலையும் கவுதம் மேனன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

10வது முறையாக அறிவிக்கப்பட்ட தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதி

0

10வது முறையாக அறிவிக்கப்பட்ட தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதி

தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகவிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டின் தீபாவளியும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி கடந்த சில மாதங்களில் ஒன்பது முறை அறிவிக்கப்பட்டு அனைத்து ரிலீஸ் தேதிகளும் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டு வந்ததால் தனுஷ் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது 10வது முறையாக நவம்பர் 29 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளதால் இந்த தேதியில் கண்டிப்பாக படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் இந்த படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் கமிட் ஆன முதல் படம் இதுதான். ஆனால் இந்த படம் ரிலீசுக்கு முன்னரே அவர் நடித்த ஒருசில படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது. மேலும் இந்த படத்தில் சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

தமிழ்நாட்டை விட்டே செல்ல போகிறேன்: பிக்பாஸ் 3 பிரபலம் பேட்டி

0

தமிழ்நாட்டை விட்டே செல்ல போகிறேன்: பிக்பாஸ் 3 பிரபலம் பேட்டி

ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளர் இருப்பதுண்டு. அந்த வகையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளராக மீராமிதுனையே நெட்டிசன்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவி மற்றும் தமிழக போலீஸ், தமிழக அரசு மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

தற்போது என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் நிறைய விஷயங்கள் தவறாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலேயே நான் இருக்க முடியாத அளவு எனக்கு பிரச்சனைகள் உள்ளன. இதனால் வேறு மாநிலம் சென்றால் தான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று எனக்கு தோன்றுகிறது. என் மீது 2 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டுமே பொய்யானது, போலியானது. லஞ்சம் வாங்கி கொண்டு என் மீது தமிழக போலீசார் பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்

தமிழ்நாட்டை விட்டே செல்ல போகிறேன்: பிக்பாஸ் 3 பிரபலம் பேட்டி

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இன்று வரை ஒப்பந்தம் செய்யப்பட்டபடி எந்த ஒரு தொகையும் தரவில்லை. நான் ஒரு ரூபாய் கூட அட்வான்ஸ் வாங்காமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நிகழ்ச்சி முடிந்து பத்து நாட்களில் மொத்தமாக தருவதாக கூறினார்கள். ஆனால் இன்று வரை எனக்கு பேமெண்ட் வரவில்லை.

இது சம்மந்தமாக விஜய் டிவிக்கு தொடர்பு கொண்டால் சரியான பதில் இல்லை. இந்த பேட்டிக்கு பின்னரும் விஜய் டிவி ஒப்பந்தப்படி எனது சம்பளத்தை கொடுக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த தொலைக்காட்சியும் பெரும் பிரச்னையை சந்திக்க நேரிடும். மேலும் விஜய் டிவி மீது ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர்வேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆன்லைன் சினிமா டிக்கெட்: களத்தில் குதிக்கும் அமேசான்

0

ஆன்லைன் சினிமா டிக்கெட்: களத்தில் குதிக்கும் அமேசான்

ஆன்லைன் வர்த்தகத்தில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் கால்பதித்து வணிகம் செய்து வரும் நிலையில் தற்போது அடுத்ததாக சினிமா டிக்கெட் விற்பனையும் செய்யவுள்ளது

அமேசான் நிறுவனம் ’புக் மை க்ஷோ’ ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்யும் நிறுவனத்துடன் இணைந்து சினிமா டிக்கெட்டுகளை விற்பனை செய்ய உள்ளது

இதற்காக அமேசான் நிறுவனத்தின் செயலியில் சினிமா டிக்கெட்டுக்கு என ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் சினிமா டிக்கெட் எடுப்பவர்கள் தனியாக புக்மைக்ஷோ அல்லது டிக்கெட் நியூ இணையதளங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அமேசான் செயலிலேயே சினிமா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்

அது மட்டுமின்றி ஆரம்பகால சலுகையாக குறிப்பிட்ட நாட்களுக்கு முன் பதிவு செய்யும் டிக்கெட்டுக்களுக்கு 2% கேஷ்பேக் சலுகையையும் அமேசான் வழங்கியுள்ளது

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இனிமேல் ஆன்லைன் மூலம் தான் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என்ற வழிமுறையை விரைவில் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் அமேசான் நிறுவனம் இந்தத் துறையில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

#

போதி தர்மர் சிலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்! மத்திய அரசுக்கு இராமதாஸ் வேண்டுகோள்

0

போதி தர்மர் சிலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்! மத்திய அரசுக்கு இராமதாஸ் வேண்டுகோள்

போதி தர்மர் சிலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இந்தியா – சீனா இடையிலான இருதரப்பு உறவுகளையும், சுற்றுலாவையும் மேம்படுத்தும் நோக்குடன் காஞ்சிபுரத்தில் போதி தர்மருக்கு பிரமாண்ட சிலை அமைக்கவும், புத்த மதத்துடன் தொடர்புடைய தமிழக நகரங்களை இணைத்து சுற்றுலா வளையம் அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது ஆகும்.

புதிய வாய்ப்புகள் உருவாகும் போது அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது தான் அறிவார்ந்த அரசுக்கு அடையாளம் ஆகும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங் அவர்களுக்கும் இடையே கடந்த மாதம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுக்களின் போது, இந்தியா – சீனா இடையிலான பொருளாதார மற்றும் சுற்றுலா உறவுகளை வலுப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அதன் ஒருகட்டமாகவே போதி தர்மரின் பெருமைகளை மையமாக வைத்து தமிழ்நாட்டில் சுற்றுலா வளையம் ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய அளவில் சிலை வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் வல்லபாய் படேலுக்கு 597 அடி உயரத்துக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதை விட சற்று குறைந்த உயரத்தில் போதி தர்மரின் சிலை அமைக்கப்படும்; அங்கு போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் ஒலி ஒளி காட்சிகள் ஏற்பாடு செய்யப்படும்; காஞ்சிபுரத்தில் தொடங்கி மாமல்லபுரம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட புத்த மதத்துடன் தொடர்புடைய 6 நகரங்களை இணைக்கும் வகையில் வட்டச் சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்ய தமிழக அரசின் சுற்றுலாத் துறை திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை இரு வகைகளில் பயனளிப்பதாக அமையும். முதலாவதாக, சீன மக்களால் வணங்கப்படும் போதி தர்மரை மையமாக வைத்து சுற்றுலா மையம் அமைக்கப்படுவதால், அது சீன மக்களையும், சீன அரசையும் பெரிதும் கவரும். அதனால், இரு தரப்பு சுற்றுலாவும், வணிகமும் அதிகரிப்பது மட்டுமின்றி, இரு தரப்பு உறவும் வலுவடையும். இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள போதிலும், அதன் லட்சியங்களை எட்டுவதற்கு சீனாவின் ஒத்துழைப்பும், ஆதரவும் தேவை ஆகும். ஆனால், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் யாருக்கு வலிமை அதிகம் என்பது குறித்த போட்டியில் இந்தியாவும், சீனாவும் ஒன்றையொன்று நம்பிக்கையின்றி அணுகுவதால், இரு தரப்பு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் அனைத்தையும் போதி தர்மர் சுற்றுலா மூலமான நடவடிக்கைகள் தகர்க்கும். அந்த வகையில் இது பயனுள்ளதாகும்.

இரண்டாவதாக போதி தர்மரின் பெருமையை தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பரப்ப கடந்த காலங்களில் தமிழக ஆட்சியாளர்கள் எதையும் செய்யவில்லை. சீனாவிலிருந்து இந்தியா வந்த யுவான்-சுவாங்கின் வரலாற்றை பாடநூல்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பித்த அளவுக்குக் கூட, நமது மண்ணின் மைந்தனான போதி தர்மரின் வரலாறு நமது மக்களுக்கும், மாணவர்களுக்கும் புகட்டப் படவில்லை. பல்லவ நாட்டை ஆண்ட கந்தவர்மனின் மூன்றாவது மகனாக பிறந்த போதி தர்மர், தனது இளவரசர் பட்டத்தைத் துறந்து புத்த துறவியாக மாறினார்.

பின்னர் சீனாவுக்கு சென்று புத்த மதத்தை பரப்பியதுடன், குங்பூ கலையையும் கற்பித்தார். சீனாவில் மட்டுமின்றி, தாய்லாந்து, ஜப்பான், ஹங்காங் உள்ளிட்ட நாடுகளிலும் போதி தர்மர் வணங்கப்படுகிறார். ஆனால், அவரைப் பற்றிய உண்மைகள் இதுவரை மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. இப்போது போதி தர்மரின் மிகப் பிரமாண்ட சிலை அமைக்கப்படுவதன் மூலமும், அவரது வாழ்க்கை வரலாறு பரப்பப்படுவதன் மூலமும் பல்லவ வம்சத்து இளவரசரான போதி தர்மரின் புகழ் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பரவும்.

இந்திய சீன உறவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த அதிக நிதி தேவை. இத்திட்டத்தை தமிழக அரசால் மட்டும் செயல்படுத்த முடியாது. எனவே, போதி தர்மர் சிலை அமைத்தல் மற்றும் புத்த மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைத்து சுற்றுலா வளையம் அமைக்கும் திட்டத்திற்கு தேவையான நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், சீனாவின் ஃபியூஜியான் மாநிலத்திற்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்துவது என்று மாமல்லபுரத்தில் இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுக்களில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடங்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.