Home Blog Page 5911

7 கை மாறினாலும் 70 கை மாறினாலும் திருட்டு பொருள் திருட்டுப்பொருள் தான்! திமுகவை கதறவிடும் தலித் தலைவர்

0

7 கை மாறினாலும் 70 கை மாறினாலும் திருட்டு பொருள் திருட்டுப்பொருள் தான்! திமுகவை கதறவிடும் தலித் தலைவர்

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா என்ற பிரச்சினை மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக பஞ்சமி நிலம் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் ட்விட்டரில் ஒரு போரே நடந்தது.

அசுரன் படத்தை பார்த்துவிட்டு இது படம் அல்ல பாடம் என்ற பதிவை டிவிட் செய்ததால் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடுமையான எதிர்வினைகளை சந்தித்து வருகிறார். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் தான் கட்டப்பட்டது என்று அதிரடியாக தெரிவித்தார் ராமதாஸ். இதற்கு பதிலாக 1985 ஆம் ஆண்டு பதியப்பட்ட பட்டவை வெளியிட்டு இது தனிநபர் பட்டாவாக பதியப்பட்டது என்று காட்டி ராமதாஸுக்கு பதிலளித்தார். இது மிகப்பெரிய பிரச்சினையாகவே திரும்பி மு.க.ஸ்டாலின் அவர்கள் மூலப்பத்திரத்தை காட்டாமல் யாரிடமிருந்து இடம் வாங்கப்பட்டது என்று தெரிவிக்காமல் ஏதோ ஒரு பட்டவை காட்டிவிட்டு சவால் விடுகிறார் என்று எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றனர்.

குறிப்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா அவர்கள் அப்பாவி மக்களின் நிலத்தை பிடுங்குகின்ற படுபாதக கட்சி என்று திமுக என்று கடுமையாக விமர்சித்தார்,. பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் அவர்களும் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் தான் கட்டப்பட்டது என்றும் இதற்கான ஆதாரத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவே வெளியிட்டார் என்று பேசினார். இடத்தை தலித் மக்களிடம் ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கும் என்று அதிரடியாக தெரிவித்தார்.

7 கை மாறினாலும் 70 கை மாறினாலும் திருட்டு பொருள் திருட்டுப்பொருள் தான்! திமுகவை கதறவிடும் தலித் தலைவர்

இதற்கு ஒரு படி மேல் போய் பாஜக தமிழக பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளது என்ற மக்களால் பேசப்படுகிறது இதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்தார். இதனை பரிசீலித்த தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம் முரசொலி அலுவலகம் இருந்த இடம் பஞ்சமி நிலமா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி தமிழக தலைமை செயலாளருக்கு அறிவிக்கை அனுப்பி உள்ளது. இதனால் திமுக கடும் அதிர்ச்சியில் உள்ளது. மு.க.ஸ்டாலின் அவர்களும் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் அவர்களும் பாமக நிறுவனர் ராமதாஸ் சொன்ன கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார், பஞ்சமி நிலத்தில் தான் முரசொலி மாறன் அலுவலகம் கட்டப்பட்டது என்றும் இதில் உண்மை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். ஏழு கை மாறினாலும் எழுபது கை மாறினாலும் திருட்டுப் பொருள் திருட்டுப் பொருள் தான் திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பேசினார், இப்படி அடுத்தடுத்து தாக்குதலால் திமுக தலைமை என்ன அறிக்கை வெளியிட போகிறது என்று திமுகவினரே எதிர்பார்க்கும் அளவில் நிகழ்வுகள் நடைபெறுகிறது.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும் முரசொலி மாறன் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்றால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் 29ம் தேதிக்குள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் திமுகவிற்கு கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

ஜியோ வின் 4G புரட்சியை BSNL நிறுவனம் தகர்க்குமா? எதிர்பார்ப்பில் மக்கள்

0

ஜியோ வின் 4G புரட்சியை BSNL நிறுவனம் தகர்க்குமா? எதிர்பார்ப்பில் மக்கள்

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்குவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது.

ஜியோ வந்த பிறகு இணையதள உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. இணைய தள சேவையை மலிவான விலையில் வழங்கி உலக அளவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.

ஜியோ வருகையால் ஒரு ஜிபி இண்டர்நெட் டேட்டாவின் கட்டணம் 150 ரூபாய்க்கு கொடுத்து கொள்ளை லாபம் பார்த்த மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தது இதில் சில நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது.

யாரும் எதிர்பாராத வகையில் இப்படிப்பட்ட புரட்சியை ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி அவர்கள் இந்திய மக்களுக்கு பரிசாக அளித்தார்.இந்த ஒரு மாற்றம் தான் இந்தியாவில் மிகப்பெரிய இணையதள சந்தைக்கு வழிவகுத்தது, சமூக வலைத்தளங்கள் மூலமாகவே அரசியல் விவாதங்கள், விளம்பரங்கள், வியாபார விளம்பரங்கள், யார் வேண்டுமானாலும் ஊடகத்தை தொடங்கலாம் எவர் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை வெளியிடுவதற்கு எளிதாக கொண்டு செல்லலாம் என்று உன்னதமான பணியை தனது சேவை மூலம் வழங்கி ஜியோ மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஜியோ வந்த பிறகுதான் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வேறு வழியில்லாமல் டேட்டா கட்டணத்தை குறைத்தன.
இப்படி இருக்க மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் 3ஜி சேவையை மட்டும் வழங்கி வந்தது, இது பிஎஸ்என்எல் பயன்பாட்டாளர்களுக்கு மிகப் பெரிய குறையாகவே இருந்தது, காலம் தாழ்த்தி தற்போதுதான் மத்திய அரசு BSNL நிறுவனத்திற்கு 4G சேவையை வழங்கலாம் என்ற ஒப்புதலை வழங்கிவிட்டது.

BSNL நிறுவனம் மிகப் பெரிய நஷ்டத்தில் இயங்கி வருகிறது, அதன் ஊழியர்களுக்கு சம்பளம் கூட கிடைப்பதில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது, ஏனெனில் பிஎஸ்என்எல் நிறுவனம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் பல சலுகைகளை மக்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ க்கு நிகராக பிஎஸ்என்எல் வருமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

அமைச்சரவையின் இந்த முடிவை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலுக்காக கமலஹாசன் எடுக்கும் புதிய வியூகம்

0

சட்டசபை தேர்தலுக்காக கமலஹாசன் எடுக்கும் புதிய வியூகம்

சென்னை: தமிழக அரசியலில் தானும் தடம் பதிக்க விரும்பிய நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளில் நடிகர் ரஜினி காந்த் பங்கேற்பார் என்று பேசப்படுகிறது. இதையடுத்து அவரது அரசியல் சார்ந்த நகர்வுகள் மேலும் வேகம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர்களும் அதிமுக மற்றும் திமுகவின் மூத்த தலைவர்களுமாக விளங்கிய ஜெயலலிதா மற்றும் கருணாநிதி அவர்களின் மறைவிற்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டதாக கருதிய நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்து நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், முதன்முறையாக அவரது கட்சி போட்டியிட்டு 4 சதவீத வாக்குகளை பெற்றது.

இவரது கட்சிக்கு கிடைத்த வாக்கு சதவீதம் குறைவாக இருந்தாலும் சில தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அள விற்கு வாக்குகள் கிடைத்தன. 4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் கிடைத்தன. 11 தொகுதிகளில் 3வது இடம் பெற்றது. இது கமல்ஹாசனுக்கும் அவரது கட்சியினருக்கும் மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

இதனையடுத்து அடுத்த கட்டமாக சட்டமன்ற தேர்தலை நோக்கி நடிகர் கமலஹாசன் அரசியல் வியூகம் அமைத்து வருகிறார். மக்கள் நீதி மய்யத்துக்கு நகர்ப்புறங்களில் இருக்கும் அளவுக்கு கிராமப்புறங்களில் ஆதரவு இல்லை என்பதை பலரும் அறிவர். இதனால் கட்சிக்கு சரியான நிர்வாகிகளை தமிழகம் முழுக்க நியமிக்கவும் தொடர்ந்து கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலை ‘குறி’ வைக்கும் கமல் - பிறந்தநாள் விழாவில் ரஜினி பங்கேற்பு?

தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அவர்களை முடிவு செய்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து வரும் 7 ஆம் தேதி கமல் தனது 65-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். வழக்கமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் கமல், இந்த முறை பெரிய விழாவுக்கு திட்டமிட்டுள்ளார்.இது அவருடைய அடுத்த அரசியல் நகர்விற்கு ஆரம்பமாக அமையும் என்றும் பலரும் பேசி கொள்கிறார்கள்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூறியதாவது:-

கமலின் தந்தை ஸ்ரீநிவாசன் தேசிகன் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு மேடைகளில் நிறையவே பேசியிருக்கிறார் கமல். தந்தையே தனது கலையுலகுக்கு ரோல் மாடலாக இருந்தார் எனவும் தெரிவித்திருக்கிறார்.

கமல்ஹாசன் பிறந்த அதே நவம்பர் 7 ஆம் தேதி தான் அவரின் தந்தை ஸ்ரீநிவாசன் தேசிகனின் நினைவு நாளும். எனவே கமல் தனது பிறந்த நாளை கொண்டாடுவதில் ஆர்வம் காட்ட மாட்டார்.

இந்த பிறந்த நாளை தன் தந்தையை நினைவு கூரும் விதமாக பெரிய விழாவுக்குத் திட்டமிட்டுள்ளார். 1959-ல் ஐந்து வயது சிறுவனாக திரையுலகில் ‘களத்தூர் கண்ணம்மா’ படம் மூலம் அறிமுகமானவர் கமல். அதனால் திரை உலகில் அவருக்கு இது 60-வது வருடம்.

இது எல்லாவற்றையும் சேர்த்து சென்னையில் பிரமாண்ட விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கமலின் தந்தை ஸ்ரீநிவாசன் நினைவாக அவரது சிலை திறக்கப்பட இருக்கிறது. அந்த சிலை அவரது சொந்த ஊரான பரமக்குடியில் நிறுவப்பட உள்ளது. பரமக்குடியில் இளைஞர்களுக்கான வளர்திறன் மேம்பாட்டு மையம் ஒன்றும் தொடங்கப்பட இருக்கிறது.

ரஜினிகாந்த்

சென்னையில் நடைபெறும் இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், தமிழக, இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்-அமைச்சர் பிரனாயி விஜயன், மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் ரஜினி காந்தும் கலந்து கொள்வதால் இந்த விழாவில் நிச்சயம் அரசியல் பேசப்படும். இதன் மூலம் அகில இந்திய அளவில் மூன்றாவதாக ஒரு அணியை அமைக்கும் முயற்சியை கமல் முன்னெடுக்கிறார் என்று கூறலாம்.

கமல்ஹாசன் கடந்த தேர்தலிலேயே காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். காங்கிரஸ் கட்சியோ கமல் தி.மு.க. கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. எனவே அந்த முயற்சியை கைவிட்டு தமிழ் சிறிய கட்சிகளை இணைத்து கூட்டணியாக்கவும் முயற்சி செய்தார். அதுவும் நிறைவேறவில்லை.

இதனையடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பலமான கூட்டணி அமைக்க திட்டமிடுகிறார். பிரசாந்த் கிஷோர் தனது ஆலோசனையில் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான அரசியல் தலைவர்களை கட்சிக்குள் கொண்டு வர யோசனை கூறினார். ஆனால் ஊழல் கறை படிந்தவர்களை கட்சிக்குள் இணைக்க மாட்டேன் என்பதில் கமல் பிடிவாதமாக இருக்கிறார்.

எனவே அகில இந்திய அளவில் உள்ள கட்சிகளை இணைத்து தனது தலைமையில் தேர்தலை சந்திக்க தயார் ஆகிறார். இந்த பிறந்த நாளில் அதற்கான பிரசாரத்தையும் பயணத்தையும் தொடங்க இருக்கிறார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

காத்திருக்காமல் உடனே மெட்ரோ ரெயில் பயணத்துக்கு டிக்கெட் எடுக்க புதிய வழி

0

காத்திருக்காமல் உடனே மெட்ரோ ரெயில் பயணத்துக்கு டிக்கெட் எடுக்க புதிய வழி

நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து மெட்ரோ ரெயில் பயணத்துக்கான டிக்கெட் எடுக்கும் முறையை மாற்றி நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை பயணம் செய்யும் முறையை மெட்ரோ நிர்வாகம் விரைவில் அறிமுகபடுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட கைக்கடிகாரத்தை ரூ.1,000 செலுத்தி பெற்றுக் கொண்டு மெட்ரோ ரயிலில் எளிதில் பயணம் செய்யலாம்.

சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை – விமான நிலையம் வரை பயணிகள் சேவை நடந்து வருகிறது. தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிய ‘ஸ்மார்ட்’ கைக்கடிகாரத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

‘டைட்டன்’ வாட்ச் நிறுவனம் புதிய ‘சிப்’ பொருத்திய இந்த கைக்கடிகாரத்தை தயாரிக்கிறது. இதன் மூலம் பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் டிக்கெட் எடுக்காமல் எளிதில் செல்ல முடியும்.

நுழைவு பாதையில் உள்ள இயந்திரத்தில் இந்த கைக்கடிகாரத்தை காண்பித்தால் கதவு தானாக திறக்கும். பின்னர் எளிதில் உள்ளே செல்ல முடியும். டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இதற்காக ரூ. 1,000 பணத்தை செலுத்தி கைக்கடிகாரத்தை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக விரைவில் ‘ஸ்மார்ட் வாட்ச்’ அறிமுகம் செய்யப்படும். ‘டைட்டன்’ நிறுவனமானது இந்த நவீன ‘சிப்’ பொருத்திய கைக்கடிகாரத்தை தயாரித்து வழங்க உள்ளது.

மெட்ரோ நிலையத்தில் ரூ. 1,000 செலுத்தி பயணிகள் இந்த கைக்கடிகாரத்தை பெற்றுக் கொள்ளளாம்.

இந்த கடிகாரத்தை மெட்ரோ பயணிகள் கையில் அணிந்து கொண்டு மெட்ரோ நுழைவு பாதையில் சென்றால் கதவு தானாக திறக்கும். இதனையடுத்து பயணிகள் விரைவாக மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல முடியும். மேலும் ரூ. 1,000 முதல் ரூ, 1,500 வரை பல்வேறு மாடல்களில் இந்த கடிகாரங்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த தொடங்கியது பாஜக அரசு! மக்கள் ஆதரவா எதிர்ப்பா

0

மக்கள் தொகையை கட்டுப்படுத்த தொடங்கியது பாஜக அரசு! மக்கள் ஆதரவா எதிர்ப்பா

அசாம் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலையில் கிடைக்காது என்று அம்மாநில பாஜக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

அசாம் மாநிலத்தின் பாஜகவின் முதல்அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

2017ஆம் ஆண்டு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொள்கையை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி கடந்த மார்ச் 2-ஆம் தேதி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தடை மசோதாவை நிறைவேற்றியது.

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் இரண்டு குழந்தைகள் மேல் இருப்பவர்களுக்கு அரசு வேலை கிடையாது என்ற தடை அமலுக்கு வர உள்ளது. தற்போதைய அரசு பணியில் உள்ள ஊழியர்களும் இதனை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அசாம் மாநிலத்தில் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் ஒதுக்கவும் வீடு கட்டுபவர்களுக்கு அரசு நிலம் வழங்கவும் முடிவு செய்துள்ளது. இந்த நிலத்தை 15 ஆண்டுகளுக்கு வேறு எவருக்கும் விற்க முடியாத வகையில் மசோதா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அசாம் மாநிலத்தின் குடும்பத்தின் சராசரி எண்ணிக்கை 5.5 சதவீதமாக உள்ளது என்று மத்திய அரசின் ஆய்வறிக்கை சொல்கிறது தேசிய சராசரியை விட இது அதிகம் என்பதால் அசாம் மாநிலம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களில் படிப்படியாக அமல்படுத்தலாம் என்று தெரிகிறது. இதற்கு முன்னோட்டமாக அசாம் மாநிலத்தை பாஜக முதலில் தேர்வு செய்துள்ளதாக அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சமி நிலம் ஸ்டாலினை வெளுத்து வாங்கும் பாஜக! இராமதாஸுக்கு பக்கபலம்

0

பஞ்சமி நிலம் ஸ்டாலினை வெளுத்து வாங்கும் பாஜக! இராமதாஸுக்கு பக்கபலம்

கடந்த சில நாட்களாகவே பஞ்சமி நிலம் பற்றி தமிழகம் முழுவதும் மக்களிடையே மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

இதற்கு காரணம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அசுரன் படத்தை பார்த்துவிட்டு இது படமல்ல பாடம் என்று ட்விட்டரில் டிவிட் செய்திருந்தார். இதற்கு பதிலாக பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அசுரன் படத்தை பாடமாக எடுத்துக் கொள்வதால் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்பதால் அதை பிரித்து தலித் மக்களுக்கு கொடுப்பார் என்று ட்வீட் செய்திருந்தார்.

இது தமிழக அரசின் மிகப்பெரிய புயலைக் கிளப்பியது இதனை மறுத்து ட்விட்டரில் மு.க. ஸ்டாலின் அவர்கள் 33 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட பட்டா சிட்டாவை வெளியிட்டு முரசொலி அலுவலகம் தனிநபர் பட்டாவாக பதியப்பட்டது. இது பஞ்சமி நிலம் இடமில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு மறுபடியும் டிவிட்டரில் இராமதாஸ் அவர்கள் முலப் பத்திரத்தை காட்டாமல் இடம் யாரிடமிருந்து வாங்கப்பட்டது
என்று காட்டாமல் வெறும் பட்டா சிட்டாவை காட்டி மக்களை ஏமாற்றுகிறார் என்று தெரிவித்தார்.

பஞ்சமி நிலம் ஸ்டாலினை வெளுத்து வாங்கும் பாஜக! இராமதாஸுக்கு பக்கபலம்

பின்பு ஸ்டாலின் அவர்களை ராமதாஸும் அன்புமணியும் அரசியலை விட்டு விலக தயார் என்றால் மூலப் பத்திரத்தை நான் வெளியிட தயார் என்று மழுப்பலாக தெரிவித்தார்.

பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆதரவாக பாஜகவினர் ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர் நேற்று முன்தினம் பாஜக தேசிய செயலாளர் ராஜா அவர்கள் மூலம் பத்திரத்தை வெளியிடாமல் வெறும் பட்டா சிட்டாவை காட்டி ஸ்டாலின் ஏமாற்றுகிறார்,

மக்களின் நிலத்தை அபகரிக்க என்ற படுபாதக செயலை செய்யும் கட்சி திமுகவா என்று வினா எழுப்பி இருந்தார்.

இதனை உறுதி செய்யும் வகையில் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களும் அண்ணா அறிவாலயம் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் தான் கட்டப்பட்டுள்ளது என்றும் இது தலித் மக்களிடையே ஒப்படைக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

பஞ்சமி நிலம் ஸ்டாலினை வெளுத்து வாங்கும் பாஜக! இராமதாஸுக்கு பக்கபலம்

மேலும் பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்றும் அனைவரும் இதையே சொல்லி வருவதாகவும் இதனால் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு செய்து உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகனிடம் புகாராக அளித்திருக்கிறார். இது மிகப்பெரிய புயலைக் கிளப்பும் என்று தெரிகிறது.

இதனால் திமுக தரப்பு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆதரவாக பாஜகவினரும் திமுகவை முரசொலி அலுவலகம் விஷயத்தில் வெளுத்து வாங்குவதால் தமிழக மக்களும் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இதே பஞ்சமி நிலம் விஷயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடங்கிய தடா. பெரியசாமி அவர்களும் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்திற்கு சொந்தமானது தான் என்று தெரிவித்திருந்தார். இவர் பாஜகவின் மூத்த தலித் தலைவர் ஆவார்.

திருமாவளவனும் கடந்த காலத்தில் சிறுதாவூர் பங்களாவில் இருந்தாலும் அறிவாலயமாக இருந்தாலும் தமிழக அரசு ஆய்வு செய்து தலித் மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று பேசி இருந்தார் அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால்பதிலளிக்க முடியாமல் திமுக தரப்பு அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது.

எழை மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான இலவச பயிற்சி

0

எழை மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான இலவச பயிற்சி

ஆரஞ்சு அம்மாள் நல்வழி ( Goodway) இலவச பயிற்சி மையம் இந்த மையமானது

தன்னுடைய நிலை யாருக்கும் வரக்கூடாது என்ற நோக்கத்தில் அரியலூர் மாவட்டம் பரணம் எனும் கிராமத்தில் திரு.பழனிசாமி அவர்களின் சீரிய முயற்சியால் கடந்த இரு வருடமாக பல்வேறு துறையில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டு அரசு பணியாளர் தேர்வுக்கு விடுமுறை நாட்களில் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் நீட் தேர்விற்கும் இலவசமாக பயிற்சி அளிக்க பட உள்ளது.

இந்த மையத்தில் இருந்து கடந்த வருடம் தமிழ்நாடு வன அலுவலர் (Forest officer) பணிக்கு ஒருவர் தேர்வாகினார்.

இந்த வருடம் செம்படம்பர் மாதம் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வான குரூப் 4 தேர்வில் 10 க்கும் மேற்ப்பட்டோர் தேர்ச்சி பெற உள்ள நிலையில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் 15 மாணவ – மாணவிகள் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள் அவர்களுக்கு தற்போது உடல் தகுதி தேர்விற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

எழை மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான இலவச பயிற்சி

தற்போது வரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மற்றும் காவலர் தேர்வுக்கும் மட்டுமே பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜீன் மாதம் நீட் தேர்விற்கும் இலவச வகுப்புகள் நடந்த முடிவு செய்யப்பட்டு அதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் 2 ஆசிரியர்கள் வீதம் 4 பாடங்களுக்கு 8 ஆசிரியர்கள் மேலும் கணிதப் பாடத்திற்கு 1 ஆசிரியர் என மொத்தம் சிறந்த அனுபவமிக்க 9 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் பணி நிறைவடைந்து கடந்த வாரம் (13-10-2019) நடைபெற்ற மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவில் விழாவில் அடுத்த மாதத்தில் இருந்து வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன் படி அடுத்தமாதம் அதாவது 02-11-2019 முதல் வகுப்புகள் தொடங்க உள்ளது

வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைவருக்கும் இலவசமாக தங்கி படிக்கும் வசதியையும் இந்த பயிற்சி மையம் ஏற்பாடு செய்துள்ளது.

தற்போது இந்த பயிற்சி மையத்தில் புதிய பாடத்திட்டதின் படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாகிய குரூப் -2 & 2A மற்றும் காவலர் தேர்விற்காக 90 க்கும் மேற்பட்ட மாணவ/மாணவியர்கள் படித்து வருகிறார்கள்.

நகரத்தை நோக்கி செல்லும் இந்த காலகட்டத்தில் ஒரு கிராமத்தில் மதுரை, திருவண்ணாமலை, கடலூர் ,சிவகங்கை, நாகை,தஞ்சாவூர், கடலூர்,விருதுநகர், கன்னியாகுமரி, சென்னை, திருநெல்வேலி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள் வந்து தங்கி படிப்பது அப்பயிற்சி மைய ஆசிரியர்களின் திறமைக்கு கிடைத்த வெற்றியாகும்

எழை மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான இலவச பயிற்சி

மேலும் இந்த பயற்சி மையத்தில் சேர்ந்து தொடர்ந்து 6 மாதம் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை எனில் ரூபாய் 10,000 அளிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் இந்த மையத்தின் நிர்வாக இயக்குனர்.

இது பற்றி நிர்வாக இயக்குனர் திரு.பழனிசாமி அவர்களிடம் கேட்ட போது படிக்க வசதி இல்லாத கிராமபுற ஏழை மாணவர்களை ஒரு அரசு அதிகாரியாக உருவாக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை அதற்காக தான் இந்த பயிற்சி மையத்தை உருவாக்கினேன். இன்று வரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மற்றும் காவலர் தேர்விற்கு தான் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்விற்கு பணம் கட்டி படிக்க வசதி இல்லாமல் தங்களுடைய மருத்துவ கனவை விட்டு விலகி செல்லும் பல மாணவர்களை பார்த்த பிறகு மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அதன் பின் தான் இத்தகைய செயலில் இறங்கி உள்ளோம்.

இங்கு மாணவ- மாணவிகள் படிப்பதற்கு தேவையான நூலக வசதியையும், பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ( Smart class) 58″ அளவுள்ள LED டிவி மற்றும் ஜெராக்ஸ் இயந்திரம் போன்ற அனைத்து வசதிகளையும் செய்து வைத்து இருக்கிறோம் இத்தகைய வாய்ப்பினை மருத்துவ கனவோடு இருக்கும் மாணவ – மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.

நீட் தேர்விற்கு இலவசமாக பயிற்சி மையம் அமைப்பது என்பது மிக எளிதான செயல் அல்ல அவற்றை எல்லாம் கடந்து தான் இந்த மையம் செயல்பட இருக்கிறது

எழை மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான இலவச பயிற்சி

தமிழகத்திலேயே நீட் தேர்விற்கு இலவசமாக பயிற்சி அளிக்க கூடிய மையமாக இதுவாக தான் இருக்கும் இத்தகைய வாய்ப்பை கிராமபுற ஏழை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்

வளர்க மனித நேயம்!!
வாழ்க மனித இனம் !!

இந்த இலவச பயிற்சியை பயன்படுத்தி கொள்ள நினைப்பவர்கள் கீழுள்ள எண்ணில் அழைக்கவும்.

தொடர்புக்கு
திரு.பழனிசாமி :7010021004

இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் மேலும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

0

இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் மேலும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறியுள்ளர்.

இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது -  தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

சென்னை:

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள இலங்கை கடல் பகுதியில் நிலவி வந்த வழி மண்டல மேலடுக்கு சுழற்சி குமரி கடல் முதல் ஆந்திர கடலோர பகுதி வரையிலும் நீடித்து வருகிறது.

இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் பல பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட் டம் 5 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 33 மி.மீ. மழையும், புழல் ஏரி அமைந்துள்ள பகுதியில் 28 மி.மீ. மழையும், சோழவரம் பகுதியில் 30 மி.மீட்டரும், பூண்டி ஏரி அமைந்துள்ள பகுதியில் 6 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

மழை

மேலும் சென்னையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் கன மழை பெய்தது. புரசைவாக்கம், அயனாவரம், வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மயிலாப்பூர், அடையார். திருவான்மியூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், சேலையூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மீனம்பாக்கம், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி போன்ற பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக ரோடுகளில் பள்ளமான பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி கிடந்தது.

இன்று காலையிலும் தொடர்ந்து மழை தூறல்கள் விழுந்த வண்ணம் இருந்தது. தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடனும் காணப்பட்டது.

இது பற்றி வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறியதாவது:

இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. அப்படி மாறும்போது தமிழகத்தில் மேலும் அதிகமான மழை பெய்யும்.

தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆந்திரா வரை பரவி உள்ளதால் விட்டு விட்டு மழை பெய்கிறது. இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் நாகர்கோவிலில் 8 செ.மீ., தூத்துக்குடியில் 7 செ.மீ., பாம்பனில் 6 செ.மீ., ஊட்டி, குன்னூரில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

தாம்பரத்தில் 5 செ.மீ., மீனம்பாக்கத்தில் 6 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

குமரி கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று தொடர்ந்து வீசுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

பேனர் விவகாரம் எல்லாம் அதிமுகவிற்கு தான் திமுகவுக்கு கிடையாது! அலங்கார வளைவு விழும் அதிர்ச்சி வீடியோ

0

பேனர் விவகாரம் எல்லாம் அதிமுகவிற்கு தான் திமுகவுக்கு கிடையாது! அலங்கார வளைவு விழும் அதிர்ச்சி வீடியோ

சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் தனது மகன்‌ திருமணத்திற்காக அதிமுகவினரை வரவேற்று வைத்திருந்த பேனர் விழுந்ததால் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழும்போது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியது, இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்,

இது சம்பவம் தமிழகத்தை உலுக்கியது பேனருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு, உயர்நீதிமன்றமும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பேனர் விவகாரத்தில் தமிழக அரசு கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

சுபஸ்ரீ சம்பவத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வருத்தம் தெரிவித்தனர் மேலும் பேனர் விவகாரத்தில் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர், இதற்கு அதிமுக தான் காரணம் என்றும் கடுமையாக பேசி வந்தனர்,

இதனால் அதிமுக தலைமை இனிமேல் யாரையும் வரவேற்று பேனர்கள் வைக்க வேண்டாம் என்று தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இனி திமுகவினரை வரவேற்று யாரும் பேனர் வைக்க வேண்டாம் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று‌ அறிக்கை வெளியிட்டார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவினரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு நடுரோட்டில் விழும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட துறையூர் வழுதாவூர் சாலையில் திமுக சார்பில் அலங்கார வரவேற்பு வளைவு வைக்கப்பட்டிருந்தது.

இந்த அலங்கார வளைவு சரிந்து விழும் காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றன. அலங்கார வளைவு சரியும் போது, ஒரு கார் அதனை கடந்திருக்கும். சில நொடிகள் தாமதித்திருந்தால் கார் மீது அலங்கார வளைவு விழுந்து பெரிய விபத்தாக மாறியிருக்கும். தமிழகத்தில் இது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருக்கும் மு க ஸ்டாலின் இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை,

வீடியோ கீழே

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

திமுகவின் இடப்பிரச்சனை இராமதாஸ் மூலம் தீர்வு கிடைக்கட்டும்! விசிகவை தொடங்கிய தடா பெரியசாமி அதிரடி

0

திமுகவின் இடம் பிரச்சனை இராமதாஸ் மூலம் தீர்வு கிடைக்கட்டும்! விசிக வை தொடங்கிய தடா பெரியசாமி அதிரடி.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கும் கடந்த 3 நாட்களாக டுவிட்டரில் பஞ்சமி நிலம் தொடர்பாக ஒரு போரே நடந்து வருகிறது.

மூன்று நாட்களுக்கு முன்பு அசுரன் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் இது படம் அல்ல பாடம் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ராமதாஸ் அவர்கள் பஞ்சமி நிலம் பற்றிய படம் என்பதால் அவர் பாடமாக எடுத்துக் கொள்வதால் அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள இடம் ஆரம்பத்தில் பஞ்சமி நிலத்திற்கு சொந்தமானது என்பதால் தலித் மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பார் என்று நம்பப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு ஸ்டாலின் அவர்கள் அண்ணா அறிவாலயத்தின் பட்டா சிட்டாவை டிவிட்டரில் ‌வெளியிட்டு தனி நபருக்கு சொந்தமான இடம் எனவும் பஞ்சமி நிலம் என்று நிரூபித்தால் ராமதாஸும் அன்புமணியும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இப்படி மாறி மாறி இருவரும் கேள்விகளும் கொண்டிருப்பதால் தமிழகத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாகவே மாறிவிட்டது. பஞ்சமி நிலம் பற்றி இது திமுகவினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது,

பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றவர்கள் என்றுமே அலசி ஆராய்ந்துதான் அறிக்கை வெளியிடுவார்கள் என்று ஸ்டாலினுக்கு தெரிந்த விஷயம் தான்.

திருமாவளவன் கடந்த காலத்தில் பேசி இருந்து வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சிறுதாவூர் பங்களாவாக இருந்தாலும் அறிவாலயமாக இருந்தாலும் அரசு ஆய்வு செய்து குழு அமைத்து தகுதியான தலித் மக்களுக்கு பிரித்து தர வேண்டும் என்றுர பேசியிருந்தார்.

பஞ்சமி நிலம் மீட்புக்கான இயக்கத்தின் தடா. பெரியசாமி திட்டவட்டமாக அண்ணா அறிவாலயம் பஞ்சமி நிலத்திற்கு சொந்தமானது தான் என்று டிவிட்டரில் தெரிவித்து திமுக வை கதறவிட்டுள்ளார்.

Dr .ராமதாஸ் அவர்கள் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தின் இடம் என்று குறிப்பிட்டது உண்மையே!

ஸ்டாலின் அவர்கள் காட்டும் பட்டா 1985 க்கானது. 1923 நிரந்தர கணக்கு பதிவேடு (Permanent Register ), RSR( Re-settlement Paisal Register ), SLR (Settlement Land Register) மற்றும் 1935 ன் Gazette Copy ஆகியவற்றில் மேற்படி சர்வே எண் பற்றி தெரிந்து கொண்டு ஸ்டாலின் அவர்கள் பேசவேண்டும். முதலில் ஒரு தலித்துக்கு சொந்தமாக இருந்து பிறகு இரண்டு தலித் அல்லாதவர்களுக்கு கை மாற்றப்பட்டு, 4 வதாகத்தான் அஞ்சுகம் பதிப்பகத்திற்கு வாங்கியுள்ளனர்.1985 ஆவணத்தின் மூலத்தை காண்பிப்பேன் என்பது வாய்சவடாலே! Dr. ராமதாஸ்,ஸ்டாலின் ஆகியவர்களுக்கிடையான பிரச்சினையின் வழியாக தலித் மக்களின் பஞ்சமி நில மீட்புக்கு தீர்வு_கிடைக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

தடா. பெரியசாமி அவர்கள் 2010 இல் மண்ணுரிமை மீட்பு இயக்கம் தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலப் பட்டியலைத் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், வாங்கி வெளிக்கொண்டு வந்துள்ளார். இதில் தமிழகம் முழுக்க உள்ள பஞ்சமி நிலத்தைக் கணக்கெடுத்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

1990 ஆம் ஆண்டு தொல். திருமாவளவனுடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொடங்கியவர். அதற்கு முன்னர், நக்சல்பாரி அமைப்பில் சேர்ந்து, அரியலூர் மருதையாற்றுப் பாலம் குண்டுவெடிப்பு வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தூக்குத் தண்டனை பெற்று, பின்னர் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்.

இவர் தற்போது பாஜகவில் உள்ளார். அக்கட்சியின் மூத்த தலைவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.