தேசிய அளவில் #மதுஒழிப்புப்போராளி #DrAyya என தெறிக்கவிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர்
நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியலில் மகாத்மா காந்தியின் முதன்மையான கொள்கையான மதுவிலக்கை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து தன்னுடைய கொள்கையாக கடைபிடித்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் கூட தங்களுடைய கட்சியின் சார்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும் தடை உத்தரவை பெற்றார்.
தமிழக அளவிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குகளுக்காக மது விலக்கை பற்றி பேச தயங்கிய சூழ்நிலையிலேயே அரசியலில் வெற்றி பெறவில்லை என்றாலும் பரவாயில்லை,மக்கள் நலன் தான் முக்கியம் என தொடர்ந்து மது ஒழிப்பை வலியுறுத்தி போராடி வருகிறார்.கடந்த சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாமக தனித்து போட்டியிட்ட போதும் ஆட்சிக்கு வந்தால் தங்களுடைய முதல் கையெழுத்து மது விலக்கு கொண்டு வருவதற்காக தான் இருக்கும் என வாக்குறுதியளித்தனர்.
இதனையடுத்து தான் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படிப்படியாக மது விலக்கை அமல்படுத்துவதாக தேர்தல் வாக்குறுதியளித்திருந்தார்.அவரையடுத்து திமுகவும் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை கொண்டு வருவதாக உறுத்தியளித்தது.இவ்வாறு மது ஒழிப்பை பற்றி பேச தயங்கியவர்களையும்,மது உற்பத்தியை தொழிலாக கொண்டவர்களையும் மது ஒழிப்பை பற்றி பேச வைத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ்.
இந்நிலையில் இவ்வளவு பெருமைமிக்க தமிழக அரசியல் தலைவர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை சிறப்பிக்கும் வகையில் மது ஒழிப்பிற்கான அவரது கடந்த கால போராட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை சமூக வலைத்தளங்களில் பாமகவினர் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் சிறப்புகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும் #மதுஒழிப்புப்போராளி #DrAyya என்ற ஹேஷ் டேக்குகளை பயன்படுத்தி அவர்கள் பதிவிட்டது ட்விட்டரில் தேசிய அளவில் தொடர்ந்து ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் மது ஒழிப்பு போராட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி அக்கட்சியினர் பதிவிட்டவைகளில் சில உங்களின் பார்வைக்காக
On July 2012 Pattali Makkal Katchi founder S. Ramadoss and many senior PMK functionaries of the party were arrested in different parts of the State for trying to lock up Tasmac liquor shops as part of the party’s campaign for total prohibition. #மதுஒழிப்புப்போராளி#DrAyyapic.twitter.com/7ltFI8cjsZ
#GandhiJayanti தமிழக அல்லாது இந்தியா முழுமைக்கும் மது ஒழிப்பு கொள்கையை முன்னிறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்று இந்தியா முழுமைக்கும் நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடியவர் மருத்துவர் ஐயா#மதுஒழிப்புப்போராளிpic.twitter.com/XQxoljfgld
முன்னாள் பாமக நிர்வாகிகளுக்கு அமமுகவில் முக்கிய பதவி! இங்கயாவது உண்மையாக இருப்பார்களா தொண்டர்கள் புலம்பல்?
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட செயலாளராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்
கடந்த ஆண்டு பாமகவில் இணைந்த உடனேயே நடிகர் ரஞ்சித்துக்கு, அங்கு மாநில துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக கட்சி பணியாற்றியவர்களுக்கு கூட வழங்காத இந்த மாநில துணைத் தலைவர் பதவியை கட்சியில் இணைந்த உடனே பாமக நிறுவனர் ராமதாஸ் நடிகர் ரஞ்சித்துக்கு வழங்கினார்.ஆனால் அவரின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் வகையில், கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததைக் காரணம் காட்டி அக்கட்சியிலிருந்து விலகிய நடிகர் ரஞ்சித், அடுத்த சில நாட்களிலேயே டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார். நடந்து முடிந்த தேர்தலில் அமமுக கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பாமகவில் இணைந்த உடனே மாநில பொறுப்பு வழங்கியது போல அமமுகவில் இவருக்கு எதாவது பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தவருக்கு இறுதியாக ஏமாற்றமே மிஞ்சியது.இதற்கிடையே அமமுகவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக கட்சியிலிருந்து விலக நடிகர் ரஞ்சித் முடிவெடுத்ததாக தகவல் செய்திகளில் வெளியானதையடுத்து, அவ்வளவு நாட்களாக கண்டு கொள்ளாமல் இருந்த தினகரன் அவரின் உதவியாளர் மூலமாக ரஞ்சித்திடம் பேசி சமாதானம் செய்திருக்கிறார். இதனையடுத்து, நான் கட்சியிலிருந்து விலக மாட்டேன், எனது தலைவர் தினகரன் தான் என்று நடிகர் ரஞ்சித் தன்னுடைய பங்கிற்கு பேட்டியளித்தார். இதனையடுத்து அமமுக பேச்சாளர்களுக்கு நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அவர்களுக்கும் பயிற்சியளித்திருக்கிறார்.
இந்த நிலையில் அமமுக துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகளை டிடிவி தினகரன் இன்று அறிவித்தார். அதன்படி, அமமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, அமைப்புச் செயலாளராக திருவான்மியூர் முருகனும், தேர்தல் பிரிவு துணைச் செயலாளராக திருப்பூர் முன்னாள் மேயர் விசாலாட்சியும், மாணவரணிச் செயலாளராக அண்ணா நகர் பரணீஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இதில் நடிகர் ரஞ்சித்தும்,ஈஸ்வரனும் பாமகவில் இணைந்து குறுகிய காலத்திலேயே நல்ல பதவியை வாங்கி கொண்டு அக்கட்சியின் மூலம் அரசியல் வெளிச்சத்தை அடைந்த பின்பு அதிமுகவுடன் கூட்டணி,ஊழலை ஒழிக்கும் கட்சியில் தான் இருப்பேன் என்ற காரணத்தை கூறிக் கொண்டு ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை தலைமையாக கொண்ட அமுகவில் இணைந்துள்ளனர் என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் முரணாக உள்ளது.கிடைப்பதை பெற்று கொண்டு இந்த கட்சிக்காவது உண்மையாக இருப்பார்களா என்று அமமுக தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.
பிரபல அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் இளம்பெண்ணுடன் இருக்கும் முழுமையான வீடியோ
பிரபல தமிழக அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் சமீப காலமாக அரசியலுடன் சேர்த்து சினிமாவில் நடிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்.
நாஞ்சில் சம்பத் கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே உள்ள மணக்காவிளை பகுதியை சேர்ந்தவர். ஆரம்பத்தில் மதிமுகவில் வைகோவின் வலதுகரமாகவும் பிரச்சார பீரங்கியாகவும் செயல்பட்டு வந்தவர். அவருடன் ஏற்பட்ட கருது வேறுபாடுகளுக்கு பின்னர் அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். முன்னாள் தமிழக முதல்வரான ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தினகரன் அதிமுகவிலிருந்து பிரிந்து அமமுக என்ற தொடங்கியதும் நாஞ்சில் சம்பத் அவருடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தார்.
சமீபத்தில் அமமுகவிலிருந்தும் விலகி தற்போது இலக்கிய கூட்டம், பட்டிமன்றம் எனத் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் இளம்பெண்ணுடன் தனியாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி வாட்ஸ் அப்,பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களில் படு வேகமாகப் பரவி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் வெளியான அந்த வீடியோவில் நாஞ்சில் சம்பத் போன்ற ஒருவர் ஒரு இளம் பெண்ணுடன் மது குடிப்பது போன்றும், அந்தப் பெண்ணுடன் மிக நெருக்கமாக இருப்பது போன்றும் காட்சிகள் வருகிறது. சுமார் 1 நிமிடம் 12 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், ஹோட்டல் அறை ஒன்றில் இளம்பெண் ஒருவருடன், நாஞ்சில் சம்பத் போன்ற உருவம் கொண்ட ஒருவர் கிளுகிளுப்பாக இருப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருவதை பார்த்த அவர் அதிலிருப்பது நானில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாஞ்சில் சம்பத் தன்னுடைய டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார், அதில் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், சிலர் தன்னை அழுக்காக்கி அசிங்கப்படுத்த கருதுவதாகவும் ஆனால் அது கைகூடாது என்று தெரிவித்துள்ளார்.
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதை போல சோதனைகள் வந்தாலும் சுயமரியாதைக்கு பங்கம் வராமல் எப்போதும் நடப்பேன் என்றும் கூறியிருக்கும் அவர், மானமும் மரியாதையும் தமது மரபணுவோடு கலந்தது என்பது புரிந்தவர்களுக்கு புரியும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இவ்வளவு சர்ச்சைகளுக்கும் காரணமான இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ முழுமையாக இதோ
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மோகன்ராஜ்க்கு எதிராக கண்டனம் தெரிவிக்காத எதிர்கட்சிகள்! கொந்தளிப்பில் தமிழக மக்கள்.
பொள்ளாச்சியை மிஞ்சிய சேலம் விடுதலை சிறுத்தைகளின் ஆட்டோ தொழிற்சங்க தலைவர் மோகன்ராஜ். 40 பெண்களை மிரட்டி வீடியோவாக பதிவு செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு மேலும் தனது நண்பர்களுக்கு இரையாக்கிய கொடுமை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டோவில் வரும் பெண்களை நயவஞ்சகமாக முறையில் பேச்சு கொடுத்து தனது காம இச்சைக்கு பயன்படுத்திய கொடூரம் மன்னிக்க முடியாத செயலாகும். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பெண்களை மயக்கி அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறி பாலியல் பலாத்காரம் செயலில் ஈடுபட்டது கொடூரத்தின் மிக உச்சம்.
இத்தகைய செயல்களை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கண்டிக்காதது மிகவும் அநியாயம்.
விடுதலைச்சிறுத்தைகளின் கட்சியின் பெயரை வைத்து அதன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தான் பாலியல் பலாத்காரத்தில் தைரியமாக ஈடுபட்டு மோகன்ராஜ் வந்துள்ளார் என்பது போலீசாரின் தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த பதிலையே பாதிக்கப்பட்ட பெண்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதே கொடூர செயல்களுக்கு துணையாக இருப்பதாக கண்டன அறிக்கை எதுவும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து வரவில்லை. இதற்கு காரணம் என்ன என்பதை விளக்கம் அளிக்க வேண்டும். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் என்பதனாலயா இல்லை ஆளுங்கட்சிக்கு இதில் தொடர்பில்லை என்பதால் மு.க ஸ்டாலின், வைகோ போன்ற தமிழக தலைவர்கள் அமைதி காக்கின்றனரா என்பது தெரியவில்லை.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் மிகக் கடுமையான வார்த்தைகளால் மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்களை விமர்சித்து வந்தார். இதற்கு ஒருவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. “சரக்கு மிடுக்கு எங்க கிட்ட தான் இருக்கு அதனால் தான் உங்கள் வீட்டுப் பெண்களை எங்களை தேடி வருகிறார்கள் என்று ஒரு கட்சி தலைவருக்கு உரிய வார்த்தைகள் பேசாமல் ஏதோ தெருக்கோடியில் உள்ள உள்ளவனை பேசி அனைவரையும் கொந்தளிப்பில் ஆழ்த்தினார். இவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை காவல் துறையினர்.
இத்தகைய தைரியமான பேச்சை கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை ஆனால் புரிந்து கொள்பவர்களுக்கு புரியும்.
40 பெண்களை சீரழித்த மோகன் ராஜ் அவர்களுக்கு மிகக் கடுமையான உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பேனர் விவகாரத்தில் சுபஸ்ரீ பிரச்சினையை பெரிதாக எடுத்துக்கொண்டு ஆளுங்கட்சியை மிரட்டும் தோணியில் செயல்பட்டுவரும் மு.க. ஸ்டாலின் போன்ற எதிர் கட்சி தலைவர்கள் ஏன் இந்த விஷயத்தில் நேரடியாக கண்டனம் தெரிவிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி கட்சியை சேர்ந்தவர் என்பதனால் அவர் செய்த கொடுமைகளுக்கு எதிராக அறிக்கை விடாதது அவர் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை இழந்து விட்டார் என்ற தோற்றம் தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது.
பாமக என கூறிக்கொண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனு! கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் என ஜிகே.மணி அறிக்கை
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் முன்னாள் அமைப்பு செயலாளர் என கூறிக்கொள்ளும் ராஜா என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என பாமக தலைவர் ஜிகே மணி அவர்கள் தெரிவித்துள்ளார்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர் என கூறி ராஜா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்து இருப்பதாக தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின, இதனை மறுப்பு தெரிவித்து ஜி.கே மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பின்வருமாறு:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சியில் சேர்ந்தவர் ராஜா. பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர் என்றும் அக்கட்சியில் இருந்து விலகி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாகவும் ஊடகங்களில் தெரிவித்து வருகிறார்.
பாமகவில் சில ஆண்டுகளுக்கு முன் ராஜா இருந்தார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். பாமகவின் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார், இவரிடம் பாமகவினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் இனியும் பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரை பயன்படுத்தி ராஜா மோசடியில் ஈடுபட்டால் அவர் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெயரை சொல்லியே மிரட்டிய 40 பெண்களை பலாத்காரம் செய்த மோகன்ராஜ்.
ஆபாச வீடியோக்கள் எடுத்து 40 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சேலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவர் மோகன்ராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள செல்லியம்பாளையம் மதுரை வீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். 42 வயதான இவர் 2 ஆட்டோக்களை சொந்தமாக வைத்துள்ளார்.
இளம்பிள்ளை பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு பொது கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறையில் ஒரு இளைஞரை ஓரினச்சேர்க்கைக்கு மோகன்ராஜ் அழைத்ததாக புகார் வந்தது. இதையடுத்து, மோகன்ராஜை மகுடஞ்சாவடி போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, சமூக வலைதளங்களில் கல்யாணம் ஆன பெண்ணை மோகன்ராஜ் மிரட்டி, தாக்கி, கட்டாயப்படுத்தி உல்லாசத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்றும் வெளியானது. இதனால் மோகன்ராஜ் செல்போனை பிடுங்கி பார்த்தபோது, 7 பெண்களை இப்படியே நாசம் செய்த வீடியோ இருந்ததை கண்டு அதிர்ந்தனர். அதன்பிறகுதான் விசாரணை தீவிரமானது.
விசாரணையில் இவர், இளம்பிள்ளை விசிக சார்பில் இயங்கி வரும் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். ஆட்டோவில் ஏறும் பெண்களிடம் பேச்சு தந்து, செல்போன் நம்பரை தந்திரமாக வாங்கி வைத்து கொண்டு, பிறகு மிரட்டி தன் இச்சைக்கு பணிய வைத்துள்ளார். இப்படியே 40-க்கும் மேற்பட்ட பெண்களை மோகன்ராஜ் நாசம் செய்துள்ளார்.
கல்யாணம் ஆன பெண்கள் தவிர, பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவியும் இதில் அடங்குவர். தன்னிடம் சிக்கும் பெண்களை நண்பர்களுக்கும் விருந்தாக்கி உள்ளார் மோகன்ராஜ் ஒருசில பெண்கள் இவனுக்கு பயந்து ஊரைவிட்டே போய்விட்டார்கள் என்பதும் போலீசார் அந்த பகுதியில் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமில்லை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி பெயரை சொல்லிதான் பல பெண்களை மிரட்டி இருக்கிறார் என்றும் தெரியவந்தது.
ஆனால், மோகன்ராஜ் ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்களை சாதி ரீதியில் பிளவுபடுத்தியதால் அவரை கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி நீக்கிவிட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறுகிறது.
இப்போது கைது செய்யப்பட்டுள்ள மோகன்ராஜிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக வன்னியர்களை கவனிக்கும் திமுகவின் அரசியல் நாடகம்
அடுத்த மாதம் நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் நேரடியாக மோத உள்ளதால் அப்பகுதிகளில் அரசியல் களம் விறுவிறுப்பாகி வருகிறது. இந்நிலையில், இதுவரை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்த வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த திமுகவினருக்கு முக்கியத்தும் அளிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியை உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர் உள்ளிட்ட 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில், 7 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுகவும், 4 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்த விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் திமுக அதிக அளவில் வெற்றி பெற்றிருந்தாலும் கட்சியில் நிலவும் உட்கட்சி கோஷ்டி பூசல் காரணமாக தலைமை கலக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம் திமுகவில் பொன்முடி சார்ந்த உடையார் சமூகத்தினருக்கே தொடர்ந்து கட்சி பொறுப்புகளை வழங்கி வருவதும்,வன்னியர் மக்களை அதிகமாக கொண்ட இந்த தொகுதிகளில் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டதும் தான் என்று கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த காலத்தில் திமுகவில் அசைக்க முடியாத மாவட்ட செயலாளராக செஞ்சி ராமச்சந்திரன் வலம் வந்தார். அதன்பிறகு, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமியின் மகனான முகையூர் சம்பத் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இறுதியில், அமைச்சராக இருந்த பொன்முடியிடம், மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
Ponmudi-News4 Tamil Latest Online Tamil News Today
சமீபத்தில் தமிழகம் முழுவதும் திமுகவில் மாவட்ட செயலாளர்கள் அதிக அளவில் நியமிக்கபட்டனர். அப்போது, விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சரான பொன்முடியும், வடக்கு மாவட்ட செயலாளராக செஞ்சி எம்.எல்.ஏ. மஸ்தான், தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ வான அங்கையற்கன்னியும் தேர்வு செய்யப்பட்டனர். விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் பொன்முடியை எதிர்த்து வேறு யாரும் மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிடவில்லை. தமிழக அளவில் திமுகவில் இவ்வளவு பொறுப்புகள் வழங்கப்பட்டு வந்தாலும் இங்கு எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த புஷ்பராஜ் எந்த பதவியும் இன்றி தொடர்ந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் நகரமன்ற சேர்மனாக இரண்டு முறையும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி வகித்து, தற்போது தலைமை தீர்மானக்குழு உறுப்பினராக உள்ளவரான முன்னாள் சேர்மன் ஜனகராஜ் திமுகவில் தீவிர கட்சி பணியாற்றியும் இவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதனால், இவரும் கட்சி செயல்பாடுகளில் ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார். இதே போல ஒன்றிய சேர்மன், ஒன்றிய செயலாளர் பதவி வகித்து, தற்போது மாவட்ட பொருளாளராக உள்ள புகழேந்திக்கும், தேர்தலில் போட்டியிட 3 முறை சீட் கேட்டும் வழங்கவில்லை என்ற அதிருப்தியும் நிலவி வருகிறது. இதனை சரிகட்டும் விதமாக இவருக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கட்சியில் சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தான் கேட்கும் போதெல்லாம் சீட் கொடுக்காமல் இன்னும் 15 மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்க கூடிய இந்த இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கியதை புகழேந்தியும் விரும்பவில்லை என்றே கூறுகிறார்கள்.
cv-shanmugam-News4 Tamil Latest Online Tamil News Today
இந்நிலையில், ஒரு காலத்தில் விழுப்புரம் மாவட்டம் திமுகவின் கோட்டையாக கருதப்பட்டாலும் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் செல்வாக்கால் தற்போது திமுக படு மோசமான நிலையில் உள்ளது. பொன்முடியின் வன்னியர் எதிர்ப்பு அரசியல் மற்றும் உட்கட்சி கோஷ்டி பூசல் காரணமாகவும் திமுக கடுமையான சோதனைக்கு தயாராகி வருகிறது. மேலும் இப்பகுதியில், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் மாவட்ட செயலாளருடன் கருத்து வேறுபாடு கொண்டு செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக முன்னாள் எம்எல்ஏக்கள், தேர்தலில் போட்டியிட்டவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு, நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
கடந்த காலங்களில் செஞ்சி, திண்டிவனம், மயிலம் உள்ளிட்ட தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் அளவில் வன்னியர்களின் ஓட்டு வங்கி உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. பலமுறை இங்கு திமுகவை வெற்றி பெறச் செய்தும் வன்னியர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. இதற்கு பொன்முடியின் தலையீடு தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் வன்னியர்களின் வாக்கு அவசியம் என்பதை உணர்ந்து அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
DMK Leader MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today
மேலும், இவர்களுக்கு கட்சியில் முக்கிய பதவிகளை வழங்கி சரிகட்ட திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு நாட்களாக திமுகவில் புறக்கணிக்கப்பட்டு வந்த வன்னியர்களுக்கு இந்த இடை த்தேர்தலால் பதவி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதெல்லாம் இடைத்தேர்தலுக்காக திமுக நடத்தும் அரசியல் நாடகம் என்றும் பொது மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இணையத்தில் பரவிய மனைவியின் அந்தரங்க படங்கள்! அதிர்ச்சியில் கணவர்! நடந்தது என்ன?
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நபர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.சமீபத்தில் திருமணமான அந்த வாலிபர் மனைவியை இங்கேயே விட்டுவிட்டு வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அந்த வாலிபரின் கம்ப்யூட்டரில் சில படங்கள் மற்றும் காட்சிகள் பதிவாகி இருந்துள்ளது. அதை அந்த வாலிபர் டவுண்லோடு செய்து பார்த்தவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அந்த படங்களில் சமீபத்தில் திருமணமான அவரது மனைவியின் அந்தரங்க காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் அவரது மனைவி படுக்கை அறையில் உடை மாற்றும் காட்சிகளும் காணப்பட்டன.
இவ்வாறு மனைவியின் ஆபாச படங்களை பார்த்து அதிர்ந்து போன அந்த வாலிபர் இது பற்றி தன்னுடைய மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், தனக்கு எதுவும் தெரியாது என்றும், படுக்கை அறை காட்சிகளை யாரோ ரகசியமாக படம் எடுத்திருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.
இதனால் இதைப்பற்றி அந்த வாலிபர், வெளிநாட்டில் இருந்தபடியே கேரள மாநில சைபர் கிரைம் போலீசில் புகார் செய்திருக்கிறார். எப்படியாவது மனைவியின் ஆபாச படங்களை வலைத்தளத்தில் இருந்து அகற்ற வேண்டும், அதனை ரகசியமாக படம் பிடித்தவர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறி இருந்தார்.
கேரள மாநில சைபர் கிரைம் போலீசார் நடந்த இந்த சம்பவம் பற்றி தீவிரமாக விசாரித்தனர். முதலில் அந்த பெண்ணின் படங்கள் எங்கிருந்து பரப்பப்பட்டது என்பதை கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் ஆராய்ந்தனர். இதில், படங்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட இந்த வாலிபரின் வீட்டில் இருந்தே பரவி இருப்பது தெரிய வந்ததுள்ளது.
இதனையடுத்து கேரளா மாநில சைபர் கிரைம் போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதில் அங்கு பெண்ணின் படுக்கை அறையில் ஸ்மார்ட் டி.வி. பொருத்தப்பட்டிருந்தது. இந்த ஸ்மார்ட் டி.வி.யில் இருந்து தினமும் கணவருடன் ஸ்கைப்பில் சேட்டிங் செய்வேன் என்று அந்த பெண் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியதையடுத்து சந்தேகம் கொண்ட சைபர் கிரைம் வல்லுனர்கள் ஸ்மார்ட் டி.வி.யை பரிசோதித்து பார்த்துள்ளனர். அதில் கேமிரா எப்போதுமே ஆன்லைனில் இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த பெண் இரவு நேரத்தில் கணவருடன் ஸ்கைப்பில் பேசிய பின்பு ஸ்மார்ட் டி.வி.யின் கேமிராவை ஆப் செய்யாமல் அப்படியே விட்டிருக்கிறார். அது தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வந்துள்ளது. இதை அறியாமல் ஸ்மார்ட் டி.வி. முன்பே அந்த பெண் உடை மாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
அவர் உடை மாற்றும் இந்த காட்சிகள் ஸ்மார்ட் டி.வி. கேமிராவில் பதிவாகி அப்படியே வெளிநாட்டில் இருக்கும் அவரது கணவரின் கம்ப்யூட்டரில் அப்லோட் ஆகி உள்ளது. இந்த காட்சிகளை தான் அவரது கணவர் பார்த்து விட்டு அலறி உள்ளார்.
இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் மற்றும் கம்ப்யூட்டர் நிபுணர்கள் இதனை கண்டு பிடித்து அந்த பெண்ணிடம் நடந்த தவறை விளக்கமாக எடுத்துக் கூறி புரிய வைத்துள்ளனர். மேலும் ஸ்மார்ட் டி.வி.யில் ஸ்கைப் பயன்படுத்திய பின்பு அதன் செயல்பாட்டை எப்படி நிறுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொருவரின் விரல் நுனியிலும் உலகம் வந்து விட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் நுணுக்கம் தெரியாவிட்டால் இது போன்ற தவறுகள் நடக்கத் தான் செய்யும். வங்கிகளிலும் இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாக நடக்கிறது. டிஜிட்டல் சேவையை சரியாக தெரிந்து கொள்ளாவிட்டால் பண இழப்பு ஏற்படும். இதற்கு நாம் தான் நம்முடைய தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடியும், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைப்போல ஆர்மீனியா, எஸ்டோனியா நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இந்த கூட்டத்துக்கு இடையே ஏராளமான நிகழ்வுகளில் பங்கேற்று வரும் மோடி, பல்வேறு வெளிநாட்டு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அந்தவகையில் நேற்று நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இதில் அரசியல், பொருளாதாரம், ராணுவம், பாதுகாப்பு மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையே நிலவிவரும் உறவுகள் என பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
மேலும் பரஸ்பர நலன்களை பாதிக்கும் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தியதுடன், இந்த பிரச்சினைகளில் இருநாடுகளுக்கு இடையே நீடிக்கும் ஒன்றிணைப்பையும் பாராட்டினர். புல்வாமா, கிறைஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதல்களுக்கு இரு தலைவர்களும் கூட்டாக கண்டனம் தெரிவித்துடன், இந்த தாக்குதல்களுக்கு எதிராக இரு நாடுகளும் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கும் பரஸ்பரம் ஆதரவு தெரிவித்தனர்.நியூசிலாந்தில் வசித்து வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் இரு நாட்டு உறவுக்கு முக்கியமான பாலமாக திகழ்வதாக பிரதமர் ஜெசிந்தா வியந்துரைத்தார்.இந்த சந்திப்பை தொடர்ந்து எஸ்டோனியா அதிபர் கெர்ஸ்தி கால்ஜுலைடை பிரதமர் மோடி சந்தித்தார். கடந்த ஆகஸ்டு மாதம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எஸ்டோனியா சென்றிருந்த போது எடுக்கப்பட்ட முடிவுகளின் படி மோடியும், கெர்ஸ்தியும் அப்போது விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக எலக்ட்ரானிக் நிர்வாகம், சைபர் பாதுகாப்பு மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்த சந்திப்பின் போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அடுத்த 2021-22-ம் ஆண்டுக்கான உறுப்பினர் பதவிக்கு இந்தியாவுக்கு ஆதரவு அளித்தமைக்காக எஸ்டோனியா அதிபருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இதைப்போல ஆர்மீனியா நாட்டு பிரதமர் நிக்கோல் பஷின்யானுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இருதரப்பு உறவுகள் பற்றி விவாதித்த இரு தலைவர்களும், அதன் நிலையான வளர்ச்சிக்காக திருப்தி வெளியிட்டனர். நூற்றாண்டுகளுக்கு முன்பே இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் வரலாற்று தொடர்பை இரு தலைவர்களும் நினைவு கூர்ந்து, இந்த உறவுகளை மேலும் தொடர உறுதிபூண்டனர்.
இந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடியை ஆர்மீனியாவுக்கு வருமாறு நிக்கோல் பஷின்யான் அழைப்பு விடுத்தார். இதை நன்றியுடன் ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, ஆர்மீனியா உறுப்பு நாடாக அங்கம் வகிக்கும் யூரேஷியன் பொருளாதார கூட்டமைப்புக்கும், இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக ஏற்பாடுகளை விரைவாக முடிப்பதற்கு ஆர்மீனியாவின் ஆதரவையும் கேட்டுக்கொண்டார்.
பாமக மீதான பயத்தால் திருமாவளவன் பிரச்சாரம் செய்ய தடை! மு.க.ஸ்டாலின் உத்தரவால் விசிக அதிர்ச்சி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திருமாவளவன் பிரச்சாரம் செய்ய மு.க.ஸ்டாலின் தடை போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வன்னியர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய தொகுதி என்பதால் திருமாவளவன் பிரச்சாரம் செய்தால் நமக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று அங்குள்ள திமுக நிர்வாகிகள் தலைமைக்கு தகவல் அனுப்பிய வண்ணம் உள்ளனர். இது மு.க.ஸ்டாலின் காதுக்கு எட்டிய உடன் நிலைமை என்ன என்று திமுக மாவட்ட செயலாளர் பொன்முடியின் கேட்டுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை அதிமுக மற்றும் திமுகவுக்கு இணையான வாக்குகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் உள்ளதால் மேலும் வன்னிய இளைஞர்கள் பெரும்பாலும் பாமகவில் உள்ளதால், தேர்தலில் வெற்றி பெற இவர்கள் தடையாக இருப்பார்கள் என்றும், இவர்களின் வாக்குகள் சிதறடிக்க வேண்டும் என்றால் திருமாவளவன் நம் கூட்டணியில் இருப்பதையே காட்டக்கூடாது என்றும்,
திருமாவளவன் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தால் பாட்டாளி மக்கள் கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்தி அதிமுகவிற்கு அனைத்து வாக்குகளையும் திருப்பி விட்டுவிடும், ஏற்கனவே சரக்கு மிடுக்கு எங்கிட்டதான் இருக்கு என்ற திருமாவளவன் பேசிய வசனத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் காட்டி கொண்டு வருகின்றனர்.
திருமாவளவன் கட்சியை சேர்ந்தவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினாலயே ஒரேயடியாக நம்மை கவிழ்க்க வழி கிடைத்துவிடும். இதனால் கவனத்துடன் தான் செயல்பட வேண்டும் என்று பொன்முடி சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் போல் இந்த தேர்தல் நடைபெறாது என்றும் இங்கு உதயநிதிஸ்டாலின் போன்றவர்களின் பேச்சு எல்லாம் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார்கள் என்று திமுக நிர்வாகிகளே சொல்லி வருகின்றனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை செய்யும் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுகவிற்காக பிரச்சாரம் தடை போட்டது போல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் மு.க.ஸ்டாலின் தடை போடுவது 100% உறுதியாகியுள்ளது.