Home Blog Page 5921

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக பதவியேற்கும் முதல் பெண்!

0

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக பதவியேற்கும் முதல் பெண்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிசிசிஐ தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசனின் மகளுமான ரூபா, பிசிசிஐ மாநில பிரிவின் முதல் பெண் தலைவர் ஆக பதவி ஏற்றுள்ளார்.

இன்று(செப்டம்பர் 26) சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டி.என்.சி.ஏ) 87 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில், முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீநிவாசனின் மகளும், குருநாத் மெய்யப்பனின் மனைவியுமான ரூபா குருநாத் மாநில வாரியத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மாநில பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெறுகிறார் ரூபா.

லோதா கமிட்டி பரிந்துரையின்படி, இந்திய கிரிக்கெட் வாரியத்திலும், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகத்திலும் பல சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவியில் இருக்கக்கூடாது; தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்தால் அடுத்து ஒரு இடைவெளி விட்டு தான் மீண்டும் பதவிக்கு வர முடியும்; ஒரே நேரத்தில் ஒருவர் இரண்டு பதவி வகிக்கக்கூடாது ஆகியவை லோதா கமிட்டி பரிந்துரையின்படி முக்கியமானதாகும்.

இந்த புதிய விதிமுறைகளின்படி, மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் நிர்வாகிகள் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 6 முக்கிய பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன்(செப்.25) முடிவடைந்தது. அதில் முன்னாள் சங்க தலைவர் ஸ்ரீநிவாசனின் மகள் ரூபா குருநாத்துக்கு எதிராக வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக பதவியேற்கும் முதல் பெண்!

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் பெயரிடப்படாத அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, டி.என்.சி.ஏ சமீபத்தில் தலைப்புச் செய்தியானது. இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ரூபா குருநாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ரூபா குருநாத் , 2013ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஸ்பாட் பிக்ஸிங் ஊழலில் ஈடுபட்டதற்காக தடைக்கு உள்ளாகியிருக்கும் குருநாத் மெய்யப்பனின் மனைவி ஆவார். 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஸ்ரீநிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகினார். பின் குருநாத் பிணையில் விடுதலையான பிறகு, மீண்டும் ஸ்ரீநிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரானார். அதன் பின், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.யின்) அவைத் தலைவராக ஸ்ரீநிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விஜய் உத்தரவின்படி நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கிய ரசிகர்கள்! இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

0

விஜய் உத்தரவின்படி நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கிய ரசிகர்கள்! இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

சமீபத்தில் நடந்த பிகில் ஆடியோ வெளியீட்டில் பேசிய நடிகர் விஜய், பேனர் விவகாரத்தில் அரசியல்வாதிகளை விமர்சித்து பேசிய அவர் மேலும் இது போன்ற சமூகப் பிரச்னைகளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த வகையில் அவரின் உத்தரவை செயல்படுத்தும் நோக்கத்தில் தேனியை அமையவிருக்கும் நியூட்ரினோ திட்டத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. இந்தத் திட்டத்துக்கு பெரும்பாலான தமிழக அரசியல் தலைவர்கள்,சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதியை சார்ந்த கிராம மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தான் மேற்கு தொடர்ச்சி மலை, சூழலியல் சார்ந்து மிக முக்கிய பங்காற்றும் இந்தத் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், மத்திய அமைச்சரவையும் அனுமதி அளித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பிகில் ஆடியோ வெளியீட்டில் பேசிய நடிகர் விஜய், அரசியல்வாதிகள் வாய்த்த பேனர் விவகாரத்தில் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்ததை கண்டித்து பேசிய அவர் இது போன்ற சமூக பிரச்னைகளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் ஆரம்பத்தில் சுபஸ்ரீ விவகாரத்துக்காக #justiceforsubasree என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். பின்னர், #keezhadiதமிழ்civilization என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்தனர். இந்தநிலையில் தற்போது தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ திட்டத்திலிருந்து பாதுகாக்க #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

https://twitter.com/ActorVijayTeam/status/1177141486674006016
https://twitter.com/MadhuraDharaoff/status/1177169775643914242

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

விழுப்புரத்தில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை சரித்த வன்னியர்கள்! விக்கிரவாண்டியிலும் சரிப்பார்களா?

0

விழுப்புரத்தில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை சரித்த வன்னியர்கள்! விக்கிரவாண்டியிலும் சரிப்பார்களா?

விழுப்புரம் மாவட்ட திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார் கா.பொன்முடி அவர்கள். மு.க.ஸ்டாலினுக்கு இன்றளவும் அவருக்கு நம்பிக்கை உரிய தளபதியாகவும் இருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடியின் சொந்த சமுதாயமான உடையார் சமுதாயத்திற்கு தான் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திமுகவினரை கேட்டாலே சொல்லி விடுவார்கள்.

என்ன தான் விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர்கள் மற்றும் தலித்துகள் அதிகம் பேர் வசித்து வந்தாலும் கட்சிக்காக பல தியாகங்களை செய்தாலும், உழைத்தாலும் திமுகவை பொருத்த வரை மாவட்ட செயலாளரான பொன்முடி தான் சார்ந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களை மட்டுமே கட்சியில் உயர்த்தி விடுவதில் வல்லவராக இன்றளவும் தொடர்ந்து வருகிறார்.

செஞ்சி ராமச்சந்திரன் கட்சியை விட்டு விலகி மதிமுகவிற்கு சென்ற பின்னர் மாவட்ட செயலாளர் பதவிக்கு வந்த பொன்முடி தனது திறமையால் இன்றளவும் இந்த பதவியை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்காத வண்ணம் இருந்து வருகிறார்.

விழுப்புரத்தில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை சரித்த வன்னியர்கள்! விக்கிரவாண்டியிலும் சரிப்பார்களா?

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்து தற்போது மூன்று மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட திமுகவில் ஒரு மாவட்ட செயலாளர் பதவி கூட வன்னியர்களுக்கு கொடுக்கப்படவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தின் பெரும்பான்மையான சமுதாயமான வன்னியர் சமுதாயத்திற்கு அம்மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னரும் முக்கிய பதவி எதுவும் வழங்காமல் தொடர்ந்து தனது சாதியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை கொடுத்து வருகிறார்.

இதன் காரணமாகவே கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் பொன்முடியின் கோட்டை என்று அழைக்கப்பட்ட விழுப்புரம் தொகுதியில் வன்னியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொன்முடியை மண்ணை கவ்வச் செய்தனர். இதன் காரணமாக பொன்முடி கடும் கோபத்தை வன்னியர்கள் மீதும் காட்டினார். இதன் காரணமாக 2016-ஆம் ஆண்டு தேர்தலில் விழுப்புரம் தொகுதியை விட்டு தனது சொந்த தொகுதியான திருக்கோவிலூருக்கு ஓடினார்.

தொகுதியை விட்டு ஓடினாலும் தனது சாதிவெறியை காட்டிவிட்டு தான் சென்றார். தன்னைத் தவிர விழுப்புரம் தொகுதியில் யாரும் வெற்றி பெறக்கூடாது நிற்கவும் கூடாது என்ற எண்ணத்தில் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தொகுதியை கொடுத்தார். இது வன்னியர்களுக்கு மேலும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சி.வி.சண்முகம் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது அமைச்சராகவும் உள்ளார்.பொன்முடியின் செல்வாக்கை வன்னியர்களின் துணையுடன் முற்றிலும் ஒழித்ததில் இவருக்கும் முக்கிய பங்குள்ளது.

விழுப்புரத்தில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை சரித்த வன்னியர்கள்! விக்கிரவாண்டியிலும் சரிப்பார்களா?

விழுப்புரம் மாவட்ட திமுகவில் உள்ள ஒன்றிய செயலாளர்கள் பெரும்பாலோர் உடையார் சமூகத்தை சேர்ந்தவர்களே இருப்பார்கள். மாவட்டத்தின் பெரும்பான்மையான சமுதாயமான வன்னியர்களுக்கு ஒன்றிய செயலாளர் கூட கிடைக்க கூடாது என்பதிலும் பொன்முடி தெளிவாக இருப்பார்.

தற்போது விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பொன்முடி மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதற்காக கிராமம் கிராமமாக சென்று அதிமுக மற்றும் பாமக குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். என்ன தான் விமர்சனம் செய்தாலும் வன்னியர்கள் எதிர்ப்பு பொன்முடியை தொடர்ந்து துரத்திக் கொண்டு தான் இருக்கிறது.

எப்படி 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை வன்னியர்கள் சரித்தார்களோ. அதேபோல தற்பொழுது “அனாதை தலைவர்” என்று மருத்துவர் ராமதாஸ் அவர்களை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலினுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் விதத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வன்னியர்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்று தெளிவாக தெரிகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள பக்கிரிப்பாளையம் ஊராட்சியில் உள்ள கலிங்கமலை கிராமம் திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் அவர்களின் சொந்த கிராமம் ஆகும். அவருக்கு சொந்த ஊரில் மட்டும்தான் செல்வாக்கு தவிர தொகுதி முழுவதும் அல்ல என்பது அவருக்கே தெரியும்.

விழுப்புரத்தில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை சரித்த வன்னியர்கள்! விக்கிரவாண்டியிலும் சரிப்பார்களா?

பாமகவின் பலம் மிகுந்த தொகுதி என்பதால் பலமான வன்னியர் பிரமுகரை தேர்தலில் களமிறக்கியதால் சுலபமாக வெற்றியை பறித்து விடலாம் என்று மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு ஜெகத்ரட்சகன் துணை நிற்பார் என்றும் பொன்முடியும் நம்பிக் கொண்டு இருக்கிறார்.

வன்னியர்கள் அதிகம் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் பொன்முடியின் அரசியல் கணக்கு பலிக்கின்றதா அல்லது மாவட்டத்தின் செல்வாக்கு மிக்க அதிமுக அமைச்சர் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் செயல்பாடு மற்றும் பாமகவின் வாக்கு வங்கி வெற்றிப் பெறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

370-வது பிரிவு ரத்தை எதிர்த்து சீமான் தலைமையில் டெல்லியில் போராட்டம்

0

370-வது பிரிவு ரத்தை எதிர்த்து சீமான் தலைமையில் டெல்லியில் போராட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370-வது நீக்கப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது.

தமிழக அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு சீக்கியர் அமைப்புகளும் பங்கேற்றன. சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை பாஜக தலைமையிலான மத்திய அரசு நீக்கியது.

மேலும் இதனையடுத்து அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க பெரும்பாலான ஐம்மு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை சுமூகமாக இருப்பதாக மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. இந்நிலையில் 370-வது பிரிவு நீக்கத்துக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து டெல்லியில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்ற போராட்டம் இன்று நடைபெற்றது.

இதில் பல்வேறு சீக்கியர் அமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியம் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிட்டனர். உலகம் முழுவதும் ஒடுக்கப்படுகிற அனைத்து தேசிய இன மக்களுக்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம்.

குரல்வளை அற்ற ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக தமிழர்களாகிய நாங்கள் குரல் கொடுக்கிறோம். ஜம்மு காஷ்மீர் தலைவர்களை சிறையில் அடைத்துள்ளனர். பொதுமக்களை திறந்தவெளி சிறைச்சாலையில் அடைத்துவிட்டு ஜனநாயகம் பற்றி மத்திய அரசு பேசுவது வேடிக்கையானது என்றும் அவர் பேசினார்.

உள்ளாட்சி தேர்தல் உறுதியானது! நவம்பரில் தமிழக மக்களுக்கு திருவிழா

0

உள்ளாட்சி தேர்தல் உறுதியானது! நவம்பரில் தமிழக மக்களுக்கு திருவிழா

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நவம்பர் மாதம் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உறுதியாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2016ம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தொடர்ந்த அவகாசம் கோரி வந்தன. அதே நேரத்தில், ஊராட்சி அலுவலர்களின் கால அவகாசத்தை மட்டும் தொடர்ந்து நீட்டித்து வந்தது. இதனால், திமுக உட்பட சிலர் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் விரைந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் பணிகளைத் தொடங்கியது. மேலும், நவம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்தது.

இதனையடுத்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சமீபத்தில் அளித்த பேட்டியில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்திடம் வாக்குப்பதிவு இயந்திரம் கேட்கப்பட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பீகார், கர்நாடகா மாநிலங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்கவும் மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த இயந்திரங்களை தயார் நிலையில் வைக்கும் பணி அக்., 15ல் முடிவடையும் என்றும், நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் எனவும் தமிழக தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏழு பெண்களை கடத்தி கற்பழித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர்! நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்.

0

ஏழு பெண்களை கடத்தி கற்பழித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர்! நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்.

கல்லூரி பெண் உட்பட ஏழு பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து மிரட்டி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் அதிர்ச்சியில் தமிழகம்.

சேலம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் மோகன்ராஜ். கா.கா. பாளையம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராக உள்ளார். சொந்தமாக இரு ஆட்டோக்களை வைத்துள்ள மோகன்ராஜ், ஒரு ஆட்டோவை கூட்டாளிக்கு வாடகைக்கு கொடுத்து விட்டு ஒரு ஆட்டோவை தானே ஓட்டி வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மோகன்ராஜின் ஆட்டோவில் பயணித்த ஒரு பெண் ஒருவர், மோகன்ராஜ் தன்னை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் படுக்கைக்கு அழைத்து மிரட்டி வருவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் செல்வாக்குடன் கெத்தாக வலம் வந்த ஆட்டோ மோகன்ராஜை கொத்தாக பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது அவன் ஒரு சீரியல் ரேப்பிஸ்ட் என்ற திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.

அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில், அவன் 7 பெண்களை பலவந்தமாக மிரட்டி பலாத்காரம் செய்த வீடியோ காட்சிகள் பதிவாகி இருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்து போயினர். அந்த வீடியோக்களில் 6 பேர் குடும்ப பெண்கள் என்பதும் ஒருவர் கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது.

ஆட்டோவில் தனியாக வரும் பெண்களிடம் நல்லவன் போல நடித்து குடும்ப நிலவரத்தை விசாரிப்பது. பண பிரச்சனையில் இருக்கும் பெண்கள் என்று தெரிந்தால் பணம் கொடுத்து உதவுவது போல நடித்து தனது வீட்டிற்கு அழைத்து செல்வான் என்றும்,

அங்கு அவர்களை கடுமையாக மிரட்டி அடித்து உதைத்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு தான் விரும்பிய நேரத்தில் அந்த பெண்களை தனது வீட்டுக்கு வரவழைத்து தனது இச்சையை தீர்த்துக் கொள்வான் என்கின்றனர் காவல்துறையினர்.

அந்தவகையில் பல பெண்களை வேட்டையாடிய கொடூரன் ஆட்டோ மோகன்ராஜின் அட்டூழியம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்காமல் இருந்ததற்கு அவனது அரசியல் செல்வாக்கும் அடாவடியான நடவடிக்கைகளுமே காரணம் என்றும் பலாத்கார வீடியோவை காட்டி பெண்களிடம் அவன் நடந்து கொள்ளும் விதம் மிகவும் கொடூரமாக இருக்கும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

இவனிடம் சிக்கிய 7 பேர்களில் ஒரு பெண்ணை காணவில்லை, அந்த பெண் குடும்பத்துடன் ஊரை காலி செய்து சென்றுவிட்டதாக, போலீசாரிடம் மோகன்ராஜ் தெரிவித்துள்ள நிலையில் அந்த பெண்ணின் கதி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

காமுகன் ஆட்டோ மோகன்ராஜுக்கு 2 மனைவிகள் என்றும் முதலில் ஒரு பெண்ணை கதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் இவனது தொல்லை தாங்க முடியாமல் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

அதனை தொடர்ந்து நண்பனின் வீட்டுக்கு சென்று வந்த போது அவனது மனைவியை 2 வது தாரமாக மயக்கி திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த பெண்ணும் இவனது அட்டகாசம் தாங்காமல் விட்டுச்சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவன் மட்டுமல்லாமல் இவனுடன் ஆட்டோ ஓட்டும் மற்றொரு கூட்டாளியும் இது போல பல பெண் பயணிகளை மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகின்றது அவனையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவிகளை காதலிப்பது போல நடித்து தனிமையான இடத்துக்கு அழைத்து சென்று ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த மேட்டூர் பகுதியை சேர்ந்த சபரி அபிசேக் என்பவனை 24ந்தேதி கைது செய்த காவல்துறையினர் அவனது செல்போனில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை கைப்பற்றினர். இந்த நிலையில் 25ந்தேதி காமுகன் ஆட்டோ மோகன் ராஜ் சிக்கி இருக்கிறான்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போருக்கு வாய்ப்பா? இம்ரான்கான் என்ன சொல்கிறார்

0

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டபிரிவை இந்தியா நீக்கியதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடைபெறுமா என்ற அச்சமும் இரு நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த போர் பதற்றத்தை தணிக்குமாறும்,இரு நாடுகளும் தங்களுக்கிடையேயான பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 50 நாட்களாக காஷ்மீர் மக்கள், 9 லட்சம் ராணுவ வீரர்களால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் கூட்டம் கூட்டமாக கைது செய்யப்படுகிறார்கள். மருத்துவமனைகள் இயங்கவில்லை. அங்கு நடைபெறும் செய்திகள் மூடி மறைக்கப்படுகின்றன.

80 லட்சம் மக்களும் திறந்தவெளி சிறையில் வைக்கப்பட்டு இருப்பது, இந்த காலத்தில் முன் எப்போதும் இல்லாதது ஆகும். ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டால் என்ன நடக்குமோ என்பது தான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த இரு அணு ஆயுத நாடுகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்று பதற்றத்தை அதிகரிக்கும் தோணியில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

திருட்டுத்தனமான திருமணத்தால் தில்லை புனிதத்தலத்தை தீட்டாக்கிய தீட்சிதர்கள்

0

திருட்டுத்தனமான திருமணத்தால் தில்லை புனிதத்தலத்தை தீட்டாக்கிய தீட்சிதர்கள்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் அமைந்துள்ள மிகவும் பழம்பெருமையான, பஞ்சபூத தளங்களில் ஒன்றான ஸ்ரீநடராஜர் கோவில் தில்லைவாழ் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தில்லை நடராஜர் திருகோவிலில் அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் சோழ வாரிசுகளுக்கு முடிசூட்டுவதும் மற்றும் ஆன்மீகம் தவிர்த்த வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடத்த ஆகமவிதிகள் அனுமதிக்கவில்லை.

தீட்டாக்கிய திருட்டு திருமணம்:
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் கோவில் ஆகம விதிகளை மீறி ஒரு திருட்டுத்தனமான திருமண நிகழ்ச்சி நடந்தேறியுள்ளது அந்த திருமண நிகழ்ச்சிக்காக கோவிலை அலங்கரிக்கவும், தோரணம் கட்டுவதற்கும் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யவும் திரு தில்லை நடராஜர் கோவில் இரவு முழுவதும் திறந்து இருந்திருக்கின்றது. மேலும் அந்த திருமண நிகழ்ச்சிக்காக அலங்கார வேலைகள் செய்தவர்கள் , பொற்கூரையின் மீது ஏறி அமர்ந்து அலங்கார வேலைகள் செய்துள்ளனர். அந்த அலங்காரம் செய்தவர்கள் கோவிலுக்குள்ளேயே உறங்கியுள்ளார்கள், தில்லை நடராஜர் கோவிலில் நான்கு கோபுரங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலணி அணிந்துசெல்ல அனுமதியில்லை.

திருட்டுத்தனமான திருமணத்தால் தில்லை புனிதத்தலத்தை தீட்டாக்கிய தீட்சிதர்கள்

இவ்வாறு ஆகமவிதிகள் பின்பற்றப்படும் நிலையில் இதையெல்லாம் மீறும் வகையில் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதியில் கோவிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சி அங்கு நடந்தேறியதால் புனித தலமான தில்லை நடராஜர் கோவில் தீட்டு பட்டுவிட்டது, மேலும் புராதான சின்னமான தில்லை நடராஜர் கோவிலில் உள்ள சிலைகள் மற்றும் பொற்கூரை சேதமடைந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கபடுகின்றது.

மேலும் கோவிலிலுள்ள பொற்கூரையின் தங்கத் தகடுகள் திருடப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேக்கபடுகின்றனர் சிவபக்தர்கள். ஆகையால் கோவில் ஆகம விதிகளை மீறி திருட்டுத்தனமாக நடந்தேறிய இந்த திருமண நிகழ்ச்சியால் அந்த மணமக்களையும் , அவர்களின் பெற்றோர்களும் ஜென்ம ஜென்மத்திற்கும் நீங்காத பாவத்தில் செய்தவர்களாகின்றனர் எனவும் சிவபக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த திருட்டு திருமணம் நடக்க துணைபோன தீட்சிகர்கலை அரக்கர்கள் என்றும் பக்தர்களுக்கிடையே ஒரு விமர்சன கருத்து நிலவுகின்றது.

திருட்டுத்தனமான திருமணத்தால் தில்லை புனிதத்தலத்தை தீட்டாக்கிய தீட்சிதர்கள்

கோவிலுக்கு வரும் பக்தர்களை நிழற்படம் எடுக்கவே அனுமதிக்காத தில்லைவாழ் தீட்சிதர்கள் , இந்த திருட்டுத்தனமான திருமண நிகழ்ச்சியில் “வீடியோ கேமராக்கள்” பயன்படுத்தபட்டிருக்கின்றது. தீட்சிதர்களுக்கு “துட்டு ” கொடுத்தால் எப்படி வேண்டுமென்றாலும் நிழற்படம் எடுக்கலாம் , காணொளி எடுக்கலாமோ என்று பக்தர்களும் தில்லைவாழ் தீட்சிதர்கள் முன்பே பேசி கொள்கின்றனர்.

திருட்டுத்தனமான திருமணத்தால் தில்லை புனிதத்தலத்தை தீட்டாக்கிய தீட்சிதர்கள்

எப்போது தீட்டுக்கழியும்?
சிவத்தொண்டர்கள், சிவபக்தர்கள் மற்றும் சமூக சேவகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வை அனைவரும் பொதுமக்கள் அனைவரும் கண்டிக்கின்றனர். இந்த நிகழ்வை கண்டித்து சமூக சேவகர்கள் தில்லையில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இனிவரும் நாட்களில் இந்த திருட்டுத்தனமான திருமணத்தால் தீட்டு ஏற்படுத்திய தீட்சிதர்களை எதிர்த்து போராட்டங்கள் நடக்கும்.

இந்த போராட்டங்களால் தில்லை வாழ் தீட்சிதர்களால் தீட்டான திருத்தலம் எப்போது தீட்டுகழிக்கப்பட்டு, அந்த கோவிலுக்கு உரிமையுள்ள சோழர் பரம்பரையினருக்கு எப்போது முடிசூட்டு விழா நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் பேசி வருகிறார்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

மீண்டும் ஒரு எட்டு வழிச்சாலையா? தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரை கேள்விகளால் துளைத்தெடுக்கும் சமூக ஆர்வலர்கள்!

0

மீண்டும் ஒரு எட்டு வழிச்சாலையா? தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரை கேள்விகளால் துளைத்தெடுக்கும் சமூக ஆர்வலர்கள்!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிகம் கவனிக்கப்பட்ட தொகுதியான தருமபுரியில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு திமுகவை சேர்ந்த டாக்டர் செந்தில்குமார் வெற்றி பெற்றார்.

அவர் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற நாளிலிருந்தே அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவரும் மக்களுடன் எளிமையாக பழகுவது மற்றும் தொகுதியில் உள்ள சிறிய பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என ஆக்க பூர்வமான செயல்பாடுகளில் தான் ஈடுபட்டு வருகிறார்.

என்ன தான் அவர் இப்படி ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபட்டு வந்தாலும் அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதும் தற்போதைய அவருடைய செயல்பாடுகளும் முரணாக உள்ளதால் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.ஏற்கனவே தானும் அன்புமணியின் சமூகத்தை சேர்ந்தவர் தான் என பிரச்சாரத்தில் பேசி சாதி ரீதியான அரசியலை முன்னெடுத்து விட்டு வெற்றி பெற்ற பின் சாதி பெயரை சொல்லி கொண்டு யாரும் என்னை பார்க்க வரக் கூடாது என்று கூறியது,நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற போது தான் ஒரு திராவிடன் என பேசியது என அனைத்தும் அவர் சார்ந்த கட்சியின் கொள்கைகளுக்கும் இவர் முன்பு பேசியதற்கும் முரண்பாடாக இருந்ததால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.

மீண்டும் ஒரு எட்டு வழிச்சாலையா? தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரை கேள்விகளால் துளைத்தெடுக்கும் சமூக ஆர்வலர்கள்!

அந்த வகையில் தருமபுரி எம்பி செந்தில்குமார் தற்போது புதிய சிக்கலில் மாட்டியுள்ளார். சமீபத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து சேலம்-தருமபுரி வழியிலான சாலையை எட்டு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை-சேலம் எட்டு வழிச்சாலையை எதிர்த்து குரல் கொடுத்துவரும் சூழ்நிலையில் இவர் மற்றுமொரு எட்டு வழிச்சாலை வேண்டும் என்று கேட்டுள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்த்ததும், தற்போது தருமபுரி தொகுதியை சேர்ந்த திமுக எம்பி.டாக்டர் செந்தில்குமார் கேட்பதும் வேறு சாலைகள் என்றாலும் ஏற்கனவே திட்டமிட்ட சாலையையே எதிர்த்து வரும் சூழலில் மீண்டும் ஒரு எட்டு வழிச்சாலையை கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் திமுக எம்பி.செந்தில்குமாரை கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.இதற்கு முன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அன்புமணி ராமதாஸ் சென்னை சேலம் இடையேயான எட்டு வழிச்சாலை அந்த பகுதி விவசாயிகளுக்கு எதிரானது என நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையாணை பெற்றுள்ள நிலையில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமார் மீண்டும் ஒரு எட்டு வழிச்சாலையை வேண்டி கோரிக்கை விடுத்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

மக்களை வதைக்கும் முக்கிய பிரச்சனையில் சரியான சமயத்தில் உதவிய தமிழக அரசு!

0

மக்களை வதைக்கும் முக்கிய பிரச்சனையில் சரியான சமயத்தில் உதவிய தமிழக அரசு!

வெங்காயம் விளையும் பல மாநிலங்களில் தொடர்ந்து பருவமழை பொழிந்து வருவதால் வெங்காய உற்பத்தி குறைந்து இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கிலோ 80 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில், வெங்காய விலையை குறைக்க ஒவ்வொரு மாநில அரசுகளும் முயற்சி செய்து வருகின்றன.அவர்களை போலவே தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்காக மத்திய அரசிடம் ஏராளமான வெங்காயம் கையிருப்பில் உள்ளதால் அதை இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் குறைந்த விலையில் விநியோகிக்க முயற்சி எடுக்கப்பட்டு தற்போது அது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இதன் காரணமாக, தமிழக்கத்திற்கான வெங்காய வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்னும் சில தினங்களில் குறிப்பிட்ட அளவிற்கு விலை குறைய வாய்ப்புள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூபாய் 33 க்கு விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சென்னையிலுள்ள 200 ரேஷன் கடைகளில் இந்த குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்வதற்க்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருவதாக கூறிய அமைச்சர். மேலும் ஆந்திராவில் இருந்தும் தமிழகத்திற்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

வெங்காய விலை உயர்வை சமாளிக்க டெல்லியில் மத்திய அரசின் சார்பாக நடமாடும் நியாய விலைக்கடையின் மூலமாக ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 22 க்கு விற்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.எது எப்படியோ மத்திய அரசுடனான இணக்கமான அரசியலால் இந்த இக்கட்டான சூழ்நிலையை தமிழக அரசு சரியாக கையாண்டுள்ளது என்று பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.