Home Blog Page 5926

டிடிவி.தினகரன் தி.மு.க.வுடன் கூட்டணியா? அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

0

டிடிவி.தினகரன் தி.மு.க.வுடன் கூட்டணியா? அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

அதிமுகவிலிருந்து பிரிந்த அமமுக என்ற தனிக்கட்சியை ஆரம்பித்த டிடிவி தினகரன் அதிமுகவின் எதிரியான திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.இன்று விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது.

பால்வளத்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று வந்துள்ளேன். இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணம் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது.

அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று கால்நடை வளர்ப்பு தீவன உற்பத்தி போன்றவற்றை அறிந்து வந்துள்ளேன்.

டிடிவி.தினகரன் தி.மு.க.வுடன் கூட்டணியா? அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

பால்வளத் துறை சார்பில் சேலம் மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் பசு வளர்ப்பு இனவிருத்தி, தீவன உற்பத்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் பால்பண்ணை அமைக்கப்படும்.

ஸ்டாலினை தவிர சமூக ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் எங்களது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை வரவேற்கிறார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளி நாட்டுக்கு சென்று ரூ. 2850 கோடி அளவில் தமிழகத்துக்கு முதலீட்டை ஈர்த்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் புதிதாக ஜவுளி தொழிற்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இது சம்பந்தமாக முதல்- அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.ஜி.ஆர். ரசிகர் இல்லை. சிவாஜி கணேசன் ரசிகர்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து வளர்த்த கட்சியான அ.தி.மு.க.வை அவர் எதிர்க்கிறார். அ.தி.மு.க.வின் எதிரியான தி.மு.க.விடம் மறைமுக கூட்டணி வைத்துள்ளார்.

தினகரனின் உண்மையான நிலைப்பாடு தெரிந்து தான் நாஞ்சில் சம்பத் அவரை விட்டுச் விலகி சென்று விட்டார். அடுத்து புகழேந்தியும் புலம்பிக் கொண்டுள்ளார் என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

பணத்தின் முன் புனிதமும் பாரம்பரியமும் வீழ்த்தப்பட்டதா? மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை

0

பணத்தின் முன் புனிதமும் பாரம்பரியமும் வீழ்த்தப்பட்டதா? மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை

வரலாற்று சிறப்புமிக்க தில்லை நடராசர் கோவிலை வணிகமயமாக்கும் முயற்சியை கண்டித்தும், அதை முறையாக நிர்வகிக்க அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
                      
உலகப் புகழ்பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாக போற்றப்படுவதும், பிச்சாவரம் சோழர்களால் காலம் காலமாக நிர்வகிக்கப்பட்டு வந்ததுமான சிதம்பரம் நடராசர் கோயிலில் மிக மோசமான அத்துமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. புனிதம் மிக்க சிதம்பரம்  நடராசர் கோயிலை வணிகமயமாக்கும் நோக்கத்துடன் நடராசர் கோயில் நிர்வாகம் மேற்கொண்ட அத்துமீறல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை ஆகும்.

வரலாற்று சிறப்பு மிக்க சிதம்பரம் நடராசர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசி பட்டாசு ஆலை அதிபரின் இல்லத் திருமணம் நேற்று முன்நாள் ஆன்மிக விதிகளை மீறியும், பல்லாயிரமாண்டு  நடைமுறைகளை மீறியும் நடத்தப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இது இராஜ அவை என்று போற்றப்படும் ஆயிரங்கால் மண்டபத்தின் புனிதத்தை சிதைக்கும் செயலாகும். திருமண ஏற்பாடுகள், அலங்காரம் என்ற பெயரில் நடராசர் ஆலயம் அல்லோல கல்லோலப்படுத்தப்பட்டது.  உலகப்புகழ் பெற்ற நடராசர் ஆலயத்தின் புனிதமும், மாண்புகளும் கால்களில் போட்டு மிதிக்கப்பட்டன.

சிதம்பரம் நடராசர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்திற்கு தனிச் சிறப்புகள் உள்ளன. ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சனம், ஆரூத்ரா தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது மட்டும் தான் சிவகாமியம்மன் சமேத நடராசர் ஆயிரங்கால் மண்டபத்தில் காட்சியளிப்பார். அங்கு பல்வேறு வகையான வழிபாடுகள் நடத்தப் படும். இந்த இரு நிகழ்வுகளைத் தவிர ஆயிரங்கால் மண்டபத்தில் அனுமதிக்கப்பட்ட இன்னொரு நிகழ்வு சோழ மன்னர்களின் பதவியேற்பு விழா ஆகும். இவற்றைத் தவிர வேறு எந்த நிகழ்வுகளும்  இந்த மண்டபத்தில் அனுமதிக்கப்பட்டதில்லை. சிதம்பரம் நடராசர் கோயிலின் பல்லாயிரமாண்டு கால வரலாற்றில் ஆயிரங்கால் மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்த பல முயற்சிகள் நடந்த போதிலும் அவை எதுவும் வெற்றி பெற்றதில்லை. இத்தகைய வரலாறு கொண்ட ஆயிரங்கால் மண்டபத்தில் பணம் கிடைக்கிறது என்பதற்காக திருமணம் நடத்த அனுமதிப்பது நடராசர் கோயிலை வணிகமயமாக்கும் செயல் ஆகும்.

பணத்தின் முன் புனிதமும் பாரம்பரியமும் வீழ்த்தப்பட்டதா? மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை

ஆயிரங்கால் மண்டபத்தில் தொழிலதிபர் இல்லத் திருமணத்தை நடத்த அனுமதித்தது சர்ச்சையாகியுள்ள நிலையில், தாங்கள் அரங்கேற்றிய அத்துமீறலை மூடி மறைக்க தீட்சிதர்கள் துடிக்கின்றனர். நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்காக ஆயிரங்கால் மண்டபம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆலய வளாகத்திலுள்ள சிறிய கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றதால் கோவில் வளாகத்தில் நிலவிய நெரிசலைக் கருத்தில் கொண்டு ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண விழாவை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப் பட்டதாகவும் தீட்சிதர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. இது தமிழக அரசையும், மக்களையும், ஏமாற்றும் செயலாகும். முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் இச்செயலை எவரும் நம்ப மாட்டார்கள்.

ஆயிரங்கால் மண்டபத்தில் மின் விளக்குகள், மலர்த் தோரணங்கள் ஆகியவற்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் அல்ல, பட்டாசு ஆலை அதிபர்  குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு சிறப்பு பேட்ஜ் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோயில் தீட்சிதர்கள் கூறுவதைப் போன்று கடைசி நேரத்தில் தான் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதிக்கப்பட்டது என்றால், மிகக்குறுகிய அவகாசத்தில் பேட்ஜ் தயாரித்து, திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் வழங்குவது எந்த வகையிலும் சாத்தியமல்ல.

சிதம்பரம் நடராசர் கோயிலில் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் குறித்து சுருக்கமாக கூற வேண்டுமானால் பணத்தின் முன் புனிதமும், பாரம்பரியமும் வீழ்த்தப்பட்டிருக்கின்றன என்று தான் குறிப்பிட வேண்டும். நடராசர் கோவில் நிர்வாகம் தவறானவர்களின் கைகளில் சிக்கித் தவிக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணத்தைக் கூற முடியாது. இதற்கான ஒரே பரிகாரம் கோயில் நிர்வாகத்தை மீட்டெடுத்து  சரியானவர்களின் கைகளில் ஒப்படைப்பது மட்டும் தான். அதை செய்ய தமிழக அரசு தயங்கக்கூடாது.

சிதம்பரம் நடராசர் கோயிலை யார் நிர்வகிப்பது என்பது குறித்து தமிழக அரசுக்கும், தீட்சிதர்களுக்கும் பல கட்டங்களில் சட்டப் போராட்டங்கள் நடந்துள்ளன. இதுதொடர்பான வழக்குகளில் 17.03.1890, 03.04.1939, 23.01.1940, 11.02.1997, 02.02.2009 ஆகிய நாட்களில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் தமிழக அரசு தான் கோவிலை நிர்வகிக்க வேண்டும்; நடராசர் கோயில் தீட்சிதர்களின் சொத்து அல்ல என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. 2008-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடராசர் கோயிலை தமிழக அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், சில தரப்பினர் சரியாக ஒத்துழைக்காததால் தான் தீட்சிதர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, தீட்சிதர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதுபற்றி விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிடலாம் என்று அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அந்த வகையில் இப்போதும் தில்லை நடராசர் கோயிலில் நடந்த அத்துமீறல்கள் பற்றி விசாரணை நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு. தேவைப்பட்டால் நடராசர் கோயிலின் நிர்வாகத்தையும் தமிழக ஆட்சியாளர்களால் கையகப்படுத்த முடியும்.

எனவே, சிதம்பரம் நடராசர் கோயிலில் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல் பற்றி விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, காலம்காலமாக பிச்சாரவரம் சோழர்கள் நிர்வாகத்தில் சிதம்பரம் நடராசர் கோயில் புகழ் பெற்று விளங்கியது என்பதால், அக்கோயிலை தமிழக அரசு கையகப்படுத்தி,  அதை நிர்வகிக்க அமைக்கப்படும் அறங்காவலர் குழுவில் பிச்சாவரம் சோழர்களை சேர்க்க  வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கிறதா இந்தியா? ராணுவ தளபதியின் அதிரடி அறிவிப்பு !

0

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கிறதா இந்தியா? ராணுவ தளபதியின் அதிரடி அறிவிப்பு !

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவு பாஜக தலைமையிலான மத்திய அரசால் நீக்கபட்டது. இந்த நீக்கத்திற்கு பிறகு தற்போது மெல்ல மெல்ல காஷ்மீர் மாநிலத்தில் இயல்புநிலை திரும்பி வருகிறது, பிரிவினை வாதம் பேசும் தலைவர்கள் அனைவரும் தொடர்ந்து வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் நாடு முழுவதும் உள்ள பாஜகவை எதிர்க்கும் கட்சிகளும் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு காஷ்மீர் விவகாரத்தில் அமைதியாகி விட்டனர்.

இந்நிலையில் இன்று பயங்கர ஆயுதங்களுடன் லாரி ஒன்று பாதுகாப்பு படையினரால் பிடிக்கப்பட்டது, ஜம்முவில் இருந்து காஷ்மீர் செல்லும் வழியில் ஆயுதங்களுடன் கூடிய இந்த லாரி பிடிபட்டது. மேலும் இந்த லாரியில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.இவர்களிடமிருந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய இராணுவ தளபதியிடம் மத்திய அமைச்சர் ஜிசேந்தர் சிங் இந்தியா விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியை மீட்டு இந்தியாவுடன் இணைக்கும் என்று தெரிவித்தது பற்றி கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த இந்திய இராணுவ தளபதி அரசு எடுக்கும் எந்த முடிவிற்கும் இராணுவம் உறுதுணையாக இருக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியை மீட்க அரசு உத்தரவிடும் நேரத்தில் இந்திய இராணுவம் களத்தில் இறங்கும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவ தளபதியின் அறிவிப்பு பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்த இருக்கும் பேரணிக்கு எச்சரிக்கை கொடுப்பது போல பார்க்கப்படுகிறது.மேலும் இது மட்டுமின்றி, இராணுவ தளபதியின் இந்த அதிரடி அறிவிப்பு பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை இந்தியாவுடன் இணைப்பது குறித்து மத்திய அரசு உறுதியாக இருப்பதை குறிப்பிடுவதாகவும் அரசியல் விமர்ச்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படியோ விரைவில் அடுத்த அதிரடி பாகிஸ்தானியர்களுக்கு காத்திருக்கிறது போல!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

அடுத்த தமிழக பாஜக தலைவர் இவரா? இதற்கு தான் இந்த தாமதமா?

0

அடுத்த தமிழக பாஜக தலைவர் இவரா? இதற்கு தான் இந்த தாமதமா?

தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தெலங்கானா ஆளுநராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து சில மணி நேரங்களில் அவர் ஏற்கனவே வகித்து வந்த தனது பாஜக தலைவர் பதவியையும், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து சரியாக 11 நாட்கள் முடிந்த நிலையிலும் இன்னமும் தமிழக பாஜக தலைவர் யார் என்பது பற்றி அக்கட்சியின் தேசிய தலைமை அறிவிக்கப்படவில்லை. தமிழக பாஜக தலைவர் யாரென்று அறிவிக்க ஆகும் தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

தேசிய தலைமை ஏற்படுத்திய இந்தத் தாமதத்தைப் பயன்படுத்தி தமிழக பாஜக தரப்பிலிருந்து இன்னமும் சிலர் அந்த பதவியை பிடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியின் பிறந்தநாள் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வருகிறது. அதை ஒட்டி பாஜக சார்பில் செப்டம்பர் 14 முதல் 20ஆம் தேதி வரை சேவை வாரமாக பாஜகவால் அறிவிக்கப்பட்டு அது தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்து மாநில பாஜக நிர்வாகங்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்திற்கான பாஜக தலைவர் பதவி தற்போது காலியாக உள்ளதால், சேவை வாரம் தொடர்பான பயிற்சிப் பட்டறைகளை மாநில அமைப்புப் பொதுச் செயலாளராக உள்ள கேசவ வினாயகம் முன்னின்று நடத்துகிறார்.

பொதுவாகவே பாஜகவில் அமைப்புப் பொதுச்செயலாளர் என்ற பதவி முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் ஆர்எஸ்எஸ்சின் தீவிர ஊழியர் தான் இருப்பார். மாநில அளவில் பாஜகவுக்கு தலைவர் என இருந்தாலும் இந்த அமைப்புப் பொதுச் செயலாளரின் ஆலோசனையும் பங்கும் கட்சி நிர்வாகத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் இப்போது பாஜக மாநிலப் பொறுப்புகளை கேசவ வினாயகம் என்பவர் தான் பார்த்து வருகிறார்.

அடுத்த தமிழக பாஜக தலைவர் இவரா? இதற்கு தான் இந்த தாமதமா?

அதே நேரம் தமிழக பாஜக தலைவர் பதவி நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தைப் பயன்படுத்தி மேலும் சிலர் அந்த பதவியை பிடிக்க டெல்லியில் உள்ள தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி முயற்சித்து வருகிறார்கள். இவர்களில் முக்கியமானவர்கள் நயினார் நாகேந்திரன், நரேந்திரன் ஆகியோர் மிக வேகமாக செயல்பட்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரம் டெல்லியிலிருந்து தமிழகத்துக்கு இந்த பதவியை யாருக்கு வழங்க போகிறார்கள் என்று குறிப்பிடும் வகையில் தமிழக பாஜகவினருக்கு நேற்று இன்னொரு சிக்னல் காட்டப்பட்டிருக்கிறது.

சத்குரு ஜக்கி வாசுதேவ் காவேரி கூக்குரல் என்ற பயணத்தை கர்நாடகா முதல் தமிழகம் வரை நடத்துகிறார். நேற்று அவரது பயணம், தமிழகத்தில் தொடங்கியது. இதற்காக தமிழக எல்லையான ஓசூர் அதியமான் கல்லூரியில் பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் சார்பில் அகில இந்திய பொதுச் செயலாளரும் கிருஷ்ணகிரி எம்.பி.யுமான செல்லகுமார் கலந்து கொண்டிருக்கிறார். அதிமுக சார்பில் தம்பிதுரை கலந்து கொண்டார். பாஜக சார்பில் ஒரு பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று ஈஷா சார்பில் பாஜக தலைமையிடமும் கேட்கப்பட்டது.

அடுத்த தமிழக பாஜக தலைவர் இவரா? இதற்கு தான் இந்த தாமதமா?

இந்த நிகழ்ச்சிக்கு யாரை பாஜக மேலிடம் பிரதிநிதியாக அனுப்புமோ என்று எதிர்பார்ப்பு மிகுந்திருந்த நிலையில், தமிழக பாஜக தலைவராகலாம் என்று பரபரப்பாகப் பேசப்பட்டு வருபவர்களில் ஒருவரான தேசிய இளைஞரணித் துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தத்தையே காவேரி கூக்குரல் நிகழ்ச்சிக்கு தமிழக பாஜக பிரதிநிதியாக அனுப்பி வைத்திருக்கிறது பாஜகவின் தேசிய தலைமை. இதுவே அடுத்த தமிழக பாஜக தலைவர் யார் என்பதற்கான ஒரு சிக்னல் தான் என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள்.

அடுத்த தமிழக பாஜக தலைவர் இவரா? இதற்கு தான் இந்த தாமதமா?

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் வருவதற்குள் தமிழக பாஜக தலைவரை நியமித்து தமிழகத்தில் மோடி பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பது அக்கட்சியின் திட்டம் என்கிறார்கள். ஏன் தாமதம் என்று விசாரிக்கையில் ஏ.பி.முருகானந்தம் பெயர் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்ட நிலையில், அவர் தற்போது வகித்து வரும் தேசிய இளைஞரணி துணைத் தலைவர், தேசிய போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆகிய முக்கியமான பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்ற ஆலோசனை டெல்லியில் நடந்து கொண்டிருப்பதாகவும் அதனாலேயே அறிவிப்பதில் இந்த தாமதம் என்று பாஜகவின் ஒரு தரப்பு நிர்வாகிகள் சொல்கிறார்கள். ஆனாலும் இந்தத் தாமதத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி தலைவர் பதவிக்கான ரேஸில் இன்னும் சிலர் கடைசி வரை நம்பிக்கையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

திமுக தலைவர் ஸ்டாலின் பெயரால் பல சங்கடங்களா?

0

திமுக தலைவர் ஸ்டாலின் பெயரால் பல சங்கடங்களா?

ஸ்டாலின் பெயரால் பல சங்கடங்களை அனுபவித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று திமுக மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளரான தில்லை கதிரவன் அவர்களின் இல்லத் திருமண நிகழ்வானது சென்னை அண்ணா நகரிலுள்ள விஜய் ஸ்ரீ மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

இந்த திருமண நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இன்றைய காலகட்டத்தில் தமிழுக்கு சோதனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இனிமேலாவது திமுகவினர் குடும்ப வாரிசுகளுக்கு தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

“அப்படியென்றால் உங்களது பெயர் தமிழ்ப் பெயரா என்று நீங்கள் கேட்கலாம். கலைஞருக்கு கம்யூனிச கொள்கைகள் மீது இருந்த ஈர்ப்பால் எனக்கு கம்யூனிஸ தலைவர் ஸ்டாலின் பெயர் வைக்கப்பட்டது. எனது மூத்த அண்ணன் மு.க.முத்துவுக்கு தனது தந்தை முத்துவேலரின் நினைவாக அந்த பெயரை கலைஞர் சூட்டினார். பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் நினைவாக எனது இரண்டாவது அண்ணனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார். அதுபோல எனது தம்பிக்கு தமிழரசு, தங்கைகளுக்கு தமிழ்ச்செல்வி, கனிமொழி என தமிழ்ப் பெயர்களையே கலைஞர் சூட்டினார். பேரப்பிள்ளைகள் முதற்கொண்டு அனைவருக்கும் தமிழ்ப் பெயர்தான்.

மேலும் ஸ்டாலின் என்ற பெயர் வைத்ததால் நான் பல சங்கடங்களை அனுபவித்துள்ளேன். சென்னையிலுள்ள பள்ளியில் சேர்ப்பதற்காக சென்றபோது என்னுடைய ஸ்டாலின் என்னும் பெயரை மாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் கலைஞரோ, பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர பெயரை மாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார். அதுபோலவே ரஷ்யா சுற்றுப் பயணம் சென்றிருந்தபோதும் ஸ்டாலின் என்ற பெயரால் பல சங்கடங்களை அனுபவித்தேன்” என்றும் இது குறித்து விளக்கினார்.

அடுத்ததாக தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து பேசிய ஸ்டாலின், “முதலீடுகளை கொண்டுவந்து அதன்மூலமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தால் நானே முன்னின்று பாராட்டு விழா நடத்துகிறேன் எனக் கூறியுள்ளேன். ஆனால், ஸ்டாலின் எங்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டாம் என முதல்வர் கூறுகிறார். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். முதலீடுகள் வரவில்லை என அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட இரண்டு முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக 5 லட்சம் கோடி வரை முதலீடுகள் வந்துள்ளன என்றும் இதன்மூலம் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கூறினார்கள். இதன்மூலம் தமிழகத்துக்கு எத்தனை நிறுவனங்கள் வந்திருக்கின்றன? எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன? எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன? இதைத்தான் வெள்ளை அறிக்கையாக வெளியிடச் சொன்னோம். ஆனால், அதைவிட்டு அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை வெள்ளை அறிக்கை வெளியிடச் சொல்கிறார்” என்று கூறினார்.

மேலும், “திமுக ஆட்சியில் நான் துணை முதல்வராக இருந்தபோது வெளிநாடு சென்றிருக்கிறேன். ஆனால், முதலீடு திரட்டுவதற்காக செல்லவில்லை. சில அதிகாரிகளை மட்டுமே அழைத்துக்கொண்டு சென்றேன். அதுபோலவே மெட்ரோ ரயில் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் சென்றோம்” என்றும் அவர் விளக்கம் அளித்தார்.நல்ல வேளையாக இந்த முறை ஜப்பானின் துணை முதல்வர் என்று உளராமல் பேசினாரே என்று கட்சிகாரர்கள் சந்தோஷப்பட்டு கொண்டார்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

துணை முதல்வராகிறாரா அன்புமணி ராமதாஸ்? திமுகவை சமாளிக்க எடப்பாடி பழனிசாமியின் அதிரடி வியூகம்

0

துணை முதல்வராகிறாரா அன்புமணி ராமதாஸ்? திமுகவை சமாளிக்க எடப்பாடி பழனிசாமியின் அதிரடி வியூகம்

அடுத்து நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் தனக்கு போட்டியாகவுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், சொந்த கட்சியிலேயே தன்னை முழுமையாக அதிகாரம் செய்ய விடாமல் தடுக்கும் ஒபிஎஸ் மற்றும் தேசிய கட்சியான பாஜக, அதிமுக கட்சியை கைப்பற்ற நினைக்கும் சசிகலா மற்றும் தினகரன் என அனைவரையும் ஒரேயடியாக ஓரம் கட்டவும் தனக்கான தனித்த அடையாளத்துடனும் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என முடிவெடுத்து அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இதற்காக எடப்பாடி பழனிசாமி போட்டிருக்கும் திட்டங்கள் அரசியல் கட்சிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் முதல்வராக வேண்டுமென்று போட்ட அவரது இந்த திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் இணைந்திருக்கிறார். கடந்த கால அரசியல் வரலாற்றில் தமிழகத்தில் திமுக, அதிமுக தனித்து ஆட்சி செய்யும் என்ற நிலையை மாற்றி மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி என்ற நிலை உருவாக வேண்டும் என்பதை தனது கட்சி அளவில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். அதற்கு தற்போது வரவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தல் ஒரு சரியான சந்தர்ப்பமாக இருக்கும் என்று கணித்திருப்பதாக தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் கூறி வருகிறார்.

தமிழக அரசியலில் சூழ்நிலைக்கேற்றவாறு திமுக,அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்திருந்தாலும் தங்களுடைய கொள்கையிலிருந்து சிறிதும் பின்வாங்காமல் தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த போராட்டங்கள்,திட்டங்கள் என சிறப்பான எதிர்க்கட்சியாகவே பாமக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் “மாற்றம் முன்னேற்றம் அன்புமணி” என்ற பிரச்சாரத்துடன் அன்புமணி ராமதாஸ் அவர்களை தமிழக முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை தனியாக சந்தித்தது.அந்த தேர்தலில் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லையென்றாலும் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுகவின் வெற்றி தோல்விகளை தீர்மானித்து தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்பதை நிரூபித்து காட்டியது.

அடுத்து 2019 ஆம் ஆண்டு சட்டமன்ற இடைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் தனித்து போட்டியிடும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி பாமக அதிமுகவோடு கூட்டணி வைத்த போது எதிர்க்கட்சிகளால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் ஆட்சி தொடர பாமகவின் வாக்கு வங்கி பெரிதும் கைக்கொடுத்துள்ளது. இந்த நிலையில் இதே கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தல் வரை தொடரும் என அறிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் இது போன்றதொரு வெறும் தொகுதிகளுக்கான கூட்டணியை அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அமைப்பது சரியாக இருக்காது என்று கருதுகிறார். அதாவது 2021 சட்டமன்றத் தேர்தலைக் கூட்டணி ஆட்சி என்ற கொள்கை முழக்கத்தோடும் அதற்கு உடன்பட்ட கட்சியோடும் சந்திக்க பாமக கொள்கை அளவில் முடிவு செய்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இதன்படி தற்போதைய எதிர்க்கட்சியான திமுகவுடன் பாமக கூட்டணி என்பது சாத்தியமில்லை. கடந்த காலங்களில் திமுக மத்தியில் கூட்டணி ஆட்சிகளில் இருந்தபோதும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை தொடர்ந்து ஒட்டுமொத்தமாக நிராகரித்தே வந்திருக்கிறது. சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற ஒரு மண விழாவில் பேசிய ஸ்டாலின், ‘திமுக 1971இல் பெற்றதைப் போல 200 இடங்களில் வெற்றிபெறும்’ என்று கூறியிருப்பதன் மூலம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதையெல்லாம் ஸ்டாலின் ஓர் அரசியல் முடிவாகக் கூட கருதவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.தேர்தல் நேரத்தில் அதிமுகவின் முடிவை பொறுத்து திமுகவும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.

அதேநேரம் அதிமுகவில் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் புதிய சக்தியாக உருவெடுக்கவில்லை. தர்ம யுத்தம் என்ற பெயரில் அவருக்கு அந்த வாய்ப்பு காலத்தால் தானாக வழங்கப் பட்டபோதும் அவர் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுடன் இணைந்து விட்டார். எனவே ஜெயலலிதாவுக்குப் பிறகான அதிமுகவில் தலைமை தாங்கும் ஆளுமை என்ற அளவில் பன்னீர்செல்வத்தை விட எடப்பாடி பழனிசாமி தற்போது முன்னிலை வகிக்கிறார். இப்போது தான் வகிக்கும் முதல்வர் பதவி என்பது தனக்கு மக்கள் வழங்கவில்லை என்றும் அது யானை தூக்கிப்போட்ட மாலை என்பது போன்றது என எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால், அதற்காக கிடைத்ததை வைத்து அப்படியே இருந்து விடாமல் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை தனக்கான தேர்தலாக மாற்றி தன் தலைமையால் வெல்லக் கூடிய தேர்தலாக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில் நடைபெறவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்தால் திமுகவிற்கு கடுமையான போட்டியாக இருக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இதன் படி அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கும் பட்சத்தில் பொதுவாக அவர் மீது நம்பிக்கை வைத்துள்ள படித்த இளைஞர்களின் வாக்குகளை பெருமளவு அதிமுக கூட்டணி பெற்று விடும் என்றும் கூறியிருக்கிறார்கள்.அடுத்து திமுக உள்ளிட்ட மாற்று கட்சியிலிருக்கும் வன்னியர்கள் கூட அன்புமணி ராமதாஸை ஆதரிக்க வாய்ப்பிருப்பதாகவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் வடமாவட்டங்களில் பாமகவிற்கு செல்வாக்குள்ள 80 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதில் அன்புமணியின் தம்பிகள் என்ற முப்படை அமைப்பை ஏற்படுத்தி பாமக சுமார் 50 முதல் 60 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுவிற்கு வியூகம் வகுத்து வருகிறார் மருத்துவர் ராமதாஸ்.

வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக அதிமுக கூட்டணி ஒரு மகத்தான வெற்றி பெற வேண்டுமென்றால் கூட்டணி ஆட்சி என்ற கொள்கை முழக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு மிக உபயோகமாக இருக்கும் என்றும் பாமக சார்பாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் வேட்பாளர் அன்புமணி என்ற நிலைக்கு பாமகவும் தயாராகிவிட்டது என்றே தெரிகிறது.

பாமக ஏற்கனவே திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து விட்டது. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி தனித்துப் போட்டியிட்டு விட்டது. ஆனாலும் தங்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரமும் வெற்றியும் கிடைக்கவில்லை என்பதில் மருத்துவர் ராமதாஸுக்குப் பெரிய வருத்தம் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் கூட்டணி ஆட்சி என்ற கொள்கை முழக்கத்தை வைத்துத் தேர்தலைச் சந்திப்பது என்பதும் அதன் மூலம் அன்புமணி ராமதாஸை வலுவான துணை முதல்வர் ஆக்குவது என்பதும் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸின் வியூகமாக இருக்கிறது என்கிறார்கள்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றியை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும், அதிமுகவின் அடுத்த தலைவர் தானே என்பதையும் நிரூபிக்க வேண்டும். ஓபிஎஸ், சசிகலா போன்றவர்களின் செயல்பாடுகளுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும். தேசிய அளவில் பணிந்து போகாமல் இருக்க பாஜகவையும் தவிர்க்க வேண்டும் என்ற அரசியல் சூழலில் கூட்டணி ஆட்சி என்ற அஸ்திரம் எடப்பாடி பழனிசாமிக்கும் தற்போது தேவையான ஒன்றாகவே இருக்கிறது. அதன்படி அதிமுக பாமக கூட்டணி ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த போகிறது என்பதில் சந்தேகமில்லை.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

0

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிடப்படுகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தான் இந்த தர்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படமான தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களை அசர வைத்தது. அந்த போஸ்டரை பார்த்தே கதை இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ என்று பலரும் பேசி கொண்டிருக்கிறார்கள். 

இந்நிலையில் ஓனம் பண்டிகையையொட்டி இன்று மாலை 6 மணிக்கு தர்பார் படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்படும் என்று அப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த நல்ல நாளில் சர்பிரைஸுக்கு தயாராகுங்கள் என்று கூறி தர்பார் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. இந்த அறிவிப்பை பார்த்த ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

போஸ்டர் எப்படி இருக்க வேண்டும்,உடனே 6 மணி வரக் கூடாதா, இதற்காக மாலை வரை காத்திருக்க வேண்டுமா என்றெல்லாம் ரஜினிகாந்த் ரசிகர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. கதை குறித்து அவ்வப்போது ஏதாவது தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் முருகதாஸ் இது பற்றி எதையுமே உறுதி செய்யவில்லை.

நான் பேச மாட்டேன், படம் பேசும் என்பது போல முருகதாஸ் தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார். தர்பார் செகண்ட் லுக்கை லைகா வெளியிடும் முன்பு கருப்பு ஆடு யாராவது ஆன்லைனில் கசியவிட்டுவிடக் கூடாது என்று ரஜினி ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடிக்கும் இந்த தர்பார் பட வேலைகள் துவங்கியதில் இருந்தே இந்த படத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை தொடர்ந்து கசிந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழாவா? ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஸ்டாலின் முடிவு

0

முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழாவா? ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஸ்டாலின் முடிவு

சமீபத்தில் தமிழக முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தை விமர்சனம் செய்யும் வகையில் தமிழகத்துக்கு வந்துள்ள முதலீடுகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவதற்காக 13 நாட்கள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாலை தமிழகம் திரும்பியுள்ளார். இந்த பயணம் தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “வெளிநாட்டுப் பயணத்தின்போது அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து, மொத்தம் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளோம். இதன்மூலம் 35,520க்கும் மேற்பட்ட நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளின் முதலீடுகளைப் பெறப் போகிறோம் என்று சொல்லி வீராப்புடன் சென்று வெறுங்கையுடன் திரும்பியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று விமர்சித்துள்ளார்.

இப்போது போட்டுள்ளதாகக் கூறப்படும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன ஆகுமோ என்றும் தெரியவில்லை எனச் சந்தேகம் எழுப்பியுள்ள ஸ்டாலின், “முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தைரியம் இருந்தால், அதிமுக ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனை கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன; அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு – செயல்படும் தொழில் நிறுவனங்கள் எத்தனை; அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டன என்பதையெல்லாம் விரிவான வெள்ளை அறிக்கையாக உருவாக்கி, இதோ பிடியுங்கள் நீங்கள் கேட்கும் வெள்ளை அறிக்கை என்று வெளியிடத் தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்படி உண்மைகளை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா நடத்தத் தயாராக இருப்பதாகவும், தன்னுடைய சவாலை ஏற்க முதல்வர் தயாரா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “இரண்டு நாட்களில் தமிழக மக்களுக்குப் பதில் வேண்டும்; இல்லாவிட்டால், முதலமைச்சரின் வெளிநாடுகள் பயணம் மர்மங்கள் நிறைந்தது என்று ஊர் முழுவதும் பேசிக்கொள்வது உண்மைதான் என்று உறுதியாகிவிடும்” என்றும் தனது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்டாலின் பொறாமையில் பேசி வருவதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

வரலாற்றில் மறைக்கப்பட்ட மாமன்னனுக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ்

0

வரலாற்றில் மறைக்கப்பட்ட மாமன்னனுக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தும் மருத்துவர் ராமதாஸ்

தமிழக வரலாற்றில் மறைக்கப்பட்ட மாமன்னன் கோப்பெருஞ்சிங்கனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

காடவராயர் குலத்தைச் சேர்ந்த மாமன்னனும், நீர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்தியவருமான கோப்பெருஞ்சிங்கனின் 770-ஆவது பிறந்தநாள், அவரது ஆளுகையின் கீழ் இருந்த பகுதிகளில் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மக்கள் நலனுக்காக மாபெரும் திட்டங்களை செயல்படுத்திய மாமன்னனின் பெருமைகள் வெளி உலகிற்கு கொண்டு வரப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

பல்லவப் பேரரசர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், அவர்களின் வாரிசுகள் காடவராயர்கள், சம்புவராயர்கள் என இரு பிரிவாக பிரிந்து தங்களுக்கென சிற்றரசுகளை ஏற்படுத்தி ஆட்சி செய்யத் தொடங்கினர். சம்புவராயர்கள் திருவண்ணாமலை மாவட்டம் படைவீட்டையும், காடவராயர்கள் விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தையும் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். காடவராயர்கள், வம்புவராயர்கள் ஆகிய இருவருமே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி செய்தனர் என்ற போதிலும், காடவராயர்கள் தங்களின் வலிமையால் ஆட்சியை விரிவுபடுத்தியதுடன், சக சிற்றரசர்களுக்கு காவலாகவும் திகழ்ந்தனர்.

காடவராயர் குலத்தின் முதல் அரசரான மணவாளப் பெருமாள் விழுப்புரம் மாவட்டம் சேந்த மங்கலத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். கலையிலும், இறைவழிபாட்டிலும் இணையற்ற ஈடுபாடு கொண்ட இந்த மன்னர் தான், சேந்தமங்கலத்தில் வாணிலைக் கண்டேசுவரம் என்ற சிவன் கோவிலைக் கட்டினார். இக்கோவில் குளத்தருகில் உள்ள கருங்கல் குதிரை சிலைகளை ஒவ்வொரு இடத்தில் தட்டும் போதும் வெவ்வேறு ஒலி எழும்பும் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரது மகன் கோப்பெருஞ்சிங்கன் வீரத்தின் விளைநிலமாக விளங்கினான். இவரது காலத்தில் காடவராயர்களின் ஆட்சிப் பகுதி வடக்கே ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா நதி, தெற்கே நன்னிலம், கிழக்கே வங்கக்கடல், மேற்கே சேலம், தருமபுரி மாவட்டங்கள் வரை விரிவுபடுத்தப்பட்டது.

காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் சோழ இளவரசியை தில்லையில் வைத்து மணம் புரிந்தார். பின்னர் கி.பி. 1216 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தனது மைத்துனரும், சோழ மன்னருமான மூன்றாம் இராசராச சோழனை கைது செய்து சேந்தமங்கலத்தில் சிறை வைத்தார். கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் அவர் கொடுத்த ஆதரவால் சம்புவராயர்கள், காடவராயர்கள், வானகோவரையர்கள், சேதிராயர்கள், கச்சிராயர்கள், நீலங்கரையர்கள் உள்ளிட்ட சிற்றரசர்கள் வலிமை படைத்தவர்களாக மாறினார்கள்.

சோழர்கள் காலத்தில் எவ்வாறு கல்லணை கட்டப்பட்டு நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்தல், தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஆகியவை கட்டப்பட்டனவோ, அதே போல் காடவராயர்கள் காலத்திலும் இறைவழிபாடு, நீர்மேலாண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கி.பி. 1076 முதல் 1279 வரை 200 ஆண்டுகளுக்கும் மேலாக வட தமிழ்நாட்டை ஆட்சி செய்த காடவராயர்கள், சிதம்பரம் நடராசர் ஆலயத்தின் தெற்கு கோபுரத்தை புதுப்பித்ததுடன், கிழக்கு கோபுரத்தை புதிதாக உருவாக்கினர். தில்லைக் காளி கோயிலை கட்டியதும் இவர்கள் தான்.

கடலூர் மாவட்டத்தில் பெருமாள் ஏரி, புதுச்சேரியில் திருபுவனை ஏரி, ஒழுகரை ஏரி ஆகியவற்றை அமைத்து அந்தப் பகுதிகளில் நீர்மேலாண்மையை மேம்படுத்தியவர்களும் காடவராயர்கள் தான். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகத்தில் அணை கட்டி காவிரி சிறை வைக்கப்பட்ட போது, படையெடுத்துச் சென்று அணையை உடைத்து காவிரியை மீட்டவர்கள் காடவராயர்கள் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. இவர்களைப் போலவே படைவீட்டை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த சம்புவராயர்களும் மக்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார்கள்; மக்களால் போற்றப்பட்டனர்.

இத்தகைய சிறப்பு மிக்க காடவராயர்களும், சம்புவராயர்களும் வரலாற்றில் திட்டமிட்டு மறைக்கப்பட்டனர். நீர் மேலாண்மை, கட்டிடக்கலை, இசை, கோட்டைகள் அமைத்தல், போர்க்கலை உட்பட ஏராளமான திறமைகளின் அடையாளமாக திகழ்ந்த இவர்களின் வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் அந்த கலைகள் குறித்து இன்றைய சமுதாயம் அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, அந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தாங்கள் காடவராயர்களின் ஆளுகையிலும், சம்புவராயர்கள் ஆளுகையிலும் இருந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்ள முடியும். ஆனால், இந்த மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டதன் மூலம் மக்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

காடவராயர்களின் சந்ததியினரான கச்சிராயர்கள் இப்போதும் விருத்தாசலம் அருகில் உள்ள முகாசாபரூரிலும் கடலூரின் அருகில் உள்ள தியாகவல்லியிலும் வாழ்கின்றனர். ஆனால், அவர்களுக்கு எந்த அடையாளமும் இல்லாமல் சாதாரண மக்களாக வாழ்ந்து வருகின்றனர். அண்மைக்காலமாகத் தான் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும், பா.ம.கவினரும் இணைந்து ஆவணி திருவோண நட்சத்திர நாளில் காடவராய மாமன்னன் கோப்பெருஞ்சிங்கனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

கொண்டாடப்பட வேண்டிய ஒரு மன்னனின் வரலாறு மறைக்கப்படுவதற்கு முடிவு கட்டப்பட வேண்டும். கோப்பெருஞ்சிங்கனுக்கு சேந்தமங்கலத்திலும், சம்புவராயர்களுக்கு படைவீட்டிலும் மணி மண்டபம் கட்டப்பட வேண்டும். இவர்களின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதுடன், இவர்களின் ஆட்சி வரலாற்றை பாடநூல்களில் பாடமாக சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

தமிழகம் வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாறுகிறதா? சீமான் எச்சரிக்கை

0

தமிழகம் வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாறுகிறதா? சீமான் எச்சரிக்கை

இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவரும் ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை! திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் பொது விநியோகப் பகிர்வு சீர்குலைந்து தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாவார்கள்! என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

மத்தியில் அரசு கொண்டு வருகிற ‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைத் தமிழக அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் அளிக்கிறது. நாடு முழுமைக்கும் பொது விநியோகத்தை இணைக்கும் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் மிகப்பெரிய சுரண்டலையும், அபகரிப்பையும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பேராபத்து இருக்கிறது.

அகன்ற பாரதத்தை நோக்கமாகக் கொண்ட மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்தழித்து ஒற்றை முகமாக நாட்டை நிலைநிறுத்தத் துடியாய் துடிக்கிறது. அதற்கான முன்நகர்வாகவே, ‘ஒரே மொழி! ஒரே நாடு! ஒரே பண்பாடு! ஒரே தேர்தல்! ஒரே தேர்வு! ஒரே பொதுவிநியோகம்! ஒரே தீர்ப்பாயம்! ஒரே குடும்ப அட்டை’ என யாவற்றையும் ஒற்றைமுகப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறது. இவையாவும் இந்நாட்டின் மேன்மைமிக்க கோட்பாடானக் கூட்டாட்சித் தத்துவத்தைக் கேள்விக்குறியாக்கி நாட்டின் ஒருமைப்பாட்டையும், இந்தியாவின் இறையாண்மையையும் தகர்க்கும் கொடுஞ்செயலாகும்.

இந்தியாவிலேயே பொதுவிநியோகத்திட்டத்தில் முன்மாதிரியாக விளங்கும் மாநிலம் தமிழகமாகும். பொதுவிநியோகப் பகிர்வைச் செயற்படுத்தத் தமிழகம் முழுவதும் இருக்கிற கட்டமைப்பு மற்ற மாநிலங்களில் இல்லை. உணவுப்பாதுகாப்புச் சட்டத்தினை கொண்டுவர முற்பட்டபோது தமிழகம் அதனை எதிர்த்ததற்குக் காரணமும் இதுவேயாகும். பொது விநியோகப் பகிர்வின் மூலம் தமிழகத்தில் ஒரு கோடியே 99 இலட்சத்து 95 ஆயிரத்து 299 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், தற்போது ‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை’ திட்டம் செயற்படுத்தப்பட்டால் அது தமிழகத்தின் பொது விநியோகப்பகிர்வையே முற்றிலும் சீர்குலைத்துவிடும்.

இந்தியப் பெருநிலத்திலேயே தனித்துவம் மிக்கதாக விளங்குவது தமிழ்நாடுதான். சிறப்புகள் பலவாய்ந்த தமிழர்களின் அத்தகையத் தாயகத்தை வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாற்றவே இத்திட்டம் முழுக்க முழுக்கப் பயன்படும். ஏற்கனவே, பல இலட்சக்கணக்கான வடஇந்தியர்கள் தமிழகத்திற்குள் உட்புகுந்து வாக்குரிமையைப் பெற்று தமிழர்களின் அரசியலைப் பங்கிடும் வேளையில், தமிழர்களுக்கான வேலைவாய்ப்பைத் தட்டிப்பறித்துத் தமிழர்களின் பொருளியல் வாழ்வுக்கு வேட்டுவைத்துக் கொண்டிருக்கிற சூழலில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழர் தாய்நிலம் வடஇந்தியர்களின் படையெடுப்பால் பெரிய அபாயத்தைச் சந்திக்கும்; அயலவர்களின் ஆக்கிரமிப்பால் திக்கித் திணறும். சொந்த நிலத்திலேயே தமிழர்கள் அகதிகள் போல அல்லாடுகிற நிலை உருவாகும்.

கடுமையான நிதித்தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழகம் 5,000 கோடி நிதியினை மானியமாக அளித்தே பொது விநியோகப்பகிர்வைச் செயற்படுத்தி வருகிறது. அத்தகைய நிலையில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தமிழகத்தின் பொது விநியோகப்பகிர்வைப் பங்கிட்டுப் பகிர்ந்துக் கொள்ளலாம் என்பது முழுக்க முழுக்கத் தமிழர்களின் உரிமைப்பறிப்புக்கும், உணவுச்சுரண்டலுக்குமே வழிவகுக்கும். தமிழகத்தின் பொருளாதாரத்தை வரியாக அள்ளி எடுத்துச் செல்கிற மத்திய அரசு, அதனைக் கிள்ளித் தரக்கூட முனைவதில்லை. பேரிடர் காலங்களில்கூட தமிழகம் கேட்கிற நிதியைத் தராது வஞ்சித்தே வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் உணவுப்பகிர்வையும் வடநாட்டைச் சேர்ந்தவர்கள் அபகரித்துக் கொள்ள வழிவகை செய்வது மிகப்பெரிய மோசடித்தனம்.

மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கோடு செயற்படும் எதேச்சதிகார பாஜக அரசின் பாசிச நடவடிக்கையே இது. இதற்குத் துணைபோகிற அதிமுக அரசின் செயலானது வாக்குச்செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்தத் தமிழர்களுக்குச் செய்யப்படுகிற பச்சைத்துரோகம். ஆகவே, வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது’ எனும் முழக்கத்தை முன்வைத்து தன்னாட்சி உரிமைகேட்ட பேரறிஞர் அண்ணாவின் பேரில் இயங்கும் அதிமுக இத்திட்டத்தில் இணைந்தால் வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

இத்திட்டத்தில் இருக்கிற பேராபத்தினை உணர்ந்து, தமிழர்களை வடஇந்தியர்கள் சுரண்டுவதற்கும், தமிழர்களைப் பசி பட்டினியில் தள்ளுவதற்கும் வழிவகை செய்கிற ‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை!’ திட்டத்தை வன்மையாக எதிர்க்க வேண்டும் எனவும், எதன்பொருட்டும் அத்திட்டத்தில் இணையக்கூடாது எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்