தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!!

தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை!!

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை. ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சுமார் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அதில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக வந்த ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தைச் சேர்ந்த நத்தம் கிராமம் பகுதியில் உள்ள தெளபீக் ராஜா என்பவர். இன்று … Read more

ஈஸ்வரப்பா போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து சிவமோகா நகரில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!!

ஈஸ்வரப்பா போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து சிவமோகா நகரில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!!

ஈஸ்வரப்பா போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து சிவமோகா நகரில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!! கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான 189 நபர்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று பாஜக வெளியிட்டது. இதில் பல மூத்த தலைவர்களுக்கு இடம் அளிக்காமல் 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது மேலும் பல மூத்த தலைவர்களுக்கு பாஜக கட்சி மேலிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களை தேர்தல் அரசியலிலிருந்து விலக வற்புறுத்தி வருகின்றனர். இந்தக் … Read more

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பழைய குற்றவாளிகள் உள்பட 19 பேர் கைது!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பழைய குற்றவாளிகள் உள்பட 19 பேர் கைது!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பழைய குற்றவாளிகள் உள்பட 19 பேர் கைது!! காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடி தடி மற்றும் பொது இடங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டவர்கள்,பெண்களை கிண்டல் செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட 19 நபர்களை ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்படி காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய பகுதிகளில் பல்வேறு குற்ற … Read more

மது விற்பனை வருவாய் முழுமையாக அரசு கஜானாவிற்கு வந்தால் நிதி பற்றாக்குறை மிகவும் குறையும்-அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன்!!

மது விற்பனை வருவாய் முழுமையாக அரசு கஜானாவிற்கு வந்தால் நிதி பற்றாக்குறை மிகவும் குறையும்-அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன்!!

மது விற்பனை வருவாய் முழுமையாக அரசு கஜானாவிற்கு வந்தால் நிதி பற்றாக்குறை மிகவும் குறையும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளதாகவும், அனைத்து துறைகளும் டாஸ்மாக் வருவாயை மட்டுமே நம்பி இல்லாமல் மாற்று வருவாயை அரசு முயற்சிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், விலை ஏற்றத்தினால் வருவாய் உயர்ந்திருப்பதாக … Read more

தேர்தல் வியூகத்தை தொடங்கியது திமுக!!

தேர்தல் வியூகத்தை தொடங்கியது திமுக!!

தேர்தல் வியூகத்தை தொடங்கியது திமுக!! வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்வு பணிகளை தற்போது தொடங்கியுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி … Read more

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கிராமின்  (PMAY-G) திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு!! வழக்கு குறித்து புதிய தகவல்!!

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கிராமின்  (PMAY-G) திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு!! வழக்கு குறித்து புதிய தகவல்!!

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கிராமின்  (PMAY-G) திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு!! வழக்கு குறித்து புதிய தகவல்!! பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் முறைகேடு செய்த லால்குடி பஞ்சாயத்து அலுவலர்கள் மீது திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் குற்றவியல் நடவடிக்கையை எடுக்க வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த உதயகுமார் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “திருச்சி, லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் கிராமத்தில் பிரதான் மந்திரி அவாஸ் … Read more

திமுக ஆட்சிக்கு வந்து 96 டாஸ்மாக் கடைகள் மூடல் – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!!

திமுக ஆட்சிக்கு வந்து 96 டாஸ்மாக் கடைகள் மூடல் - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!!

திமுக ஆட்சிக்கு வந்து 96 டாஸ்மாக் கடைகள் மூடல் – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!! சட்டப்பேரவையில் மின் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 96 டாஸ்மாக் மதுபான கடைகள் துறை சார்பாக மூடப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், கோவில்களில் அருகில் இருக்கக்கூடிய கடைகள் குறித்து மக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். இரண்டு ஆண்டுகளில் 1,40,649 கள்ளச் சாராய வழக்குகள் பதிவு … Read more

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து ஏசி தலையில் விழுந்து ஊழியர் பலி!! 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து ஏசி தலையில் விழுந்து ஊழியர் பலி!! 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து ஏசி தலையில் விழுந்து ஊழியர் பலி!! மூன்றாவது மாடியில் புது அறை புணரமைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஊழியர்களின் கவனக்குறைவால் ஏசி கழண்டு விழுந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(62). இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னிசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் இன்று மதியம் 2 … Read more

மாணவியரை தவறாக படம் பிடித்த ஆசிரியர் கைது!! பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!!

மாணவியரை தவறாக படம் பிடித்த ஆசிரியர் கைது!! பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!!

மாணவியரை தவறாக படம் பிடித்த ஆசிரியர் கைது!! பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!! பள்ளி மாணவிகளை தவறாக செல்போனில் படம் பிடித்த புகார் தொடர்பாக கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவரை பரமத்தி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் அருகே கீரம்பூரில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளியில் பன்னீர்செல்வம் என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது செல்போனில் பள்ளி மாணவிகளை தவறாக படம் எடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக … Read more