நித்திய கல்யாணி இலையை இப்படி பயன்படுத்தினால் அனைத்து நரைமுடிகளும் 1 மணி நேரத்தில் கருமையாக மாறிவிடும்!!

Photo of author

By Divya

நித்திய கல்யாணி இலையை இப்படி பயன்படுத்தினால் அனைத்து நரைமுடிகளும் 1 மணி நேரத்தில் கருமையாக மாறிவிடும்!!

Divya

நித்திய கல்யாணி இலையை இப்படி பயன்படுத்தினால் அனைத்து நரைமுடிகளும் 1 மணி நேரத்தில் கருமையாக மாறிவிடும்!!

இன்றைய சூழலில் இளநரை வருவது என்பது எளிதான பாதிப்புகளில் ஒன்றாகி விட்டது. இதற்கு வாழ்க்கை முறையும், உணவு முறை மாற்றமுமே முக்கிய காரணம் ஆகும்.

இளநரை உருவாகக் காரணம்:-

*ஊட்டச்சத்து இல்ல உணவு

*இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல்

*தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தல்

*முறையற்ற தூக்கம்

*மன அழுத்தம்

தேவையான பொருட்கள்:-

*நித்திய கல்யாணி இலை – 1 கைப்பிடி அளவு

*கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி

*நெல்லைக்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

*விளக்கெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 கைப்பிடி அளவு நித்திய கல்யாணி சேர்த்து கொள்ளவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து வைத்துள்ள நித்தியகல்யாணி இலைகளை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பவுலில் வடிகட்டி கொள்ளவும். அடுத்து ஒரு கற்றாழை மடலை எடுத்து தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக எடுத்து ஒரு பவுலில் சேர்த்து கொள்ளவும். பின்னர் இந்த ஜெல்லை நன்கு கலந்து அரைத்து வைத்துள்ள நித்தியகல்யாணி சாற்றில் சேர்த்து கொள்ளவும்.

பின்னர் அதில் 2 தேக்கரண்டி அளவு நெல்லிக்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து விடவும். தொடர்ந்து 2 தேக்கரண்டி அளவு விளக்கெண்ணெய் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு இதை தலைமுடிகளின் வேர்காள் பகுதியில் படும் படி தடவி 1 மணி நேரம் வரை ஊற விடவும். 1 மணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசவும்.

இவ்வாறு வாரத்தில் 3 முறை என்று தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் இளநரை அனைத்தும் கருமையாக மாறிவிடும்.