இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
210
#image_title

இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் குளிர்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கி விட்டது. பங்குனி மாதமே இன்னும் ஆரம்பமாகவில்லை. அதற்குள் வெயிலின் தாக்கம் கடுமையான அதிகரித்து உள்ளது. இதனால் மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மழைப்பொழிவு ஏற்பட்டாலும் பொங்கலுக்கு பின்னர் சொல்லும் படியாக மழை அளவு இல்லை. ஆறு, ஏரிகள் அனைத்தும் வெயிலின் தாக்கத்தால் வறண்டு காணப்படுகிறது.

ஒருபுறம் வெயிலில் வாட்டி வைத்தது வரும் நிலையில் மறுபுறம் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. இன்று ஒருநாள் மட்டுமே மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இதன் பின்னர் தொடர்ந்து 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவித்து இருக்கிறது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.