இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை ஊட்டி வருகை 

0
357
#image_title

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை ஊட்டி வருகை

பிரதமர் மோடி 8ந் தேதி சனிக்கிழமை பகல் 1.30 மணிக்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வேகம்பாட்டு விமான நிலையத்தில் இருந்து, இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு பிற்பகல் 2:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.

பிற்பகல் 2:50 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு பகல் 2:55 மணிக்கு சென்னை விமான நிலைய புதிய முனையத்திற்கு வருகிறார். மாலை 3 மணியில் இருந்து 3:15 மணி வரை புதிய முனையத்தின் திறப்பு விழாவை நடத்துகிறார்.

அதன் பின்பு மாலை 3:20 மணிக்கு காரில் புறப்பட்டு மாலை 3:25 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.

சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து மாலை 3:30 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 3 50 மணிக்கு சென்னை ஐஎன்எஸ் அடையார் சென்றடைகிறார்.

மாலை 3 55 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் செல்கிறார். அங்கு மாலை 4 மணியில் இருந்து 4:20 மணி வரை சென்னை- கோவை இடையே அதிவிரைவு வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பின்னர் மாலை 4:25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு மாலை 4:40 மணிக்கு மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் வருகிறார். அங்கு மாலை 4:45 மணியில் இருந்து 5:45 மணி வரை ராமகிருஷ்ணா மடத்தின் 125 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார்.

அதன்பின் ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து காரில் புறப்படும் பிரதமர் மாலை 5:55 மணிக்கு ஐ என் எஸ் அடையாறு வருகிறார். அங்கிருந்து மாலை 6 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மாலை 6:20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.

அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமர் மாலை 6:30 மணிக்கு பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் கிரவுண்டுக்கு வருகிறார். அங்கு மாலை 6:30 மணியில் இருந்து இரவு 7:30 மணி வரை நடக்கும் விழாவில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், நிறைவடைந்த திட்டம் தொடங்கி வைத்தல் போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

அதன்பின்பு இரவு 7:35 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு 7:40 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். இரவு 7:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் மைசூர் புறப்பட்டு செல்கிறார். இரவு 8:40 மணிக்கு மைசூர் விமான நிலையம் சென்றடைகிறார்.

9ந் தேதி ஞாயிறு காலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு பிரதமர் மோடி வருகிறார். அதன் பின்பு காலை 9:45 மணிக்கு தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி காலை 10:20 மணிக்கு கர்நாடக மாநிலம் மைசூர் யுனிவர்சிட்டி ஹெலிபேட் தளத்தில் சென்று அடைகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

author avatar
Savitha