சிறை கைதிகளுக்கு சிக்கன் முட்டை! பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி! தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி?

0
100
#image_title

சிறை கைதிகளுக்கு சிக்கன் முட்டை! பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி! தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி?

சிறைக் கைதிகளுக்கு சிக்கன், முட்டை போடும் தமிழக அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் உப்புமா, கிச்சடி போன்ற உணவுகளை போடுவது ஏன் என்று தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி எப்பொழுது வீட்டுக்கு செல்லும் என்று மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர். எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வர் ஆனால்தான் தமிழக மக்களுக்கு உண்மையான விடியல் கிடைக்கும். மத்தியில் இருக்கும் கட்சியின் ஆட்சிக்கு பல்லக்கு தூக்குவது திமுக தான். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாஜக கட்சிக்கு பல்லக்கு தூக்கி அமைச்சரவையில் இடம் பிடித்தது.

 

அடுத்து வந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு பல்லக்கு தூக்கி முக்கிய துறைகளில் மந்திரி பதவி பெற்றது. அந்த நேரத்தில்தான் 2ஜி மூலம் திமுக கட்சி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் செய்தது. பாஜக கட்சிக்கு தற்போது திமுக கட்சி அனைத்து கட்சிகளையும் எதிராக திரட்டி வருகிறது. இதனால் முக ஸ்டாலின் அவர்கள் தான் பிரதமர் என்று திமுக கட்சியினர் கூறி வருகின்றனர்.

 

ஏற்கனவே தமிழக மக்கள் திமுக கட்சியிடம் சிக்கி இருக்கும் நிலையில் இந்திய மக்களும் திமுக கட்சியிடம் சிக்க வேண்டுமா? அதிமுக கட்சிக்கு கூட்டணி என்பது துண்டு மாதிரி. ஒரு தேர்தலில் வாக்குகள் சிதறக்கூடாது என்றுதான் கூட்டணி வைக்கிறார்கள். திமுக கட்சி கடந்த தேர்தலில் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தான் முதலமைச்சராக வந்திருப்பார்.

 

போக்குவரத்து துறையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு பஸ்கள் டிப்போவில் வெட்டியாக நிற்கின்றது. அதே போல ரேஷன் கடைகளிலும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒரே ஊழியர் மூன்று கடைகளில் பணியாற்றுகின்றார்.

 

நடிகர் விஜய் தமிழகத்தில் இருக்கும்  ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஏழை மக்களுக்கு அளித்தது வரவேற்கத்தக்கது. இவரை போலவே மற்ற நடிகர்களும் உதவி செய்ய வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் அதிக சம்பளம் வாங்கும் நிலையில் அவரும் மக்களுக்கு உதவி செய்யலாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. தமிழகம் போதை மாநிலமாக மாறி வருகின்றது. டாஸ்மாக் கடைகளில் கள்ளச் சாராயம் விற்பது கொடுமையானது.

 

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதாக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் சொல்கிறார். திமுக அரசு பள்ளி குழந்தைகளுக்கு சத்து இல்லாத உப்புமா, ரவை போன்ற உணவுகளை தருகிறார்கள். தினமும் எவ்வாறு பள்ளிக் குழந்தைகள் இந்த சத்து இல்லாத உணவை உண்பார்கள். ஆனால் சிறை கைதிகளுக்கு மட்டும் தினமும் முட்டை, சிக்கன் என்று விதவிதமான உணவுகளை வழங்குகிறார்கள். இது தான் திராவிட மாடல் ஆட்சியா? தவறு செய்பவர்கள் தான் திமுக கட்சியின் ஆட்சியில் நன்றாக வாழ்கிறார்கள். கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களுக்கே நிவாரணம் தந்த அரசு அல்லவா இது? என்று கூறியுள்ளார்.