10 வயது சிறுமியை கற்பழித்த காம கொடூரன்! மாடியில் இருந்து தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம்!

Photo of author

By Jayachandiran

10 வயது சிறுமியை கற்பழித்த காம கொடூரன்! மாடியில் இருந்து தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம்!

Jayachandiran

Updated on:

10 வயது சிறுமியை கற்பழித்த காம கொடூரன்! மாடியில் இருந்து தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம்!

காம இச்சைக்காக பத்து வயது சிறுமியை கற்பழித்து மூன்றாவது மாடியில் இருந்து வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.

சென்னை மதுரவாயல் அருகே உள்ள எம்எம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது பெண் குழந்தை நேற்றிரவு வீட்டுக்கு வெளியே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் நீண்ட நேரமாகியும் குழந்தையை காணாமல் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், குழந்தை காணாமல் போன சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து குழந்தை அவரது வீட்டின் பின்புறம் தூக்கி வீசப்பட்ட நிலையில் பரிதாபமாக இறந்து கிடந்தார். குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனை காரணமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் பாலியல் வல்லுறவு நடந்ததை உறுதி செய்தனர். பின்னர் கற்பழித்து வீசிய நபரை தேடியபோது சுரேஷ் என்ற இளைஞர் சிக்கினார். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சிறுமியை 3 வது மாடிக்கு கொண்டு சென்று கொடூரமாக கற்பழித்து அங்கிருந்து தூக்கி வீசப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.