முகம் தங்கம் போல் ஜொலிக்க “காபி தூள் + தக்காளி” போதும்!

0
87
#image_title

முகம் தங்கம் போல் ஜொலிக்க “காபி தூள் + தக்காளி” போதும்!

முகத்திற்கு பொலிவு கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியக் குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றி வரவும் .

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி
2)காபி தூள்
2)முட்டை

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி காபி தூள், 2 தேக்கரண்டி தக்காளி சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.

அதன் பின்னர் 1 ஸ்பூன் அளவு முட்டையின் வெள்ளை கரு சேர்த்து நன்கு கலக்கி பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

இந்த பேஸ்டை முகத்திற்கு அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி முகம் தங்கம் போல் ஜொலிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தேன்
2)அரிசி கழுவிய தண்ணீர்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் அரிசி கழுவிய தண்ணீரில் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தை கழுவவும். இவ்வாறு காலை நேரத்தில் செய்து வந்தால் முகத்தில் உள்ள டெட் செல்கள் நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)சந்தனம்
2)தேன்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி சந்தனம் மற்றும் 2 தேக்கரண்டி தேன் கலந்து நன்கு குழைத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவி வந்தால் முகம் இளமை தோற்றத்தை பெறும்.