கல்லூரி காவலாளி போதை கும்பலால் அடித்துக் கொலை!! நடந்தது என்ன?

0
143
College security guard beaten to death by drug gang!! what happened?
College security guard beaten to death by drug gang!! what happened?

கல்லூரி காவலாளி போதை கும்பலால் அடித்துக் கொலை!! நடந்தது என்ன?

திருத்தணியை அடுத்த பொதட்டூர் பேட்டையில் பெண்களுக்கென தனியார் விடுதி ஒன்று உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி இவருடைய வயது 55 இவர் அங்கு காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வழக்கம் போல் தனது பணிகளை செய்து கொண்டிருந்தார்.

அப்போது சில வாலிபர்கள் கல்லூரி வளாகத்தை நோட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் இருக்கிறார்கள் என சுப்பிரமணி கவனித்தார். இங்கே வரக்கூடாது என கஞ்சா கும்பலை கண்டித்தார். வாய் தகராறு முற்றியது இருவருக்கும் இடையே கை தகராறு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த போதை கும்பல் சுப்பிரமணியை சரமாரியாக தாக்கினர். இதனால் பலத்த காயமடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் இழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போதை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி சென்றனர்.

அவ்வழியாக செல்லும் சில நபர்கள் காவலாளியான சுப்பிரமணி உயிரிழந்ததைக் கண்டு பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் காவல்துறையினர் விரைந்து வந்து சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்தவர்கள் யார்? எப்படி கொலை செய்தார்கள் என்றும்,கொலை செய்தவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கல்லூரி காவலாளியை போதை  கும்பல் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

author avatar
Parthipan K