சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!!

0
52
#image_title

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!!

ஊழல் வழக்கில் கைதாகி ராஜமுந்திரி சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை விடுவிக்கக் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியை தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றார். சந்திரபாபு நாயுடு அவர்களை கைது செய்யப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஆந்திர மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியில் சேருமாறு தெலுங்கு தேசம் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மேலும் சந்திரபாபு நாயுடு அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சிந்தா மோகன் அவர்கள் “ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மிகவும் நல்ல மனிதர் ஆவார். சகிப்புத் தன்மைக்கு அப்பால் இருக்கும் முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு அவர்களை அடிக்கடி தொந்தரவு செய்யும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் செயல் அநியாயம் ஆகும்.

சந்திரபாபு நாயுடு அவர்களை உடனடியாக ஜெயில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும். நீதிமன்றங்களில் அரசியல் கட்சிகளின் தலையீடு ரெம்ப அதிகமாகவே இருக்கின்றது.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களின் தெலுங்கு தேசம் கட்சியும் நடிகர் பவன் கல்யாண் அவர்களின் ஜனசேனா கட்சியும் எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும். இந்த இரண்டு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் சேர்ந்தால் தான் அரசியல் உறவுக்கு பலன் இருக்கும்.

தற்சமயம் ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 10 முதல் 15 சதவீதம் வரை வாக்கு வங்கி அதிகரித்து இருக்கின்றது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 75 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். ஓபிசி பிரிவினருக்கு உடனடியாக அரசியல் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.