இந்திய வீராங்கனைக்கு கொரோனா தொற்று

0
58

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இந்த நிலையில் உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சரிதா தேவி (வயது 38) மற்றும் அவரது கணவர் தோய்பா சிங் ஆகியோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. மணிப்பூரை சேர்ந்த சரிதா தேவியும் அவரது கணவரும் சிகிச்சைக்காக இம்பாலில் உள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

author avatar
Parthipan K