ஒன்பது லட்சத்தை தாண்டிய கொரோனா பலி

0
180
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் பெரிய துன்பத்திற்கு ஆளாக்கி வருகிறது. மேலும் இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக விஞ்ஞானிகள் அனைவரும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது.
குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,172 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 83 லட்சத்து 14 ஆயிரத்து 732 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 2 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 13 ஆயிரத்து 128 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous articleஇரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனரா
Next articleதீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கொரோனா தடுப்பூசி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here