கூடுதல் விலைக்கு விற்கப்படும் ஆவின் பால்!! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

0
39
Cow's milk sold at extra cost!! Minister's announcement!!
Cow's milk sold at extra cost!! Minister's announcement!!

கூடுதல் விலைக்கு விற்கப்படும் ஆவின் பால்!! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பால் ஆகும். பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலையே அதிய அளவு பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனம் தற்பொழுது தினசரி நாள் ஒன்றிற்கு மற்றும் சுமார் 30 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது.

மேலும் இந்த பால் விற்பனையை அதிகபடுத்தும் விதமாக ஆவின் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பால் பச்சை ,நீளம் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட கவர்களில் பேக் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இவ்வாறு விற்பனை தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசானது சமீபத்தில் நைஸ் என்ற பெயரில் நீல நிறம் பாக்கெட்டை விற்பனை செய்து வந்தது.

அவ்வாறு புதிதாக விற்பனை செய்யப்பட்ட நீல நிற  பாக்கெட்டில் உள்ள பாலில் பொதுமக்கள் நலன் கருதி கொழுப்புகள் மற்றும் இதர சத்துகள் அடங்கி இருப்பதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு விற்கப்படும் பால் பாக்கெட்களை டீலர்கள் கொள்முதல் செய்வதால் அதிக விலையில்  பால் பாக்கெட் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது.

இந்த புகாரை ஒட்டி பேசிய அமைச்சர் , எங்கு கூடுதல் விலைக்கு பால் பாக்கெட் விற்கப்பட்டாலும் புகார் தெரிவிக்கலாம் என்றார்.மேலும் அதிக விலையில் பால் விற்க படுபவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K