சர்க்கரை நோயா? கவலை வேண்டாம்… வாரத்திற்கு 3 முறை இந்த ஜூஸ் குடித்தாலே போதும்!

0
82
சர்க்கரை நோயா? கவலை வேண்டாம்… வாரத்திற்கு 3 முறை இந்த ஜூஸ் குடித்தாலே போதும்!

இன்றைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோய் உலகினை உலுக்கி வருகிறது. சர்க்கரை நோய் ஒருவருக்கு எப்படி ஏற்படுகிறது என்றால், ஒருவருடைய உடலில் தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ அல்லது இன்சுலினை முறையாக செயல்படுத்த முடியவில்லை என்றாலே சர்க்கரை வியாதி வரும். தற்போது, இளம் வயதினருக்கு கூட சர்க்கரை நோய் வருகிறது.

நீரழிவு நோய் 1ம் பிரிவை கொண்டவர்களுக்கு அவர்கள் உடலில் உள்ள கணையத்தின் நல்ல செல்களை அழித்துவிடும். கணையம் தான் ஒரு மனித உடலுக்கு இன்சுலினை தருகிறது. அந்த கணையமே அழிந்து விட்டால் நம் உடலை பல நோய்கள் தாக்கிவிடும்.

அதேபோல் 90 முதல் 95 சதவீதம் வரை  நீரழிவு நோய் பிரிவு-2 வை கொண்ட சர்க்கரை நோயாளிகள் அவர்கள் உடலில் செல்களில் உள்ள இன்சுலின் முறையாக செயல்படாமல் இருக்கும். அவர்கள் முறையான உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டால் நீரிழிவு நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

கவலை வேண்டாம். விலை மலிவாக கிடைக்கும் பாகற்காய் ஜூஸ் வாரத்திற்கு இரண்டு முறை குடித்து வந்தால் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

பாகற்காயில் வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா, கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், அதில்,  ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்திருக்கிறது.

இப்படி மருத்துவ குணம் கொண்ட பாகற்காய் ஜூஸை குடித்தால் என்னென்ன நோய்கள் சரியாகும் என்று பார்ப்போம் –

முதலில் பாகற்காய் ஜுஸ் எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 1
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
தேன் – 2 டீஸ்பூன்
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
ஐஸ் கட்டிகள் – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் பாகற்காயை நன்றாக கழுவிக்கொண்டு, தோலையும், விதையையும் நீக்கிவிட வேண்டும்.

இதன் பிறகு, மிக்ஸியில் பாகற்காய், தேன், எலுமிச்சைச்சாறு, தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள் ஐஸ் கட்டிகளை சேர்த்தால் பாகற்காய் ஜூஸ் ரெடி.

இந்த பாகற்காய் ஜூஸை குடித்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம் –

பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், சர்க்கரைநோயிலிருந்து விடுபட்டு விடலாம். மேலும், டைப் 2 நீரிழிவு நோயை (type 2 diabetes) எதிர்கொள்ள சிறந்த மருந்தாக இருக்கும். இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், நோய்த்தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். நமக்கு உடலின் நோயெதிர்ப்புச் சக்தியும் கிடைக்கும்.

பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், நம் உடலில் உள்ள ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சினை குணமாகும்.

பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகள் குணமாகும். கல்லீரல் பிரச்னைகள் பறந்து போகும்.

author avatar
Gayathri