பித்தளை பாத்திரங்களை 1 நிமிடத்தில் பளிச்சிட வைக்கும் இந்த ஒரு பவுடர் தெரியுமா?

0
116
#image_title

பித்தளை பாத்திரங்களை 1 நிமிடத்தில் பளிச்சிட வைக்கும் இந்த ஒரு பவுடர் தெரியுமா?

பித்தளை, செம்பு பாத்திரங்கள் பூஜை அறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி இந்த பொருட்களை பயன்படுத்துவதால் அவை பழைய, மங்கிய நிறத்திற்கு மாறிவிடுகிறது.
இவ்வாறு டல் அடிக்கும் பித்தளை பொருட்களை நிமிடத்தில் புதிது போன்று பளிச்சிட செய்யும் ட்ரிக் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவைப்படும் பொருட்கள்…

*பாத்திரம் துலக்கும் பவுடர்
*பேக்கிங் சோடா
*எலுமிச்சம் பழம்

செய்முறை…

ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் பாத்திரம் துலக்கும் பவுடர் 1 பாக்கெட் அளவு கொட்டிக் கொள்ளவும். அடுத்து அதில் 1/4 கப் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து விடவும்.

அடுத்து அதில் 2 எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து கலந்து விடவும். பிறகு சிறிதளவு தண்ணீர் தெளித்து கலந்து வெயிலில் காயவைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும். இந்த பவுடர் பழைய பித்தளை பாத்திரங்களை சில நிமிடத்தில் பளிச்சிடச் செய்யும்.

தேவைப்படும் பொருட்கள்…

*புளி
*தண்ணீர்

ஒரு கிண்ணத்தில் எலுமிச்சம் பழ அளவு புளியை போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும். பின்னர் புளிக் கரைசலை ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டி சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும். இந்த தண்ணீரில் செம்பு, பித்தளை பூஜை பொருட்களை போட்டு 10 நிமிடத்திற்கு ஊற விடவும். இவ்வாறு செய்தால் பூஜை பொருட்கள் புதிது போன்று பளிச்சிடும்.