அதிமுக பொதுச்செயலாளர் மீது வழக்குப்பதிவு! சேலம் போலீசார் ஐகோர்ட்டில் அறிவிப்பு

Case against EPS, information in Police High Court

அதிமுக பொதுச்செயலாளர் மீது வழக்குப்பதிவு! சேலம் போலீசார் ஐகோர்ட்டில் அறிவிப்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்புமனு மற்றும் பிரமாணப்பத்திரத்தில் சொத்து விவரம் போன்ற பல்வேறு தகவல்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று தேனீ மாவட்டத்தை சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய சேலம் நீதிமன்றம் இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு … Read more

மதுரை சித்திரை திருவிழாவில் பிரசாதம் வழங்குவோர்க்கு கட்டுப்பாடுகள்!! மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்கு தடை கோரி வழக்கு!

மதுரை சித்திரை திருவிழாவில் பிரசாதம் வழங்குவோர்க்கு கட்டுப்பாடுகள்!! மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்கு தடை கோரி வழக்கு!

மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டுமென்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு. பிற மத விழாக்களின் போது உணவு பரிமாற்றத்தின் இதே போல நிபந்தனை விதிக்கப்பட்டதா? – நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். போதுமான கால அவகாசம் வழங்காமல் இதுபோல நிர்பந்திக்க இயலாது. ஆகவே இந்த ஆண்டு இந்த நிபந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டாம். உயர் நீதிமன்ற மதுரை … Read more

நாகை கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளரை கைது செய்யாததை கண்டித்து – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

நாகை கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளரை கைது செய்யாததை கண்டித்து - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

நாகை கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளரை கைது செய்யாததை கண்டித்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ரேஷன் கடை ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது. பட்டியலின பணியாளர்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் நாகப்பட்டினம் மண்டல இணை பதிவாளர் அருளரசனை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் நாகையில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே இந்த விவகாரம் குறித்து மாவட்ட … Read more

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!!

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!!

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!! குப்பை கிடங்கு சீரமைப்பு பகுதிகளில் தென்னை மரக்கன்றுகளை நட்டும், கருப்பு கொடி ஏற்றிய மூன்றாவது நாளாக கிராம மக்கள் தொடர்பு போராட்டம். திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும் நகரின் மையப் பகுதியில் உள்ளதாலும் இந்த குப்பைக் கிடங்கை இடம் … Read more

சொகுசு கார் பரிசு விழுத்துள்ளதாக கூறி 12 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்ட நபர் சைபர் கிரைமில் புகார்!

சொகுசு கார் பரிசு விழுத்துள்ளதாக கூறி 12 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்ட நபர் சைபர் கிரைமில் புகார்!

சொகுசு கார் பரிசு விழுத்துள்ளதாக கூறி 12 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்ட நபர் சைபர் கிரைமில் புகார். கோவை NH ரோட்டை சேர்ந்தவர் அப்துல்சமது(62). இவர் தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் ஆன்லைன் மூலமாக வீட்டு உபயோக பொருள் வாங்கியுள்ளார். சிறிது நாட்களுக்கு பின்னர் அந்த நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அப்துல்சமதை ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பேசிய அந்த நபர் நீங்கள் வாங்கிய பொருட்களுக்காக … Read more

கோவை மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!  

கோவை மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!  

கோவை மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! கோவை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பையும் வேண்டுகோளையும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்து வருகின்றது. இதைத் தடுக்க காவல் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேற்று முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். கோவை மாவட்ட காவல் … Read more

மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கிடையே பூதாகர சண்டை!! கமிஷன் பிரிப்பு பிரச்சினை மூலம் வெளியே வந்த வண்டவாலங்கள்!!

மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கிடையே பூதாகர சண்டை!! கமிஷன் பிரிப்பு பிரச்சினை மூலம் வெளியே வந்த வண்டவாலங்கள்!!

காண்ட்ராக்ட் கமிஷன் பங்கு பிரிப்பதில் எம்எல்ஏ மேயர் கவுன்சிலர்கள் மோதலால், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காதே நெல்லை மாநகராட்சியை கலைத்திடு என நெல்லை மாநகர் பகுதி முழுவதும் மாவட்ட அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு. நெல்லை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு மற்றும் மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக கவுன்சிலர்களில் ஒரு பிரிவினர் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சரை சந்தித்து மாநகராட்சி மேயர் … Read more

எலி கடித்த தர்பூசணியில் குளு குளு ஜூஸ்!! உணவு பாதுகாப்பு ஆணையரின் அதிரடி நடவடிக்கை!!

எலி கடித்த தர்பூசணியில் குளு குளு ஜூஸ்!! உணவு பாதுகாப்பு ஆணையரின் அதிரடி நடவடிக்கை!!

எலி கடித்த தர்பூசணியில் குளு குளு ஜூஸ்!! உணவு பாதுகாப்பு ஆணையரின் அதிரடி நடவடிக்கை!! சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் பகுதியில் வரிசையாக தர்பூசணி கடைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் குறிப்பாக மாம்பழங்கள் ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்படுவதாக வந்த தகவலின் படி இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த பழங்களை குழந்தைகள் … Read more

கிராம மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள் – கிராம மக்கள் வேண்டுகோள்!

கிராம மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள் - கிராம மக்கள் வேண்டுகோள்!

கிராம மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள் – கிராம மக்கள் வேண்டுகோள்! கிராம மக்களின் தாகத்தை தீர்க்க, தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள். நாகை மாவட்ட ஆட்சியரிடம், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் வேண்டுகோள். சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி பல மாதங்களாக காட்சி பொருளாக இருப்பதாக வேதனை. நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்துள்ளது மறைக்கான்சாவடி கிராமம். இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில், விவசாய கூலித் தொழிலாளர்கள் … Read more

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம்!

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம்!

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம்! குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் குப்பை கிடங்கு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஜேசிபி எந்திரங்கள் மற்றும் வாகனங்களை சிறைபிடித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம். திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும் நகரின் … Read more