ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான புதிய விதிகள்!! விடுமுறை எடுக்கவும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்!!

NEW RULES FOR TEACHERS AND HEAD MASTERS!! Restrictions imposed to take vacation!!

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுப்பதில் புதிய கட்டுப்பாடுகளை பள்ளி கல்வித்துறை வித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகின்றது. அதனைத் தொடர்ந்து, அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிப் பலன்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் ‘களஞ்சியம்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப்., உள்ளிட்ட பணப் பலன்கள் நிலரவம் … Read more

அமரன் படத்தில் ஒரு காட்சி நீக்கம்!! படக்குழுவினர் விளக்கம்!!

A scene deleted in Amaran!! Crew explanation!!

அமரன் திரைப்படம்:  2024 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி  இந்த வருட  ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் பெரியசாமி  இயக்குனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்து. இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் பையோ கிராபியை  மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும். இப் படத்தில்  கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார். அதாவது அமரன் படத்தில்  சாய் பல்லவி கதாப்பாத்திரத்தின் போன் நம்பர் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த போன் நம்பர் நிஜத்தில் … Read more

ஒரு மாணவி வேண்டுகோள் ஏற்று இலவச பேருந்து இயக்கம்!! தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ஊர் மக்கள்!!

Free bus operation on request of a student!! The people of the village thanked the Tamil Nadu government!!

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அம்மனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்ஷிணி. இவர் அனந்தமங்கலம் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சமீபத்தில் தனியார் ‘டிவி’ பாட்டு போட்டியில் பங்கேற்றபோது, பள்ளிக்கு சென்று வர அரசு பஸ் வசதி இல்லை என்று மான வருத்தத்துடன்  தெரிவித்தார். இந்த காணொளி முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. அதனை அடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களை முதல்வர் தொடர்பு கொண்டு  கொண்டதின் பேரில், அம்மனம்பாக்கம் … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது!! முழு ஆதாரம் தருமாறு கோட் உத்தரவு!!

Lands belonging to Chidambaram Nataraja temple were illegally sold by public dikshitars!! Code orders to give full evidence!!

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் கூடுதல் ஆதாரங்களை அறநிலையத்துறை துறை தாக்கல் செய்யலாம் என அனுமதியளித்த நீதிபதிகள், கோயிலின் வரவு செலவு கணக்கு விவரங்கள் குறித்த வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு இரண்டு வாரக் காலம் அவகாசம் வழங்கியுள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கைத் தாக்கல் செய்யக் கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு … Read more

அரையாண்டு தேர்வு தேதி மாற்றம்!! பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

Semester exam date change!! School Education Minister Announcement!!

தமிழகத்தில் தற்போது அரையாண்டு வரும் 9-ம் தேதி நடக்க இருந்த நிலையில் கனமழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி அதிக கனமழை பெய்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் நிலைமையை பொறுத்து ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். அதன்படி வெள்ளம் அதிகம் பாதித்த மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டும். மற்ற இடங்களில் அரை யாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி … Read more

இன்னும் 6 நாட்களுக்கு தமிழகத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு!!

Chance of heavy rain in Tamil Nadu for next 6 days!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான … Read more

திறக்கப்பட்ட 3 மாதத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்! தரம் குறித்து பொதுமக்கள் சந்தேகம்

Bridge swept away in 3 months of opening! Public doubts about quality

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள பெரும்பாலான பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் ஏற்படும் சேதமானது அதிகரித்து வந்த நிலையில் அதை எதிர்கொள்ளும் விதமாக தமிழக அரசும் தயாராகி வந்தது. இந்நிலையில் அனைவருக்கும் போக்கு காட்டும் வகையில் இந்த முறை உருவான பெஞ்சல் புயல் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளான பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் அதிக சேதாரத்தை உண்டாக்கியுள்ளது. அந்த வகையில் புயல் பாதிப்பால் இந்த … Read more

திருகார்த்திகை தீபம் கொடியேற்றத்துடன் திருவண்ணாமலையில் துவங்கியது!!

Thirukarthikai Deepam started at Tiruvannamalai with flag hoisting!!

திருவண்ணாமலையில் சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று பக்தர்கள் மலை வலம் வரும் நாளில்,  நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறைசிந்தனையோடு மட்டுமே செல்லவேண்டும். உலகில் வாழும் அனைவரும் நலமாகவாழ வேண்டுமென,  மனதில் தியானம் செய்தவாறே வலம் வரவேண்டும். ஒருவரிடமும் பேசாமல் , பிறரிடம் தானம் வாங்காமல், காலணிகள் எதுவும் அணியாமல் வெறுங்கால்களுடன் நடந்து செல்லவேண்டும். கிரிவலப் பாதையான 14 கி.மீ … Read more

திருவண்ணாமலையில் எந்தந்த நாட்களில் கிரிவலம் சென்றால் நல்லது!!

Which days in Thiruvannamalai should you go to Krivalam!!

திருவண்ணாமலை: கிரிவலம் வருவது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும் நல்லதொரு  நிகழ்வு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குறைந்த அளவிலேயே கிரிவலத்தில் பங்கேற்று வந்த பக்தர்கள் இப்போது பல்லாயிரக்கணக்கில்  பங்கேற்று வருகின்றனர். மலையின் மாண்பையும், கிரிவலத்தின் மகத்துவத்தையும் உணர்ந்த பக்தர்கள், பெருமளவில் இப்போது கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று பக்தர்கள் மலை வலம் வரும் நாளில்,  நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் … Read more

பிளாக்ல ரேஷன் அரிசி மூட்டைகளை விற்றால் தான் உதவியாளருக்கு பணம் கொடுக்க முடியும்!! ஊழியர் அளித்த பதிலால் அதிர்ந்த மக்கள்!!

பிளாக்ல ரேஷன் அரிசி மூட்டைகளை விற்றால் தான் உதவியாளருக்கு பணம் கொடுக்க முடியும்!! ஊழியர் அளித்த பதிலால் அதிர்ந்த மக்கள்!!

ரேஷன் கடை ஊழியர் ஒருவர் ரேஷன் கடையில் உள்ள அரிசி மூட்டைகளை பிளாக்கில் விற்றால் மட்டுமே அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றை எடை போட்டு கொடுக்கக்கூடிய உதவியாளருக்கு பணம் கொடுக்க முடியும் என்று கூறிய ஆடியோ மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.   சிவகாசி அருகே அய்யம்பட்டி கிராம பகுதி நியாய விலை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் திலகவதி. இவர் தொடர்ந்து ரேசன் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து … Read more