குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை உடனே குணமாக்க இதை செய்யுங்கள்!!

0
77
#image_title

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை உடனே குணமாக்க இதை செய்யுங்கள்!!

வயிற்றுப்போக்கு, நீர்பற்றாக்குறையாலும் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், ஒரு ஆண்டில் சுமார் 1 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கின்றன. பேதியால் பெரியவர்களை விட குழந்தைகள்தான் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம், ஏனெனில் குழந்தைகளுக்கு சீக்கிரமாகவே நீர் பற்றாகுறை ஏற்பட்டுவிடும். பேதியால் அவதிப்படும் 200 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழக்கிறது.

குழந்தைகள் லேசான வயிற்றுப்போக்கு அறிகுறிகளில் இருந்து சில நாட்களில் குணமடைவார்கள். ஏனெனில் அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு தொற்றுநோயை அகற்றும். நீரிழப்பைத் தடுப்பதற்கும், வாந்தி மற்றும் மீண்டும் மீண்டும் தளர்வான மலத்தால் ஏற்படும் திரவ இழப்பை மீட்டெடுப்பதற்கும் குழந்தை ஏராளமான திரவங்களை உட்கொள்வது முக்கியம்.

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவது அபாயமானது அல்ல. ஏனென்றால் குழந்தைகளின் உடம்பினுள்ளே செல்லும் கெட்ட கிருமிகள் வயிற்றுப்போக்கு வழியாக வெளியே வருகிறது.இவ்வாறு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது குழந்தைகளின் நீர்ச் சத்தும் சேர்ந்து கரைந்து விடுகிறது.

இதை எவ்வாறு சரி செய்யலாம் என்று இங்குக் காண்போம். இதற்கு ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை அல்லது சிறிதளவு தேன் மற்றும் சிறிதளவு கல் உப்பு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.

இந்த தண்ணியை வயிற்றுப்போக்கு ஏற்படும் குழந்தைகளுக்கு நாம் கொடுத்து வர அவர்களின் நீர்ச் சத்துக் குறையாமல் இருக்கும்.

இதே போல் அரிசி வடித்த கஞ்சியை சிறிதளவு குழந்தைகளுக்கு கொடுத்து வர அதுவும் அவர்களுக்கு நன்மை பயக்கும்.

கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மோர், இளநீர் போன்ற பானங்கள் கொடுக்கலாம்.

author avatar
CineDesk