உங்களுக்கு காது வலி இருக்கிறதா!!  அப்போ அதை குணமாக்க இதை செய்யுங்க!!

0
43

உங்களுக்கு காது வலி இருக்கிறதா!!  அப்போ அதை குணமாக்க இதை செய்யுங்க!!

நம் அனைவருக்கும் சில சமயங்களில் காது வலி ஏற்படும். இந்த காது வலியை குணமாக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

காது வலி நமக்கு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. ஒரு சிலருக்கு காதில் அழற்சி ஏற்படுவதால் காது வலி ஏற்படும். காதில் புண் இருந்தாலும் காது வலி ஏற்படும். காதில் சீழ் வந்தாலும் காது வலி ஏற்படும். அதிக்க இரைச்சல் உள்ள இடங்களில் இருந்தாலும் காது வலி ஏற்படக்கூடும்.

காது வலி ஏற்பட்டால் குணமாக்கும் வழிமுறைகள்…

* நமக்கு காது வலி ஏற்பட்டால் இரண்டு சொட்டு பூண்டு சாறை எடுத்து காதில் விட்டால் காது வலி குணமாகும்.

* பெரிய பூண்டு பல்லாக இருந்தால் ஒன்றை எடுத்து காதினுள் வைக்க வேண்டும். 30 நிமிடங்கள் தொடர்ந்து வைத்திருந்தால் காது வலி குணமாகும்.

* கடுகு எண்ணெய் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதில் கிராம்பு, பூண்டு நசுக்கி அந்த கடுகு எண்ணெயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை லேசாக காய்ச்சி காதினுள் விடலாம். இதனால் காது வலி குணமாகும்.

* திருநீற்று பச்சிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தண்ணீர் விடாமல் அரைத்து அதன் சாற்றை எடுத்து காதுக்குள் விடலாம். இதன் மூலமாகவும் காது வலியை குணமாக்கலாம்.

* மல்லிகை எண்ணெயை கடையில் இருந்து வாங்கி காது வலியை குணமாக்க காதினுள் விடலாம்.