உங்களுக்கு முன் நெற்றி முடி உதிர்வு பிரச்சனை இருக்கா? அப்போ இந்த மூலிகை எண்ணெயை பயன்படுத்துங்கள்!! நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

0
32
#image_title

உங்களுக்கு முன் நெற்றி முடி உதிர்வு பிரச்சனை இருக்கா? அப்போ இந்த மூலிகை எண்ணெயை பயன்படுத்துங்கள்!! நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

நம்மில் பலர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்தல். அதுவும் முன் நெற்றி முடி உதிர்வு ஏற்படத் தொடங்கி விட்டால் நம் இளமையை பாதித்து விடும்.

முன் நெற்றி முடி உதிர்வுக்கு காரணம்:-

*மன அழுத்தம்

*தூக்கமின்மை

*வாழ்க்கை மாற்றம்

*உணவு முறை மாற்றம்

*ஜீன் குறைபாடு

முன் நெற்றி முடி உதிர்வுக்கு எளிய தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*சுத்தமான தேங்காய் எண்ணெய்

*வெந்தயம்

*கறிவேப்பிலை

*பெரிய வெங்காயம்

*கரிசலாங்கண்ணி

*கற்றாழை

*செம்பருத்தி பூ

மூலிகை எண்ணெய் தயாரிக்கும் முறை:-

முதலில் பெரிய வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து அதனை நன்கு அரைக்க வேண்டும். பிறகு அந்த சாறை வடிகட்டி இரவில் தலையில் காலையில் எழுந்து முடியை நன்கு அலசவும்.

அடுத்து கரிசலாங்கண்ணி கீரையை இரண்டு நாட்களுக்கு நிழலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் கற்றாழையை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 லிட்டர் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி கொள்ளவும். அதில் 5 செம்பருத்தி பூ , 5 கொத்து கறிவேப்பிலை, 8 கற்றாழை துண்டுகள்,1 தேக்கரண்டி வெந்தயம் மற்றும் காய வைத்த கரிசிலாங்கண்ணியை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

அதிகபட்சம் 15 நிமிடங்கள் எண்ணெய் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து விட வேண்டும். பின்னர் இந்த மூலிகை எண்ணெயை ஆறவைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைக்க வேண்டும்.

இந்த மூலிகை எண்ணெய்யை இரவு தூங்கும்போது தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து காலையில் ஷாம்பூ அல்லது சிகைக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு தோடர்ந்து செய்து வருவதன் மூலம் முடி உதிர்வு தடுக்கப்பட்டு அவை அடர்த்தியாகவும்,நீளமாகவும் வளரும்.