மார்பில் தேங்கிய சளியை நிமிடத்தில் கரைத்து தள்ளும் இந்த பானம் பற்றி தெரியுமா?

0
200
#image_title

மார்பில் தேங்கிய சளியை நிமிடத்தில் கரைத்து தள்ளும் இந்த பானம் பற்றி தெரியுமா?

காலநிலை மாற்றம் காரணமாக உங்களில் பலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும்.சளி தொல்லையை ஆரம்பத்தில் குணப்படுத்திக் கொண்டால் எந்த வித பிரச்சனையும் இல்லை.ஒருவேளை சளி பாதிப்பை குணப்படுத்திக் கொள்ள அலட்சியப்படுத்தினால் அவை நுரையீரலில் தேங்கி சுவாசிப்பதில் சிரமத்தை உண்டாக்கும்.

இந்த சளி பாதிப்பை சரி செய்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகு
2)திப்பிலி
3)ஏலரிசி
4)தேன்

செய்முறை:-

உரலில் 5 கருப்பு மிளகு,1 திப்பிலி மற்றும் ஏலரிசி சேர்த்து இடித்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அதில் இடித்த பொடியை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் நுரையீலில் தேங்கிய சளி கரைந்து வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள்
2)மிளகு தூள்
3)தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1/2 தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் நுரையீரலில் தேங்கிய சளி கரைந்து வெளியேறி விடும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)ஓமவல்லி

செய்முறை:-

அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு ஒரு ஓமவல்லி இலையை போட்டு காய்ச்சிக் கொள்ளவும்.

இந்த எண்ணெயை இளஞ்சூட்டில் மார்பு பகுதியில் தடவினால் நுரையீலில் தேங்கிய சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்.