உங்கள் முகம் அழகாக இருக்க ஆசையா? அப்போ இந்த பேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்!! 3 நாட்களில் தீர்வு கிடைக்கும்!!

0
32
#image_title

உங்கள் முகம் அழகாக இருக்க ஆசையா? அப்போ இந்த பேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்!! 3 நாட்களில் தீர்வு கிடைக்கும்!!

தன்னை அழகுப்படுத்தி கொள்ள ஒவ்வொரு பெண்ணும் விரும்புகின்றனர். இதற்காக முகத்தை வெள்ளையாகும், அழகாவும் மாற்ற இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.காரணம் விரைவில் தீர்வு கிடைக்கும் என்பதினால் தான். ஆனால் இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி பலர் தெரியாமல் இருக்கின்றனர்.

ஆபத்தை ஏற்படுத்தும் செயற்கை பொருட்களை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை பராமரித்து வந்தால் முகம் அழகாகவும், பொலிவாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

*பச்சைபயறு – 5 தேக்கரண்டி

*ரோஜா இதழ் – 2 தேக்கரண்டி

*கஸ்தூரி மஞ்சள் – சிறு துண்டு

செய்முறை:-

முதலில் 5 தேக்கரண்டி பச்சை பயறு எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் சுத்தம் செய்து வைத்துள்ள பச்சை பயறை சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து ரோஜா இதழ் 2 தேக்கரண்டி அளவு எடுத்து அதில் சேர்க்கவும். இந்த ரோஜா இதழ் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடியவை ஆகும்.

பின்னர் அதில் சிறு துண்டு கஸ்தூரி மஞ்சளை சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும். அடுத்து இதை ஒரு ஜல்லடை கொண்டு நன்கு சலித்து கொள்ளவும்.

முகத்திற்கு பயன்படுத்தும் முறை:-

இந்த பவுடரை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்னர் சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை நன்கு கழுவிக் கொள்ளவும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள மாவில் 2 தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு பவுலில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி குழப்பிக் கொள்ளவும்.

பின்னர் இதை முகத்தில் தடவி நன்கு மஜாஜ் செய்யவும். 20 நிமிடங்களுக்கு பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை நன்கு கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் முகம் பொலிவாகவும், அழகாவும் இருக்கும்.