இப்படிப்பட்ட மனிதரே அன்பு காட்டுகிறாரே?

0
63
டோனியும் ரெய்னாவும் ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கு பேரிடியாக இருந்தது.  டோனியை பாராட்டி கடிதம் எழுதிய பிரதமர் மோடி, அவரை புதிய இந்தியாவின் உத்வேகத்தின் எடுத்துக்காட்டு என்று பாராட்டினார். அதே போல் ரெய்னாவுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். அதில் கிரிக்கெட் விளையாட்டுக்காவே வாழ்ந்தீர்கள், அதையே உயிர் மூச்சாகக் கொண்டுள்ளீர்கள் இளைஞர்களுக்கு உற்சாகம் ஊட்டியதற்கும், விளையாட்டில் இந்தியாவில் முன்னணிப்படுத்த முயன்றதற்கும் நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்ற மோடி என்று எழுதியுள்ளார்.
இது குறித்து சுரேஷ் ரெய்னா நாங்கள் ஆடும் போது நாட்டுக்காக ரத்தத்தையும் வியர்வையையும் சிந்துகிறோம். இந்த நாட்டு மக்களின் அன்பு போல் சிறந்த பாராட்டு வேறொன்றும் இல்லை. அதிலும் நாட்டின் பிரதமரே அன்பு காட்டும்போது வேறேன்ன வேண்டும் என்ற தோனியில் பிரதமருக்கு நன்றி தெரிவித்து உங்கள் பாராட்டை நன்றியுடன் ஏற்று கொள்கிறேன் என்று கூறினார்.
author avatar
Parthipan K