கர்ப்பம் தரித்த பிறகு கரு தங்காமல் கலைந்து கொண்டே இருக்கின்றதா? பெண்களே இதை செய்யுங்க!

0
252
#image_title

கர்ப்பம் தரித்த பிறகு கரு தங்காமல் கலைந்து கொண்டே இருக்கின்றதா? பெண்களே இதை செய்யுங்க!

கர்ப்பம் தரித்த பெண்களுக்கு சில காரணங்களால் கரு தாங்காமல் கலைந்து கொண்டே இருக்கும். அவ்வாறு கரு கலைந்து கொண்டே இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

தற்போதைய காலத்தில் அனைத்து பிரச்சனைகளுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் கரு தரித்த்தலுக்கும் சிகிச்சை முறைகள் வந்து விட்டது. அதே போல கரு தங்குவதற்கும் மாத்திரை மருந்துகள் இருக்கின்றது. அந்த மருந்து மாத்திரைகள் எதையும் சாப்பிடாமல் பெண்களுக்கு கர்ப்பம் தரித்த பின்னர் கரு தங்குவதற்கு இயற்கையான முறையில் ஒரு மருந்து எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

* மாதுளம் பழத்தோல்
* அசோகமரப் பட்டை

மாதுளம் பழத்தோல் மற்றும் அசோகரமரப் பட்டை இரண்டையும் வைத்து கர்ப்பம் தரித்த பெண்களுக்கு கருவை தங்க வைக்கலாம்.

செய்முறை…

முதலில் அடுப்பை பற்ற வைத்து பின்னர் அதில் சிறிய பாத்திரம் ஒன்றை வைக்க வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் மாதுளம் பழத்தோல் மற்றும் அசோகமரப் பட்டை இரண்டையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின்னர் அடுப்பை விட்டு இறக்கிவிட வேண்டும். கர்ப்பம் தரித்த பின்னர் பெண்களுக்கு கரு தங்குவதற்கு உண்டான மருந்து தயாராகி விட்டது.

இந்த இயற்கையான சத்து மிக்க மருந்தை தினமும் காலையில் பெண்கள் குடித்து வர வேண்டும். தொடர்ந்து 45 நாட்கள் குடித்து வந்தால் பெண்களுக்கு கரு தங்கும்.