கழுத்து கருமை நீங்க என்ன செய்வதென்று தெரியவில்லையா? இதை ட்ரை பண்ணுங்க போதும்!!

0
51
#image_title

கழுத்து கருமை நீங்க என்ன செய்வதென்று தெரியவில்லையா? இதை ட்ரை பண்ணுங்க போதும்!!

நம்மில் பெரும்பாலானோருக்கு முகம் அழகாக இருக்கும்.ஆனால் கழுத்து பகுதியில் அடர் கருமை படிந்திருக்கும்.கழுத்து பகுதிகளில் தோல் மடிப்புகள் இருந்தால் அங்கு அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்து நாளடைவில் அப்பகுதி கருமை நிறமாக மாறிவிடும்.இதற்கு முக்கிய காரணம் அந்த இடத்தில் அதிகப்படியான வியர்வையுடன் எண்ணெய் பசை ஏற்படுவது தான்.இவை நம் அழகை குறைத்து காட்டிவிடும்.இதற்கு ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.இவ்வாறு தொடர்ந்து செய்தால் நாள்பட்ட கழுத்து கருமை நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

பசும்பால் – 1/4 டம்ளர்

ஓட்ஸ் – 1 தேக்கரண்டி

தக்காளி சாறு – 1 தேக்கரண்டி

தயிர் – 1 தேக்கரண்டி

கஸ்தூரி மஞ்சள் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் கழுத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு ஒரு பவுலில் 1/4 டம்ளர் அளவு பசும்பால் சேர்த்து கொள்ளவும்.அதை ஒரு பஞ்சு வைத்து நினைத்து கழுத்து சுற்றியும் தேய்த்து எடுக்கவும்.இப்படி செய்தால் கழுத்தில் படிந்து கிடந்த அழுக்கு நீங்கும்.

பின்னர் ஓட்ஸ் 1 தேக்கரண்டி எடுத்து ஒரு மிக்ஸி போட்டு பொடி செய்து கொள்ளவும்.பிறகு அதை ஒரு பவுலில் கொட்டவும்.அதில் 1 தேக்கரண்டி தக்காளி சாறு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

பிறகு இதை கழுத்து சுற்றியும் தடவவும்.பின்னர் 1/2 மணி நேரம் வைத்திருந்து அவற்றை கழுவவும்.பிறகு ஒரு பவுலில் 1 தேக்கரண்டி தயிர் மற்றும் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

இந்த கலவையை கழுத்து முழுவதும் போட்டு நன்கு காயவிட்டு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் கழுத்தில் உள்ள கருமை அனைத்தும் நீங்கும்.