உடலில் உள்ள அனைத்து வித பிரச்சனைகளும் நீங்க இந்த “ப்ளூ டீ” பருகுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

0
69
#image_title

உடலில் உள்ள அனைத்து வித பிரச்சனைகளும் நீங்க இந்த “ப்ளூ டீ” பருகுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

அதிக மருத்துவ குணம் கொண்ட மூலிகை பூச்செடிகளில் ஒன்று சங்கு பூ செடி.இதில் உள்ள பூக்களை கொண்டு தேநீர் செய்து பருகி வந்தோம் என்றால் உடலுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*ஊதா நிற சங்கு பூ – 10

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

*தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.பிறகு 10 ஊதா நிற சங்கு பூவை போட்டு 5 நிமிடம் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.தற்பொழுது தண்ணீரின் நிறம் நீல நிறத்திற்கு வந்து விடும்.

அடுத்து இந்த சங்கு பூ டீ அதாவது ப்ளூ டீயில் எழுமிச்சைச்சாறு 1 தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும்.சுத்தமான தேன் 1 தேக்கரண்டி சேர்த்து கலக்கி பருகவும்.

சங்கு பூ தேநீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

*சங்கு பூ தேநீரில் ‘ஃப்ளேவனாய்ட்ஸ்’ என்ற ரசாயனம் இருக்கிறது.இது உடலில் புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.

*தினமும் சங்கு பூ தேநீர் பருகி வந்தோம் என்றால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி எளிதில் கிடைத்து விடும்.

*உடல் பருமனால் அவதிப்பட்டு வரும் நபர்கள் ப்ளூ டீ அதாவது சங்கு பூ தேநீர் பருகி வருவதன் மூலம் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

*தினமும் சங்கு பூ தேநீர் பருகினால் குடற்புண்,அல்சர்,அஜீரணக்கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகும்.அதேபோல் இந்த தேநீர் வயிறு எரிச்சலையும் குணமாக்குக்கும் தன்மை கொண்டது.

*சங்கு பூ தேநீர் உடல் உஷ்ணத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது.

*அதேபோல் சங்கு பூ சாறு கல்லீரலைப் பலப்படுத்தும்.ஒரு பவுலில் 2 தேக்கரண்டி சங்குப்பூ சாற்றை எடுத்து அதில் சிறிதளவு இஞ்சி சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து பெருகினால் தேமல், கரும்புள்ளி பாதிப்பு நீங்கும்.அதுமட்டும் இன்றி வயிற்றில் உள்ள பூச்சிகள் மலம் வழியாக வெளியேறி விடும்.

*சங்கு பூ தேநீர் முடி உதிர்தல் பாதிப்பு சரி செய்கிறது.அதேபோல் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
.