பாட்டி வைத்தியம்: தீராத மூட்டு வலி? ஒரே வாரத்தில் குணமாக எளிய வழிகள் இதோ!!

0
58
#image_title

பாட்டி வைத்தியம்: தீராத மூட்டு வலி? ஒரே வாரத்தில் குணமாக எளிய வழிகள் இதோ!!

*பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் 3 இலவங்கம், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், இடித்த இஞ்சி 1 துண்டு மற்றும் 10 துளசி இலைகளை சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பின்னர் அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சிறிதளவு தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து பருகவும். இவ்வாறு தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் நாள்பட்ட மூட்டு வலி பாதிப்பு முழுமையாக நீங்கி விடும்.

*ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் மற்றும் 1 தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி நன்கு குழப்பிக் கொள்ளவும். அடுத்து வெந்நீரில் காட்டன் துணியை நினைத்து பிழிந்து மூட்டுகளின் மேல் வைத்து மெதுவாக அழுத்தம் கொடுக்கவும்.

பின்னர் தயார் செய்து வைத்துள்ள மஞ்சள் பேஸ்டை மூட்டுகளின் மேல் தடவிக் கொள்ளவும். இந்த ரெமிடியை இரவில் பயன்படுத்துவதன் மூலம் மூட்டு வலி மற்றும் வீக்கம் சில நாட்களில் சரியாகி விடும்.

*பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் 1 ஏலக்காய் மற்றும் 1 ஸ்பூன் சோம்பு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்து கலக்கி பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் மூட்டு வலி பாதிப்பு சில நாட்களில் சரியாகி விடும்.

*பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர், 1 தேக்கரண்டி அளவு பப்பாளி விதை சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும். பின்னர் சிறிதளவு டீ தூள் சேர்த்து கொதிக்க விட்டு 2 சிட்டிகை அளவு கருப்பு மிளகு தூள் சேர்த்து கலக்கி ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். பிறகு அதில் 1 தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து கலக்கி பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் முழங்கால் மூட்டு வலி விரைவில் சரியாகி விடும்.

*உரலில் 5 பாதம் பருப்பு, 2 வால்நட் போட்டு இடித்து பாதம் பருப்பு இடித்து பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் பால் இடித்து வைத்துள்ள பாதம் பருப்பு மற்றும் வால்நட் சேர்த்து கொதிக்க விடவும். அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி ஒரு டம்ளருக்கு ஊற்றி பருகவும். இவ்வாறு தோடர்ந்து பருகி வந்தோம் என்றால் மூட்டு வலி சில நாட்களில் சரியாகி விடும்.

*பாத்திரத்தில் ஒரு கைபிடி அளவு விரலி இலையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் ஒரு தட்டிற்கு மாற்றி உலர்திக் கொள்ளவும். அடுப்பில் இரும்பு கடாய் வைத்து சுத்தமான நல்லெண்ணெய், உலர்த்தி வைத்துள்ள விரலி இலைகளை போட்டு மிதமான தீயில் பொரிய விடவும்.

நல்லெண்ணெய் பழுப்பு நிறத்திற்கு மாறியதும் அடுப்பை அணைக்கவும். காய்ச்சி வைத்துள்ள எண்ணெயை ஒரு நாள் முழுவதும் நன்கு ஆறவிட்டு அடுத்த நாள் இரவு தூங்குவதற்கு முன் மூட்டுகளை வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவி தயார் செய்து வைத்துள்ள மூலிகை எண்ணெய் மூட்டுகளின் போட்டு நன்கு தேய்த்துக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர தீராத முழங்கால் மூட்டு வலி சில நாட்களில் குணமாகிவிடும்.