பூரான் கடித்து விட்டதா? உடனே இதை செய்யுங்க!

0
249
#image_title

பூரான் கடித்து விட்டதா? உடனே இதை செய்யுங்க!

உங்களை பூரான் கடித்து விட்டால் அதன் விஷம் முறிய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நம்மில் பலரையும் பூரான் கடிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. பூரான் என்பது விஷப் பூச்சிகள் ஒன்றாகும். இது நம்மை கடித்து விட்டால் உடல் முழுவதும் அரிப்பு ஏற்படும். பின்னர் உடல் முழுவதும் சிவக்க தொடங்கி விடும்.

இந்த பூரான் கடித்த விஷத்தால் தான் இந்த பாதிப்புகள் உடலில் ஏற்படுகின்றது. இந்த விஷத்தை முறித்து விட்டால் இந்த பாதிப்புகள் ஏற்படாது. எனவே பூரான் கடித்த இடத்தில் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள மருந்தை தயார் செய்து தடவினால் விஷம் முறிந்து விடும்.

அந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்….

* மஞ்சள்
* குப்பைமேனி
* உப்பு

தயார் செய்யும் முறை…

குப்பைமேனி செடியின் இலைகள் விஷத்தை முறிக்கக் கூடிய தன்மை கொண்டது. மேலும் இதனுடன் மஞ்சள் சேர்க்கும் பொழுது விஷம் வேகமாக முறிந்து விடும். மஞ்சள் இயற்கையாகவே கிருமி நாசினியாக பயன்படுவதால் மஞ்சள் பொடியை எடுத்துக் கொண்டு குப்பைமேனி இலையுடன் வைத்து அரைக்க வேண்டும்.

பின்னர் இதனுடன் சிறிதளவு கல்லுப்பு சேர்த்து வைத்து அரைத்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த மருந்தை பூரான் கடித்த இடத்தில் வைத்து தடவினால் விஷம் முறிந்து விடும். அதன் பின்னர் அரிப்பு, தடிப்பு, சிவப்பாக மாறுதல் போன்ற எந்த பாதிப்புகளும் ஏற்படாது.